View Full Version : இதயம் யாசிக்கிறது
இனியவள்
06-10-2007, 06:12 PM
நிலவாய் சுற்றிச் சுற்றி
வந்தேன் உன்னை - பூமியாய்
காட்சியளித்தாய் நீ....
தண்ணீரின்றி வாடிடும் மலராய்
உன் பார்வையின்றி வாடித்தான்
போனேன் பல நாளாய்...
சூரியனின்றி தலை குனிந்திடும்
மலராய் உன் காட்சியின்றி
தனித்துத் தான் போனேன்
தனிமையில்....
காகிதத்தில் கண்ணீரால்
வடித்திட்டேன் கவிதைகள்
பல நினைவின் துணை
கொண்டு...
காதலின் அழகிய பரிசு
கற்பனையாம் - காகிதங்களின்
தவம் பேனை வரையும்
கவிதைகளாம்..
நிழலுக்கு உயிர் கொடுத்திட
உயிரற்றதாய் போய் விட்டது
நிஜங்களும் உயிரற்ற ஓவியமாய்...
வலியென நினைத்து உன்
நினைவுகளை மூளை களைத்திட
அதனை உயிரென நினைத்து
இதயம் யாசிக்கிறது....
உன் இதயத்தின் யாசிப்பு வீண்போகாது, நிச்சயம் பார்வை உன்பக்கம் வரும், அதுவரை காத்திரு.
கவிதை வரிகள் அழகாக இருக்கின்றன். எப்படித்தான் நிங்களெல்லாம் இப்படி அழகாக எழுதுகிறீர்களோ, நமக்கு சுட்டு போட்டாலும் இப்படி எழுத வரமாட்டேன் என்கிறது, என்ன செய்வது, நமக்கு அவ்வளவுதான்.
ஓவியன்
06-10-2007, 06:35 PM
காதலின் பரிசு - கற்பனை
கற்பனையின் பரிசு....???
சிலருக்கு கானல் நீர், சிலருக்கு கானாமிர்தம்...
காதலோ, கானாமிர்தமோ எல்லாவற்றுக்கும் அடித்தளமே காதல் தானே...
இனியவளின் அழகிய வரிகளுக்கும் கூட....
அன்பான இனியவள்!
கொஞ்சம் வித்தியாசமான கவிதைக் கருக்களிலும் பயணியுங்களேன்.....!!
இனியவள்
06-10-2007, 06:37 PM
அன்பான இனியவள்!
கொஞ்சம் வித்தியாசமான கவிதைக் கருக்களிலும் பயணியுங்களேன்.....!!
ஓவியரே என்ன செய்வது
வித்தியாசததை நினைத்து
நான் கரு நினைத்திட
வடித்திடும் கவிகள் அனைத்தும்
இவ்வாறு உருமாற்றம் பெருகிறது :traurig001::traurig001::traurig001:
இனியவள்
06-10-2007, 06:38 PM
உன் இதயத்தின் யாசிப்பு வீண்போகாது, நிச்சயம் பார்வை உன்பக்கம் வரும், அதுவரை காத்திரு.
கவிதை வரிகள் அழகாக இருக்கின்றன். எப்படித்தான் நிங்களெல்லாம் இப்படி அழகாக எழுதுகிறீர்களோ, நமக்கு சுட்டு போட்டாலும் இப்படி எழுத வரமாட்டேன் என்கிறது, என்ன செய்வது, நமக்கு அவ்வளவுதான்.
நன்றி ஆரென் அண்ணா..
அண்ணா இப்படி எல்லாம் பொய் சொல்லக் கூடாது
உங்களின் கவி வரிகள் அழகு அண்ணா
உங்களிடம் இருந்து நான் கற்றுக் கொள்கின்றேன்
இப்பொழுது எல்லாம்
தென்னவன்
06-10-2007, 06:40 PM
காகிதத்தில் கண்ணீரால்
வடித்திட்டேன் கவிதைகள்
பல நினைவின் துணை
கொண்டு...:confused::confused:
என்னமோ போங்க தோழி எனக்கு மட்டும் நினைவே இருக்கமாட்டேங்குது!!!! ஹி ஹி
அருமையான வரிகள் இனியவளே!!!:lachen001::lachen001:
அமரன்
06-10-2007, 07:56 PM
காதல் காத்திருத்தல் கானல் கானாமிர்தம் எல்லாம் தாண்டி எனக்குத் தெரிவது...
உலகத்தில் உள்ள அனைத்து கற்பனைகளிலும் எமது பெயரை எழுத விழையலாம்.
ஆனால் கற்பனையில் எமது பெயரை நிலைக்க விடக்கூடாது...
தொடருங்கள் இனியவள்.
இனியவள்
07-10-2007, 01:54 PM
:confused::confused:
என்னமோ போங்க தோழி எனக்கு மட்டும் நினைவே இருக்கமாட்டேங்குது!!!! ஹி ஹி
அருமையான வரிகள் இனியவளே!!!:lachen001::lachen001:
நன்றி தென்னவன்
இனியவள்
07-10-2007, 01:56 PM
காதல் காத்திருத்தல் கானல் கானாமிர்தம் எல்லாம் தாண்டி எனக்குத் தெரிவது...
உலகத்தில் உள்ள அனைத்து கற்பனைகளிலும் எமது பெயரை எழுத விழையலாம்.
ஆனால் கற்பனையில் எமது பெயரை நிலைக்க விடக்கூடாது...
தொடருங்கள் இனியவள்.
நன்றி அமர்
ஜெயாஸ்தா
07-10-2007, 05:08 PM
வலியென நினைத்து உன்
நினைவுகளை மூளை களைத்திட
அதனை உயிரென நினைத்து
இதயம் யாசிக்கிறது....
கவிதையின் இந்த வரிகள் கவிதைக்கே முத்தாய்ப்பாய் அமைகிறது. நிறைவான இந்த வரிகள் கவிதையை ரசிக்கச் செய்கிறது.