PDA

View Full Version : மலரானவளே..!



யாழ்_அகத்தியன்
08-11-2007, 12:04 PM
நிலவு பிடிக்குமா என்கிறாய்
நீ காணாமல் போனால் உன்னை
கண்டுபிடிக்க நிலவைத்தானே நான்
அடையாளாமாய் வைத்திருக்கிறேன்

*
எல்லா பூக்களும் எப்படியோ
வாடிவிடுகிறது உன் புன்னகை
பூ மட்டும்தான் வாடமலிருக்க
பூக்கிறது

*
குடிச்சாவது பழகியிருக்கலாம் நான்
முத்தம் தராவிட்டால் குடிச்சிடுவேன்
என்று சொல்லியே கெஞ்சாமல் விரும்பியளவு
உன் முத்தங்களால் குளித்திருப்பேன்

*
என்னை இதயம் இயக்கவில்லை
என் இதழ்கள்தான் இயக்குகிறது
பார் முத்தம் கொடுக்க உன்
உச்சி முதல் பாதம்வரை மாறி மாறி
என்னை இயக்கிக் கொண்டிருக்கிறதே

*
என்னை கவிஞனாக்கியது
மட்டுமல்ல கவிதையாய்
என்னை அழகாக்கியதும்
நீதான்

*
எதற்காக நீ
பூச் செடி வளக்கிறாய்
உன்னைப் போல் நடமாடும்
பூவாக பூக்கவே முடியாது
என்று ஆடிக்காட்டவா


-யாழ்_அகத்தியன்

ஓவியன்
19-11-2007, 05:35 AM
என்னை கவிஞனாக்கியது
மட்டுமல்ல கவிதையாய்
என்னை அழகாக்கியதும்
நீதான்

ஓ!!
கவிதை ஒன்று
கவிதை எழுதியது
ஓர்
கவிதைக்காக...!!

james
04-12-2007, 08:12 AM
அருமையான கவிதை