பூமகள்
13-11-2007, 11:29 AM
"சினிமா: திரை விலகும் போது.."
என்ற நூலிருந்து ஒரு கட்டுரையை தோழர் மருதையன் அவர்கள் படைத்த வித்தியாசமான கண்ணோட்டத்தை அவர் சொல்லிய வடிவில் பதிக்க விழைகிறேன்.
ஒரு திரைப்படத்தில் விறுவிறுப்பு இருக்கிறதா இல்லையா, தனக்கு பிடித்த காட்சியமைப்புகள் இருக்கிறதா என்ற மலிவான தரம் குறைந்த ரசனையை வணிகப் பத்திரிக்கைகள் விமர்சனம் என்ற பெயரில் கற்றுத் தருகின்றன. தொழில் நுட்ப நேர்த்தி பற்றி விமர்சித்து அவை தரமான விமர்சனம் என்று பெயர் சொல்லி கூவும் அவலமும் மறுபுறம் நடந்த வண்ணம் தான் உள்ளது.
இவை இரண்டிலிருந்தும் மாறுபட்ட ஒரு விமர்சனத்தை உங்களுக்காக கொடுப்பதில் நான் பெருமைப் படுகிறேன்.
ஒரு இயக்குநரின் வாழ்க்கை குறித்த கண்ணோட்டம், அது காதல், குடும்பம், தேசபக்தி, மதநல்லிணக்கம் என எதுவாக இருந்தாலும் சினிமா என்ற முன்னேறிய கலையின் மூலம் யாருடைய நலனுக்காக, எப்படி வெளிப்படுகிறது, ஒரு ரசிகனை உணர்ச்சி வசப்படுத்துவதன் மூலமாக எவ்வாறு பலவீனமாக்குகிறது என்பதைத் தான் இங்கு கொடுக்கும் தோழரின் விமர்சனங்கள் கண்டுபிடிக்க விரும்புகின்றன.
இதுவரையில் கண்டிராத, ஒரு முற்றிலும் மாறுபட்ட ஒரு திரை விமர்சனத்தை, வித்தியாசமான கோணத்தில் உங்களின் மூளையில் படத்தினை அலசும் உத்தியை இங்கு ஒரு படத்தை உதாரணமாக விமர்சிப்பதன் மூலம் கொண்டு வர முடியும் என்று நம்புகிறேன்.
சினிமா எனும் மிகப்பெரிய மீடியா மூலம் மக்களின் மனத்தில் எம்மாதிரியான சிந்தனை ஓட்டத்தை உருவாக்க முற்படுகிறார்கள் என்று இந்த புத்தகத்தில் படித்து அறிந்து கொண்டேன். மிக மிக உபயோகமான, பயனுள்ள தகவல் என்பதால் தங்களோடு பகிர விரும்பி இங்கு ஒரு படத்தினை அவர் விமர்சித்த அந்த கட்டுரையைப் பதிக்க விரும்புகிறேன்.
********************************************************************************************************************
அன்பே சிவம் - சி. பி. எம் -இன் திரை அவதாரம்
'அன்பே சிவம்' திரைப்படத்தில் பிரளயனின் ' வீதி நாடக்குழு' இருக்கிறது; தொழிலாளிகளின் சம்பள உயர்வுக் கோரிக்கை இருக்கிறது; செங்கொடி இருக்கிறது; சி.ஐ.டி.யு.வின் அறிவிப்புப் பலகையே இருக்கிறது; பன்னாட்டு நிறுவனங்களைத் தாக்கும் வசனங்கள் இருக்கின்றன; மொத்தத்தில் மார்க்சிஸ்டு கட்சியினர் மனக் கிளர்ச்சியடைந்து தியேட்டர் வாசலில் தோரணம் கட்டுவதற்கான எல்லா சாத்தியக் கூறுகளும் படத்தில் இருக்கின்றன.
இருந்த போதிலும் வெள்ளித்திரையில் சிவப்பு நிறம் தெரிவதாகக் கேள்விப்பட்டு விரைந்து, சினிமாக் கொட்டகையில் 40,50 அபராதம் கட்டிய ரசிகர்களுக்கு "கமலஹாசன் என்ன சொல்ல வருகிறார்" என்ற குழப்பமும் இருக்கிறது.
மார்க்சிஸ்டு கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினர் சீதாராம் யெச்சூரி இந்தப் படத்தைப் பாராட்டியிருப்பதிலோ, தீக்கதிர் உச்சிகோந்திருப்பதிலோ நமக்கு வியப்பில்லை. பா.ஜ.க. தலைவர் இல.கணேசனும் இதைப் பாராட்டியிருக்கிறார் என்பதுதான் இதில் சுவையான செய்தி. செங்கொடியும், சி.ஐ.டி.யூ. பலகையும்
தெளிவாகக் காண்பிக்கப்பட்ட பிறகும் இல.கணேசன் பாராட்டுகிறாரென்றால், ஏமாந்தது யார் என்று நமக்குத் தெரிந்தாக வேண்டும்.
நல்லசிவம்(கமல்) எனும் விகாரமான தோற்றம் கொண்ட மார்க்சியவாதி, அன்பரசு(மாதவன்) எனும் அழகான, அமெரிக்காவில் படித்த, செல்போன் பிடித்த, ஜீன்ஸ் போட்ட இளைஞனை புவனேசுவர் விமான நிலையத்தில் சந்திக்கிறான். தன்னுடைய தமிழ்ப் பெயரையே இழிவாகக் கருதி ஏ.அர்ஸ். என்று சுருக்கிக் கூறிக் கொள்ளும் அளவு தீவிரமான அமெரிக்க மோகியான அன்பரசு, நல்லசிவத்தைத் தீவிரவாதியென்று சந்தேகித்து போலீசிடம் போட்டுக் கொடுத்து, இல்லையென்று நிரூபணமானதால் அவமானப்படுகிறான்; கொஞ்சம் 'குற்றவுணர்வும்' அடைகிறான்.
புவனேசுவரிலிருந்து சென்னை நோக்கிய நான்கு நாள் பயணத்தில் இந்தச் சின்ன குற்றவுணர்வைக் கொஞ்சம் கொஞ்சமாக நோண்டிப் பெரிதாக்குகிறான் நல்லசிவம். கிரெடிட் கார்டும், வெளிநாட்டு ஷீவும், நுனிநாக்கு ஆங்கிலமும் செல்லுபடியாகாத உண்மையான இந்தியாவை அந்த அமெரிக்கக் குஞ்சுக்கு அறிமுகம் செய்கிறான். அந்த இளைஞனின்
இதயத்திலும் பெயரிலும் 'இயற்கையாகவே' குடி கொண்டிருக்கும் 'அன்பை', அதாவது கடவுளை, சாமர்த்தியமாகத் துழாவி வெளியே எடுத்து அவனுக்கே அறிமுகப்படுத்தியும்விடுகிறான்.
புவனேசுவரிலிருந்து சென்னைக்கு முன்நோக்கிச் செல்லும் இந்தப் பயணத்தினூடாக, நல்லசிவம் தன் நினைவுகளில் பின்னோக்கிச் செல்லும் பயணமும் வருகிறது. வீதி நாடகக் கலைஞனும், மார்க்சியவாதியும், ஓவியனும், கணினி விற்பன்னனுமான நல்லசிவத்தைக் கண்டு - அதாவது அவனிடம் பொதிந்திந்துள்ள சராசரித் தொழிலாளியின் சக்திக்கு அப்பாற்பட்ட 'திறமை'யைக் கண்டு மயங்கி அவனைக் காதலிக்கிறாள் முதலாளியின் மகள். எதிர்பாராத விபத்து அவர்களைப் பிரிக்கிறது.
சிவத்தின்(நல்லசிவத்தின்) காதலி அன்புக்கு (அன்பரசுக்கு) மனைவியாகிறாள். தொழிலாளர்கள் தமது சொந்தத் தியாகத்தால் வாங்க முடியாத கூலிஉயர்வை, தனது காதலைத் தியாகம் செய்து அவர்களுக்கு வாங்கி வழங்கிவிட்டு, ஒரு சித்தரைப் போலத் தெருநாயுடன் நடந்து மறைகிறான் நல்லசிவம்.
கதையின் தர்க்கரீதியான தொடர்ச்சியில் விழும் ஓட்டைகளை ஒதுக்கிவிட்டு மையக் கருத்துக்குச் செல்வோம்.
*****************************************************************************************************************************
படம் உலகமயமாக்கத்துக்கெதிராகப் பேசுகிறதா? ஆம், என்கிறார் கமலஹாசன். வீதி நாடகத்திலும், மாதவனிடம் கமல் பேசும் வசனங்களிலும் ஆங்காங்கே தூவபட்டிருக்கும் வசனங்களை வைத்து அத்தகைய பிரமை சிலருக்குத் தோன்றக்கூடும்.
சரி, உலகமயமாக்கலை எதிர்த்து இந்தப் படம் யாரிடம் பேசுகிறது? என்ன பேசுகிறது? இந்தக் கொள்கைகளினால் ஆதாயமடைகின்ற வர்க்கத்தின் பிரதிநிதியிடம் பேசுகிறது. கணினி வல்லுனர்களாகவும், பொறியாளர்களாகவும், சேவைத்துறையினராகவும் வேலை செய்கின்ற நுனி நாக்கு ஆங்கிலப் பேர்வழிகளிடம், அமெரிக்காவுக்கு ஓடுவதற்குச் சந்தர்ப்பத்தை எதிர்ப்பார்த்துக் காத்திருக்கும் பெப்சி மாதவன்களிடம் பேசுகிறது.
"சோற்றுக்குப் போராடும் இந்தத் தேசத்தைப் பாருங்கள். மக்களைப் பாருங்கள். மனமிரங்குங்கள். அற உணர்வு கொள்ளுங்கள்" என்று அவர்களிடம் மன்றாடுகிறது. அவ்வப்போது நல்லசிவத்தின் சாமர்த்தியமான வசனங்களால் அவர்களை மடக்குகிறது. லேசாக இடித்துரைக்கிறது.
பிறப்பால் இந்தியனாகவும் சிந்தனையால் அமெரிக்க அடிவருடியாகவும் வளர்ந்துள்ள "யுப்பி" என்றாழைக்கப்படும் நவீன கேட்டுக் குடி வர்க்கத்தின் பிரதிநிதியாகத் திரையில் தோன்றுகிறார் மாதவன். இந்த வர்க்கம் அறவுணர்வற்றுப்(Amoral) போனதற்குக் காரணமென்ன என்பது நமது முதல் கேள்வி.
உலகப் புகழ் பெற்றா பங்குச் சந்தைச் சூதாடியான ஜார்ஜ் சோரோஸ் எனும் கிழவனிடம் அவனுடைய ஒழுக்கம், அறவுணர்வு பற்றிய கேள்விகளை எழுப்பியபோது, "சந்தைக்கு அறவுணர்வு இல்லை; எனவே எனக்கும் இல்லை" என்று பதிலளித்தானாம். அந்தக் கிழட்டுப் போக்கிரியின் வாயிலிருந்து வெளிவந்த ஒவ்வொரு சொல்லும் உண்மை.
பன்னாட்டு நிறுவனங்கள் உலகச் சந்தையைக் கைப்பற்ற எத்தகைய 'நெறிகளைக்' கடைப்பிடிக்கின்றனவோ அவற்றின் பிரதிபலிப்பைத்தான் நாம் இந்த யுப்பி வர்க்கத்திடம் காணமுடியும். ஏனென்றால் இவர்கள் அதன் ஊழியர்கள், தரகர்கள், துதிபாடிகள் அல்லது நல்லசிவத்தின் மொழியில் சொன்னால் எலும்பைக் கவ்வக் காத்திருக்கும் கூலிகள்.
அவ்வாறிருக்க, நிஜத்தின் தலையைச் சீவுவதைத் தந்திரமாகத் தவிர்த்துவிட்டு, நிழலுக்கு முடிவெட்டி அழகுபடுத்த முனைகிறார் நல்லசிவம்.
அன்பரசுவின்(மாதவனின்) வர்க்கத்தைப் பொறுத்தவரை முதலாளித்துவ உலகச் சந்தைதான் அவர்களது கடவுள். சந்தையின் விதிகள்தான் இறைவனின் பத்துக்கட்டளைகள். இந்த ஆட்டத்தில் வெல்லும்போது அதைத் தனது திறமைக்கும், புத்திக் கூர்மைக்கும் கிடைத்த வெற்றியாக அவர்கள் கருதிக் கொள்கிறார்கள். இதில் தோற்று மடிபவர்களைக் குறித்து
அவர்கள் வருத்தம் கொள்வதில்லை.
சூறாவளியில் பிடுங்கியெறியப்பட்ட தென்னை மரத்துக்காக இவர்கள் எப்படிக் கண்ணீர் விடமாட்டார்களோ, அவ்வாறே உலகமயமாக்கத்தால் பிடிங்கி எறியப்பட்டுச் செத்து மடிகின்ற விவசாயிகளுக்காகவும் இவர்கள் கண்ணீர் விடுவதில்லை.
"சோமாலியா முதல் தஞ்சை வரையிலான பட்டினிச் சாவுகளுக்கும் தற்கொலைகளுக்கும் காரணம் நம்மால் முன்னறிந்து சொல்ல முடியாத சந்தையின் விதிகள் தான்" என்று கூறும் உலக முதலாளித்துவத்திடம் இந்தச் சாவுகளுக்கக தார்மீகப் பொறுப்புணர்ச்சியை எப்படி எதிர்பார்க்க முடியாதோ, அவ்வாறே இந்த யுப்பி வர்க்கத்திடமும் அதை எதிர்பார்க்க முடியாது. "பட்டினிச் சாவா அதற்கு நான் என்ன செய்ய முடியும்?" என்று அவர்கள் தோளைக் குலுக்குவார்கள். அவ்வளவுதான்.
ஆனால் எல்லா மனிதர்களுக்குள்ளும் ஓர் அன்பு ஊற்று இருப்பதாகவும் ஏதோ சில காரணங்களால் அது அடைப்பட்டிருந்தாலும் அதைத் தோண்டியோ, நோண்டியோ வெளியே கொண்டு வந்து விடமுடியுமென்றும் நம்மை நம்பச் சொல்கிறார் கமலஹாசன். இந்த பார்முலாவின்படி மாதவனுக்குள் இருக்கும் 'கடவுளை' நாலே நாளில் தோண்டி எடுத்து விடுகிறார்.
எல்லோருக்குள்ளும் ஒரு நடுநிலையான மனச்சாட்சி(கடவுள்) இருப்பதாகவும், அந்த மனச்சாட்சிக்கு விரோதமாகச் சிலர் நடந்து கொள்கின்ற காரணத்தினால்தான் சமூகத்தில் இத்தனை அநீதிகள் நிகழ்கின்றனவென்றும், எல்லோரும் மனச்சாட்சிப்படி நடந்து கொள்ளத் தொடங்கி விட்டால் உலகமே அன்புமயமாகிவிடும் என்றும் கருதுகின்ற பிரபலமான மூடநம்பிக்கையை வேறு வார்த்தைகளில் விற்பனை செய்கிறார் கமலஹாசன்.
மனச்சாட்சி என்பது என்ன?
****************************************************************************************************************************
இது பற்றி அடுத்த பாகத்தில் தொடர்கிறேன்.
(தொடரும்)
பாகம் 2 (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=13274)
பாகம் 3(இறுதி) (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=13275)நன்றி:
புத்தகம்: "சினிமா: திரை விலகும் போது"
கட்டுரையாளர்: தோழர். மருதையன்.
என்ற நூலிருந்து ஒரு கட்டுரையை தோழர் மருதையன் அவர்கள் படைத்த வித்தியாசமான கண்ணோட்டத்தை அவர் சொல்லிய வடிவில் பதிக்க விழைகிறேன்.
ஒரு திரைப்படத்தில் விறுவிறுப்பு இருக்கிறதா இல்லையா, தனக்கு பிடித்த காட்சியமைப்புகள் இருக்கிறதா என்ற மலிவான தரம் குறைந்த ரசனையை வணிகப் பத்திரிக்கைகள் விமர்சனம் என்ற பெயரில் கற்றுத் தருகின்றன. தொழில் நுட்ப நேர்த்தி பற்றி விமர்சித்து அவை தரமான விமர்சனம் என்று பெயர் சொல்லி கூவும் அவலமும் மறுபுறம் நடந்த வண்ணம் தான் உள்ளது.
இவை இரண்டிலிருந்தும் மாறுபட்ட ஒரு விமர்சனத்தை உங்களுக்காக கொடுப்பதில் நான் பெருமைப் படுகிறேன்.
ஒரு இயக்குநரின் வாழ்க்கை குறித்த கண்ணோட்டம், அது காதல், குடும்பம், தேசபக்தி, மதநல்லிணக்கம் என எதுவாக இருந்தாலும் சினிமா என்ற முன்னேறிய கலையின் மூலம் யாருடைய நலனுக்காக, எப்படி வெளிப்படுகிறது, ஒரு ரசிகனை உணர்ச்சி வசப்படுத்துவதன் மூலமாக எவ்வாறு பலவீனமாக்குகிறது என்பதைத் தான் இங்கு கொடுக்கும் தோழரின் விமர்சனங்கள் கண்டுபிடிக்க விரும்புகின்றன.
இதுவரையில் கண்டிராத, ஒரு முற்றிலும் மாறுபட்ட ஒரு திரை விமர்சனத்தை, வித்தியாசமான கோணத்தில் உங்களின் மூளையில் படத்தினை அலசும் உத்தியை இங்கு ஒரு படத்தை உதாரணமாக விமர்சிப்பதன் மூலம் கொண்டு வர முடியும் என்று நம்புகிறேன்.
சினிமா எனும் மிகப்பெரிய மீடியா மூலம் மக்களின் மனத்தில் எம்மாதிரியான சிந்தனை ஓட்டத்தை உருவாக்க முற்படுகிறார்கள் என்று இந்த புத்தகத்தில் படித்து அறிந்து கொண்டேன். மிக மிக உபயோகமான, பயனுள்ள தகவல் என்பதால் தங்களோடு பகிர விரும்பி இங்கு ஒரு படத்தினை அவர் விமர்சித்த அந்த கட்டுரையைப் பதிக்க விரும்புகிறேன்.
********************************************************************************************************************
அன்பே சிவம் - சி. பி. எம் -இன் திரை அவதாரம்
'அன்பே சிவம்' திரைப்படத்தில் பிரளயனின் ' வீதி நாடக்குழு' இருக்கிறது; தொழிலாளிகளின் சம்பள உயர்வுக் கோரிக்கை இருக்கிறது; செங்கொடி இருக்கிறது; சி.ஐ.டி.யு.வின் அறிவிப்புப் பலகையே இருக்கிறது; பன்னாட்டு நிறுவனங்களைத் தாக்கும் வசனங்கள் இருக்கின்றன; மொத்தத்தில் மார்க்சிஸ்டு கட்சியினர் மனக் கிளர்ச்சியடைந்து தியேட்டர் வாசலில் தோரணம் கட்டுவதற்கான எல்லா சாத்தியக் கூறுகளும் படத்தில் இருக்கின்றன.
இருந்த போதிலும் வெள்ளித்திரையில் சிவப்பு நிறம் தெரிவதாகக் கேள்விப்பட்டு விரைந்து, சினிமாக் கொட்டகையில் 40,50 அபராதம் கட்டிய ரசிகர்களுக்கு "கமலஹாசன் என்ன சொல்ல வருகிறார்" என்ற குழப்பமும் இருக்கிறது.
மார்க்சிஸ்டு கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினர் சீதாராம் யெச்சூரி இந்தப் படத்தைப் பாராட்டியிருப்பதிலோ, தீக்கதிர் உச்சிகோந்திருப்பதிலோ நமக்கு வியப்பில்லை. பா.ஜ.க. தலைவர் இல.கணேசனும் இதைப் பாராட்டியிருக்கிறார் என்பதுதான் இதில் சுவையான செய்தி. செங்கொடியும், சி.ஐ.டி.யூ. பலகையும்
தெளிவாகக் காண்பிக்கப்பட்ட பிறகும் இல.கணேசன் பாராட்டுகிறாரென்றால், ஏமாந்தது யார் என்று நமக்குத் தெரிந்தாக வேண்டும்.
நல்லசிவம்(கமல்) எனும் விகாரமான தோற்றம் கொண்ட மார்க்சியவாதி, அன்பரசு(மாதவன்) எனும் அழகான, அமெரிக்காவில் படித்த, செல்போன் பிடித்த, ஜீன்ஸ் போட்ட இளைஞனை புவனேசுவர் விமான நிலையத்தில் சந்திக்கிறான். தன்னுடைய தமிழ்ப் பெயரையே இழிவாகக் கருதி ஏ.அர்ஸ். என்று சுருக்கிக் கூறிக் கொள்ளும் அளவு தீவிரமான அமெரிக்க மோகியான அன்பரசு, நல்லசிவத்தைத் தீவிரவாதியென்று சந்தேகித்து போலீசிடம் போட்டுக் கொடுத்து, இல்லையென்று நிரூபணமானதால் அவமானப்படுகிறான்; கொஞ்சம் 'குற்றவுணர்வும்' அடைகிறான்.
புவனேசுவரிலிருந்து சென்னை நோக்கிய நான்கு நாள் பயணத்தில் இந்தச் சின்ன குற்றவுணர்வைக் கொஞ்சம் கொஞ்சமாக நோண்டிப் பெரிதாக்குகிறான் நல்லசிவம். கிரெடிட் கார்டும், வெளிநாட்டு ஷீவும், நுனிநாக்கு ஆங்கிலமும் செல்லுபடியாகாத உண்மையான இந்தியாவை அந்த அமெரிக்கக் குஞ்சுக்கு அறிமுகம் செய்கிறான். அந்த இளைஞனின்
இதயத்திலும் பெயரிலும் 'இயற்கையாகவே' குடி கொண்டிருக்கும் 'அன்பை', அதாவது கடவுளை, சாமர்த்தியமாகத் துழாவி வெளியே எடுத்து அவனுக்கே அறிமுகப்படுத்தியும்விடுகிறான்.
புவனேசுவரிலிருந்து சென்னைக்கு முன்நோக்கிச் செல்லும் இந்தப் பயணத்தினூடாக, நல்லசிவம் தன் நினைவுகளில் பின்னோக்கிச் செல்லும் பயணமும் வருகிறது. வீதி நாடகக் கலைஞனும், மார்க்சியவாதியும், ஓவியனும், கணினி விற்பன்னனுமான நல்லசிவத்தைக் கண்டு - அதாவது அவனிடம் பொதிந்திந்துள்ள சராசரித் தொழிலாளியின் சக்திக்கு அப்பாற்பட்ட 'திறமை'யைக் கண்டு மயங்கி அவனைக் காதலிக்கிறாள் முதலாளியின் மகள். எதிர்பாராத விபத்து அவர்களைப் பிரிக்கிறது.
சிவத்தின்(நல்லசிவத்தின்) காதலி அன்புக்கு (அன்பரசுக்கு) மனைவியாகிறாள். தொழிலாளர்கள் தமது சொந்தத் தியாகத்தால் வாங்க முடியாத கூலிஉயர்வை, தனது காதலைத் தியாகம் செய்து அவர்களுக்கு வாங்கி வழங்கிவிட்டு, ஒரு சித்தரைப் போலத் தெருநாயுடன் நடந்து மறைகிறான் நல்லசிவம்.
கதையின் தர்க்கரீதியான தொடர்ச்சியில் விழும் ஓட்டைகளை ஒதுக்கிவிட்டு மையக் கருத்துக்குச் செல்வோம்.
*****************************************************************************************************************************
படம் உலகமயமாக்கத்துக்கெதிராகப் பேசுகிறதா? ஆம், என்கிறார் கமலஹாசன். வீதி நாடகத்திலும், மாதவனிடம் கமல் பேசும் வசனங்களிலும் ஆங்காங்கே தூவபட்டிருக்கும் வசனங்களை வைத்து அத்தகைய பிரமை சிலருக்குத் தோன்றக்கூடும்.
சரி, உலகமயமாக்கலை எதிர்த்து இந்தப் படம் யாரிடம் பேசுகிறது? என்ன பேசுகிறது? இந்தக் கொள்கைகளினால் ஆதாயமடைகின்ற வர்க்கத்தின் பிரதிநிதியிடம் பேசுகிறது. கணினி வல்லுனர்களாகவும், பொறியாளர்களாகவும், சேவைத்துறையினராகவும் வேலை செய்கின்ற நுனி நாக்கு ஆங்கிலப் பேர்வழிகளிடம், அமெரிக்காவுக்கு ஓடுவதற்குச் சந்தர்ப்பத்தை எதிர்ப்பார்த்துக் காத்திருக்கும் பெப்சி மாதவன்களிடம் பேசுகிறது.
"சோற்றுக்குப் போராடும் இந்தத் தேசத்தைப் பாருங்கள். மக்களைப் பாருங்கள். மனமிரங்குங்கள். அற உணர்வு கொள்ளுங்கள்" என்று அவர்களிடம் மன்றாடுகிறது. அவ்வப்போது நல்லசிவத்தின் சாமர்த்தியமான வசனங்களால் அவர்களை மடக்குகிறது. லேசாக இடித்துரைக்கிறது.
பிறப்பால் இந்தியனாகவும் சிந்தனையால் அமெரிக்க அடிவருடியாகவும் வளர்ந்துள்ள "யுப்பி" என்றாழைக்கப்படும் நவீன கேட்டுக் குடி வர்க்கத்தின் பிரதிநிதியாகத் திரையில் தோன்றுகிறார் மாதவன். இந்த வர்க்கம் அறவுணர்வற்றுப்(Amoral) போனதற்குக் காரணமென்ன என்பது நமது முதல் கேள்வி.
உலகப் புகழ் பெற்றா பங்குச் சந்தைச் சூதாடியான ஜார்ஜ் சோரோஸ் எனும் கிழவனிடம் அவனுடைய ஒழுக்கம், அறவுணர்வு பற்றிய கேள்விகளை எழுப்பியபோது, "சந்தைக்கு அறவுணர்வு இல்லை; எனவே எனக்கும் இல்லை" என்று பதிலளித்தானாம். அந்தக் கிழட்டுப் போக்கிரியின் வாயிலிருந்து வெளிவந்த ஒவ்வொரு சொல்லும் உண்மை.
பன்னாட்டு நிறுவனங்கள் உலகச் சந்தையைக் கைப்பற்ற எத்தகைய 'நெறிகளைக்' கடைப்பிடிக்கின்றனவோ அவற்றின் பிரதிபலிப்பைத்தான் நாம் இந்த யுப்பி வர்க்கத்திடம் காணமுடியும். ஏனென்றால் இவர்கள் அதன் ஊழியர்கள், தரகர்கள், துதிபாடிகள் அல்லது நல்லசிவத்தின் மொழியில் சொன்னால் எலும்பைக் கவ்வக் காத்திருக்கும் கூலிகள்.
அவ்வாறிருக்க, நிஜத்தின் தலையைச் சீவுவதைத் தந்திரமாகத் தவிர்த்துவிட்டு, நிழலுக்கு முடிவெட்டி அழகுபடுத்த முனைகிறார் நல்லசிவம்.
அன்பரசுவின்(மாதவனின்) வர்க்கத்தைப் பொறுத்தவரை முதலாளித்துவ உலகச் சந்தைதான் அவர்களது கடவுள். சந்தையின் விதிகள்தான் இறைவனின் பத்துக்கட்டளைகள். இந்த ஆட்டத்தில் வெல்லும்போது அதைத் தனது திறமைக்கும், புத்திக் கூர்மைக்கும் கிடைத்த வெற்றியாக அவர்கள் கருதிக் கொள்கிறார்கள். இதில் தோற்று மடிபவர்களைக் குறித்து
அவர்கள் வருத்தம் கொள்வதில்லை.
சூறாவளியில் பிடுங்கியெறியப்பட்ட தென்னை மரத்துக்காக இவர்கள் எப்படிக் கண்ணீர் விடமாட்டார்களோ, அவ்வாறே உலகமயமாக்கத்தால் பிடிங்கி எறியப்பட்டுச் செத்து மடிகின்ற விவசாயிகளுக்காகவும் இவர்கள் கண்ணீர் விடுவதில்லை.
"சோமாலியா முதல் தஞ்சை வரையிலான பட்டினிச் சாவுகளுக்கும் தற்கொலைகளுக்கும் காரணம் நம்மால் முன்னறிந்து சொல்ல முடியாத சந்தையின் விதிகள் தான்" என்று கூறும் உலக முதலாளித்துவத்திடம் இந்தச் சாவுகளுக்கக தார்மீகப் பொறுப்புணர்ச்சியை எப்படி எதிர்பார்க்க முடியாதோ, அவ்வாறே இந்த யுப்பி வர்க்கத்திடமும் அதை எதிர்பார்க்க முடியாது. "பட்டினிச் சாவா அதற்கு நான் என்ன செய்ய முடியும்?" என்று அவர்கள் தோளைக் குலுக்குவார்கள். அவ்வளவுதான்.
ஆனால் எல்லா மனிதர்களுக்குள்ளும் ஓர் அன்பு ஊற்று இருப்பதாகவும் ஏதோ சில காரணங்களால் அது அடைப்பட்டிருந்தாலும் அதைத் தோண்டியோ, நோண்டியோ வெளியே கொண்டு வந்து விடமுடியுமென்றும் நம்மை நம்பச் சொல்கிறார் கமலஹாசன். இந்த பார்முலாவின்படி மாதவனுக்குள் இருக்கும் 'கடவுளை' நாலே நாளில் தோண்டி எடுத்து விடுகிறார்.
எல்லோருக்குள்ளும் ஒரு நடுநிலையான மனச்சாட்சி(கடவுள்) இருப்பதாகவும், அந்த மனச்சாட்சிக்கு விரோதமாகச் சிலர் நடந்து கொள்கின்ற காரணத்தினால்தான் சமூகத்தில் இத்தனை அநீதிகள் நிகழ்கின்றனவென்றும், எல்லோரும் மனச்சாட்சிப்படி நடந்து கொள்ளத் தொடங்கி விட்டால் உலகமே அன்புமயமாகிவிடும் என்றும் கருதுகின்ற பிரபலமான மூடநம்பிக்கையை வேறு வார்த்தைகளில் விற்பனை செய்கிறார் கமலஹாசன்.
மனச்சாட்சி என்பது என்ன?
****************************************************************************************************************************
இது பற்றி அடுத்த பாகத்தில் தொடர்கிறேன்.
(தொடரும்)
பாகம் 2 (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=13274)
பாகம் 3(இறுதி) (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=13275)நன்றி:
புத்தகம்: "சினிமா: திரை விலகும் போது"
கட்டுரையாளர்: தோழர். மருதையன்.