xavier_raja
09-11-2007, 09:34 AM
வள்ளல் கர்ணனை பற்றிய ஒரு கதை இது.
ஒருமுறை கிருஷ்ணனிடம் தர்மர், கிருஷ்ணா நான் கூட நிறைய தானதர்மங்கள் செய்கிறேன் ஆனால் எல்லோரும் கர்ணணைத்தான் புகழ்கிறார்கள் என்று கேட்டாராம். அதற்கு கிருஷ்ணர் சரி தர்மா நான் ஒரு போட்டி வைக்கிறேன் அதில் நீ வெற்றிபெற்றால் நீதான் சிறந்த தர்மவான் போட்டிக்கு தயாரா என்றாராம், தர்மரும் ஒத்துகொள்ள போட்டி தயாராயிற்று. போட்டி இதுதான். இரண்டு பெரிய பொக்கிஷ குவியல்கள் அதை சூரியன் அஸ்தமிப்பதற்குள் தானம் செய்துவிடவேண்டும். அப்படி செய்த்துவிட்டால் நீதான் சிறந்த தர்மவான். காலையில் போட்டி துவங்கிற்று, தர்மரும் போவோர் வருவோருக்கெல்லாம் வாரிவாரி வழங்கினாராம் ஆனால் பொக்கிஷம் குறையவேயில்லை. ஆயிற்று இன்னும் சற்று நேரத்தில் சூரியன் அஸ்தமித்துவிடுவான். அப்பொழுது தர்மர் கிருஷ்ணனிடம் கிருஷ்ணா என்னால் முடியவில்லை ஆனால் இதே பரிட்சையை கர்ணணிடமும் வையுங்கள் அவன் ஜெயித்தால் நான் ஒத்துகொள்கிறேன் என்று கூற, கிருஷ்ணர் உடனே கர்ணணை கூப்பிட்டு கர்ணா இதை சூரியன் அஸ்தமிப்பதற்குள் தானம் செய்துவிடவேண்டும் என்று கூற உடனே கர்ணணை இரண்டு பேரை கூப்பிட்டு ஆளுக்கு ஒன்றாக கொடுத்துவிட்டாராம். அப்பொழுது கிருஷ்ணர் தர்மரைபார்த்து இதை நீ கூட செய்திருக்கலாம் ஆனால் உன்னுடைய மனம் இவ்வளவு பொருளையும் இரண்டு பேருக்கு கொடுப்பதா என்று ஒர் எண்ணம் அதனால்தான் உன்னால் முடியவில்லை, ஆனால் கர்ணண்னுக்கு அந்த மாதிரி கிடையாது அதனால்தான் அவன் சிறந்த தர்மவான் என்றாறாம்.
ஒருமுறை கிருஷ்ணனிடம் தர்மர், கிருஷ்ணா நான் கூட நிறைய தானதர்மங்கள் செய்கிறேன் ஆனால் எல்லோரும் கர்ணணைத்தான் புகழ்கிறார்கள் என்று கேட்டாராம். அதற்கு கிருஷ்ணர் சரி தர்மா நான் ஒரு போட்டி வைக்கிறேன் அதில் நீ வெற்றிபெற்றால் நீதான் சிறந்த தர்மவான் போட்டிக்கு தயாரா என்றாராம், தர்மரும் ஒத்துகொள்ள போட்டி தயாராயிற்று. போட்டி இதுதான். இரண்டு பெரிய பொக்கிஷ குவியல்கள் அதை சூரியன் அஸ்தமிப்பதற்குள் தானம் செய்துவிடவேண்டும். அப்படி செய்த்துவிட்டால் நீதான் சிறந்த தர்மவான். காலையில் போட்டி துவங்கிற்று, தர்மரும் போவோர் வருவோருக்கெல்லாம் வாரிவாரி வழங்கினாராம் ஆனால் பொக்கிஷம் குறையவேயில்லை. ஆயிற்று இன்னும் சற்று நேரத்தில் சூரியன் அஸ்தமித்துவிடுவான். அப்பொழுது தர்மர் கிருஷ்ணனிடம் கிருஷ்ணா என்னால் முடியவில்லை ஆனால் இதே பரிட்சையை கர்ணணிடமும் வையுங்கள் அவன் ஜெயித்தால் நான் ஒத்துகொள்கிறேன் என்று கூற, கிருஷ்ணர் உடனே கர்ணணை கூப்பிட்டு கர்ணா இதை சூரியன் அஸ்தமிப்பதற்குள் தானம் செய்துவிடவேண்டும் என்று கூற உடனே கர்ணணை இரண்டு பேரை கூப்பிட்டு ஆளுக்கு ஒன்றாக கொடுத்துவிட்டாராம். அப்பொழுது கிருஷ்ணர் தர்மரைபார்த்து இதை நீ கூட செய்திருக்கலாம் ஆனால் உன்னுடைய மனம் இவ்வளவு பொருளையும் இரண்டு பேருக்கு கொடுப்பதா என்று ஒர் எண்ணம் அதனால்தான் உன்னால் முடியவில்லை, ஆனால் கர்ணண்னுக்கு அந்த மாதிரி கிடையாது அதனால்தான் அவன் சிறந்த தர்மவான் என்றாறாம்.