PDA

View Full Version : உறவானவளே..!



யாழ்_அகத்தியன்
08-11-2007, 11:56 AM
நீ கவிதை என்றால்
நான் அதில் பொய்
நீ அழகாக தெரிவதற்காய்
உண்மைகளை சாகடிப்பேன்

*
கரப்பான்பூச்சியை
கண்டதும் நீ என்னைக்
கட்டிப் பிடித்தாய்

நான் கரப்பான்பூச்சிக்கும்
நன்றிக் கடனாளியாகிவிட்டேன்

*
வகுப்பாசிரியைக்கு உன்
மேல் பொறாமை படிப்பிக்கும்
தன்னைக் கவனிக்காமல் நான்
படிக்கும் உன்னைக் கவனிப்பதால்

*
பேசாமல்
எனக்கு நீ முத்தமிடு
இல்லையேல் ஏதாவது
பேசிவிடு

உன் இதழ்கள்
ஒன்றை ஒன்று
முத்தமிடுவதையாவது
நான் பார்த்துவிட்டுப் போகிறேன்

*
எல்லாரும் அழகுக்காக
பொட்டு வைப்பார்கள்

நீ மட்டும்தான் உன்
அழகில் யாரும்
கண்படக்கூடாது
என்பதற்காக
பொட்டு வைக்கிறாய்

-யாழ்_அகத்தியன்

நிரன்
08-11-2007, 02:07 PM
அகத்தியா

அகத்தின் அழகு முகத்தில் தெரியும்ம்
உங்கள் கவிதையின் அழகு மட்டும் ஏன் காமத்தில்
தெரிகிறது

கவிதைகள் நன்று

காமத்தில் காதல் ஆனால் காதலில் காமம் இலலை

ஓவியன்
22-11-2007, 10:20 PM
உன் இதழ்கள்
ஒன்றை ஒன்று
முத்தமிடுவதையாவது
நான் பார்த்துவிட்டுப் போகிறேன்

என்னே ஒரு ஆசை..!!
காதலின் உணர்வுகளில்
கவி எழுதினால்
புது புது வழிமுறைகள்
உதயமாகுமோ....???

பாராட்டுகள் யாழ்_அகத்தியன்..!!

யாழ்_அகத்தியன்
30-11-2007, 03:08 PM
அகத்தியா

அகத்தின் அழகு முகத்தில் தெரியும்ம்
உங்கள் கவிதையின் அழகு மட்டும் ஏன் காமத்தில்
தெரிகிறது

கவிதைகள் நன்று

காமத்தில் காதல் ஆனால் காதலில் காமம் இலலை

எல்லாம் சேர்ந்ததுதான் காதல்
ஏதொ ஒன்று மட்டும் காதல் இல்லை
என்பது என் கருத்து

உங்க கருதுக்கும் வாழ்த்துக்கும்
மிக்க நன்றி

யாழ்_அகத்தியன்
30-11-2007, 03:09 PM
என்னே ஒரு ஆசை..!!
காதலின் உணர்வுகளில்
கவி எழுதினால்
புது புது வழிமுறைகள்
உதயமாகுமோ....???

பாராட்டுகள் யாழ்_அகத்தியன்..!!

இருக்கலாம் என்றுதான் நினைக்கிறேன்

உங்க அசத்தலான வாழ்த்துக்கு
மிக்க நன்றி