PDA

View Full Version : கவிஞர்கள் பற்றாக்குறை!



sadagopan
04-10-2007, 08:00 AM
கன்னியரே!
கவிஞர்கள் உருவாகவேண்டும்
அதற்காகவாவது
காதலை மறுத்துவிடுங்கள்!
**************


உள்ளிழுத்து
வெளிவிடும் மூச்சுக்காற்று
கார்பன்- டை- ஆக்ஸைடாம்
யார் சொன்னது?

பிறகெப்படி நான்...
இத்தனை நாள் உயிரோடு!?

சிவா.ஜி
04-10-2007, 08:14 AM
காதல் கிடைத்தாலும் கவிதை,காதல் மறுக்கப்பட்டாலும் கவிதை.இங்கு காதலை மறுக்கச்சொல்லி கவிஞர்களை உருவாக்க நினைக்கிறார் சடகோபன்.
இரண்டாவதை நான் புரிந்துகொண்ட வரையில் காதலியின் வெளிவிடும் மூச்சுத்தான் இந்த காதலனுக்கு உள்ளிழுக்கும் மூச்சாக இருக்கிறது.அப்போது அந்த மூச்சு இவனுக்கு உயிர்மூச்சு.வாழ்த்துக்கள் சடகோபன்.

அமரன்
04-10-2007, 01:30 PM
வெற்றி தோல்வி
சமத்துவ தத்துவம்
காதல் கவிதைகள்..

தொடருங்கள் சடகோபன்.

சுகந்தப்ரீதன்
04-10-2007, 01:32 PM
மறுப்பதால் உருவாவ்து முகாரி ராகம் நண்பா.. ஏற்பதால் உருவாவது காதல்கீதம் நண்பா... ஆகையால் கவிஞர்களுக்கு எப்போதும் பற்றாகுறை நேராது காதலி ஏற்றாலும் மறுத்தாலும்..! வாழ்த்துக்கள் நண்பரே..!

Narathar
04-10-2007, 01:38 PM
சடகோபன் காதலை மறுத்தவளுக்கு நன்றி.......
இல்லை என்றால் மன்றத்துக்கு ஒரு கவிஞ்சர் கிடைத்திருப்பாரா??