PDA

View Full Version : குஜராத் பயங்கரம்: தெகல்கா-இந்தியா டுடே



ராஜா
26-10-2007, 02:13 PM
அகமதாபாத்: குஜராத்தில் முதல்வர் நரேந்திர மோடியின் ஆசிர்வாதத்தோடும், உதவியோடும் தான் மதக் கலவரத்தை நடத்தியதாக பாஜக, விஎச்பி, பஜ்ரங் தள் ஆகிய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் வெளிப்படையாக கூறியுள்ளனர்.

இதை தெகல்கா இதழ் ரகசியமாக வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளது. இந்தியா டுடே மற்றும் தெகல்கா ஆகியவை இணைந்து நடத்திய இந்த ரகசிய ஆபரேசனில் குஜராத் மதக் கலவரத்தின் இன்னொரு பக்கம் வெளியே வந்துள்ளது.

குஜராத்தில் வன்முறை வெடிக்கக் காரணமாக இருந்தது கோத்ரா ரயில் தீ விபத்து. சுமார் 50க்கும் மேற்பட்ட அப்பாவி ராம பக்தர்கள் பலியான இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து தான் வன்முறை தொடங்கியது.

கோத்ரா தொகுதியின் பாஜக எம்எல்ஏவான ஹரேஷ் பட் பஜ்ரங் தள் அமைப்பின் தேசிய துணைத் தலைவராகவும் உள்ளார். இவரையும் குஜராத் வன்முறையில் நேரடியாகப் பங்கு கொண்ட 7 பேரையும், மோடிக்கு மிக நெருக்கமான அரசு வழக்கறிஞரையும் மேலும் 5 பேரையும் தெகல்கா நிருபர்கள் குழு ரகசியமாய் நெருங்கியது.

அவர்களிடம் குஜராத் வன்முறை குறித்து பேசியது. அப்போது அதை ரகசியமாய் கேமராக்களில் படம் பிடித்தது.

ஆனால், தாங்கள் படம் பிடிக்கப்படுவது தெரியாமல் எப்படியெல்லாம் வன்முறையை நடத்தினோம், எப்படி ஒரு கர்ப்பிணி முஸ்லீம் பெண்ணின் வயிற்றைக் கிழித்து உள்ளே இருந்த சிசுவை வெளியே எடுத்துப் போட்டு வெட்டினோம் என்பதையெல்லாம் இவர்கள் பேசியுள்ளனர்.

தெகல்கா நடத்திய இந்த ஆபரேசனுக்கு தலைமை வகித்தவர் அதன் நிருபரான ஆஷிஷ் கெய்தான். அவர் 'விஎச்பியும் இந்துத்துவாவும்' என்ற புத்தகம் எழுதப் போகிறேன். அதற்காக கருத்துக்கள், விவரங்களைத் திரட்டி வருகிறேன் என்று கூறித்தான் இவர்களை நெருங்கியுள்ளார்.

கிட்டத்தட்ட 6 மாத காலமாக இவர்களிடம் பேசி, அதை ரகசியமாக வீடியோ எடுத்து வந்துள்ளார் கெய்தான்.

இந்த வீடியோவில் அவர்கள் பேசியுள்ளது மிக பயங்கரமாக உள்ளது.

[தொடர்ச்சி அடுத்த பதிவில்..]

ராஜா
26-10-2007, 02:15 PM
வன்முறைக்கு டைம் கொடுத்த மோடி..

கோத்ரா எம்எல்ஏவான பட் கூறுகையில், கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் நடந்தவுடன் மோடி தலைமையில் பாஜக பிரமுகர்கள், பஜ்ரங் தள், விஎச்பி, ஆர்எஸ்எஸ் அமைப்பினரின் கூட்டம் நடந்தது. அதில் நான் உங்களுக்கு 3 நாட்கள் நேரம் தருகிறேன். அதற்குள் என்ன வேண்டுமானாலும் (வன்முறை, கொலை, தாக்குதல்) செய்து கொள்ளுங்கள். ஆனால், 3 நாட்களுக்குப் பின் நான் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டியாக வேண்டும் என்றார்.

மேலும் நரோடா பாட்டியாவில் பெரிய அளவில் கொலைகள் நடந்த பின்னர் அதற்காக எங்களை மோடி அழைத்துப் பாராட்டினார் என்று கூறியுள்ளார் பட்.

போலீஸ் உதவியோடு பாம் தயாரித்தோம்...

விஎச்பியைச் சேர்ந்த அனில் படேல், தாபல் ஜெயந்தி படேல் ஆகியோர் கூறுகையில், விஎச்பி தொண்டர்கள் எனது தொழிற்சாலையில் தான் குண்டுகளைத் தயாரித்தனர். ராக்கெட் லாஞ்சர்களைக் கூட தயாரித்து முஸ்லீம்கள் மீது தாக்குதல் நடத்தினோம். இதற்கு போலீசாரும் எங்களுக்கு உதவியாக இருந்தனர்.

பெண்ணின் வயிற்றை கத்தியால் வெட்டினேன்....

பஜ்ரங் தள் தலைவர் பாபு பஜ்ரங்கி கூறுகையில், நான் அந்த கர்ப்பிணி முஸ்லீம் பெண்ணின் வயிற்றை கத்தியால் வெட்டினேன். அதிலிருந்த சிசுவை எடுத்து வெளியே எரிந்து வெட்டினேன் என்று கூறியுள்ளார்.

மதன் சாவல் என்ற பாஜக தொண்டர் கூறுகையில், முன்னாள் காங்கிரஸ் எம்பி ஜாப்ரி தனது பகுதி முஸ்லீம்களை காப்பாற்ற முயன்றார். தனது வீட்டில் அவர்களுக்கு அடைக்கலம் தந்தார். இதையடுத்து நாங்கள் வாள்களுடன் அவரது வீட்டை முற்றுகையிட்டோம். அப்போது கை நிறைய பணத்தை அள்ளிக் கொண்டு வந்த ஜாப்ரி இதை வைத்துக் கொண்டு அனைவரையும் விட்டுவிடுமாறு கூறினார்.

நாங்கள் சரி என்றோம். பணத்தைக் கொடுத்த அவர் கதவைத் திறந்தார். அப்போது வீட்டுக்குள் நுழைந்து அவரைப் பிடித்தோம். இருவர் கையை பிடித்துக் கொள்ள நான் அவரது கைகளை வெட்டினேன் பின்னர் அவரது மர்ம உறுப்பை வெட்டி எரிந்தோம். பின்னர் அவரை துண்டு துண்டாக்கி எரித்துவிட்டோம். அவர் வைத்திருந்த பணத்தையும் எடுத்துக் கொண்டோம் என்று கூறியுள்ளார்.

இன்னொரு தொண்டர் கூறுகையில், நரேந்திர மோடியால் தான் நான் சிறையில் இருந்து வெளியே வந்தேன். அவர் நீதிபதிகளை இடமாற்றம் செய்து தனக்கு வேண்டியவர்களை நியமித்ததால் தப்பித்தேன் என்றார்.

இவை அனைத்தும் வீடியோவில் அப்பட்டமாக அப்படியே பதிவாகியுள்ளன.

குஜராத்தில் சட்டமன்றத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில் வெளியாகியுள்ள இந்த வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரகாஷ் ரத்தோட் என்பவர் கூறுகையில், பாஜக எம்.எல்.ஏ மாயா பென் வீதி வீதியாக சென்று முஸ்லீம்களை விரைவாக கொல்லுங்கள், யாரையும் விடாதீர்கள் என்று வேகப்படுத்தினார் என்று கூறியுள்ளார்.

சுரேஷ் ரிச்சர்ட் என்பவர் கூறுகையில், போலீஸார் எங்களை அழைத்து சில இடங்களை சுட்டிக் காட்டி இங்கு முஸ்லீம்கள் சிலர் ஒளிந்துள்ளனர். அவர்களை விடாதீர்கள் என்று எங்களுக்கு வழி காட்டினர். நாங்கள் அந்த இடத்திற்குச் சென்று வெளியிலிருந்து கதவுகளை மூடி உள்ளேயே வைத்து அவர்களை எரித்துக் கொன்றோம் என்று தெரிவித்துள்ளார்.

விஸ்வ இந்து பரிஷத்தைச் சேர்ந்த ரமேஷ் தவே கூறுகையில், இதை நாங்கள் இப்போது செய்யவில்லை. கடந்த 20, 25 வருடங்களாகவே எங்கள் கண்ணில் பட்டவர்களையெல்லாம் (முஸ்லீம்கள்) கொன்று குவித்துள்ளோம் என்று கூறியுள்ளார் தவே.

[தொடர்ச்சி அடுத்த பதிவில்..]
_________________

ராஜா
26-10-2007, 02:16 PM
அரசு, நீதித்துறை, காவல்துறையின் கூட்டுச் சதி:

குஜராத் கலவரம் குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட நானாவதி ஷா கமிஷன் முன்பு ஆஜரான அரசு வக்கீல் அரவிந்த் பாண்ட்யா கூறுகையில்,

கலவரத்தில் ஈடுபட்டோருக்கு எதிரான வழக்குகள் அனைத்தும் நீர்த்துப் போகச் செய்யப்பட்டன. முதல்வர் நரேந்திர மோடி உயர் காவல்துறை அதிகாரிகளை அழைத்து இந்துக்களுக்கு சாதகமாக நடந்து கொள்ளுமாறு வாய் மொழியாக உத்தரவிட்டார்.

கோத்ரா சம்பவத்திற்குப் பிறகு மோடி மிகவும் அப்செட் ஆக இருந்தார். அகமதாபாத்தில் முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும் பகுதியான ஜுஹபுரா பகுதியில் தானே குண்டு வீசத் தயாராக இருப்பதாக அவர் கூறி வந்தார். ஆனால் முதல்வர் பதவியில் இருந்ததால் அப்படிச் செய்ய முடியவில்லையே என்று வருத்தப்பட்டார்.

முஸ்லீம்களைக் கொன்ற தினத்தை ஆண்டுதோறும் இந்துக்கள் பெரிய அளவில் கொண்டாட வேண்டும். அதே சமயம் அவர்களைக் கொல்வதை விட நசுக்குவதுதான் மிகவும் சிறந்தது. இதன் மூலம் முஸ்லீம்கள் காலம் பூராவும் இந்துக்களுக்குக் கட்டுப்பட்டு இருப்பார்கள்.

முஸ்லீம்களைக் கொல்வதைப் போல அவர்கள் மீது பொருளாதார நெருக்கடியைத் திணிக்க வேண்டும் என்று கூறியுள்ள பாண்ட்யா இதை விட பயங்கரமாக, இந்த சம்பவத்தை விசாரிக்க நியமிக்கப்பட்ட நீதிபதி நானாவதி ஷா கமிஷனையே விலைக்கு வாங்கிவிட்டன பாஜக மற்றும் அதன் கூட்டு அமைப்புகள் என்றும் தெரிவித்துள்ளார்.

அதுகுறித்து அவர் கூறுகையில், நீதிபதி நானாவதியுடன் கூட்டாக விசாரித்த கே.ஜி.ஷா (இவர்தான் கமிஷனின் தலைவர்) ஒரு பாஜக அனுதாபி என்றும் கூறியுள்ளார் பாண்ட்யா.

வி.எச்.பி. பொதுச் செயலாளர் திலீப் திரிவேதி கூறுகையில், மாநிலம் முழுவதும் உள்ள வக்கீல்கள் எங்களுக்கு சாதகமாக இருந்தனர். கலவரத்தில் ஈடுபட்டவர்களுக்கு சாதகமாக அவர்கள் வாதாடினர் என்றார்.

நன்றி : தட்ஸ் தமிழ்.
_________________

ஜெயாஸ்தா
26-10-2007, 02:44 PM
ஜனநாயக நாட்டில்தான் வசிக்கிறோமா என்ற சந்தேகத்தை கட்டுரை தருகிறது. மனித உயிர்கள் அரசியலுக்காக பலியிடப்பட்டது நம் ஜனநாயகத்தின் சாபக்கேடா? குஜராத் கலவரத்தில் அரசின் கணக்குபடி 7800 முஸ்லிம்கள் இந்து தீவிரவாதிகளால் வெட்டிக்ககொல்லப்பட்டனர். ஆனால் உண்மையில் 30,000க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டதாக ஆதரப்பூர்வமாக தகவல் உள்ளது. அதே போல் மோடியும், காவல்துறையும், மற்றும் இந்துதீவிரவாதிகளும் இணைந்து செய்த இந்த 'வேட்டை' அவர்களுக்கு சாதகமான பலனையே தந்துள்ளது.

நேசம்
26-10-2007, 02:57 PM
இது சம்பந்தமாக ஒரு தொலைக்காட்சியில் (சில நாட்களுக்கு முன்பு)நிருபர் கேட்ட கேள்விகளுக்கு குஜராத் முதல்வர் மோடி பதில் சொல்ல முடியாமல் 3 நிமிடத்தில் பேட்டியை முடித்து விட்டு சென்றது பரபரப்பாக அந்த தொலைக்காட்சியில் காட்டப்பட்டது

ராஜா
26-10-2007, 04:06 PM
மேலும் விபரங்கள் இங்கே..

http://www.tehelka.com/story_main35.asp?filename=Ne031107Press_release.asp

http://www.tehelka.com/story_main35.asp?filename=Ne031107gujrat_sec.asp

http://www.tehelka.com/story_main35.asp?filename=Ne031107spycam_videos.asp

http://www.tehelka.com/story_main35.asp?filename=Ne031107Live_updates.asp

ஓவியன்
26-10-2007, 04:22 PM
திரைப்படங்களில் இதுவரை பார்த்த விடயங்கள் நேரடியாக அம்பலத்துக்கு வந்துள்ளது. ஒரு ஜனநாயக நாடு என்ற வகையி அரசு சரியான தண்டனைகளை குற்றவாளிக்கு வழங்கி "ஜனநாயகம்" என்ற சொல்லின் மேலே உள்ள மக்களின் நம்பிக்கையைக் கட்டிக் காக்க வழி செய்ய வேண்டும்.

iniya
27-10-2007, 01:46 AM
குஜராத் வீடியோ-''கர்ப்பிணியின் வயிற்றை வெட்டி சிசுவை வெளியே வீசினேன்!''

குஜராத்தில் முதல்வர் நரேந்திர மோடியின் ஆசிர்வாதத்தோடும், உதவியோடும் தான் மதக் கலவரத்தை நல்லபடியாக நடத்தினோம் என பாஜக, விஎச்பி, பஜ்ரங் தள் ஆகிய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் வெளிப்படையாக கூறியுள்ளனர்.

இதை தெகல்கா இதழ் ரகசியமாக வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளது. இந்தியா டுடே மற்றும் தெகல்கா ஆகியவை இணைந்து நடத்திய இந்த ரகசிய ஆபரேசனில் குஜராத் மதக் கலவரத்தின் இன்னொரு பக்கம் வெளியே வந்துள்ளது.

குஜராத்தில் வன்முறை வெடிக்கக் காரணமாக இருந்தது கோத்ரா ரயில் தீ விபத்து. சுமார் 50க்கும் மேற்பட்ட அப்பாவி ராம பக்தர்கள் பலியான இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து தான் வன்முறை தொடங்கியது.

கோத்ரா தொகுதியின் பாஜக எம்எல்ஏவான ஹரேஷ் பட் பஜ்ரங் தள் அமைப்பின் தேசிய துணைத் தலைவராகவும் உள்ளார். இவரையும் குஜராத் வன்முறையில் நேரடியாகப் பங்கு கொண்ட 7 பேரையும், மோடிக்கு மிக நெருக்கமான அரசு வழக்கறிஞரையும் மேலும் 5 பேரையும் தெகல்கா நிருபர்கள் குழு ரகசியமாய் நெருங்கியது.

அவர்களிடம் குஜராத் வன்முறை குறித்து பேசியது. அப்போது அதை ரகசியமாய் கேமராக்களிடம் படம் பிடித்தது.

ஆனால், தாங்கள் படம் பிடிக்கப்படுவது தெரியாமல் எப்படியெல்லாம் வன்முறையை நடத்தினோம், எப்படி ஒரு கர்ப்பிணி முஸ்லீம் பெண்ணின் வயிற்றைக் கிழித்து உள்ளே இருந்த சிசுவை வெளியே எடுத்துப் போட்டு வெட்டினோம் என்பதையெல்லாம் 'பெரிய சாதனையாக' இவர்கள் பேசியுள்ளனர்.

தெகல்கா நடத்திய இந்த ஆபரேசனுக்கு தலைமை வகித்தவர் அதன் நிருபரான ஆஷிஷ் கெய்தான். அவர் 'விஎச்பியும் இந்துத்துவாவும்' என்ற புத்தகம் எழுதப் போகிறேன். அதற்காக கருத்துக்கள், விவரங்களைத் திரட்டி வருகிறேன் என்று கூறித்தான் இவர்களை நெருங்கியுள்ளார்.

கிட்டத்தட்ட 6 மாத காலமாக இவர்களிடம் பேசி, அதை ரகசியமாக வீடியோ எடுத்து வந்துள்ளார் கெய்தான்.

இந்த வீடியோவில் அவர்கள் பேசியுள்ளது மிக பயங்கரமாக உள்ளது.

வன்முறைக்கு டைம் கொடுத்த மோடி..

கோத்ரா எம்எல்ஏவான பட் கூறுகையில், கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் நடந்தவுடன் மோடி தலைமையில் பாஜக பிரமுகர்கள், பஜ்ரங் தள், விஎச்பி, ஆர்எஸ்எஸ் அமைப்பினனரின் கூட்டம் நடந்தது. அதில் நான் உங்களுக்கு 3 நாட்கள் நேரம் தருகிறேன். அதற்குள் என்ன வேண்டுமானாலும் (வன்முறை, கொலை, தாக்குதல்) செய்து கொள்ளுங்கள். ஆனால், 3 நாட்களுக்குப் பின் நான் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டியாக வேண்டும் என்றார்.

மேலும் நரோடா பாட்டியாவில் பெரிய அளவில் ெகாலைகள் நடந்த பின்னர் அதற்காக எங்களை மோடி அழைத்துப் பாராட்டினார் என்று கூறியுள்ளார் பட்.

போலீஸ் உதவியோடு பாம் தயாரித்தோம்...

விஎச்பியைச் சேர்ந்த அனில் படேல், தாபல் ஜெயந்தி படேல் ஆகியோர் கூறுகையில், விஎச்பி தொண்டர்தள் எனது தொழிற்சாலையில் தான் குண்டுகளைத் தயாரித்தனர். ராக்கெட் லாஞ்சர்களைக் கூட தயாரித்து முஸ்லீம்கள் மீது தாக்குதல் நடத்தினோம். இதற்கு போலீசாரும் எங்களுக்கு உதவியாக இருந்தனர்.

பெண்ணின் வயிற்றை கத்தியால் வெட்டினேன்....

பஜ்ரங் தள் தலைவர் பாபு பஜ்ரங்கி கூறுகையில், நான் அந்த கர்ப்பிணி முஸ்லீம் பெண்ணின் வயிற்றை கத்தியால் வெட்டினேன். அதிலிருந்த சிசுவை எடுத்து வெளியே எரிந்து வெட்டினேன் என்று கூறியுள்ளார்.

மதன் சாவல் என்ற பாஜக தொண்டர் கூறுகையில், முன்னாள் காங்கிரஸ் எம்பி ஜாப்ரி தனது பகுதி முஸ்லீம்களை காப்பாற்ற முயன்றார். தனது வீட்டில் அவர்களுக்கு அடைக்கலம் தந்தார். இதையடுத்து நாங்கள் வாள்களுடன் அவரது வீட்டை முற்றுகையிட்டோம். அப்போது கை நிறைய பணத்தை அள்ளிக் கொண்டு வந்த ஜாப்ரி இதை வைத்துக் கொண்டு அனைவரையும் விட்டுவிடுமாறு கூறினார்.

நாங்கள் சரி என்றோம். பணத்தைக் கொடுத்த அவர் கதவைத் திறந்தார். அப்போது வீட்டுக்குள் நுழைந்து அவரைப் பிடித்தோம். இருவர் கையை பிடித்துக் கொள்ள நான் அவரது கைகளை வெட்டினேன் பின்னர் அவரது மர்ம உறுப்பை வெட்டி எரிந்தோம். பின்னர் அவரை துண்டு துண்டாக்கி எரித்துவிட்டோம். அவர் வைத்திருந்த பணத்தையும் எடுத்துக் கொண்டோம் என்று கூறியுள்ளார்.

இன்னொரு தொண்டர் கூறுகையில், நரேந்திர மோடியால் தான் நான் சிறையில் இருந்து வெளியே வந்தேன். அவர் நீதிபதிகளை இடமாற்றம் செய்து தனக்கு வேண்டியவர்களை நியமித்ததால் தப்பித்தேன் என்றார்.

இவை அனைத்தும் வீடியோவில் அப்பட்டமாக அப்படியே பதிவாகியுள்ளன.

குஜராத்தில் சட்டமன்றத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில் வெளியாகியுள்ள இந்த வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


வெடிகுண்டுகள் செய்தவர்கள் வரலாறு:

HARESH BHATT, who was the Bajrang Dal rashtriya sah sanyojak in 2002 and is now the BJP MLA from Godhra, till the riots a Congress stronghold, made a never-before admission that bombs were made at a firecracker factory he owned. He describes how they assembled country-made explosives, including rocket launchers. These were then distributed to murderous mobs in Ahmedabad

IN 2002, despite curfew in Ahmedabad, swords were brought in from Punjab and country pistols from UP, Bihar and MP. Bhatt boasts that none of these states were under BJP rule then. The consignment of arms crossed the borders not once but many times. There were tens and tens of them, Bhatt reveals

IN AN UNRELATED but crucial disclosure, Bhatt says that he trained 40 young men who then went on to demolish the Babri Masjid in December 1992. He trained them like the army does, and ran obstacle courses for them and taught them how to climb a 30-ft rope. The camp still exists in Ahmedabad

DHAWAL JAYANTI PATEL of the VHP used dynamite in his quarries in Sabarkantha. With the help of an old RSS hand, Amrudh Patel, who was an expert in handling explosives, bombs were made in the quarries using dynamite and RDX-based powder

ANIL PATEL, the VHP Vibhag pramukh, talks of how explosives were made in Sabarkantha and then supplied to Ahmedabad

THE VISHWA Hindu Parishad (VHP) and its so-called youth wing, the Bajrang Dal, were the major groups involved in the massacre of Muslims in Gujarat in 2002. Though civil society groups and human rights activists have been vocal about the role of these outfits all through the genocide, only a few of their members have been implicated on charges of murder and rioting. Babu Bajrangi, a Bajrang Dal zealot, is among the few facing trial for their role in the massacre. By and large, most rioters from the VHP and Bajrang Dal, particularly its top leadership, walked away with blood on their hands.

Its not difficult to see why. The Bajrang Dal and the VHP are nothing but extensions of the BJP, which was in power in the state at the time and also led the coalition government at the Centre. During the investigation, TEHELKA found out how leaders of the VHP and the Bajrang Dal had planned the pogrom. To execute their plan effectively, they required military hardware, they required weapons more sophisticated and lethal than swords, knives and tridents, arms better suited to hand-to-hand combat. They needed an arsenal that could kill in large numbers.

The TEHELKA investigation found that the VHP and the Bajrang Dal had transformed themselves into terror outfits that manufactured and distributed bombs, rocket launchers and firearms in large quantities after the Godhra incident. This weaponry was then handed over to murderous mobs across Gujarat.




Guide


Group: Active Members
Posts: 736
Joined: 25-August 07
Member No.: 1,088



டெகல்கா இணையதளம் மோடி குஜராத்தில் இனப்படுகொலை செய்ததை ஆதரப்பூர்வமாக நிருபித்துள்ளது. அதன் மூலம்

http://www.tehelka.com/story_main35.asp?fi...7gujrat_sec.asp

தங்கவேல்
27-10-2007, 03:22 AM
படித்து விட்டு என்ன செய்யபோகின்றோம். வேறு வேலை இல்லை நமக்கு? தெகெல்காவுக்கு இதே வேலையாய் போய் விட்டது. காலை பத்து மணிக்குள் ஆபீஸ் சென்று விட வேண்டும். போனஸ் வரவேண்டும். தீபாவளியை மகிழ்ச்சியாய் கொண்டாட வேண்டும். சனிக்கிழமை.அவளின் அருகாமையில் குளிர்காய இப்போதே மனசு அலைபாய்கின்றது.

எவன் செத்தால் என்ன ? எவன் இருந்தால் என்ன ? எனக்கு என் குடும்பம்தான் முக்கியம்.

என்ன ராஜா ? உங்களுக்கு வேறு வேலை இல்லையா ?

வேதனையுடன், கையாலாகாதவன்.

நுரையீரல்
27-10-2007, 04:09 AM
படித்து விட்டு என்ன செய்யபோகின்றோம். வேறு வேலை இல்லை நமக்கு? தெகெல்காவுக்கு இதே வேலையாய் போய் விட்டது. காலை பத்து மணிக்குள் ஆபீஸ் சென்று விட வேண்டும். போனஸ் வரவேண்டும். தீபாவளியை மகிழ்ச்சியாய் கொண்டாட வேண்டும். சனிக்கிழமை.அவளின் அருகாமையில் குளிர்காய இப்போதே மனசு அலைபாய்கின்றது.

எவன் செத்தால் என்ன ? எவன் இருந்தால் என்ன ? எனக்கு என் குடும்பம்தான் முக்கியம்.

என்ன ராஜா ? உங்களுக்கு வேறு வேலை இல்லையா ?

வேதனையுடன், கையாலாகாதவன்.
!!!....... வெறும் ஆச்சரியக் குறிகளே உங்களுடைய கூற்றுக்கு கேள்வியும், பதிலுமாய்....

யவனிகா
27-10-2007, 04:36 AM
படிக்கவே மனம் நடுங்குகிறது, ஆனால் அடுத்த ஒரு மாதத்தில் இதுவும் நீர்த்துப் போவது நிச்சயம். மக்கள் என்ன முட்டாள்களோ எவன் வீட்டுக் கவலலையையோ தலையில் ஏற்றிச் சுமக்க! ஆனாலும் தெகல்காவைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

நேசம்
27-10-2007, 09:26 AM
தெஹலகா விவாகாரம் கூட மோடியின் சதியாக இருக்க கூடும். ஏனென்றால் வரும் தேர்தலை கருத்தில் கொண்டு, தனது கட்சியினரை உண்மை சொல்ல சொல்லி இருக்கலாம்.அதனால் காங்கிரஸ் போன்ற எதிர்கட்சிகள் பிரச்சனை கிளம்பும். அதை தனக்கு சாதகமாக்கி கொண்டு வரும் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பது அவரது எண்ணமாக இருக்கலாம். − இது எனது தனிப்பட்ட கருத்து

xavier_raja
27-10-2007, 10:13 AM
இதை எல்லாம் படிக்கும்பொழுது எனக்கு மிகவும் பயமாக உள்ளது. எதிர்கால இந்தியா எப்படி இருக்குமோ என்று.. வடநாட்டோடு ஒப்பிடுகையில் நம் தமிழ்நாடு எவ்வளவே மேல் போல்தான் தெரிகிறது. BJP ஆட்சிக்கு வந்தால் என்ன நடக்கும் என்று என்னும்பொழுது அச்சமாக உள்ளது.

அன்புரசிகன்
28-10-2007, 08:14 AM
நண்பர்களே... இந்த திரி ராஜா அவர்களால் செய்தி சோலையில் செய்தியாக தொடக்கப்பட்டது. இங்கே உங்கள் விவாதங்களை நடாத்தவேண்டாம்.... செய்திகள் மட்டும் இருக்கட்டும். உங்கள் கருத்துக்களை மட்டும் இடுங்கள்.

விவாதத்திற்கென விவாதப்பகுதி உண்டு. அங்கு கண்ணியமாக உங்கள் விவாதத்தை நடாத்துங்கள். மீண்டும் கூறுகிறென். தனிமனித தாக்குதல்கள் மாற்று இணைய நட்பு பாராட்டல்கள் தமிழ் மன்றத்தில் அனுமதிக்கப்படமாட்டாது....

மீறும் பதிவுகள் (இனிவரும் விவாதங்களும்) இப்பகுதியிலிருந்து எந்தவித அறிவிப்பும் இன்றி அகற்றப்படும்.

உங்கள் ஒத்துழைப்பிற்கு நன்றிகள்.

அன்புரசிகன்
28-10-2007, 02:17 PM
இங்கே பதியப்பட்ட விவாதங்கள் அனைத்தும் குஜராத் பயங்கரம்: தெகல்கா-விவாதம் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=13033) என்ற தலைப்பிற்கு (விவாதப்பகுதியில்) மாற்றப்பட்டது...

தொடர்ந்து விவாதத்தினை இத்திரியில் நிகழ்வதை தவிர்க்க தற்காலிகமாக இத்திரியைப்பூட்டுகிறேன்...