இலக்கியன்
14-10-2007, 05:39 PM
http://img296.imageshack.us/img296/5784/sandartiu6.jpg (http://imageshack.us)
ஓவியங்கள் செந்-தமிழ்
ஓலைக்காவியங்கள்
உள்ளத்து உணர்வுகளின்
உன்னதக் கோலங்கள்
கண்கண்ட இரசனைகளை
கவர்ந்திடும் வண்ணமிட்டு
கலை நயம் கலந்து
காட்சியாக விரியவிடும்
எண்ணற்ற சிந்தனையை-மன
எண்ணத்தில் தீட்டி விடும்
மாசற்ற புதுமை மொழி
மண்ணுலகில் மகிமை வரி
பட்டறிந்த பண்டிதனும்
பாரறியா பாமரனும்
பார்த்து அறியும்-இனிய
பன்னாட்டு தொடர்பு மொழி
எதுகை மோனையில்லை
எடுகோள் எதுவுமில்லை
தூரிகை தூவிவிடும்
தூய்மையான கவிதை
ஓவியங்கள் செந்-தமிழ்
ஓலைக்காவியங்கள்
உள்ளத்து உணர்வுகளின்
உன்னதக் கோலங்கள்
கண்கண்ட இரசனைகளை
கவர்ந்திடும் வண்ணமிட்டு
கலை நயம் கலந்து
காட்சியாக விரியவிடும்
எண்ணற்ற சிந்தனையை-மன
எண்ணத்தில் தீட்டி விடும்
மாசற்ற புதுமை மொழி
மண்ணுலகில் மகிமை வரி
பட்டறிந்த பண்டிதனும்
பாரறியா பாமரனும்
பார்த்து அறியும்-இனிய
பன்னாட்டு தொடர்பு மொழி
எதுகை மோனையில்லை
எடுகோள் எதுவுமில்லை
தூரிகை தூவிவிடும்
தூய்மையான கவிதை