Hayah Roohi
23-10-2007, 05:18 AM
என்
சுட்டு விரல் பட்டு
சிலிர்க்கும்...
வேலியோர மொட்டுமல்லி!
விட்டு விட்டு
பூத்தூவும்...
மேகப்பஞ்சு!
அலுக்காமல்
என்னோடு ஓடி வரும்...
ஒற்றை நிலா!
வரும் போதெல்லாம்
தலை சிலுப்பி
வரவேற்கும்
முன் வாசல் வேப்ப மரம்!
என்
கவிதை பொறுக்கி
கிறுக்குப் பிடித்த
என்னறை
ஜன்னல் கம்பி!
நான்
காதலோடு வந்தமரும்
மருதமரப் பந்தல்
பதித்த
நதிக்கரை!
............................
ஒன்றும் ரசிக்கவில்லை
.............................
எல்லாமே
எனக்கு அந்நியமாய்....
எனக்கெதிராய் சதி
செய்வதாய்.....
.........................
....................................
என் உயிர் முளைத்து
சடைத்த
என் தேசம்
எனக்கினி சொந்தமில்லை!!!
சுட்டு விரல் பட்டு
சிலிர்க்கும்...
வேலியோர மொட்டுமல்லி!
விட்டு விட்டு
பூத்தூவும்...
மேகப்பஞ்சு!
அலுக்காமல்
என்னோடு ஓடி வரும்...
ஒற்றை நிலா!
வரும் போதெல்லாம்
தலை சிலுப்பி
வரவேற்கும்
முன் வாசல் வேப்ப மரம்!
என்
கவிதை பொறுக்கி
கிறுக்குப் பிடித்த
என்னறை
ஜன்னல் கம்பி!
நான்
காதலோடு வந்தமரும்
மருதமரப் பந்தல்
பதித்த
நதிக்கரை!
............................
ஒன்றும் ரசிக்கவில்லை
.............................
எல்லாமே
எனக்கு அந்நியமாய்....
எனக்கெதிராய் சதி
செய்வதாய்.....
.........................
....................................
என் உயிர் முளைத்து
சடைத்த
என் தேசம்
எனக்கினி சொந்தமில்லை!!!