PDA

View Full Version : செழித்து வளரட்டும்



இனியவள்
25-10-2007, 02:57 PM
கிளைகளின் நடுவினிலே
தன்னை மறைத்திடும்
இலைகளாய் - வெட்கமெனும்
ஆடை கொண்டு உன்
திறமைகளை உனக்குள்ளே
புதைக்கின்றாய்...

நீ புதைத்திடும் உன்
அறிவுக் களஞ்சியம்
புதையாலாய் போகாது..
உன் வாழ்வின் பிரகாசத்தை
உன் நாணம் என்னும் வேலிகள்
போட்டு மறைக்காதே....

உன் திறமையெனும் விதைகளை
மற்றவர்களுக்கும் விதைத்திடு
நீ மறைந்தாலும் நிழல் தரும்
மரமாய் என்றென்றும் வாழ்வாய்
நீ படைத்திட்ட உன் காவியங்களால்...

அன்புத் தோழரே வாருங்கள்
வெளிக் கொண்டு வாருங்கள்
உங்களுள் புதையுண்டு போய்
இருக்கும் உங்கள் பொக்கிஷங்களை
மன்றம் என்னும் உறவுப் பாலத்தில்
செழித்து வளரட்டும் உங்கள்
ஆக்கப் பயணம்.....

அமர் நான் திரியைக் கொழுத்திட்டன்
திரியைத் தூண்டுவது உங்கள் வேலை
எப்படியாவது அன்புவை இழுத்துக்
கொண்டு வந்திடுங்க கவிதை எழுத

சூரியன்
25-10-2007, 04:07 PM
நல்ல படைப்பு.
எங்களுக்குள் இருக்கும் திறைமைகளை வெளிகொண்டு வர இந்த கவிதை ஊன்றுகோலாய் இருக்கும் என என்னுகிறேன்.
பாராட்டுக்கள் இனியவள் அக்கா..

அமரன்
28-10-2007, 08:33 PM
தன்னடக்கம் என்பது
திறைமைகளை மறைக்கும் திரையாதல்
முன்னேற்றத்தின் தடைக்கல்...

அதுவே..
திறமைகளி சூட்டிய
கிரீடக்கனதிகளின் விளையான
தலைக்கனத் தாங்கியெனில்
முன்னேற்றத்தின் படிக்கல்...

---------------------------------------------------
எழுதபடுவதில்லை கவிதைகள்..
தன்னிச்சையாக பிரவசமாகின்றன..
ரசிகனுக்குள் தரித்த கரு - விரைவில்
தத்தி விளையாடும் என்பது நம்பிக்கை...