வசீகரன்
21-10-2007, 07:31 AM
http://img40.picoodle.com/img/img40/9/7/11/f_Icraveforyom_7acefcd.jpg
வைகறைப்பொழுதினில்....தென்றலை...கூட்டிக்கொண்டு
தெருவோரம்....நடக்கும்போதும்...
வண்ணங்களில் வாயில் நிறைத்திருக்கும் வடிவழகில் கோலங்களை
காணும்போதும்....
கொலுசோலிகள் சப்திக்க...கோலமயிலாய் கோலமிட்டபடி
இருக்கும் நங்கயர்களை காணும்பொழுதும்.....
அன்றலர்ந்து......அழகாக வீற்றிருக்கும் அடைமலர்களை காணும்போதும்
ஆழ்ந்தஅமைதியை கண்களில் கொண்டு ஆலயம்
வீற்றிருக்கும்... அகிலநாயகனை காணும்போதும்....
ஆரவாரங்களற்ற..அண்டத்தில் அமைதிப்பயணம் ஆட்கொண்ட அற்றைத்திங்கள்
காணும்போதும்...!
மழைநேர மாலைகளில்....மனதோரசோலைகளில்.....
மலர்களாய்.....மாறிட்ட மனங்களில்
மழலையாய் ஆகிட்ட கணங்களில்...
இருகைகள் விரித்து...
திவலைகளில் உடல் நனைத்து உலகை மறந்த ஷனங்களாய்
நான் இருந்தபோதெல்லாம் .....!
என் ஜன்னலோர பயணங்களில்...
கடந்து செல்லும் பொதியமர்ந்த பொழில்களை
காணும்போதெல்லாம்
காதல் பக்கங்களை நான் கடந்த போதெல்லாம்....
கவிதைகளாக நான் கழிந்த பொழுதெல்லாம்....
என் அழகான நேரங்களில் எல்லாம்...
எப்படித்தான் எங்கிருந்துதான் நீ வந்து விடுகிறாயோ....!
மனதோரம் வந்து நினைவோரம் நீந்தி....
இதழ் கடையோரம்... புன்னகையாக.... வெளிப்படுகிறாயோ...!
வைகறைப்பொழுதினில்....தென்றலை...கூட்டிக்கொண்டு
தெருவோரம்....நடக்கும்போதும்...
வண்ணங்களில் வாயில் நிறைத்திருக்கும் வடிவழகில் கோலங்களை
காணும்போதும்....
கொலுசோலிகள் சப்திக்க...கோலமயிலாய் கோலமிட்டபடி
இருக்கும் நங்கயர்களை காணும்பொழுதும்.....
அன்றலர்ந்து......அழகாக வீற்றிருக்கும் அடைமலர்களை காணும்போதும்
ஆழ்ந்தஅமைதியை கண்களில் கொண்டு ஆலயம்
வீற்றிருக்கும்... அகிலநாயகனை காணும்போதும்....
ஆரவாரங்களற்ற..அண்டத்தில் அமைதிப்பயணம் ஆட்கொண்ட அற்றைத்திங்கள்
காணும்போதும்...!
மழைநேர மாலைகளில்....மனதோரசோலைகளில்.....
மலர்களாய்.....மாறிட்ட மனங்களில்
மழலையாய் ஆகிட்ட கணங்களில்...
இருகைகள் விரித்து...
திவலைகளில் உடல் நனைத்து உலகை மறந்த ஷனங்களாய்
நான் இருந்தபோதெல்லாம் .....!
என் ஜன்னலோர பயணங்களில்...
கடந்து செல்லும் பொதியமர்ந்த பொழில்களை
காணும்போதெல்லாம்
காதல் பக்கங்களை நான் கடந்த போதெல்லாம்....
கவிதைகளாக நான் கழிந்த பொழுதெல்லாம்....
என் அழகான நேரங்களில் எல்லாம்...
எப்படித்தான் எங்கிருந்துதான் நீ வந்து விடுகிறாயோ....!
மனதோரம் வந்து நினைவோரம் நீந்தி....
இதழ் கடையோரம்... புன்னகையாக.... வெளிப்படுகிறாயோ...!