PDA

View Full Version : அம்மை வருத்தத்தின் அறிகுறிகள்



iniya
26-10-2007, 07:19 PM
அம்மை நோய் என்று அழைக்கப்படும் 'சின்னமுத்து ' (Chickenpox) பற்றி இம்முறை பார்ப்போம்.

மனிதர்களை மட்டுமே தாக்கும் varicella-zoster எனப்படும் ஒரு வகை வைரஸினால் ஏற்படும் இந்நோயானது பொதுவாக குழந்தைகளையே தாக்குகின்றது. வளந்தோரை இந் நோய் தாக்கும் போது அது வீரியம் மிக்கதாகவும் குருதிச் சுற்றோட்டத்தை பாதிப்பதாகவும் அமைந்து விடுகிறது.

அம்மை வருத்தத்தின் அறிகுறிகள்:

முதலில் காய்ச்சலும் தொடரும் நாளில் அல்லது இரண்டு நாட்களில் உடலிலே பருக்களும் ஏற்படும். இப்பருக்கள் கடியை ஏற்படுத்துவனவாகக் காணப்படும். சிவப்பு நிறப் புள்ளியாக ஆரம்பிக்கும் பருக்கள் தொடர்ந்து திரவம் உள் நிரம்பிய கொப்பளங்களாக மாற்றமடையும். இக் கொப்பளங்கள் 4,5 நாட்களில் மாறி சிறிய காயங்களாக உடலில் தென்படும். சில வேளைகளில் இது முதற்தொற்றிலிருந்து 10-12 நாட்களிற்கும் நீட்சியடையக்கூடியது. சிலருக்கு மிகச் சில கொப்பளங்கள் உருவாகும் அதேவேளை சிலரிற்கு 500 கொப்பளங்களிற்கு மேல் காணப்படும்

பரவும் விதம்

அம்மை வருத்தம் மிகவும் இலகுவாகப் பரவுகின்றது. அநேகமாக நோய்க்கிருமி தொற்றி அடுத்த நாளே இவ்வியாதியின் அறிகுறிகள் தென்படும்.



மிகவும் முதன்மையான முறையாக மனிதரில் இருந்து மனிதரிற்கு இவ்வைரஸானது தொற்றுகின்றது. அம்மைவருத்தம் காணப்படும் ஒருவருடன் நேரடியான தொடர்பை வைத்திருப்பதன் மூலமோ அவர்களின் கொப்பளங்களைத் தொடுவதன் மூலமோ அல்லது அக்கொப்பளங்களில் காணப்படும் திரவப் பதார்த்தத்தைத் தொடுவதன் மூலமோ இவ்வைரஸ் பரவுகிறது. அத்துடன் நோயளியின் எச்சிலைத் தொடுவதன் மூலமும் பரவுகிறது.

காற்று மூலமும் இந் நோய்க்கிருமி பரவுகின்றது. நோய் காணப்படும் ஒருவர் இருமம் போது அல்லது தும்மும் போது அவர் அருகில் நிற்பினும் இந்நோய்த் தொற்றுக் காணப்படும்.

நோய் காணப்படும் கர்ப்பிணிப் பெண் தன் பிரசவத்தின் போது குழந்தைக்கும் அந்நோயைப் பரப்புகிறார்.

இதன் போது குழந்தைக்கு ஏற்படக்கூடிய விளைவுகள் :

மூளையைப் பாதிக்கலாம்

கண்பார்வையினைப் பாதிக்கலாம்

நரம்புத் தொகுதியினைப் பாதிக்கலாம்

தோல்வியாதியை ஏற்படுத்தலாம்

புதிதாகப் பிறந்த குந்தைகளிற்கு தாயாராலும் இந்நோய் பரவுகின்றது.

இந்நோய் மறைமுகமான தொடர்புகளின் மூலம் பரவாது என்பது இங்கு குறிப்பிடக்கூடியது.

தடுப்பு முறை:

இந் நோய்த் தடுப்பு முறையாக தடுப்பூசி ஏற்றுதல் காணப்படுகின்றது. இத்தடுப்பூசியைக் குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று பல நாடுகளில் கட்டாயப்படுத்தியுள்ளார்கள். சில நாடுகளில் குழந்தை பாலர் வகுப்பிற்கு செல்லும் வேளையில் இதனைப் பெறவேண்டும் என்றும் சிலவற்றில் குழந்தை பிறந்து 12 மாதங்களில் இத்தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளவேண்டும் என்றும் கட்டாயப்படுத்தியுள்ளார்கள்.

தடுப்பூசி பெற்றதைத் தொடர்ந்து காணப்படும் சாதாரண நிலை

தடுப்பூசி பெற்று 42 நாட்களிற்குள் 101.9 F (38.9 C) அளவில் காய்ச்சல் காணப்படும்

ஊசிஇடப்பட்ட பக்கத்தில் 2 நாட்களிற்குள் எரிச்சல் காணப்படும்

8-19 நாட்களில் ஊசியிடப்பட்ட பக்கத்தில் தோலில் மாற்றங்கள் தென்படலாம் (இவ்வாறிருப்பின் தடுப்பூசி பெற்றவர் நோய்க்காவியாக இருப்பதாக கணிக்கப்படுவர்)

5-26 நாட்களில் ஊசியிடப்பட்ட பக்கத்திற்கு மறுபக்கம் தோலில் மாற்றங்கள் தென்படலாம் (இவ்வாறிருப்பின் தடுப்பூசி பெற்றவர் நோய்க்காவியாக இருப்பதாக கணிக்கப்படுவர்)

இந் நோயினால் ஏற்படும் காய்ச்சலைக் குறைப்பதற்கு பரசிடமோலினைப் (paracetamol) இனைப் பாவிக்குமாறு வைத்தியர்கள் அறிவுரை வழங்குகின்றனர். அஸ்பிரின் இனை எக்காரணம் கொண்டும் இந்நோய்க் காய்ச்சலிற்கு வழங்குவதைத் தவிர்க்கவேண்டும். ஏனேனில் அது இரைப்பை மற்றும் மூளையினைப் பாதிக்கும்

சினேகிதி
www.thayakaparavaikal.com

ஓவியன்
27-10-2007, 02:56 AM
பலருக்கும் பயன் தரு தகவல்களை பலருக்கும் பகிர்ந்து கொண்ட இனியாவுக்கு நன்றிகள் பல...