PDA

View Full Version : அமைதியானவளே..!



யாழ்_அகத்தியன்
08-11-2007, 11:58 AM
நான் என்னை
மறந்து ரசிக்கும்
இடம் எது தெரியுமா

உன்னை முதல் முதல்
சந்தித்தபோது நான்
சிலையாய் நின்ற அந்த
பூங்காவனம்தான்

*
என் காதல் கவிப் புத்தகத்தை
உன் நெஞ்சோடு அணைத்துக்
கொண்டு செல்கிறாய்

எப்படியும்
நீ வீடும் சென்று படிக்கும்
போது காமக்கவிதையாய்
மாறியிருக்கும்

*
உனக்கு
பயப்பிடமா
பேய் கதை
சொல்ல தெரியாதா

உன்னை பார்த்து
நானல்லவா
பயப்பிடுகிறேன்

*

உன்னிடம் காதலை
சொல்ல நினைக்கும்
பொழுதுகளில்தான்

நான் நானாக இருக்கிறேன்
அதையும் நீயே சொல்லிவிட்டால்
என்னை நான் முழுவதுமாய்
மறந்துவிடுவேன்

*
உனக்கு காதல்
கதையே தெரியாதா

நீ சொன்ன கதைகள்
எதுவுமே என் காதலை
உன்னிடம் சொல்ல
உதவவில்லையே

-யாழ்_அகத்தியன்

ஓவியன்
19-11-2007, 05:22 AM
உனக்கு காதல்
கதையே தெரியாதா

நீ சொன்ன கதைகள்
எதுவுமே என் காதலை
உன்னிடம் சொல்ல
உதவவில்லையே


காதலை அவளிடம் சொல்ல..
அவள் சொன்ன கதைக்கள் உதவவில்லையென்றால் என்ன அகத்தியன் உங்களது அசத்தலான "காதல் கவிதைகள்" போதாதா என்ன..??

james
05-12-2007, 10:44 AM
மிகவும் ரசித்தேன் நண்பரே!

யாழ்_அகத்தியன்
05-12-2007, 01:48 PM
காதலை அவளிடம் சொல்ல..
அவள் சொன்ன கதைக்கள் உதவவில்லையென்றால் என்ன அகத்தியன் உங்களது அசத்தலான "காதல் கவிதைகள்" போதாதா என்ன..??

அதுதானே உங்களுக்கு விளங்கிது

நன்றி உங்க வாழ்த்துக்கு

யாழ்_அகத்தியன்
05-12-2007, 01:49 PM
மிகவும் ரசித்தேன் நண்பரே!

மிக்க நன்றி

அமரன்
06-12-2007, 09:55 AM
உனக்கு
பயப்பிடமா
பேய் கதை
சொல்ல தெரியாதா

உன்னை பார்த்து
நானல்லவா
பயப்பிடுகிறேன்


திடீர் தேவதை வரவின்
முதல் வரவு பயம்தானே..
அற்புதம்.... பாராட்டுகள்.

யாழ்_அகத்தியன்
06-12-2007, 03:05 PM
திடீர் தேவதை வரவின்
முதல் வரவு பயம்தானே..
அற்புதம்.... பாராட்டுகள்.

உங்க வாழ்த்துக்கு மிக்க நன்றி