PDA

View Full Version : வரை



இனியவள்
03-10-2007, 02:14 PM
கனவுகளின் ஆயுள்
உன்னைக் காணும் வரை
பாசத்தின் ஆயுள்
உயிர் உடலை பிரியும் வரை.

இதழை அழகாய் தத்தெடுத்த
புன்னைகையின் வசீகரம் - நீ
என் அருகில் இருக்கும் வரை..

வானத்தில் மின்னும் நட்சத்திரமாய்
மின்னுகின்றன - காதல்
பரிசளித்துச் சென்ற நினைவுகள்
இரவு நேரக் கவிதையாய்...

இனிமைகளின் இன்பம்
உன் நினைவுகள் - இதயத்தை
ஆக்கிரமிக்கும் வரை...

ஓவியன்
05-10-2007, 11:48 AM
வரை என்ற சொல் எவ்வளவு அர்த்தம் பொதிந்தது இனியவள், வரைதல் என்ற பொருள் தரும் அதேவேளை எல்லை என்ற பொருளும் தரும்...

அத்துடன் உங்கள் கவி சொல்லும் அதுவரை, இதுவரை இப்படிப் பற்பல வரைகள்....

உங்கள் கவி சொல்லும் வரைகளும் அழகுதான், பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் இனியவள்!.

aren
05-10-2007, 11:51 AM
கனவுகளின் ஆயுள்
உன்னைக் காணும் வரை
பாசத்தின் ஆயுள்
உயிர் உடலை பிரியும் வரை.

அழகான வரிகள். என்னை மிகவும் கவர்ந்தவரிகள்.
பாரட்டுக்கள். தொடருங்கள்.

அமரன்
16-10-2007, 08:29 AM
கனவுகள்,பாசம்,புன்னகை, நினைவுகள்
நான்கும் இனிமையின் ஊற்றுக்கணகள்.
மாசுகள் கலந்தால் கசக்கும் இவை
என்றுமே அழிவதில்லை.
வரையறை இவைக்கு இல்லை.