PDA

View Full Version : வாய்மையே வெல்லும்!!!



aren
02-10-2007, 04:03 PM
உண்மையே பேசு
என்று எப்பொழுதும் வாதிடும்
தந்தையால் வளர்க்கப்பட்டேன்!!!

தவறு நடந்திருக்கிறது
அதைப் பார்த்து
மனது சும்மா இருக்கமுடியவில்லை!!!

போலீஸிடம்
உண்மையைச் சொன்னேன்
அதுவே எனக்கு வினையாகி
என் மேல் பொய்ப்பழி
இன்று நான் சிறையில்!!!

சிறையதிகாரியின்
தலைக்கு மேல்
வாய்மையே வெல்லும்
பிரேம் போட்டு!!!

அடப்பாவிங்களா
அதையும் சிறைவைத்திட்டங்களே!!!

இனியவள்
02-10-2007, 04:26 PM
ஆரென் அண்ணா

உங்கள் இந்தக் கவிதை
சிந்திக்கவும் வைக்கிறது
சிரிக்கவும் வைக்கிறது
வாழ்த்துக்கள் அண்ணா

அமரன்
02-10-2007, 04:30 PM
வாய்மையே வெல்லும் சிறைக்குள்.. உங்களின் சிந்தனை சக்தியில் பிரமித்தேன்.

இப்படியான சந்தர்ப்பங்களில் குற்றாவாளியாக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகம்.. ஒருவிதத்தில் அரசியலுக்கு அத்திவாரம் இங்கேதான் போடப்படுகிறது.

பாராடுதலுடன்,

இனியவள்
02-10-2007, 04:37 PM
அரசியலுக்கு அத்திவாரம் இங்கேதான் போடப்படுகிறது.


ஏனுங்க அமரு
நீங்கள் எப்ப போடப் போறியள்
அஸ்திவாரம் :icon_rollout:

எஸ்கேப் அமர் அடிக்க வார மாதிரி இருக்கு :D

ஷீ-நிசி
06-10-2007, 01:21 AM
அழகிய சிந்தனை...... நல்ல முன்னேற்றம். கவிதை வரிகளில் தேவை இன்னும் அழகிய கோர்வை.. அதற்கு தேவை நிறைய கவிதைகள் வாசிப்பு..

வாழ்த்துக்கள் ஆரெனாரே!

aren
06-10-2007, 02:49 AM
ஆரென் அண்ணா

உங்கள் இந்தக் கவிதை
சிந்திக்கவும் வைக்கிறது
சிரிக்கவும் வைக்கிறது
வாழ்த்துக்கள் அண்ணா

நன்றி இனியவள். இதை கவிதை என்கிறிர்களா, சந்தோஷம்.

நன்றி வணக்கம்
ஆரென்

aren
06-10-2007, 02:50 AM
வாய்மையே வெல்லும் சிறைக்குள்.. உங்களின் சிந்தனை சக்தியில் பிரமித்தேன்.

இப்படியான சந்தர்ப்பங்களில் குற்றாவாளியாக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகம்.. ஒருவிதத்தில் அரசியலுக்கு அத்திவாரம் இங்கேதான் போடப்படுகிறது.

பாராடுதலுடன்,

நன்றி அமரன். அப்படின்னா, அரசியல்ல இரங்கிடலாம்னு சொல்றீங்களா

aren
06-10-2007, 02:50 AM
ஏனுங்க அமரு
நீங்கள் எப்ப போடப் போறியள்
அஸ்திவாரம் :icon_rollout:

எஸ்கேப் அமர் அடிக்க வார மாதிரி இருக்கு :D


அப்படி கேளுங்க. அமர் அரசியலில் இறங்கியவுடன், நானும் கூடவே இறங்குகிறேன்.

aren
06-10-2007, 02:51 AM
அழகிய சிந்தனை...... நல்ல முன்னேற்றம். கவிதை வரிகளில் தேவை இன்னும் அழகிய கோர்வை.. அதற்கு தேவை நிறைய கவிதைகள் வாசிப்பு..

வாழ்த்துக்கள் ஆரெனாரே!

நன்றி ஷீ.

கரு நன்றாக வருகிறது ஆனால் அதை எழுதும்பொழுதுதான் பிரச்சனையே வருகிறது. என்ன செய்வது, நமக்கு தமிழ்புலமை அவ்வளவுதான். முயற்சி செய்கிறேன்.


நன்றி வணக்கம்
ஆரென்