யவனிகா
22-10-2007, 07:07 PM
அது சென்னையின் உயர்தட்டு மக்களுக்கான குடியிருப்பு...பெரிய பங்களா டைப் வீடுகளும், அவற்றைக் காபந்து செய்யும் காம்பௌண்டுச் சுவர்களும், உறுதியான இரும்பு கேட்டுகளுமாக அந்த இடம் நட்சத்திர அந்தஸ்து பெற்று விளங்கியது.தெருக்களின் இருபுறமும் மரங்கள் நிழலைத் தந்து அந்த இடத்தையே தண்ணென்று வைத்திருந்தன.
வலதுபுற வீடு ஒன்றின் பால்கனியில் ஒரு சிறுமி நின்று கொண்டு, ஆளில்லாத ரோட்டை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.நன்கு குட்டையாக வெட்டப்பட்ட தலைமுடி, அணிந்திருந்த ஃபிராக்,உயர்தர காலணிகள் என்று அந்தக் குட்டிப்பெண் பார்த்தவுடன் கருத்தைக் கவரும் வகையில் இருந்தாள்.அவள் பெயர் காவ்யா.காவ்யாவிற்கு வயது ஆறு..
காவ்யாவிற்கு அன்று பொழுதைக் கழிப்பது சிரமமாக இருந்தது.அம்மா வழக்கம் போல வெளியே போய்விட்டாள்.ஆயா குறட்டை விட்டுத் தூங்கிக்கொண்டிருக்கிறாள்.அதனால் தான் கையில் பொம்மையுடன் பால்கனிக்கு வந்து ரோட்டை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.
எதிர்ப்புறத்தில் புதிதாய் வீடு கட்டிக் கொண்டிருக்கிறார்கள்.தெருவில் மணலும்,ஜல்லியுமாய் கொட்டிக் கிடக்கிறது.கட்டப்படும் வீட்டின் மேல் தளத்தில் சித்தாள்கள் தலைச்சுமையுடன் நடந்துகொண்டிருப்பது காவ்யாவிற்கு ஆச்சர்யமாக இருந்தது...இது யாரு இன்னொரு பாப்பா? வெளியே கொட்டி வைத்திருக்கும் மணலில் வீடு கட்டி விளையாடுறது? காவ்யாவின் கண்கள் அங்கே மணலில் விளையாண்டு கொண்டிருந்த குழந்தையை ஆர்வமுடன் பார்த்தன.சிறிது நேரம் அதையே பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு தானும் அவ்வாறு விளையாடவேண்டும் என்ற ஆசை துளிர்த்தது.
அம்மா வருவதற்கு இன்னும் நேரம் ஆகும்.ஆயா தூங்கிக்கொண்டிருக்கிறாள்.பூனை நடை நடந்து மெல்ல மெல்ல கீழே வந்தாள்.டி.வி.யில் ஆயா அவளுக்காக போட்டுவிட்டிருந்த டாம் அன் ஜெர்ரி, பார்ப்பவர் யாரும் இல்லாவிட்டாலும் தொடர்ந்து சண்டை பிடித்துக் கொண்டிருந்தது. மெல்ல அடி வைத்து மெயின் கேட்டை நெருங்கினாள். நல்ல வேளை மெயின் கேட் சும்மா தான் சாத்தி வைக்கப்பட்டிருந்தது. சுதந்திரம் கிடைத்த சந்தோசத்தில் ஒரே ஓட்டமாக எதிர் வீட்டுக்கு ஓடினாள்.
குடுகுடு வென ஓடிபோய் மண்ணில் விளையாண்டு கொண்டிருந்த அந்த பாப்பாவின் முன்னால் நின்றாள்.அதுவும் தலையை உயர்த்தி இவளைப் பார்த்தது.காவ்யா அணிந்திருந்த ஆடைகள், அவளுக்கு வியப்பளித்திருக்க வேண்டும், திறந்த வாய் மூடாமல் காவ்யாவைப் பார்த்தபடி நின்றது.
காவ்யாதான் முதலில் பேசினாள்
,உம் பேர் என்ன? எம் பேர் காவ்வியா..
.
சிறிது நேர மௌனத்திற்குப் பின் அந்த பாப்பா பேசியது,"என்னோட பேரு குப்பி. நீ எங்கிருந்து வர்ற?"
காவ்யா சொன்னாள் "நா எதிர் வீடு.நீ மண்ணில வெளாண்டிருந்ததப் பாத்துதான் வந்தேன்.நானும் விளையாட்டுக்கு வரவா?
இதற்கிடையே குப்பியைப் பார்த்து விடுவோம். குப்பிக்கும் வயது ஆறிலிருந்து ஏழுக்குள் தான் இருக்கும்..குப்பி சித்தாள் சின்னத்தாயின் மகள், கட்டப் பட்டுக்கொண்டிருக்கிற வீட்டின் பின்புறம் தற்காலிகமாக குடிசை போட்டுத் தங்கி இருக்கின்றார்கள். குப்பியுடன் சேர்த்து மொத்தம் மூன்று பெண் குழந்தைகள். குப்பிக்குப் பின் பிறந்தவர்கள். மொத்தக் குடும்பத்தின் ஜீவனமும் சின்னத்தாய் ஒருத்தியின் உழைப்பில் இருக்கிறது.சரி,சிறுமிகளிடம் வருவோம்.
இன்னும் ஆச்சர்யம் மாறாத விழிகளுடன் காவ்யாவைப் பார்த்தாள் குப்பி. "சரி,உன்னோட அம்மா எங்க?" என்றாள் காவ்யா,குப்பியிடம்
"அங்க பாரு மேல வேல செய்யுது பாரு, அதான் என் அம்மா, என்றாள் குப்பி அம்மாவைக் கைகாட்டி.
"அவளோ உயரத்தில வேலை செய்யறாங்களே பயமா இருக்காதா? "
"பயமெல்லாம் இருக்காது.நானும் பெரியவளானா இதே போலத் தான் வேலை செய்வேன்" என்றாள் மிடுக்காக
"சரி ஏன் உன் துணியில இத்தனை ஓட்டை." காவ்யா.
"அதுவா, அம்மாக்கு தைக்க நேரமில்ல. நாளைக்கி தெச்சுத் தருவா.உன் சொக்கா ரொம்ப அழகாயிருக்கு. சேப்புக்கலரு எனக்கு ரொம்பப் பிடிக்கும்.சரி உன் அப்பா எங்கே?"
"டாடி பிசினெஸ் டூர் போயிருக்கார்,பாதி நாள் வீட்ல இருக்க மாட்டார். ஃபாரின் போயிருவார்.மம்மி லேடிஸ் கிளப் போவாங்க,ஆயா கூடத்தான் நான் இருப்பேன்"
"எங்கப்பா கூடத்தான் மாசத்தில பாதிநாள் ஓடிப்போயிருவாரு, அப்புறம் எப்பாச்சி வீட்டுக்கு வந்து அம்மாவ அடிச்சி காசு வாங்கிட்டு மறுபடி போயிருவாரு"
"ஐ, எங்கப்பாவும், உங்கப்பாவும் சேம்தான், சரி நீ ஏன் மொட்டை போட்டுருக்கே, நீளமா முடி வளர்த்து பின்னல் போடலாமில்ல,அது எனக்கு ரொம்ப பிடிக்கும்"
"அதுவா,தலையில எண்ண வெக்காததால கட்டி வந்துதா, அம்மா மொட்டை போட்டுட்டா .நீ மட்டும் ஏன் முடி விடல? குட்டியா வெட்டி வெச்சிருக்க?"
"எனக்கு ஆசைதான், அம்மாக்கு நேரமில்ல, ஆயா அம்மாகிட்ட சொல்லி போனவாரம் முடிய வெட்டிட்டாங்க, ரொம்ப அழுதேன் தெரியுமா?"
"சரி, அழுவாதே, வளந்திரும்.சரி நீ என்னெல்லாம் வெளாடுவே?"
"எங்கிட்ட நெறைய டாய்ஸ் இருக்கே?டெடிபேர், சின்ரெல்லா,பார்பி. உங்கிட்ட இருக்கா? நீ என்ன பொம்மையெல்லாம் வெச்சிருக்க?"
"பொம்மயெல்லாம் அம்மா வாங்கித் தர மாட்டா, எனக்குத்தான் வீட்டில ரெண்டு தங்கச்சிப் பாப்பா இருக்கே, அவங்க கூடத்தான் வெளாடுவேன்"
"ஓ ரியலி! நீ ரொம்ப லக்கி, எனக்குத்தான் விளையாட யாருமே இல்ல, எப்பவும் டி.வி. தான் பார்க்கணும்"
"உங்க வீட்டில டி.வி.யெல்லாம் இருக்கா? டி.வி. பாக்கிறதுன்னா எனக்கு ரொம்ப பிடிக்கும்."
"நீ வேணா எங்க வீட்டுக்கு வாயேன். நம்ம ரெண்டு பேரும் விளையாடலாம். டி.வி. பாக்கலாம்"
"அம்மாகிட்ட கேட்டிட்டு வரேன், சரியா. நீ என்ன சாப்பிட்ட காலையில?நான் ஒண்ணுமே சாப்பிடல. இன்னைக்கு வீட்ல பழயது கெட்டுப் போச்சா...அம்மா கொட்டிட்டா"
"நானும் தான் சாப்பிடல. ஆயா சீக்கிரமா சாப்பிடின்னு, என்ன தலைல கொட்டிட்டாங்க. எனக்கு ரொம்ப வலிச்சிதா...அழுதுட்டே சாப்பாடு வேணாம்னு சொல்லிட்டேன். அவளும் தட்டை அலம்பி வெச்சிட்டா!"
நேற்றுப் பெய்த மழையால், கொட்டிக்கிடந்த மண் ஈரமாக இருந்தது. ஈர மண்ணில் இருவரும் வீடு கட்டி விளையாட ஆரம்பித்தார்கள். யாரோ ஒரு குட்டிப்பெண்ணுடன் குப்பி விளையாடுவதைப் பார்த்த குப்பியின் அம்மா சின்னத்தாயி தலைச்சுமையை இறக்கிவைத்து விட்டு கீழே இறங்கி வந்தாள்.
யாரு குப்பி இது? என்றாள் குப்பியைப் பார்த்து.
"நான் இதோ இந்த வீட்டிலிருந்து வர்றேன்,குப்பி கூட விளையாட வந்தேன் ஆன்ட்டி" என்று பதில் சொன்னாள் காவ்யா.
"அட என்னமா பேசுது குட்டி?" மோவாயில் கையை வைத்து வியந்தாள் சின்னத்தாயி.
அந்நேரம் வேகமாய் வந்து நின்ற காரிலிருந்து இறங்கினாள் ஒரு நடுத்தர வயதுப் பெண்..
"ஐ அம்மா, அம்மா நான் இங்கே இருக்கேன்"காவ்யா ஆர்வமாய் அந்தப் பெண்ணை அழைத்தாள். காவ்யாவைப் பார்த்தவுடன் அவள் முகம் சட்டெனச் சுருங்கியது.
"காவ்யா நீ இங்கே என்ன பண்ற? ஆயா எங்கே? கதவ எப்படித் திறந்த? இப்பிடி வெளியே வந்து மணல்ல விளையாடி உடம்புக்கு ஏதாவது வந்தா யாரு பாக்கிறது?ஆயாவை சொல்லணும்,வா வீட்டுக்கு" காவ்யாவின் பதிலை எதிர் பார்க்காமல் அவள் கையைப் பிடித்து இழுத்தபடி வீட்டை நோக்கி நடந்தாள்.
�அம்மா..,கொஞ்ச நேரம் வெளையாண்டுட்டு வர்றம்மா� அழுத காவ்யாவை அவள் கண்டுகொள்ளவில்லை. காவ்யா குப்பியைப் பார்த்தபடி அழுது கொண்டே போனாள்.அவளுக்குத் தெரியும் நாளை முதல் வாசல் கேட் அடைத்துப் பூட்டப் படும் என்று.
சிறிது நேரமே பழகினாலும் காவ்யாவிடம் மனதளவில் ஒட்டிக்கொண்ட குப்பி, காவ்யா போன திசையையே வெகுநேரம் பார்த்துக் கொண்டிருந்தாள்..
வலதுபுற வீடு ஒன்றின் பால்கனியில் ஒரு சிறுமி நின்று கொண்டு, ஆளில்லாத ரோட்டை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.நன்கு குட்டையாக வெட்டப்பட்ட தலைமுடி, அணிந்திருந்த ஃபிராக்,உயர்தர காலணிகள் என்று அந்தக் குட்டிப்பெண் பார்த்தவுடன் கருத்தைக் கவரும் வகையில் இருந்தாள்.அவள் பெயர் காவ்யா.காவ்யாவிற்கு வயது ஆறு..
காவ்யாவிற்கு அன்று பொழுதைக் கழிப்பது சிரமமாக இருந்தது.அம்மா வழக்கம் போல வெளியே போய்விட்டாள்.ஆயா குறட்டை விட்டுத் தூங்கிக்கொண்டிருக்கிறாள்.அதனால் தான் கையில் பொம்மையுடன் பால்கனிக்கு வந்து ரோட்டை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.
எதிர்ப்புறத்தில் புதிதாய் வீடு கட்டிக் கொண்டிருக்கிறார்கள்.தெருவில் மணலும்,ஜல்லியுமாய் கொட்டிக் கிடக்கிறது.கட்டப்படும் வீட்டின் மேல் தளத்தில் சித்தாள்கள் தலைச்சுமையுடன் நடந்துகொண்டிருப்பது காவ்யாவிற்கு ஆச்சர்யமாக இருந்தது...இது யாரு இன்னொரு பாப்பா? வெளியே கொட்டி வைத்திருக்கும் மணலில் வீடு கட்டி விளையாடுறது? காவ்யாவின் கண்கள் அங்கே மணலில் விளையாண்டு கொண்டிருந்த குழந்தையை ஆர்வமுடன் பார்த்தன.சிறிது நேரம் அதையே பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு தானும் அவ்வாறு விளையாடவேண்டும் என்ற ஆசை துளிர்த்தது.
அம்மா வருவதற்கு இன்னும் நேரம் ஆகும்.ஆயா தூங்கிக்கொண்டிருக்கிறாள்.பூனை நடை நடந்து மெல்ல மெல்ல கீழே வந்தாள்.டி.வி.யில் ஆயா அவளுக்காக போட்டுவிட்டிருந்த டாம் அன் ஜெர்ரி, பார்ப்பவர் யாரும் இல்லாவிட்டாலும் தொடர்ந்து சண்டை பிடித்துக் கொண்டிருந்தது. மெல்ல அடி வைத்து மெயின் கேட்டை நெருங்கினாள். நல்ல வேளை மெயின் கேட் சும்மா தான் சாத்தி வைக்கப்பட்டிருந்தது. சுதந்திரம் கிடைத்த சந்தோசத்தில் ஒரே ஓட்டமாக எதிர் வீட்டுக்கு ஓடினாள்.
குடுகுடு வென ஓடிபோய் மண்ணில் விளையாண்டு கொண்டிருந்த அந்த பாப்பாவின் முன்னால் நின்றாள்.அதுவும் தலையை உயர்த்தி இவளைப் பார்த்தது.காவ்யா அணிந்திருந்த ஆடைகள், அவளுக்கு வியப்பளித்திருக்க வேண்டும், திறந்த வாய் மூடாமல் காவ்யாவைப் பார்த்தபடி நின்றது.
காவ்யாதான் முதலில் பேசினாள்
,உம் பேர் என்ன? எம் பேர் காவ்வியா..
.
சிறிது நேர மௌனத்திற்குப் பின் அந்த பாப்பா பேசியது,"என்னோட பேரு குப்பி. நீ எங்கிருந்து வர்ற?"
காவ்யா சொன்னாள் "நா எதிர் வீடு.நீ மண்ணில வெளாண்டிருந்ததப் பாத்துதான் வந்தேன்.நானும் விளையாட்டுக்கு வரவா?
இதற்கிடையே குப்பியைப் பார்த்து விடுவோம். குப்பிக்கும் வயது ஆறிலிருந்து ஏழுக்குள் தான் இருக்கும்..குப்பி சித்தாள் சின்னத்தாயின் மகள், கட்டப் பட்டுக்கொண்டிருக்கிற வீட்டின் பின்புறம் தற்காலிகமாக குடிசை போட்டுத் தங்கி இருக்கின்றார்கள். குப்பியுடன் சேர்த்து மொத்தம் மூன்று பெண் குழந்தைகள். குப்பிக்குப் பின் பிறந்தவர்கள். மொத்தக் குடும்பத்தின் ஜீவனமும் சின்னத்தாய் ஒருத்தியின் உழைப்பில் இருக்கிறது.சரி,சிறுமிகளிடம் வருவோம்.
இன்னும் ஆச்சர்யம் மாறாத விழிகளுடன் காவ்யாவைப் பார்த்தாள் குப்பி. "சரி,உன்னோட அம்மா எங்க?" என்றாள் காவ்யா,குப்பியிடம்
"அங்க பாரு மேல வேல செய்யுது பாரு, அதான் என் அம்மா, என்றாள் குப்பி அம்மாவைக் கைகாட்டி.
"அவளோ உயரத்தில வேலை செய்யறாங்களே பயமா இருக்காதா? "
"பயமெல்லாம் இருக்காது.நானும் பெரியவளானா இதே போலத் தான் வேலை செய்வேன்" என்றாள் மிடுக்காக
"சரி ஏன் உன் துணியில இத்தனை ஓட்டை." காவ்யா.
"அதுவா, அம்மாக்கு தைக்க நேரமில்ல. நாளைக்கி தெச்சுத் தருவா.உன் சொக்கா ரொம்ப அழகாயிருக்கு. சேப்புக்கலரு எனக்கு ரொம்பப் பிடிக்கும்.சரி உன் அப்பா எங்கே?"
"டாடி பிசினெஸ் டூர் போயிருக்கார்,பாதி நாள் வீட்ல இருக்க மாட்டார். ஃபாரின் போயிருவார்.மம்மி லேடிஸ் கிளப் போவாங்க,ஆயா கூடத்தான் நான் இருப்பேன்"
"எங்கப்பா கூடத்தான் மாசத்தில பாதிநாள் ஓடிப்போயிருவாரு, அப்புறம் எப்பாச்சி வீட்டுக்கு வந்து அம்மாவ அடிச்சி காசு வாங்கிட்டு மறுபடி போயிருவாரு"
"ஐ, எங்கப்பாவும், உங்கப்பாவும் சேம்தான், சரி நீ ஏன் மொட்டை போட்டுருக்கே, நீளமா முடி வளர்த்து பின்னல் போடலாமில்ல,அது எனக்கு ரொம்ப பிடிக்கும்"
"அதுவா,தலையில எண்ண வெக்காததால கட்டி வந்துதா, அம்மா மொட்டை போட்டுட்டா .நீ மட்டும் ஏன் முடி விடல? குட்டியா வெட்டி வெச்சிருக்க?"
"எனக்கு ஆசைதான், அம்மாக்கு நேரமில்ல, ஆயா அம்மாகிட்ட சொல்லி போனவாரம் முடிய வெட்டிட்டாங்க, ரொம்ப அழுதேன் தெரியுமா?"
"சரி, அழுவாதே, வளந்திரும்.சரி நீ என்னெல்லாம் வெளாடுவே?"
"எங்கிட்ட நெறைய டாய்ஸ் இருக்கே?டெடிபேர், சின்ரெல்லா,பார்பி. உங்கிட்ட இருக்கா? நீ என்ன பொம்மையெல்லாம் வெச்சிருக்க?"
"பொம்மயெல்லாம் அம்மா வாங்கித் தர மாட்டா, எனக்குத்தான் வீட்டில ரெண்டு தங்கச்சிப் பாப்பா இருக்கே, அவங்க கூடத்தான் வெளாடுவேன்"
"ஓ ரியலி! நீ ரொம்ப லக்கி, எனக்குத்தான் விளையாட யாருமே இல்ல, எப்பவும் டி.வி. தான் பார்க்கணும்"
"உங்க வீட்டில டி.வி.யெல்லாம் இருக்கா? டி.வி. பாக்கிறதுன்னா எனக்கு ரொம்ப பிடிக்கும்."
"நீ வேணா எங்க வீட்டுக்கு வாயேன். நம்ம ரெண்டு பேரும் விளையாடலாம். டி.வி. பாக்கலாம்"
"அம்மாகிட்ட கேட்டிட்டு வரேன், சரியா. நீ என்ன சாப்பிட்ட காலையில?நான் ஒண்ணுமே சாப்பிடல. இன்னைக்கு வீட்ல பழயது கெட்டுப் போச்சா...அம்மா கொட்டிட்டா"
"நானும் தான் சாப்பிடல. ஆயா சீக்கிரமா சாப்பிடின்னு, என்ன தலைல கொட்டிட்டாங்க. எனக்கு ரொம்ப வலிச்சிதா...அழுதுட்டே சாப்பாடு வேணாம்னு சொல்லிட்டேன். அவளும் தட்டை அலம்பி வெச்சிட்டா!"
நேற்றுப் பெய்த மழையால், கொட்டிக்கிடந்த மண் ஈரமாக இருந்தது. ஈர மண்ணில் இருவரும் வீடு கட்டி விளையாட ஆரம்பித்தார்கள். யாரோ ஒரு குட்டிப்பெண்ணுடன் குப்பி விளையாடுவதைப் பார்த்த குப்பியின் அம்மா சின்னத்தாயி தலைச்சுமையை இறக்கிவைத்து விட்டு கீழே இறங்கி வந்தாள்.
யாரு குப்பி இது? என்றாள் குப்பியைப் பார்த்து.
"நான் இதோ இந்த வீட்டிலிருந்து வர்றேன்,குப்பி கூட விளையாட வந்தேன் ஆன்ட்டி" என்று பதில் சொன்னாள் காவ்யா.
"அட என்னமா பேசுது குட்டி?" மோவாயில் கையை வைத்து வியந்தாள் சின்னத்தாயி.
அந்நேரம் வேகமாய் வந்து நின்ற காரிலிருந்து இறங்கினாள் ஒரு நடுத்தர வயதுப் பெண்..
"ஐ அம்மா, அம்மா நான் இங்கே இருக்கேன்"காவ்யா ஆர்வமாய் அந்தப் பெண்ணை அழைத்தாள். காவ்யாவைப் பார்த்தவுடன் அவள் முகம் சட்டெனச் சுருங்கியது.
"காவ்யா நீ இங்கே என்ன பண்ற? ஆயா எங்கே? கதவ எப்படித் திறந்த? இப்பிடி வெளியே வந்து மணல்ல விளையாடி உடம்புக்கு ஏதாவது வந்தா யாரு பாக்கிறது?ஆயாவை சொல்லணும்,வா வீட்டுக்கு" காவ்யாவின் பதிலை எதிர் பார்க்காமல் அவள் கையைப் பிடித்து இழுத்தபடி வீட்டை நோக்கி நடந்தாள்.
�அம்மா..,கொஞ்ச நேரம் வெளையாண்டுட்டு வர்றம்மா� அழுத காவ்யாவை அவள் கண்டுகொள்ளவில்லை. காவ்யா குப்பியைப் பார்த்தபடி அழுது கொண்டே போனாள்.அவளுக்குத் தெரியும் நாளை முதல் வாசல் கேட் அடைத்துப் பூட்டப் படும் என்று.
சிறிது நேரமே பழகினாலும் காவ்யாவிடம் மனதளவில் ஒட்டிக்கொண்ட குப்பி, காவ்யா போன திசையையே வெகுநேரம் பார்த்துக் கொண்டிருந்தாள்..