கஜினி
20-10-2007, 12:58 PM
வணக்கம் மதிப்பிற்குரிய கவிஞர் பெருமக்களே. பல கவிப் பெருமக்கள் சூழ இருக்கும் இந்தத் தமிழ் மன்றத்தில் உங்களுக்கிடையே நான் சுற்றித் திரிவது எனக்கு பெருமை அளிக்கிறது. நான் ஒரு கத்துக்குட்டி. நான் எழுதுவதைக் கவிதை என்று நம்பிக்கொண்டிருப்பவன். சில நேரங்களில் மட்டுமே அது மெய்யாகிறது. பல நேரங்களில் அது பொய்யாகவே ஆகிறது.
தமிழ் மன்றம் வந்து அனைத்துக் கவிதைகளையும் படிக்க வாய்ப்புக் கிடைக்க வில்லை. நான் மன்றத்தில் இணைந்து பத்து நாட்கள்தான் ஆயிருக்கிறது. இங்கிருக்கும் சில கவிஞர்களை முன்பே நானறிந்திருக்கிறேன். அவர்களுள் ஷீ-நிசி, பிச்சி, ஆதவா ஆகியோர் குறிப்பிடத் தக்கவர்கள். அவர்களுக்கு ஒருவேளை என்னைத் தெரியாமல் இருக்கலாம். அவர்கள் படைப்புகளை எப்போதும் நான் ரசிப்பவன். மேலும் இங்கே குழுமியிருக்கும் அனைத்துக் கவிஞர்களின் கவிதைகளையும் படித்து இன்புறுவதற்காகவே இங்கு வந்திருக்கிறேன். என் கவிதைகள் என்னும் உளறலில் ஏதாவது பிழைகள் இருப்பின் சுட்டிக் காட்டுங்கள். திருத்திக் கொள்கிறேன்.
விரைவில் என் கவிதைகளின் சுட்டிகளை இங்கே சமர்பிக்கிறேன்.
நன்றிகளுடன்
கஜினி.
வாழ்க்கை வாழும் வரை (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=12747)
தமிழ் மன்றம் வந்து அனைத்துக் கவிதைகளையும் படிக்க வாய்ப்புக் கிடைக்க வில்லை. நான் மன்றத்தில் இணைந்து பத்து நாட்கள்தான் ஆயிருக்கிறது. இங்கிருக்கும் சில கவிஞர்களை முன்பே நானறிந்திருக்கிறேன். அவர்களுள் ஷீ-நிசி, பிச்சி, ஆதவா ஆகியோர் குறிப்பிடத் தக்கவர்கள். அவர்களுக்கு ஒருவேளை என்னைத் தெரியாமல் இருக்கலாம். அவர்கள் படைப்புகளை எப்போதும் நான் ரசிப்பவன். மேலும் இங்கே குழுமியிருக்கும் அனைத்துக் கவிஞர்களின் கவிதைகளையும் படித்து இன்புறுவதற்காகவே இங்கு வந்திருக்கிறேன். என் கவிதைகள் என்னும் உளறலில் ஏதாவது பிழைகள் இருப்பின் சுட்டிக் காட்டுங்கள். திருத்திக் கொள்கிறேன்.
விரைவில் என் கவிதைகளின் சுட்டிகளை இங்கே சமர்பிக்கிறேன்.
நன்றிகளுடன்
கஜினி.
வாழ்க்கை வாழும் வரை (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=12747)