யவனிகா
04-11-2007, 06:15 PM
இன்று தேதி ஒன்று. சம்பள நன்னாள்.மாதம் முழுவதும் வேலை செய்த பணத்தைக் கையில் வாங்கும் மகிழ்ச்சியை விட...நான் கடன் குடுத்தவர்களிடம் கடனைத் திரும்பக் கேட்பது எப்படி என்ற சங்கோஜத்துடனேயே பணிக்குப் புறப்பட்டேன். இதைப் படித்தவுடன் யவனிகா கந்து வட்டிக்குப் பணம் கொடுத்து கறாராக வசூல் செய்பவள் என்ற எண்ணம் உங்கள் மனதில் எழுகிறதல்லவா? அதை சுத்தமாக அழிரப்பர் போட்டு அழித்து விட்டு மேலே படியுங்கள். நீ சரியான ஏமாளி..பொழைக்கத்தெரியாத பெண்...படித்த முட்டாள்...இதெல்லாம் என் கணவர் என்னைப் பார்த்து அடிக்கடி கூறும் வார்த்தைகள்.ஏன் தெரியுமா?
மாதக்கடைசியில் என்னுடன் பணிபுரிவர்களுக்கு கடன் கொடுப்பதும்...அதை திரும்பக் கேட்க முடியாமல் மென்று முழுங்கி காந்தி கடனில் விட்டு விடுவதும் என்னுடைய வாழ்க்கை வரலாற்றில் வெள்ளெழுத்தில் எழுதப்பட வேண்டிய சம்பவங்கள்.
ஆனால் இன்று வீறு கொண்ட வேங்கையாய்ப் புறப்பட்டாள் யவனிகா. இன்னும் எத்தனை நாள் தான் ஏமாற்றுவார் இந்த பூமியில்? ஏமாறுவோர் இருக்கும் வரை ஏமாற்றுவாரும் இருப்பார்கள் போன்ற அரிய கருத்துகளை அசைபோட்டபடி....வெட்கப் படாமல் குடுத்த கடனை கடைசி வரை போராடித் திரும்பப் பெற்றே ஆகவேண்டும் என்ற தீர்மானத்தை மனதிலே உருவேற்றிக் கொண்டேன்.
இன்றைய என்னுடைய எய்ம். கமல். உலக நாயகன் பேரை வைத்திருக்கும், பங்களாதேசி..பேருதான் கமல். அய்யா ஸ்டைல் எல்லாம் சூப்பர் ஸ்டார் மாதிரி இருக்கும். "தல" மாதிரி கையை நீட்டி நீட்டி பேசுவார். தளபதி மாதிரி பறந்து பறந்து துடைப்பத்துடன் சண்டை போட்டு தரை துடைப்பார். பங்களா தேசத்திலிருந்து வந்து சவூதி மருத்தவமனையில், டயட்டரி கிச்சனில் வேலை செய்யும் கடைநிலை ஊழியன். இரண்டு மாதங்களுக்கு முன் 500 ரியால் கடன் வாங்கி இன்றுவரை தராமல் இழுத்தடித்துக் கொண்டிருக்கிறான். ஐந்து, பத்து என்று அவ்வப்போது வாங்கியவைகளும் நேருமாமா கடன் தான்.
டயட்டரி கிச்சனுக்குள் நுழைந்து, நான் அவனைப் பார்த்த போது "அரபு நாடே அசந்து போகும் அழகி நீ..."என்று யாரோ சொல்லிக் கொடுத்த தமிழ்ப் பாட்டை தப்புத்தப்பாய் பாடியபடி தரை துடைத்துக் கொண்டிருந்தான்.
தயக்கத்துடன் முகமன் கூறி ஆரம்பித்தேன். "என்ன கமல் சம்பளம் வாங்கியாச்சா?முகமெல்லாம் சிரிப்பாயிருக்கு?"
"என்ன சிஸ்டர் உங்கள மாதிரி ஆயிரக் கணக்கிலா வருது? தம்மாத்துண்டு 700 ரியால். எல்லாம் வாங்கியாச்சு. பாருங்க சிஸ்டர்...இந்த கடன் குடுத்தவங்க தொல்லை தாங்க முடியறதில்லை. ஒண்ணாம் தேதியான டாண்ணு வற்றாங்க! எல்லாரும் உங்கள மாதிரியா...போனாப் போகுது கஷ்டவாளின்னு விடறதில்லை." என்றான் என் முதல் பந்தையே சிக்சராக்கி!
நான் விடுவனா? நேற்று வரை நான் ஏமாளி. இன்று முதல் அறிவாளியாக்கும்.
"இல்லை கமல்...எனக்கு கொஞ்சம் அவசரமா பணம் தேவைப்படுது...500 ரியால் வாங்கினியில்ல...இப்ப குடேன்..உதவியா இருக்கும்."
"உங்களுக்கென்ன சிஸ்டர் அவசரச்செலவு?..வீட்டுக்காரரும் சம்பாதிக்கறார். கம்பெனி வீடு தந்திருக்கு. மெடிகல் செலவு ஃப்ரீ. பசங்களும் சின்னவங்க தானே! அப்படியென்ன செலவு? ஏதாவது நகை வாங்கப் போறீங்களா?
நான் நகை வாங்கினா இவனுக்கென்ன? நட்டு வாங்கினா இவனுக்கென்ன? இத்தனை விசயம் என்னப் பத்தி, இவனுக்கெப்படித்த் தெரியும்? மனதுக்குள் திட்டியபடி,
"அதில்ல கமல். ஊருக்குப் பணம் அனுப்பனும்.அதான் கேக்கறேன் தப்பா நெனைச்சுக்காதே" என்றேன்.
என்ன சிஸ்டர் நீங்க நெசமாலுமே எனக்கு தங்கச்சி மாதிரி தான் ...உங்களைப் போயி தப்பா நினைப்பனே? அது சரி, ரெண்டு பேரும் சம்பாதிக்கறீங்களே இந்த 500 ரியால வாங்கித்தானா ஊருக்கு அனுப்பனும்? அதுமில்லாம டாலர் ரேட்டு கம்மியாச்சே இப்ப...இந்தியா ரூபா எங்கியோ ஏறிட்டே போகுது போல!இப்ப பணமெல்லாம் அனுப்பாதீங்க. ரெண்டு மாசத்தில டாலர் ஏறும்னு நெனைக்கிறேன்...அப்ப அனுப்பிக்கலாம். நான் சொன்னேன்னு சொல்லுங்க சார்கிட்ட"
இதை வேறு என் கணவரிடம் சொல்லி அவர் காதில் புகை வருவதை நான் பார்ப்பதாகச் செய்த கற்பனையில் எனக்குச் சிரிப்பு வந்தது.
"அதெல்லாம் நான் பாத்துக்கறேன்...நீ கவலை படாதே! உன்னால பணம் குடுக்க முடியுமா? முடியாதா? அதை மட்டும் சொல்லு.."
"என்ன சிஸ்டர் இவ்வளவு ஸ்ரிக்டா கேட்டா எப்பிடி? ஹாஸ்பிடல்ல வர்ர காசு ஒருவாரம் கூட காணறதில்லை...கார் தொடைச்சு வர்ற பணம் தான் மாச செலவுக்கு,
என்ன செய்யறது சிஸ்டர்?"
"நீ ஒரு நாளைக்கு எத்தனை பாக்கெட் குடிக்கற...அதும் காஸ்ட்லியான சிகரெட் தானாம? மத்த பங்களா தேசிங்க சொல்றாங்க. சிகரெட் குடிக்கறதை குறைக்கலாமல்ல!பணமும் மிச்சம்..உடம்புக்கும் நல்லது!" இது நான்.
"நல்ல வேளை சிஸ்டர்...சிகரட்டுன்னு சொன்னதும் தான் ஞாபகம் வந்தது. முந்தா நாள் சாரு உங்களை பிக் அப் பண்றதுக்காக வெயிட் பண்ணிட்டிருந்த சமயத்தில அவருகிட்ட இருந்து ஒரு சிகரெட் கடன் வாங்கினேன். என்ன பிராண்ட் அது? தம்மாத்துண்டு பில்டர் வெச்சிட்டு...இதெல்லாம் குடிச்சா கேன்சர் தான் வரும்...சாரை பிராண்டை மாத்தச் சொல்லுங்க சிஸ்டர்!"
"எனக்குக் கோபம் உச்சிக்கு ஏறியது...இங்க பாரு அவரு சிகரெட் குடிச்சா உனக்கென்ன? பீடி குடிச்சா உனக்கென்ன? நல்ல புத்தி சொன்னா சரின்னு கேக்க வேண்டியது தானே! சரி சிகரெட்ட விடு...உன் கேர்ள் ப்ரண்டுக்கு பெர்ஃயூம் வாங்கணும்னு வேற கடன் வாங்கினியாமா சாராகிட்ட? இதெல்லாம் ஓவராயில்ல...200 ரியாலுக்கு கடன் வாங்கி பெர்ஃயூம் வாங்குவாங்களா யாராவது?
" ஆமா சிஸ்டர்..அது பிலிப்பினி செட் அப்....எதாவது வாங்கிக் குடுத்திட்டே இருந்தாத்தான் ரூட்டிலே இருக்கும். இல்லன்னா டேக் ஆஃப் ஆயிடும். இன்டியன் பொண்ணுங்க மாறியெல்லாம் கிடையாது..ரெண்டு வருச காண்ட்ராக்ட் போடலாம்ன்னு பேசறதுக்குள்ளயே 2000ரியாலுக்கு செலவு வெக்குது! என்ன செய்யறதுன்னு தெரியல"
"இங்க பாரு கமல். எனக்கு உங்கிட்ட பேசறதுக்கு இப்ப நேரமில்ல...பணம் இருக்கா? இல்லையா?" கிடுக்கிப் பிடியில் மாட்டிக் கொண்டான்.
அப்போது பார்த்து அவனது மொபைல் அடித்தது. காரே பூரே... பாலு ஆஸி என்று பெங்காலியில் பேசி முடிக்கும் வரை பொறுத்திருந்தேன்.
பேசி முடித்து என்னை நிமிர்ந்து பார்த்தவனின் கண்ணில் கண்ணீர்.
"சிஸ்டர், போனில் என்னுடைய தம்பி...அம்மாக்கு உடம்புக்கு முடியலை...பணம் வேணும்னு சொன்றான்...இருக்கற 500 ரியால உங்களுக்கு குடுக்கலாம்னு இருந்தேன்...இப்ப 1000ரியால் அனுப்ப வேண்டியிருக்கு, பணத்துக்கு என்ன செய்யறதுன்னு தெரியலை...ஒரு அரை நாள் லீவ் குடுங்க எப்பிடியாவது பணம் புரட்டணும்"என்றான்.
கண்ணீருடன் அவனைப் பார்க்கப் பாவமாக இருந்தது. சரி கவலைப் படாதே. எனக்கு அடுத்த மாசம் குடு போதும்...அம்மாவைப் பாரு முதல்லே என்று அவனை அனுப்பி வைத்து விட்டு இருக்கைக்கு வந்தேன்.
ஒரு மணி நேரம் கழிந்திருக்கும். ஃபரூக் வந்தான்...மதிய வேலைக்காரன். அவன் தான் கமலின் ரூம் மேட். "ஃபரூக்... கமலின் அம்மாக்கு உடம்புக்கு என்ன? பணம் அனுப்பனும்னு சொன்னானே?"என்றேன்.
"கமலோட அம்மா ஐந்து வருடத்திற்கு முன்பே இறந்து போய் விட்டாங்களே சிஸ்டர். ஆன்னா ஊன்னா எல்லாரையும் படுத்த படுக்கையாக்கி, கடன் கேக்கிறதே இவன் வேலையாப் போச்சி" என்றான் ஃபரூக்.
பேக்கு, ஏமாளி, லூசு என்று திட்டும் என் கணவரிம் முகம் என் மனக்கண்ணில் நிழலாடியது. இந்த மாசம் போனா என்ன? நவம்பர் போனா டிசம்பர் வரும் தானே...குடுத்த கடனை திருப்பி வாங்கி, ஏமாளிப் பட்டத்தை நூலிலிருந்து அறுத்து சுதந்திரமாகப் பறக்க விடத்தான் போகிறேன், அடுத்த மாதம்.
மாதக்கடைசியில் என்னுடன் பணிபுரிவர்களுக்கு கடன் கொடுப்பதும்...அதை திரும்பக் கேட்க முடியாமல் மென்று முழுங்கி காந்தி கடனில் விட்டு விடுவதும் என்னுடைய வாழ்க்கை வரலாற்றில் வெள்ளெழுத்தில் எழுதப்பட வேண்டிய சம்பவங்கள்.
ஆனால் இன்று வீறு கொண்ட வேங்கையாய்ப் புறப்பட்டாள் யவனிகா. இன்னும் எத்தனை நாள் தான் ஏமாற்றுவார் இந்த பூமியில்? ஏமாறுவோர் இருக்கும் வரை ஏமாற்றுவாரும் இருப்பார்கள் போன்ற அரிய கருத்துகளை அசைபோட்டபடி....வெட்கப் படாமல் குடுத்த கடனை கடைசி வரை போராடித் திரும்பப் பெற்றே ஆகவேண்டும் என்ற தீர்மானத்தை மனதிலே உருவேற்றிக் கொண்டேன்.
இன்றைய என்னுடைய எய்ம். கமல். உலக நாயகன் பேரை வைத்திருக்கும், பங்களாதேசி..பேருதான் கமல். அய்யா ஸ்டைல் எல்லாம் சூப்பர் ஸ்டார் மாதிரி இருக்கும். "தல" மாதிரி கையை நீட்டி நீட்டி பேசுவார். தளபதி மாதிரி பறந்து பறந்து துடைப்பத்துடன் சண்டை போட்டு தரை துடைப்பார். பங்களா தேசத்திலிருந்து வந்து சவூதி மருத்தவமனையில், டயட்டரி கிச்சனில் வேலை செய்யும் கடைநிலை ஊழியன். இரண்டு மாதங்களுக்கு முன் 500 ரியால் கடன் வாங்கி இன்றுவரை தராமல் இழுத்தடித்துக் கொண்டிருக்கிறான். ஐந்து, பத்து என்று அவ்வப்போது வாங்கியவைகளும் நேருமாமா கடன் தான்.
டயட்டரி கிச்சனுக்குள் நுழைந்து, நான் அவனைப் பார்த்த போது "அரபு நாடே அசந்து போகும் அழகி நீ..."என்று யாரோ சொல்லிக் கொடுத்த தமிழ்ப் பாட்டை தப்புத்தப்பாய் பாடியபடி தரை துடைத்துக் கொண்டிருந்தான்.
தயக்கத்துடன் முகமன் கூறி ஆரம்பித்தேன். "என்ன கமல் சம்பளம் வாங்கியாச்சா?முகமெல்லாம் சிரிப்பாயிருக்கு?"
"என்ன சிஸ்டர் உங்கள மாதிரி ஆயிரக் கணக்கிலா வருது? தம்மாத்துண்டு 700 ரியால். எல்லாம் வாங்கியாச்சு. பாருங்க சிஸ்டர்...இந்த கடன் குடுத்தவங்க தொல்லை தாங்க முடியறதில்லை. ஒண்ணாம் தேதியான டாண்ணு வற்றாங்க! எல்லாரும் உங்கள மாதிரியா...போனாப் போகுது கஷ்டவாளின்னு விடறதில்லை." என்றான் என் முதல் பந்தையே சிக்சராக்கி!
நான் விடுவனா? நேற்று வரை நான் ஏமாளி. இன்று முதல் அறிவாளியாக்கும்.
"இல்லை கமல்...எனக்கு கொஞ்சம் அவசரமா பணம் தேவைப்படுது...500 ரியால் வாங்கினியில்ல...இப்ப குடேன்..உதவியா இருக்கும்."
"உங்களுக்கென்ன சிஸ்டர் அவசரச்செலவு?..வீட்டுக்காரரும் சம்பாதிக்கறார். கம்பெனி வீடு தந்திருக்கு. மெடிகல் செலவு ஃப்ரீ. பசங்களும் சின்னவங்க தானே! அப்படியென்ன செலவு? ஏதாவது நகை வாங்கப் போறீங்களா?
நான் நகை வாங்கினா இவனுக்கென்ன? நட்டு வாங்கினா இவனுக்கென்ன? இத்தனை விசயம் என்னப் பத்தி, இவனுக்கெப்படித்த் தெரியும்? மனதுக்குள் திட்டியபடி,
"அதில்ல கமல். ஊருக்குப் பணம் அனுப்பனும்.அதான் கேக்கறேன் தப்பா நெனைச்சுக்காதே" என்றேன்.
என்ன சிஸ்டர் நீங்க நெசமாலுமே எனக்கு தங்கச்சி மாதிரி தான் ...உங்களைப் போயி தப்பா நினைப்பனே? அது சரி, ரெண்டு பேரும் சம்பாதிக்கறீங்களே இந்த 500 ரியால வாங்கித்தானா ஊருக்கு அனுப்பனும்? அதுமில்லாம டாலர் ரேட்டு கம்மியாச்சே இப்ப...இந்தியா ரூபா எங்கியோ ஏறிட்டே போகுது போல!இப்ப பணமெல்லாம் அனுப்பாதீங்க. ரெண்டு மாசத்தில டாலர் ஏறும்னு நெனைக்கிறேன்...அப்ப அனுப்பிக்கலாம். நான் சொன்னேன்னு சொல்லுங்க சார்கிட்ட"
இதை வேறு என் கணவரிடம் சொல்லி அவர் காதில் புகை வருவதை நான் பார்ப்பதாகச் செய்த கற்பனையில் எனக்குச் சிரிப்பு வந்தது.
"அதெல்லாம் நான் பாத்துக்கறேன்...நீ கவலை படாதே! உன்னால பணம் குடுக்க முடியுமா? முடியாதா? அதை மட்டும் சொல்லு.."
"என்ன சிஸ்டர் இவ்வளவு ஸ்ரிக்டா கேட்டா எப்பிடி? ஹாஸ்பிடல்ல வர்ர காசு ஒருவாரம் கூட காணறதில்லை...கார் தொடைச்சு வர்ற பணம் தான் மாச செலவுக்கு,
என்ன செய்யறது சிஸ்டர்?"
"நீ ஒரு நாளைக்கு எத்தனை பாக்கெட் குடிக்கற...அதும் காஸ்ட்லியான சிகரெட் தானாம? மத்த பங்களா தேசிங்க சொல்றாங்க. சிகரெட் குடிக்கறதை குறைக்கலாமல்ல!பணமும் மிச்சம்..உடம்புக்கும் நல்லது!" இது நான்.
"நல்ல வேளை சிஸ்டர்...சிகரட்டுன்னு சொன்னதும் தான் ஞாபகம் வந்தது. முந்தா நாள் சாரு உங்களை பிக் அப் பண்றதுக்காக வெயிட் பண்ணிட்டிருந்த சமயத்தில அவருகிட்ட இருந்து ஒரு சிகரெட் கடன் வாங்கினேன். என்ன பிராண்ட் அது? தம்மாத்துண்டு பில்டர் வெச்சிட்டு...இதெல்லாம் குடிச்சா கேன்சர் தான் வரும்...சாரை பிராண்டை மாத்தச் சொல்லுங்க சிஸ்டர்!"
"எனக்குக் கோபம் உச்சிக்கு ஏறியது...இங்க பாரு அவரு சிகரெட் குடிச்சா உனக்கென்ன? பீடி குடிச்சா உனக்கென்ன? நல்ல புத்தி சொன்னா சரின்னு கேக்க வேண்டியது தானே! சரி சிகரெட்ட விடு...உன் கேர்ள் ப்ரண்டுக்கு பெர்ஃயூம் வாங்கணும்னு வேற கடன் வாங்கினியாமா சாராகிட்ட? இதெல்லாம் ஓவராயில்ல...200 ரியாலுக்கு கடன் வாங்கி பெர்ஃயூம் வாங்குவாங்களா யாராவது?
" ஆமா சிஸ்டர்..அது பிலிப்பினி செட் அப்....எதாவது வாங்கிக் குடுத்திட்டே இருந்தாத்தான் ரூட்டிலே இருக்கும். இல்லன்னா டேக் ஆஃப் ஆயிடும். இன்டியன் பொண்ணுங்க மாறியெல்லாம் கிடையாது..ரெண்டு வருச காண்ட்ராக்ட் போடலாம்ன்னு பேசறதுக்குள்ளயே 2000ரியாலுக்கு செலவு வெக்குது! என்ன செய்யறதுன்னு தெரியல"
"இங்க பாரு கமல். எனக்கு உங்கிட்ட பேசறதுக்கு இப்ப நேரமில்ல...பணம் இருக்கா? இல்லையா?" கிடுக்கிப் பிடியில் மாட்டிக் கொண்டான்.
அப்போது பார்த்து அவனது மொபைல் அடித்தது. காரே பூரே... பாலு ஆஸி என்று பெங்காலியில் பேசி முடிக்கும் வரை பொறுத்திருந்தேன்.
பேசி முடித்து என்னை நிமிர்ந்து பார்த்தவனின் கண்ணில் கண்ணீர்.
"சிஸ்டர், போனில் என்னுடைய தம்பி...அம்மாக்கு உடம்புக்கு முடியலை...பணம் வேணும்னு சொன்றான்...இருக்கற 500 ரியால உங்களுக்கு குடுக்கலாம்னு இருந்தேன்...இப்ப 1000ரியால் அனுப்ப வேண்டியிருக்கு, பணத்துக்கு என்ன செய்யறதுன்னு தெரியலை...ஒரு அரை நாள் லீவ் குடுங்க எப்பிடியாவது பணம் புரட்டணும்"என்றான்.
கண்ணீருடன் அவனைப் பார்க்கப் பாவமாக இருந்தது. சரி கவலைப் படாதே. எனக்கு அடுத்த மாசம் குடு போதும்...அம்மாவைப் பாரு முதல்லே என்று அவனை அனுப்பி வைத்து விட்டு இருக்கைக்கு வந்தேன்.
ஒரு மணி நேரம் கழிந்திருக்கும். ஃபரூக் வந்தான்...மதிய வேலைக்காரன். அவன் தான் கமலின் ரூம் மேட். "ஃபரூக்... கமலின் அம்மாக்கு உடம்புக்கு என்ன? பணம் அனுப்பனும்னு சொன்னானே?"என்றேன்.
"கமலோட அம்மா ஐந்து வருடத்திற்கு முன்பே இறந்து போய் விட்டாங்களே சிஸ்டர். ஆன்னா ஊன்னா எல்லாரையும் படுத்த படுக்கையாக்கி, கடன் கேக்கிறதே இவன் வேலையாப் போச்சி" என்றான் ஃபரூக்.
பேக்கு, ஏமாளி, லூசு என்று திட்டும் என் கணவரிம் முகம் என் மனக்கண்ணில் நிழலாடியது. இந்த மாசம் போனா என்ன? நவம்பர் போனா டிசம்பர் வரும் தானே...குடுத்த கடனை திருப்பி வாங்கி, ஏமாளிப் பட்டத்தை நூலிலிருந்து அறுத்து சுதந்திரமாகப் பறக்க விடத்தான் போகிறேன், அடுத்த மாதம்.