Log in

View Full Version : வெந்நீரின் பயன்கள் -



роорпАройро╛роХрпБрооро╛ро░рпН
11-10-2007, 02:27 PM
வெந்நீரின் பயன்கள்


வெந்நீர் குடித்தால் என்னென்ன உபாதைகள் தீருமென்று தன் அனுபவத்தை வைத்துச் சொல்கிறார் குமுதம் சினேகிதி வாசகி மகாலட்சுமி

யாருக்காவது சமையல் சுத்தமாக தெரியாவிட்டால், ССஅவளுக்கு நல்லா வெந்நீர் போட வரும்...ТТ என்று நம்மில் பலர் நக்கல் அடிப்பதுண்டு. உண்மையில் நாம் வெந்நீரின் மகிமை தெரியாமல்தான் அப்படி கிண்டல் செய்திருக்கிறோம். இதோ பாருங்கள்... வெந்நீரால் எத்தனை பலன்கள் என்று!

ஏதாவது எண்ணெய்ப் பலகாரம், சுவீட், அல்லது பூரி சாப்பிட்ட பிறகு நெஞ்சு கரித்துக் கொண்டிருக்கிறதா? உடனே எடுங்கள் ஒரு டம்ளர் வெந்நீரை.... மெதுவாகக் குடியுங்கள். கொஞ்ச நேரத்தில் நெஞ்சு எரிச்சல் போயே போச்சு!

வெந்நீர் குடித்தால் உங்கள் உடலில் போடும் அதிகப்படி சதை குறையவும் வாய்ப்பிருப்பதாகச் சொல்கிறார்கள்.

காலையில் சரியாக மலம் கழிக்க முடியவில்லை என்று ஃபீல் பண்ணுகிறீர்களா? எடுங்கள் வெந்நீரை! குடியுங்கள் உடனே! இம்மீடியட் எஃபெக்ட் கிடைக்கும். (நிறையப் பேர், ССஅட, காலையில் எங்க வீட்டில் காபி என்று பெயர் சொல்லி தினம் அதைத்தானே கொடுக்கிறார்கள்ТТ என்று புலம்புவது கேட்கிறது!)

உடம்பு வலிக்கிற மாதிரி இருக்கிறதா? உடனே வெந்நீரில் கொஞ்சம் சுக்குத்தூள், பனங்கற்கண்டு போட்டு குடியுங்கள். இதன் மூலம் பித்தத்தினால் வரும் வாய்க்கசப்பு மறைந்து விடும். மேலும், உடல் வலிக்கு, நன்றாக வெந்நீரில் குளித்துவிட்டு, இந்த சுக்கு வெந்நீரையும் குடித்துவிட்டுப் படுத்தால், நன்றாகத் தூக்கம் வருவதோடு, வலியும் பறந்துவிடும்.

எங்காவது அலைந்துவிட்டு வந்து கால் பாதங்கள் வலிக்கிறது என்றால், அதற்கும் நமது வெந்நீர்தான் ஆபத்பாந்தவன். பெரிய பிளாஸ்டிக் டப்பில் கால் சூடு பொறுக்குமளவுக்கு வெந்நீர் ஊற்றி அதில் உப்புக்கல்லைப் போட்டு, அதில் கொஞ்ச நேரம் பாதத்தை வைத்து எடுங்கள். காலில் அழுக்கு இருப்பது போல் தோன்றினால், வெந்நீரில் கொஞ்சம் டெட்டால் ஊற்றி அதில் பாதத்தை வைத்தால், கால் வலி மறைவதோடு, பாதமும் சுத்தமாகிவிடும்.

மூக்கு அடைப்பா? நம்ம வெந்நீர்தான் டாக்டர்! வெந்நீரில் விக்ஸ் அல்லது அமிர்தாஞ்சனம் போட்டு அதில் முகத்தைக் காண்பித்தால், மூக்கடைப்பு போயிந்தி!

வீட்டில் வேலைக்கு ஆட்கள் இல்லாமல் தாங்களே பாத்திரம் தேய்த்து, துணி துவைக்கும் பெண்கள், வாரத்திற்கு ஒரு முறையேனும் உங்கள் கைகளை வெந்நீரில் கொஞ்ச நேரம் வைத்திருங்கள். இதன் மூலம் நக இடுக்கில் இருக்கும் அழுக்குகள் போய், உங்கள் கைகள் ஆரோக்கியமாக இருக்கும்.

வெயிலில் அலைந்து விட்டு வந்து உடனே சில்லென்று ஐஸ்வாட்டர் அருந்துவதைவிட, சற்றே வெதுவெதுப்பான வெந்நீர் அருந்துவது, தாகம் தீர்க்கும் நல்ல வழி.

ஈஸினோபீலியா, ஆஸ்துமா போன்ற உபாதைகள் இருப்போர், உங்களுக்கு தாகம் எடுக்கும் போதெல்லாம் கண்டிப்பாக வெதுவெதுப்பான வெந்நீர் குடியுங்கள். அதுபோலவே, ஜலதோஷம் பிடித்தவர்களும் வெந்நீர் குடித்தால், அது அந்த நேரத்துக்கு நல்ல இதமாக இருப்பதோடு சீக்கிரம் குணமாவதையும் என் அனுபவத்திலேயே உணர்ந்திருக்கிறேன்.

இதையெல்லாம் தவிர, வீட்டில் நெய், எண்ணெய் பாட்டில் இருந்த பாத்திரங்களைக் கழுவும்போது கொஞ்சம் வெந்நீரை ஊற்றி ஊற வைத்து, அப்புறம் கழுவினால் பிசுக்கே இல்லாமல் பளிச்சென்று சுத்தமாகும்.

அதுபோலவே தரை துடைக்கும் போது, குறிப்பாக குழந்தைகள், நோயாளிகள் இருக்கும் வீட்டின் தரைகளை வெந்நீர் உபயோகப்படுத்தி துடையுங்கள். கிருமி இல்லாத சுத்தமான தரை உங்களுடையதாகும்!

வெந்நீரின் மஹாத்மியம் லிஸ்ட் போட்டு மாளாது... என்னது?! வெந்நீருக்கு இனி உங்கள் வீட்டில் தனியாக ஒரு பெரிய பாத்திரமே போடப் போகிறீர்களா...? குட் குட்!

நன்றி - குமுதம்-சினேகிதி

aren
11-10-2007, 02:35 PM
இது தவிற, வெந்நீர் தினமும் சாப்பிட்டால் ஹார்ட் அட்டாகிலிருந்து விடுபடலாம் என்று என்னுடைய நண்பர் ஒருவர் சொன்னார்.

இது தவிற, இன்னும் பல விஷயங்களை மின்னஞ்சலில் எனக்கு அனுப்பினார், ஆனால் என்னுடைய கைக்கணிணி பழுதடைந்துவிட்டதால் அந்த விஷயம் போய்விட்டது. மறுபடியும் அவரைக் கேட்டு அந்த விஷயங்களை இங்கே பதிவு செய்கிறேன்.

роЬрпЖропро╛ро╕рпНродро╛
11-10-2007, 04:55 PM
வழக்கமாக குளிர்ந்த நீரில் குளிப்பதும் வெந்நீரைக்குடிப்பதும் நல்லது என்றுசொல்வார்கள். நமக்கு அப்படியெல்லாம் கிடையாதுங்க... எந்தத் தண்ணியென்றாலும் குடிப்பேன் (ஏதும் தப்பா நெனெச்சுக்காதீங்க.... பச்ச தண்ணி...வெந்நிதண்ணி எதுவேணுமுனாலும் குடிப்பேன் என்று சொல்ல வந்தேன்.)

роирпЗроЪроорпН
11-10-2007, 07:59 PM
வழக்கமாக குளிர்ந்த நீரில் குளிப்பதும் வெந்நீரைக்குடிப்பதும் நல்லது என்றுசொல்வார்கள். நமக்கு அப்படியெல்லாம் கிடையாதுங்க... எந்தத் தண்ணியென்றாலும் குடிப்பேன் (ஏதும் தப்பா நெனெச்சுக்காதீங்க.... பச்ச தண்ணி...வெந்நிதண்ணி எதுவேணுமுனாலும் குடிப்பேன் என்று சொல்ல வந்தேன்.)

ஆனால் எல்லோரும் அவசியம் குளிக்கனும் அப்புறம் குடிக்கனும் (நல்ல தண்ணியைதான் சொன்னென்

роУро╡ро┐ропройрпН
12-10-2007, 07:23 AM
எழைகளின் வைத்தியன் வெந்நீர்....
பகிர்ந்து கொண்ட பயன் தரு தகவல்களுக்கு நன்றிகள் அண்ணா...

யாருக்காவது வெந்நீர் வைப்பது எப்படினு சந்தேகம் வந்தால் இந்த திரியை நாடலாம்.:D:D:D

வெந்நீத் தண்ணி வைக்கிறது எப்பிடி? (http://tamilmantram.com/vb/showthread.php?t=7281) :D:D:D

рооро╛родро╡ро░рпН
20-10-2007, 02:27 AM
சுடுத்தண்ணீர் கூட சுகம் தரும்