தங்கவேல்
06-11-2007, 08:36 AM
உள்ளம் நெகிழ்ந்து கண்கள் பனிக்க எழுதுகின்றேன். எனது வாழ்வில் எத்தனையோ பிரச்சனைகள். எத்தனையோ தோல்விகள். என் இரு குழந்தைகளின் முகத்தில் பசி தெரிய கூடாது என்பதற்காக,
பசிக்கா இரண்டு வருடம் ஒரு வேளை மட்டும் சாப்பிட்டு உயிர் வளர்த்தேன். தோல்விகள், தோல்விகள். மனது வெந்து வெந்து, புழுங்கினேன். எனது பாலைவன வாழ்க்கையில் தென்றலாய் வந்தவர்கள் எனது வாழ்க்கைக்காக நண்பர்கள் தான்.
மன்ற உறவு ஒருவர் என்னையும் ஒரு பொருட்டாக கருதி, எனக்காக அவரின் நேரத்தையும், பொருளையும் செலவிட்டு, உடனடியாக உதவி செய்தார். யாரிடமும் சொல்லக்கூடாது என்று வேறு சொல்லி விட்டார்.
அவர் முகம் எப்படி இருக்கும் ? தெரியாது.
குரல் எப்படி இருக்கும் ? தெரியாது
எந்த ஊர் ? தெரியாது
சிவப்பா கருப்பா ? தெரியாது.
இறைவனுக்கு கூட முகங்கள் உண்டு. ஆனால் இவரை என்னெவென்று சொல்லுவது. எனது கோரிக்கைக்கு செவி மடுத்து உடனடி உதவி செய்தார். அவரை நினைக்கும் போது நெஞ்சம் விம்முகிறது. கண்கள் பனிக்கிறது. அவரின் உள்ளம் அன்பினால் செய்யப்பட்டு இருக்கும். அள்ளி அள்ளி தெளிக்கின்றார். அந்த அன்பின் வேகம் தாங்க முடியால் நெஞ்செல்லாம் நிறைந்து விட்டது. இப்போதே அதே சந்தோசத்தில் செத்து விடலாம் போல இருக்கின்றது. தீபாவளி உண்மையில் எனக்குத்தான்.
எத்தனை ஜென்மம் எடுத்தாலும் தமிழ் மன்றத்தில் உலவவே ஆவல்.
அவருக்கு இறைவன் எல்லா வளமும் அருளுவார்.
நெஞ்சம் பொங்கும் அன்புடன்
தங்கம்
பசிக்கா இரண்டு வருடம் ஒரு வேளை மட்டும் சாப்பிட்டு உயிர் வளர்த்தேன். தோல்விகள், தோல்விகள். மனது வெந்து வெந்து, புழுங்கினேன். எனது பாலைவன வாழ்க்கையில் தென்றலாய் வந்தவர்கள் எனது வாழ்க்கைக்காக நண்பர்கள் தான்.
மன்ற உறவு ஒருவர் என்னையும் ஒரு பொருட்டாக கருதி, எனக்காக அவரின் நேரத்தையும், பொருளையும் செலவிட்டு, உடனடியாக உதவி செய்தார். யாரிடமும் சொல்லக்கூடாது என்று வேறு சொல்லி விட்டார்.
அவர் முகம் எப்படி இருக்கும் ? தெரியாது.
குரல் எப்படி இருக்கும் ? தெரியாது
எந்த ஊர் ? தெரியாது
சிவப்பா கருப்பா ? தெரியாது.
இறைவனுக்கு கூட முகங்கள் உண்டு. ஆனால் இவரை என்னெவென்று சொல்லுவது. எனது கோரிக்கைக்கு செவி மடுத்து உடனடி உதவி செய்தார். அவரை நினைக்கும் போது நெஞ்சம் விம்முகிறது. கண்கள் பனிக்கிறது. அவரின் உள்ளம் அன்பினால் செய்யப்பட்டு இருக்கும். அள்ளி அள்ளி தெளிக்கின்றார். அந்த அன்பின் வேகம் தாங்க முடியால் நெஞ்செல்லாம் நிறைந்து விட்டது. இப்போதே அதே சந்தோசத்தில் செத்து விடலாம் போல இருக்கின்றது. தீபாவளி உண்மையில் எனக்குத்தான்.
எத்தனை ஜென்மம் எடுத்தாலும் தமிழ் மன்றத்தில் உலவவே ஆவல்.
அவருக்கு இறைவன் எல்லா வளமும் அருளுவார்.
நெஞ்சம் பொங்கும் அன்புடன்
தங்கம்