PDA

View Full Version : இதயங்கள் இணைந்த இந்நாள்..!



வசீகரன்
08-11-2007, 08:14 AM
திக்கெட்டும் திளைத்திருக்கும் திருவிழாக்கோலம்
திசைகள்தோறும் விளைந்திருக்கும் வேட்டுச்சத்தம்....!

இல்லங்கள்தோறும் குழுமியிருக்கும் குதூகலம்..!
இடைவிடாது நண்பர்களின் வருகையில்
கூடியிருக்கும் கும்மாளம்..!

வர்ணங்களை வாரியிறைத்து வடிவழகில்
நிறைந்திருக்கும் வானம்....!

விழாக்கோலம் பூண்டது.... பூவுலகம்...
மகிழ்வு கொண்டு மனம் நிறைந்தது மனிதம்.....!

வந்துவிட்டது தீபத்திருநாள்....

வர்ணங்களில் வாயில் நிறைக்கும் ஒளித்திருநாள்

மழலைகளாய் மாறி.... மகிழ்ச்சிதனை பரிமாறி
மற்றையோர்காளிடமும் அன்பை, வாழ்த்தை கூறி
.... மனம் நிறைவோம் இந்நாள்...!

வற்றாத வசந்தம் வாழ்வில் நிறைந்து
வளம் குன்றாத வாழ்வுதனை பெற்றிடும்
பேறுகொள்வோம் நன்னாள்...!

மன்திறத்தின் அத்தனை நண்பர்களுடனும்
தீபஒளித்திருநாளின் வாழ்த்துக்களை பகிர்ந்துக்கொள்கிறேன்...!

என்றும் என்னருகில் நீ...இருந்தாய் புன்னகையே...!

வசீகரன்


diya5-791722

மனோஜ்
08-11-2007, 08:54 AM
அருமையான வரிகள் வசீகரன் வாழ்த்துக்கள்

நேசம்
08-11-2007, 10:15 AM
ஒளி திருநாளில் தனது வாழ்த்து கவிதை பகிர்ந்து கொண்ட வசீகரன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் − பாரட்டுகள்

பூமகள்
08-11-2007, 10:49 AM
அழகு தீபாவளி பண்டிகை பறைசாற்றும் வரிகள்..!
இனிய தீபாவளி வாழ்த்துகள்...!!

அமரன்
08-11-2007, 02:15 PM
பகைமைகள் மறந்து
தகைமைகள் மறந்து
ஒன்று சேர்ந்து குலாவி
நன்றாகக் களிக்கும் நாள்...
இன்பத் தீபஒளித்திருநாள்...
இனிய வாழ்த்துக்கள்