PDA

View Full Version : வழி தேடி விழி வைத்து



இனியவள்
08-10-2007, 06:52 PM
முத்தாப்பாய் ஓர்
சிரிப்பு மூங்கில்களோடு
கதை பேசிடும் தென்றல்
காற்றாய்...

நிலவோடு கதை பேசிடும்
வானமாய் - கண்களோடு
கலந்திட்ட காட்சியாய்
உணர்வோடு கலந்திட்ட
உயிர்த் துடிப்பாய் உன்
நினைவுகள்.....

கண்ணீர் கூட காய்ந்திடும்
காலம் உண்டாம் வரண்டு
போய்விட்ட நிலமாய்...

காலத்தால் அழியாத காவியமாம்
நாம் பழகிய வசந்த காலம்...

கண்ணீரால் வரையப்பட்ட
ஓவியமாம் நம் காதல்...

திரிக்க திரிக்க கயிறாகிடும்
சணலாய் மறக்க மறக்க
கூடுகின்றது வலி கொண்டு
உயிர் வாங்கிடும் உன்
நினைவுகள்...

நினைத்திட பல வழிகள்
உண்டு என் இதயத்தினிலே
மறந்திட வழிகள் இன்றி
வழிதேடி விழி வைத்துக்
காத்திருக்கிறேன்....

ஓவியன்
09-10-2007, 03:22 AM
வழி தேடி விழி வைத்திருக்கும்
உண்மைக் காதல் என்றும்
வழி மாறாக் காவியக் காதலே...

பாராட்டுக்கள் இனியவள்...

ஜெயாஸ்தா
09-10-2007, 03:29 AM
காதலால் ரணமான இதய வலியை எத்தனை கவிதைகள் எழுதினாலும் ஆற்றமுடியாது. தொடருங்கள் இனியவள்..!