родроЩрпНроХро╡рпЗро▓рпН
26-10-2007, 03:03 PM
காலைபொழுது. என் மனைவி У ஏங்க தண்ணீர் இல்லைங்க У என்று தூங்கி கொண்டு இருந்த என்னை எழுப்பி சொன்னார்கள். வீட்டு ஓனரிடம் கேட்டேன். சார் போர் கெட்டு விட்டது என்றார். சரி மாநகராட்சி தண்ணீர் என்னாச்சு என்றேன். பதினைந்து நாட்களுக்கு ஒரு முறைதான் வருகின்றது என்றார் அவர்.
பையன் பள்ளிக்கு செல்ல வேண்டும். வீட்டுப் பயன்பாட்டுக்கு தண்ணீர் வேண்டும். மனைவி கையை பிசைந்து கொண்டு இருந்தார். அவருக்கு ஒரே டென்சன். கோவையில் தண்ணீர் இன்றி ஒரு நிமிடம் கூட இருக்க முடியாது. என்ன செய்வது ? யோசித்து விட்டு,
இணையத்தை இணைத்து, தமிழ்நாடு தண்ணீர் நிலையத்துக்கு ஒரு ஆன்லைன் கம்ப்ளைன்ட் பதிவு செய்தேன். அப்போது மணி காலை 7.40.
தொகுதி பிரசிடென் ட் அவர்களுக்கு போன் போட்டு ஏரியா கவுன்சிலர் தொலைபேசி வாங்கி வீட்டு ஓனரை பேச வைத்தேன். மாலையில் தான் தண்ணீர் வரும் என்று கவுன்சிலர் சொன்னதாக இவர் சொன்னார். அப்போது மணி 7.50.
அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்து, மாண்புமிகு உள்ளாட்சிதுறை அமைச்சர் உயர்திரு மு.க.ஸ்டாலின் அவர்களின் வீட்டுக்கு பேசினேன். விபரம் கேட்டார்கள். சொன்னேன். சார் ஒரு கம்ப்ளெயின்ட் அனுப்பி வையுங்கள் என்றார்கள். முகவரி தெரியுமா என்று கேட்டு அன்பாக பேசினார்கள். நன்றி என்று சொல்லி விட்டு இணைப்பை துண்டித்தேன். அப்போது மணி 8.00.
சிறிது நேரத்தில் ஏரியா கவுன்சிலரின் தொலைபேசி அழைப்பு வர வீட்டு ஓனரின் மனைவி அவரிடம் பேசினார். பேசி முடித்ததும் தண்ணீர் வந்தது.
தண்ணீர் வந்தது சரியாக 8.10க்கு.
குளியல் அறையில் தண்ணீரை உடம்பின் மீது கொட்டியபோது மனது நெகிழ்ந்து தளபதி அவர்களின் மீது சொல்லொண்ணா பிரியம் பொங்கியது.
ஒரு சாதாரண குடிமகன் ஒருவனின் குறையினை கேட்டு அதை அரை மணி நேரத்துக்குள் தீர்த்து வைத்த தளபதியும், ஏரியா கவுன்சிலரையும் எண்ணி மகிழ்ந்தேன்.
அரை மணி நேரத்தில் எனது பிரச்சனையினை தீர்த்து, மகிழ வைத்த,
ஏரியா கவுன்சிலர் அவர்களுக்கும், மாண்புமிகு உள்ளாட்சித்துறை அமைச்சர் அவர்களும் எனது உள்ளம் கனிந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றேன். தளபதியினை உலகுக்கு தந்த தமிழ் தாத்தா, மாண்புமிகு தமிழக முதல்வர், தமிழின் தலைவர், தமிழனின் தலைவர் கலைஞர் அவர்களுக்கும் எனது உள்ளம் நிறைந்த நன்றியினை சமர்ப்பிக்கின்றேன்.
ஆகவே நண்பர்களே, சரியான முறையில் சரியானவரை அணுகினால் எல்லாப் பிரச்சனைக்கும் தீர்வு கிடைக்கும்.
பையன் பள்ளிக்கு செல்ல வேண்டும். வீட்டுப் பயன்பாட்டுக்கு தண்ணீர் வேண்டும். மனைவி கையை பிசைந்து கொண்டு இருந்தார். அவருக்கு ஒரே டென்சன். கோவையில் தண்ணீர் இன்றி ஒரு நிமிடம் கூட இருக்க முடியாது. என்ன செய்வது ? யோசித்து விட்டு,
இணையத்தை இணைத்து, தமிழ்நாடு தண்ணீர் நிலையத்துக்கு ஒரு ஆன்லைன் கம்ப்ளைன்ட் பதிவு செய்தேன். அப்போது மணி காலை 7.40.
தொகுதி பிரசிடென் ட் அவர்களுக்கு போன் போட்டு ஏரியா கவுன்சிலர் தொலைபேசி வாங்கி வீட்டு ஓனரை பேச வைத்தேன். மாலையில் தான் தண்ணீர் வரும் என்று கவுன்சிலர் சொன்னதாக இவர் சொன்னார். அப்போது மணி 7.50.
அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்து, மாண்புமிகு உள்ளாட்சிதுறை அமைச்சர் உயர்திரு மு.க.ஸ்டாலின் அவர்களின் வீட்டுக்கு பேசினேன். விபரம் கேட்டார்கள். சொன்னேன். சார் ஒரு கம்ப்ளெயின்ட் அனுப்பி வையுங்கள் என்றார்கள். முகவரி தெரியுமா என்று கேட்டு அன்பாக பேசினார்கள். நன்றி என்று சொல்லி விட்டு இணைப்பை துண்டித்தேன். அப்போது மணி 8.00.
சிறிது நேரத்தில் ஏரியா கவுன்சிலரின் தொலைபேசி அழைப்பு வர வீட்டு ஓனரின் மனைவி அவரிடம் பேசினார். பேசி முடித்ததும் தண்ணீர் வந்தது.
தண்ணீர் வந்தது சரியாக 8.10க்கு.
குளியல் அறையில் தண்ணீரை உடம்பின் மீது கொட்டியபோது மனது நெகிழ்ந்து தளபதி அவர்களின் மீது சொல்லொண்ணா பிரியம் பொங்கியது.
ஒரு சாதாரண குடிமகன் ஒருவனின் குறையினை கேட்டு அதை அரை மணி நேரத்துக்குள் தீர்த்து வைத்த தளபதியும், ஏரியா கவுன்சிலரையும் எண்ணி மகிழ்ந்தேன்.
அரை மணி நேரத்தில் எனது பிரச்சனையினை தீர்த்து, மகிழ வைத்த,
ஏரியா கவுன்சிலர் அவர்களுக்கும், மாண்புமிகு உள்ளாட்சித்துறை அமைச்சர் அவர்களும் எனது உள்ளம் கனிந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றேன். தளபதியினை உலகுக்கு தந்த தமிழ் தாத்தா, மாண்புமிகு தமிழக முதல்வர், தமிழின் தலைவர், தமிழனின் தலைவர் கலைஞர் அவர்களுக்கும் எனது உள்ளம் நிறைந்த நன்றியினை சமர்ப்பிக்கின்றேன்.
ஆகவே நண்பர்களே, சரியான முறையில் சரியானவரை அணுகினால் எல்லாப் பிரச்சனைக்கும் தீர்வு கிடைக்கும்.