PDA

View Full Version : இரவு நேர நிலவு



இனியவள்
30-10-2007, 05:07 PM
நினைவுக் குழந்தைகள்
கண்திறக்கின்றன
தனிமையின் இனிமைகளில்
திளைத்திட.....

சூரியனை தரிசித்திட
தென்றலை அரவணைக்கின்றன
விரியா மொட்டுக்கள்
நாளை மலர்ந்திட...

தூக்கத்தை
வாரி அணைக்கின்றேன்
நாளை
விடிந்திடும் விடியலில்
உன்னை காண்பதற்காய்...

சூரியன் ஓளியினில்
மின்னிடும் பனித்துளியாய் - உன்
அன்பு கொண்டு ஜொலிக்கின்றேன்
இரவு நேர வெண்ணிலவாய்....

அன்புரசிகன்
30-10-2007, 05:13 PM
தூக்கத்தை வாரி அணைக்கின்றேன்
நாளை விடிந்திடும் விடியலில்
உன்னை காண்பதற்காய்...
முடிகிறதா தூங்க.... விடிவதே அடுத்த யுகத்தில் தானே....


சூரியன் ஓளியினில் மின்னிடும்
பனித்துளியாய் - உன்
அன்பு கொண்டு ஜொலிக்கின்றேன்
இரவு நேர வெண்ணிலவாய்....

மின்னியது நீயல்ல... உன்னில் இருக்கும் மற்ற ஜீவன்...

பாராட்டுக்கள் இனியவளே...

பூமகள்
30-10-2007, 05:31 PM
இனியவள்...ரொம்ப நல்ல கவிதை..!!
வானமகள் உறங்குகையில் வெண்ணிலவு நகர்வலம்..!!
அதை கவியாக இனி வடித்த விதம்... இதம்..!!
பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்..!!

அமரன்
30-10-2007, 05:40 PM
நினைவுகள் ஒளி வழங்கி
நிலவாக நினைவு தாங்கி..
நிலையாமையை காட்டும்
இலை நுனிப் பனித்துளி...

ஒன்றை காணும்போது
இன்னொன்று ஒழிந்து,
மறையும்போது ஒளிர்ந்து....

பாதிப்பேருக்கு பரிதவிப்பு..
மீதிப்பேருக்கு
பரவச விளையாட்டு...

அலர்ந்தமலர்க் கதம்பத்தை
அலங்கரிக்கும் அலரி மலராக...
தேவை இல்லாமல்
சேவை வழங்கும் தென்றல்...