அமரன்
06-10-2007, 08:41 AM
திரிகோணம்...02 (http://tamilmantram.com/vb/showthread.php?t=12683)
அமாவாசை இரவு. குளத்தில் குதூகலிக்கும் தவளைகளில் கொடூர சங்கீதம் காதை கிழிக்கவில்லை. பக்கத்தில் இருந்த பூவனத்து வண்டுகளின் ரீங்கார கானம் காதில் கேட்கவில்லை. ஏன்... ஓட்டமும் நடையுமாக அசையும் கைக்கடிகார முட்கள்கூட டிக் டிக் நிசப்தத்தை கடைப்பிடித்தன. சடைத்து வளர்ந்திருந்த வேப்பமரத்தில் பறவைகளின் அசுமாத்தம் ஏதும் செவிகளில் விழவில்லை. ஆனாலும் தனிமையை உணராத உணர்வுடன் குளத்துக்கரையில் என்னை மறந்து அமர்ந்திருந்தேன். அப்போது சின்னப்பறவை ஒன்று மூக்கு நுனியை உரசிப்பறந்து சென்று திடுக்கிடவைத்தது. திடுக்கிட்ட அதே கணத்தில் தோளில் ஒரு கை அழுத்தமாக பிடித்தது.
திரும்பினேன்... இருட்டை துடைத்துக்கொண்டிருந்த மின்னொளியில் அம்மா நிற்பது துலக்கமாக தெரிந்தது. என்ன என்பது போலப் பார்த்தேன். அவள் வாயசைந்தது. ஒலிக்குறிப்பு கேட்கவில்லை. சலங்கை ஒலி திரைப்படத்தின் 'மௌனமான நேரம்' எனும் பாடலை உயர் செறிவாக என் காதுக்குள் நழைத்துக்கொண்டிருந்த 'வோக்மன்'னை அணைத்தேன்.
"சாமி வீதி உலா வர தொடங்கிட்டிது. வந்து பூ போட்டு, நல்ல புத்தியைக் கொடுன்னு வேண்டிக்கோ" அம்மா சொன்னாள்.
ஆம்.. இன்று எமது ஊர்கோவில் திருவிழா. அதற்கு வந்தவந்தான் கோயிலின் உள்ளே போக பிடிக்காமல் பண்பலையில் கலந்து வரும் பாட்டுகளின் துணையுடன் குளக்கரையில் ஒதுங்கி இருந்தேன். வீட்டிலிருந்து புறப்படும்போதே இதற்கு இணங்கிய அம்மாவும் தடுக்கவில்லை. அம்மாவின் விருப்பத்திற்கு இசைந்து வெளியே வந்த சாமியை தரிசிக்க போனேன். கையில் அம்மா தந்த மலர்கள் சில இரவிலும் மகிழ்வுடன்.
எட்டுப்பேர் கட்டைகளை தாங்கி இருங்க, என் தலை இருந்த உயரத்தில் அம்மனின் பாதம். சனசமுத்திரத்தில் நீந்தி, அம்மனுக்கு கிட்டப்போவது மெத்தக்கடினமாக இருந்தது. கொஞ்சம் எட்ட இருந்தே கீழே இருந்து வானுக்கு பூ சாரல் தூவினேன். அப்போது பார்த்து கொஞ்சம் பலமாக அடித்த காற்று தூவிய பூக்களை திசைமாற்றியது. அம்மனுக்கு பக்கத்திலிருந்த அவள் மீது பூக்களை சொரிந்தது. அவளும் அம்மனின் பிரதியாக ஆனால் இயற்கையில் ஜொலித்தாள். ஒருவேளை அம்மந்தான் தனக்கு செய்யும் கிரியைகளை காண மனித உருவில் வந்துள்ளாளோ என ஒருகணம் எண்ணத்தோன்றியது. மறுகணம் எனது மடைத்தனதை நினைத்து சிரித்துக்கொண்டேன். சிரித்தபோது சின்னதாகிய கண்ணில் பூ போட்ட புண்ணியவானை அவள் தேடாமலே இனக்கண்டுகொண்டது புலப்பட்டது.
"அடப்பாவி ஏன்டா சிரிச்சே.. இப்ப பாரு நீதான் செய்தே என்று இலகுவாக அறிந்துகொண்டாளே" என்று என்னை நானே திட்டிக்கொண்டேன். அப்போது அவள் கண்களில் தெரிந்த உணர்ச்சியை என்னால் உய்த்தறிய முடியவில்லை.. அதற்குள் சாமி நகரத்தொடங்க என்னை விட்டு நீங்கிய சனவானதிரளில் அவளும் சேர்ந்துகொண்டாள்..
ஒற்றையில் நின்ற எனக்குள் கற்றையாக போராட்ட அலைகள். யாரவள்? இதற்கு முன் அவளை பார்த்ததில்லையே? சிந்தித்தபோது 'ஆமா எப்பதான் நீ பொண்ணுகளை பார்த்திருக்கே. பொண்ணுகள் உன்னை பார்த்திருக்கு. மீறி பார்த்த பொண்ணுகளை சும்மா விட்டிருக்கியா.' என் மனச்சாட்சி எகத்தாளமாக உரைத்தது.. அப்போதுதான் என்னையே நான் எடைபோட்டேன்.
சின்ன வயசிலிருந்தே சுட்டித்தனத்தின் அதிபதி நான். வளர்ந்து பள்ளிப்படிப்பு முடித்து கல்லூரிக்கு போகும்போது சுட்டித்தனம் வெட்டிச்செல்ல ரவுடியிசம் என்னை ஒட்டு மொத்தமாக குத்தகைக்கு எடுத்துக்கொண்டது. ரவுடியிசம் என்றால் வெட்டு குத்து இல்லை. பொண்ணுங்களுக்கு மட்டும் நான் கெட்டவன். பொண்ணுகளைக் கண்டால் எனக்கு பிடிக்காது. ஏன்னு இது வரை தெரியாது. பொண்ணுங்க கூட யாராச்சும் சிரிச்சுப் பேசினால் அவங்களையும் பிடிக்காது. அதனால எனது நட்பு வட்டம் ரொம்பச் சின்னதாக இருந்தது. பொண்ணுங்களுக்கு நான் கொடுக்கும் உளவியல் சேட்டைகள் ஊர் பிரசித்தம். என்னை பற்றி வீட்டுக்கு வரும் புகார்கள் அதிகம் என்றாலும் என்னை ஏதும் கேட்பதில்லை. காரணம் என்மேல உள்ள பாசமில்லை..கேட்டால் புகார் செய்த பொண்ணுக்கு டாச்சர் இன்னும் அதிகரிக்கும் என்பதுதான் காரணம். ரொம்ப நல்லவங்கல்ல எனது குடும்பத்தார்.பொண்ணுகளும் என்னைவிட்டு ஒதுங்கியே இருந்தாங்க. அதனால ஊரில் உள்ள பல பெண்களை எனக்குத் தெரியாது. அவங்களுக்கு என்னை நல்லாக தெரியும் என்பதை சொல்ல வேண்டுமா என்ன? நல்லவனை விட கெட்டவனைத்தானே அதிகம் தெரிஞ்சு வைச்சுங்கிறாங்க.. தப்பா நினைக்காதீங்க அவங்க பாதுகாப்புக்கு அது அவசியமாகிறது.
அப்படி எனக்குத் தெரியாத ஒரு பெண்ணாக இவள் இருக்கலாம் என்று முடிவு செய்தேன். ஆனாலும் அவள் முடிக்க விடுவதாக இல்லை. பெண்களைக் காணும்போது வழக்கமாக ஏற்படும் உணர்வு இப்போ தூரமாகிய உணர்வு. அதன்பின் கோயிலில் அவளை பார்க்கவில்லை.
வீட்டுக்கு வந்து தூக்கத்தை துணைக்கழைத்தால் என்னைப் பற்றி தப்பாக நினைத்திருப்பாளோ என்ற நினைப்பு தூக்கத்திற்கும் எனக்கும் இடையில் தடுப்பு சுவராது. தப்பாக நினைத்தால் நினைத்து விட்டுப் போகட்டுமே என்பது ஒரு முனையிலும் தப்பாக நினைத்து விட்டாளே என்பது எதிர்முனையிலுமாக நின்று குருசேத்திரம் விஞ்சிய போரை நிகழ்த்திக்கொண்டிருந்தன.. வழக்கம்போலவே எப்படி, எப்போ தூங்கினேன் என்பது தெரியாமலே தூங்கிப்போனேன்..
காலையில் வழக்கம்போலவே நேர காலத்திற்கு தயாராகி தெருமுனை டீக்கடையில் டீயும் சிகரட்டுமாக கல்லூரி நண்பர்கள் சிலருடன் அரட்டையின் இருந்தேன்.
"என்னதான் வீட்டில டீ குடித்தாலும் இந்த இன்பம் கிடைக்காதுடா" நண்பன் ஒருவன் சொன்னான். "ஆமாடா ஓசில டீயும், சைடிஸாக சிகரட்டும் தந்த இதுவும் சொல்லுவே இதுக்கு மேலயும் சொல்லுவே" இன்னொருவன் வார சிரிப்பலை மிதந்தது. "என்னம்மா என்ன வேணும்" என்ற கடை முதலாளியின் குரலில் நிமிர்ந்த என் பார்வையில் அவள் பட்டாள்.
இரவு கோயிலில் பூத்த அதே பூ. சிகரட் பிடித்திருந்த எனது கை தன்னிச்சையாக மறைந்தது. நட்பு வட்டாரம் வியப்பில் விழி விரிப்பது ஓரவிழியில் தெரிந்தது. தேவையான பேஸ்டை வாங்கி விட்டு வீட்டை நோக்கி சில அடிகள் வைத்தவள் மீண்டு வந்தாள். என்னருகில் நின்றாள். பூப்பூக்கும் ஓசை மனிதனுக்கு கேட்பதில்லை என்பது பொய்த்தது.
"உங்க கூட அம்மா பேச வேண்டுமாம். கொஞ்சம் வீட்டுக்கு வர்ரீங்களா" என்றாள்.
பெண்கள் கிட்ட வந்தாலே கொந்தளிக்கும் கடலாகும் நான் அமைதியாக இருந்ததால் சினேக அலைகளும் அமைதி காத்தன.
"மாலையில் வருகிறேன்". சொன்னதும் சென்றுவிட்டாள்.
நட்புகள் வியூகமிட்டன.
"மச்சான்..என்னடா இது..நீயா பேசினே..வைரஸ் புகுந்த சிஸ்டம் மாதிரி இருக்கோம்டா" எல்லோரும் ஒரே மாதிரி தாக்கினார்கள்.
"அப்புறம் பேசிக்கொள்வோம்டா...காலேஜுக்கு நேரமாச்சு வாங்க போவோம்" அப்போதைக்கு அவர்கள் போதைக்கு எலுமிச்சை தேய்த்தேன்..கடைக்காரரை நெருங்கினேன். யார் என்று சொல்லுங்க என்று நெருக்கினேன்.
"ஊருக்கு புதுசா வந்திருக்காங்க. ஐயர் குடும்பம். அப்பா இல்லை. அம்மாவும் இவளும் மட்டும்தான். கோயிலுக்கு கிழக்காலே வீடு." நிறுத்தினார்..பார்த்த பார்வையின் அர்த்தம் அறிந்து "பேரு கலா" என்றார்.. நான் வாங்கடா போகலாம் என்றேன்...
நரேன் உன்னைப் பற்றி தெரியாம சொல்லி இருப்பா மனசுல வைச்சுக்காதேப்பா டீக்கடை சொன்னது..சிரித்து விட்டுசென்றோம் கல்லூரிக்கு...
தொடரும்...
அமாவாசை இரவு. குளத்தில் குதூகலிக்கும் தவளைகளில் கொடூர சங்கீதம் காதை கிழிக்கவில்லை. பக்கத்தில் இருந்த பூவனத்து வண்டுகளின் ரீங்கார கானம் காதில் கேட்கவில்லை. ஏன்... ஓட்டமும் நடையுமாக அசையும் கைக்கடிகார முட்கள்கூட டிக் டிக் நிசப்தத்தை கடைப்பிடித்தன. சடைத்து வளர்ந்திருந்த வேப்பமரத்தில் பறவைகளின் அசுமாத்தம் ஏதும் செவிகளில் விழவில்லை. ஆனாலும் தனிமையை உணராத உணர்வுடன் குளத்துக்கரையில் என்னை மறந்து அமர்ந்திருந்தேன். அப்போது சின்னப்பறவை ஒன்று மூக்கு நுனியை உரசிப்பறந்து சென்று திடுக்கிடவைத்தது. திடுக்கிட்ட அதே கணத்தில் தோளில் ஒரு கை அழுத்தமாக பிடித்தது.
திரும்பினேன்... இருட்டை துடைத்துக்கொண்டிருந்த மின்னொளியில் அம்மா நிற்பது துலக்கமாக தெரிந்தது. என்ன என்பது போலப் பார்த்தேன். அவள் வாயசைந்தது. ஒலிக்குறிப்பு கேட்கவில்லை. சலங்கை ஒலி திரைப்படத்தின் 'மௌனமான நேரம்' எனும் பாடலை உயர் செறிவாக என் காதுக்குள் நழைத்துக்கொண்டிருந்த 'வோக்மன்'னை அணைத்தேன்.
"சாமி வீதி உலா வர தொடங்கிட்டிது. வந்து பூ போட்டு, நல்ல புத்தியைக் கொடுன்னு வேண்டிக்கோ" அம்மா சொன்னாள்.
ஆம்.. இன்று எமது ஊர்கோவில் திருவிழா. அதற்கு வந்தவந்தான் கோயிலின் உள்ளே போக பிடிக்காமல் பண்பலையில் கலந்து வரும் பாட்டுகளின் துணையுடன் குளக்கரையில் ஒதுங்கி இருந்தேன். வீட்டிலிருந்து புறப்படும்போதே இதற்கு இணங்கிய அம்மாவும் தடுக்கவில்லை. அம்மாவின் விருப்பத்திற்கு இசைந்து வெளியே வந்த சாமியை தரிசிக்க போனேன். கையில் அம்மா தந்த மலர்கள் சில இரவிலும் மகிழ்வுடன்.
எட்டுப்பேர் கட்டைகளை தாங்கி இருங்க, என் தலை இருந்த உயரத்தில் அம்மனின் பாதம். சனசமுத்திரத்தில் நீந்தி, அம்மனுக்கு கிட்டப்போவது மெத்தக்கடினமாக இருந்தது. கொஞ்சம் எட்ட இருந்தே கீழே இருந்து வானுக்கு பூ சாரல் தூவினேன். அப்போது பார்த்து கொஞ்சம் பலமாக அடித்த காற்று தூவிய பூக்களை திசைமாற்றியது. அம்மனுக்கு பக்கத்திலிருந்த அவள் மீது பூக்களை சொரிந்தது. அவளும் அம்மனின் பிரதியாக ஆனால் இயற்கையில் ஜொலித்தாள். ஒருவேளை அம்மந்தான் தனக்கு செய்யும் கிரியைகளை காண மனித உருவில் வந்துள்ளாளோ என ஒருகணம் எண்ணத்தோன்றியது. மறுகணம் எனது மடைத்தனதை நினைத்து சிரித்துக்கொண்டேன். சிரித்தபோது சின்னதாகிய கண்ணில் பூ போட்ட புண்ணியவானை அவள் தேடாமலே இனக்கண்டுகொண்டது புலப்பட்டது.
"அடப்பாவி ஏன்டா சிரிச்சே.. இப்ப பாரு நீதான் செய்தே என்று இலகுவாக அறிந்துகொண்டாளே" என்று என்னை நானே திட்டிக்கொண்டேன். அப்போது அவள் கண்களில் தெரிந்த உணர்ச்சியை என்னால் உய்த்தறிய முடியவில்லை.. அதற்குள் சாமி நகரத்தொடங்க என்னை விட்டு நீங்கிய சனவானதிரளில் அவளும் சேர்ந்துகொண்டாள்..
ஒற்றையில் நின்ற எனக்குள் கற்றையாக போராட்ட அலைகள். யாரவள்? இதற்கு முன் அவளை பார்த்ததில்லையே? சிந்தித்தபோது 'ஆமா எப்பதான் நீ பொண்ணுகளை பார்த்திருக்கே. பொண்ணுகள் உன்னை பார்த்திருக்கு. மீறி பார்த்த பொண்ணுகளை சும்மா விட்டிருக்கியா.' என் மனச்சாட்சி எகத்தாளமாக உரைத்தது.. அப்போதுதான் என்னையே நான் எடைபோட்டேன்.
சின்ன வயசிலிருந்தே சுட்டித்தனத்தின் அதிபதி நான். வளர்ந்து பள்ளிப்படிப்பு முடித்து கல்லூரிக்கு போகும்போது சுட்டித்தனம் வெட்டிச்செல்ல ரவுடியிசம் என்னை ஒட்டு மொத்தமாக குத்தகைக்கு எடுத்துக்கொண்டது. ரவுடியிசம் என்றால் வெட்டு குத்து இல்லை. பொண்ணுங்களுக்கு மட்டும் நான் கெட்டவன். பொண்ணுகளைக் கண்டால் எனக்கு பிடிக்காது. ஏன்னு இது வரை தெரியாது. பொண்ணுங்க கூட யாராச்சும் சிரிச்சுப் பேசினால் அவங்களையும் பிடிக்காது. அதனால எனது நட்பு வட்டம் ரொம்பச் சின்னதாக இருந்தது. பொண்ணுங்களுக்கு நான் கொடுக்கும் உளவியல் சேட்டைகள் ஊர் பிரசித்தம். என்னை பற்றி வீட்டுக்கு வரும் புகார்கள் அதிகம் என்றாலும் என்னை ஏதும் கேட்பதில்லை. காரணம் என்மேல உள்ள பாசமில்லை..கேட்டால் புகார் செய்த பொண்ணுக்கு டாச்சர் இன்னும் அதிகரிக்கும் என்பதுதான் காரணம். ரொம்ப நல்லவங்கல்ல எனது குடும்பத்தார்.பொண்ணுகளும் என்னைவிட்டு ஒதுங்கியே இருந்தாங்க. அதனால ஊரில் உள்ள பல பெண்களை எனக்குத் தெரியாது. அவங்களுக்கு என்னை நல்லாக தெரியும் என்பதை சொல்ல வேண்டுமா என்ன? நல்லவனை விட கெட்டவனைத்தானே அதிகம் தெரிஞ்சு வைச்சுங்கிறாங்க.. தப்பா நினைக்காதீங்க அவங்க பாதுகாப்புக்கு அது அவசியமாகிறது.
அப்படி எனக்குத் தெரியாத ஒரு பெண்ணாக இவள் இருக்கலாம் என்று முடிவு செய்தேன். ஆனாலும் அவள் முடிக்க விடுவதாக இல்லை. பெண்களைக் காணும்போது வழக்கமாக ஏற்படும் உணர்வு இப்போ தூரமாகிய உணர்வு. அதன்பின் கோயிலில் அவளை பார்க்கவில்லை.
வீட்டுக்கு வந்து தூக்கத்தை துணைக்கழைத்தால் என்னைப் பற்றி தப்பாக நினைத்திருப்பாளோ என்ற நினைப்பு தூக்கத்திற்கும் எனக்கும் இடையில் தடுப்பு சுவராது. தப்பாக நினைத்தால் நினைத்து விட்டுப் போகட்டுமே என்பது ஒரு முனையிலும் தப்பாக நினைத்து விட்டாளே என்பது எதிர்முனையிலுமாக நின்று குருசேத்திரம் விஞ்சிய போரை நிகழ்த்திக்கொண்டிருந்தன.. வழக்கம்போலவே எப்படி, எப்போ தூங்கினேன் என்பது தெரியாமலே தூங்கிப்போனேன்..
காலையில் வழக்கம்போலவே நேர காலத்திற்கு தயாராகி தெருமுனை டீக்கடையில் டீயும் சிகரட்டுமாக கல்லூரி நண்பர்கள் சிலருடன் அரட்டையின் இருந்தேன்.
"என்னதான் வீட்டில டீ குடித்தாலும் இந்த இன்பம் கிடைக்காதுடா" நண்பன் ஒருவன் சொன்னான். "ஆமாடா ஓசில டீயும், சைடிஸாக சிகரட்டும் தந்த இதுவும் சொல்லுவே இதுக்கு மேலயும் சொல்லுவே" இன்னொருவன் வார சிரிப்பலை மிதந்தது. "என்னம்மா என்ன வேணும்" என்ற கடை முதலாளியின் குரலில் நிமிர்ந்த என் பார்வையில் அவள் பட்டாள்.
இரவு கோயிலில் பூத்த அதே பூ. சிகரட் பிடித்திருந்த எனது கை தன்னிச்சையாக மறைந்தது. நட்பு வட்டாரம் வியப்பில் விழி விரிப்பது ஓரவிழியில் தெரிந்தது. தேவையான பேஸ்டை வாங்கி விட்டு வீட்டை நோக்கி சில அடிகள் வைத்தவள் மீண்டு வந்தாள். என்னருகில் நின்றாள். பூப்பூக்கும் ஓசை மனிதனுக்கு கேட்பதில்லை என்பது பொய்த்தது.
"உங்க கூட அம்மா பேச வேண்டுமாம். கொஞ்சம் வீட்டுக்கு வர்ரீங்களா" என்றாள்.
பெண்கள் கிட்ட வந்தாலே கொந்தளிக்கும் கடலாகும் நான் அமைதியாக இருந்ததால் சினேக அலைகளும் அமைதி காத்தன.
"மாலையில் வருகிறேன்". சொன்னதும் சென்றுவிட்டாள்.
நட்புகள் வியூகமிட்டன.
"மச்சான்..என்னடா இது..நீயா பேசினே..வைரஸ் புகுந்த சிஸ்டம் மாதிரி இருக்கோம்டா" எல்லோரும் ஒரே மாதிரி தாக்கினார்கள்.
"அப்புறம் பேசிக்கொள்வோம்டா...காலேஜுக்கு நேரமாச்சு வாங்க போவோம்" அப்போதைக்கு அவர்கள் போதைக்கு எலுமிச்சை தேய்த்தேன்..கடைக்காரரை நெருங்கினேன். யார் என்று சொல்லுங்க என்று நெருக்கினேன்.
"ஊருக்கு புதுசா வந்திருக்காங்க. ஐயர் குடும்பம். அப்பா இல்லை. அம்மாவும் இவளும் மட்டும்தான். கோயிலுக்கு கிழக்காலே வீடு." நிறுத்தினார்..பார்த்த பார்வையின் அர்த்தம் அறிந்து "பேரு கலா" என்றார்.. நான் வாங்கடா போகலாம் என்றேன்...
நரேன் உன்னைப் பற்றி தெரியாம சொல்லி இருப்பா மனசுல வைச்சுக்காதேப்பா டீக்கடை சொன்னது..சிரித்து விட்டுசென்றோம் கல்லூரிக்கு...
தொடரும்...