sadagopan
08-10-2007, 07:57 AM
உன் விழிப்பார்வை என்மீது
பட வைத்த நம் கல்லூரிப்
பருவ நாட்கள்
என்னை எனக்கே
உணரவைத்த
போதிமரக் காலங்கள்!
தாயை இழந்தவன்
தந்தையைப் பிரிந்தவன்
உன் வரவால்
நட்புறவால்
தனிமை மறந்தேன்
நட்பின் அருமை உணர்ந்தேன்!
என்னை எனக்கே காட்டியவள்
உன்னிலும் நானே
உறைந்திருப்பதாய்
ஏன் சொன்னாய்?
கொஞ்சும் மொழியில்லை
கோவில் சேர்ந்து
போனதில்லை
பஞ்சனைய உன் கேசம்
என் விரல்
பரவிப் படர்ந்ததில்லை!
இத்தனையும் செய்யாமல்
வந்த பக்குவமும்
சொல்லாமல்
ஒரு காதல்!
ஏன்?
எதற்கு?
எப்படி?
"புரியவில்லை" என்றேன்!
"வேலையொன்று தேடிக்கொள்!
கல்லூரியின்
கடைசி நாள்
புரியும்" என்றாய்!
மாமலையும் ஓர் கடுகாய்
முயற்சி!
மாணவக் கூடு
கிழிந்த நாளில்
புரியாதவற்றைப்
புரியச் சொல்லும்
ஆசிரியனானேன்!
அரசுப்பணி!
காதலைப்
புரிய வைக்க
நீ வருவாய்
என்றிருந்தேன்!
புரிந்துவிட்டால்
பூமி சுழலும்
சூட்சுமம்
புரிந்துவிடும்
என்றுதான்
காலச்சுழலில்
கட்டாயக்
கல்யாணச் சுனாமியில்
கண்ணீரும்
கம்பலையுமாய்
காணாமல் போனாயோ?
காதல்!
நீ புரிந்த
தவறா?
நான் புரியா
தவறா?
பட வைத்த நம் கல்லூரிப்
பருவ நாட்கள்
என்னை எனக்கே
உணரவைத்த
போதிமரக் காலங்கள்!
தாயை இழந்தவன்
தந்தையைப் பிரிந்தவன்
உன் வரவால்
நட்புறவால்
தனிமை மறந்தேன்
நட்பின் அருமை உணர்ந்தேன்!
என்னை எனக்கே காட்டியவள்
உன்னிலும் நானே
உறைந்திருப்பதாய்
ஏன் சொன்னாய்?
கொஞ்சும் மொழியில்லை
கோவில் சேர்ந்து
போனதில்லை
பஞ்சனைய உன் கேசம்
என் விரல்
பரவிப் படர்ந்ததில்லை!
இத்தனையும் செய்யாமல்
வந்த பக்குவமும்
சொல்லாமல்
ஒரு காதல்!
ஏன்?
எதற்கு?
எப்படி?
"புரியவில்லை" என்றேன்!
"வேலையொன்று தேடிக்கொள்!
கல்லூரியின்
கடைசி நாள்
புரியும்" என்றாய்!
மாமலையும் ஓர் கடுகாய்
முயற்சி!
மாணவக் கூடு
கிழிந்த நாளில்
புரியாதவற்றைப்
புரியச் சொல்லும்
ஆசிரியனானேன்!
அரசுப்பணி!
காதலைப்
புரிய வைக்க
நீ வருவாய்
என்றிருந்தேன்!
புரிந்துவிட்டால்
பூமி சுழலும்
சூட்சுமம்
புரிந்துவிடும்
என்றுதான்
காலச்சுழலில்
கட்டாயக்
கல்யாணச் சுனாமியில்
கண்ணீரும்
கம்பலையுமாய்
காணாமல் போனாயோ?
காதல்!
நீ புரிந்த
தவறா?
நான் புரியா
தவறா?