PDA

View Full Version : தொடுவானம்......



Hayah Roohi
24-10-2007, 05:46 AM
புழுதி படர்ந்தЕ
வானம்!

சோகம் சுமந்தЕ
காற்று!!!

வியர்வைப்பூக்களை
உதிர்க்கும்Е.
வெப்பப் பகல்!

தூரத்தில் மங்கலாய்Е
தொடு வானம்!

ஒவ்வொரு எலும்பையும்
துளைத்தெடுக்கும்Е
குளிர் இரவு!

விழிகளை
வலிக்கச் செய்யும்Е
முடிவிலிப் பாலைவனம்!

இங்கு தான்
என் தாய்;Е
என்னைச் சுமந்தாள்!

நேற்று
இஸ்ரேலிய விஷமுற்களில்
இதயம் கிழிந்தேன்Е.
ஒரு மெலிந்த சிறுவனாய்!

இன்று
ஏவுகணைக்குள் புதைந்த
என்
தாய்த் தேசத்தில்
ஒட்டுப் போட்ட ஆடையோடு
முளைக்கிறேன்Е.
ஒரு முஜாஹிதாய்Е..

சோகக் கரு
தரித்திருக்கும்
என் தாய் பூமியே!!

அழாதீர்கள்!!!

வசந்தம் சிலிர்த்த
என் வயதுகளைத் தொலைத்தேன்!!!

வரண்ட பாலைவனத்திலும்
வற்றாத
சுனை நீராய்Е
சுகம் தந்த இஸ்லாம்!

இஸ்லாம்
ЕЕ.

என்
காயங்களுக்கு
கட்டுப்போட்டது!

உடைந்த இதயத்துள்
ஒரு பூவாய்
மலர்ந்தது!

அழுத விழியோரத்தில்
ஒரு
குளிர்ந்த பனி;த்துளியாய்
பரிணமித்தது!

என்
தாய் பூமியே
அழாதீர்கள்Е..

இதோ
ஒரு போராளியின்
சுட்டெரிக்கும் சுவாசம்
சுமந்து பிறக்கிறேன்!!!

ஏ அமெரிக்கா!!!
இதோ வருகிறேன்!!!

உன்
ஒவ்வொரு சுவட்டையும்
எரிப்பேன்Е
என்
தாய்கள் அழுத
விழிநீர் கொண்டு!!!!

ропро╛ро┤рпН_роЕроХродрпНродро┐ропройрпН
25-10-2007, 11:38 AM
வரண்ட பாலைவனத்திலும்
வற்றாத
சுனை நீராய்Е
சுகம் தந்த இஸ்லாம்!

இஸ்லாம்


வாழ்த்துக்கள் தொடர்ந்தும் எழுதுங்கள்

роЗройро┐ропро╡ро│рпН
25-10-2007, 01:41 PM
வசந்தம் சிலிர்த்த
என் இளமைகளைத்
தொலைத்தேன் முரட்டுப்
பிடிவாதம் பிடித்த
போரினவாதிகளின் சுயநலப்
பாதைகளிலே

அழகிய கவிதை வாழ்த்துக்கள்