அமரன்
26-10-2007, 05:35 PM
அக்கரை வயல் அன்னத்துக்கு
இக்கரை தோகை மயிலிடமிருந்து
அக்கறையில் ஓர் கடிதம்...!
உச்சக்கட்ட பாதுகாப்புடன்
மனைக் கிணறுகள் பல உங்கே....!
எச்சம்தொட்ட பாதுகைபோல்
சுனை ஊற்றுகள் சில இங்கே ..!
பயிர்களுக்கு நடுவில்
உயிர்க்கும் களைகள் உங்கே..!
பசுமை முகடுகளில்
பாசிகளும் படர்ந்துள்ளன இங்கே...!
மலர்ந்து களிக்க
திரைகள் பலவுண்டு உங்கே...!
குளிர்ச்சியில் குளிக்க
தடையாக பனிப்புகார் இங்கே...!
மயில்களும் கிளிகளும்
கொஞ்சிகுலாவும் மலைகளில்
கரடிகளும் அரிகளும்
வஞ்சகத்துடன் உலவுகின்றன...!
புலிகளுக்கும் கிலிகிளப்பும்
விதிகள் உண்டு -அவை
பாய்ச்சலுக்கு முட்டான
தடைகளை தாண்டுவதுமுண்டு....!
ஏறுவோரை தோற்கடிக்கும்
மண்சரிவுகள் மட்டுமல்ல
ஆறுகளை தோற்றுவிக்கும்
அருவிகளும் உள்ளதிங்கே.....!
கரை கட்டிபாயும்
ஆற்றின் பெறுதி கனதியன்றோ
அணையின் அணைப்பை
தடங்கலாக எண்ணலாமோ...!
இக்கரைப் பச்சையில்
நாட்டம் கொள்வதேனோ.
அக்கரைப் பிறப்பின்
வாட்டம் கொல்லல் நலமே...!
இக்கரை தோகை மயிலிடமிருந்து
அக்கறையில் ஓர் கடிதம்...!
உச்சக்கட்ட பாதுகாப்புடன்
மனைக் கிணறுகள் பல உங்கே....!
எச்சம்தொட்ட பாதுகைபோல்
சுனை ஊற்றுகள் சில இங்கே ..!
பயிர்களுக்கு நடுவில்
உயிர்க்கும் களைகள் உங்கே..!
பசுமை முகடுகளில்
பாசிகளும் படர்ந்துள்ளன இங்கே...!
மலர்ந்து களிக்க
திரைகள் பலவுண்டு உங்கே...!
குளிர்ச்சியில் குளிக்க
தடையாக பனிப்புகார் இங்கே...!
மயில்களும் கிளிகளும்
கொஞ்சிகுலாவும் மலைகளில்
கரடிகளும் அரிகளும்
வஞ்சகத்துடன் உலவுகின்றன...!
புலிகளுக்கும் கிலிகிளப்பும்
விதிகள் உண்டு -அவை
பாய்ச்சலுக்கு முட்டான
தடைகளை தாண்டுவதுமுண்டு....!
ஏறுவோரை தோற்கடிக்கும்
மண்சரிவுகள் மட்டுமல்ல
ஆறுகளை தோற்றுவிக்கும்
அருவிகளும் உள்ளதிங்கே.....!
கரை கட்டிபாயும்
ஆற்றின் பெறுதி கனதியன்றோ
அணையின் அணைப்பை
தடங்கலாக எண்ணலாமோ...!
இக்கரைப் பச்சையில்
நாட்டம் கொள்வதேனோ.
அக்கரைப் பிறப்பின்
வாட்டம் கொல்லல் நலமே...!