Hayah Roohi
07-11-2007, 06:32 AM
நிலவின் கிரணங்கள்Е.
மெல்லிய வர்ணமாய்
பூமிச்சித்திரத்தில்
வந்து விழுகின்றன !
வெள்ளித்துணுக்குகள்
பதித்த வானம்..
ஏகாந்தமாய் ஒளிர்கிறது !
இதயமே கழன்று விடுவது
போலЕ..
ஒரு எரிகல்Е
தற்கொலையை நோக்கி
பயணப் படுகிறது !
இரவுЕ.
இனிமையாய் இருக்கிறது !
மேகப்பஞ்சணைகள்Е.
கனவுகளின்
மிச்சங்களாய்ЕЕ.
தத்தி தத்தி வரும்
தென்றல் குழந்தைЕ.
தளிர்களுக்கு
முத்தம் தருகிறது !
விழிப்பறவைகள்
வலிக்க வலிக்க
சிறகு விரிக்கின்றன !
இந்த நிமிடம்Е
இந்த செக்கன்Е.
இதயம்Е.
ஒரு பனித்துளி போல்
பவித்திரமாய்Е.
பாரமற்றதாய்Е..
எங்கோ இரையும்
ஒரு
வண்டின் ரீங்காரம்Е
செவிகளில்
சங்கீதமாய்Е..
சங்கீதமாய்Е..
தூங்கி விழும்
அந்த
இலை மடியிலிருந்துЕ
ஒரு
`பனித்துளி`
மெல்ல உதிர்கிறது !
இந்த நிமிடம்
நான் வாழ்கிறேன் !!!
விழிகளே !
இந்த வைரப்புதையலை
அள்ளிக்கொள்ளுங்கள் !!
செவிகளே !
இரவின் கீதத்தை
உங்களில்
எழுதிக்கொள்ளுங்கள் !!!
புலன் தூரிகைகளே !
இந்த
அழியாத வர்ணத்தை
உங்கள்
இதயங்களில் தீட்டுங்கள் !!!
மெல்லிய வர்ணமாய்
பூமிச்சித்திரத்தில்
வந்து விழுகின்றன !
வெள்ளித்துணுக்குகள்
பதித்த வானம்..
ஏகாந்தமாய் ஒளிர்கிறது !
இதயமே கழன்று விடுவது
போலЕ..
ஒரு எரிகல்Е
தற்கொலையை நோக்கி
பயணப் படுகிறது !
இரவுЕ.
இனிமையாய் இருக்கிறது !
மேகப்பஞ்சணைகள்Е.
கனவுகளின்
மிச்சங்களாய்ЕЕ.
தத்தி தத்தி வரும்
தென்றல் குழந்தைЕ.
தளிர்களுக்கு
முத்தம் தருகிறது !
விழிப்பறவைகள்
வலிக்க வலிக்க
சிறகு விரிக்கின்றன !
இந்த நிமிடம்Е
இந்த செக்கன்Е.
இதயம்Е.
ஒரு பனித்துளி போல்
பவித்திரமாய்Е.
பாரமற்றதாய்Е..
எங்கோ இரையும்
ஒரு
வண்டின் ரீங்காரம்Е
செவிகளில்
சங்கீதமாய்Е..
சங்கீதமாய்Е..
தூங்கி விழும்
அந்த
இலை மடியிலிருந்துЕ
ஒரு
`பனித்துளி`
மெல்ல உதிர்கிறது !
இந்த நிமிடம்
நான் வாழ்கிறேன் !!!
விழிகளே !
இந்த வைரப்புதையலை
அள்ளிக்கொள்ளுங்கள் !!
செவிகளே !
இரவின் கீதத்தை
உங்களில்
எழுதிக்கொள்ளுங்கள் !!!
புலன் தூரிகைகளே !
இந்த
அழியாத வர்ணத்தை
உங்கள்
இதயங்களில் தீட்டுங்கள் !!!