PDA

View Full Version : சிந்தித்துப் பார்



இனியவள்
06-10-2007, 06:56 PM
அடிக்கும் காற்றில்
திக்குத் தெரியாமல்
பறக்கும் நேற்றைய
இலை இன்றைய
சருகு போல் நேற்றைய
இன்பத்தில் திக்குமூக்காடி
தான்தோன்றித் தனமாய்
திரிந்து இன்றைய உன்
நிலையை நினைத்து
கண்ணீர் விடுகின்றாயே
சிந்தித்துப் பார் நேற்றைய
உன் அகங்காரத்தில் ஆடிப்
போனது உன்னுடைய இன்றைய
வாழ்வு மட்டுமல்ல உன் எதிர்கால
சந்ததியினரின் பொன்னான வாழ்வுமே...

நடந்த பின் நினைப்பதை விட
சிந்தித்து நடப்பதே உன் வாழ்வை
என்று ஏற்றம் காண வைக்கும்

ஜெயாஸ்தா
07-10-2007, 01:43 AM
மனச்செருக்கு கொண்டு ஆடாத ஆட்டம் ஆடினால் வாழக்கை சருகைப்போலாகும். நல்லக கருத்து இனியவள். வார்த்தைப் பிரயோகத்தில் இன்னும் கவனம் செலுத்துங்கள். கவிதை இதை விட அருமையாக வரும்.