PDA

View Full Version : துளித்துளியாய்...



சூரியன்
02-10-2007, 02:54 PM
என் ஜீவன் பிரிந்தாலும்
கவலை இல்லை
உன் அன்பிருந்தால்
மரணத்தையும் வென்றுவிடுவேன்.

...................
சில நினைவுகள்
பல உறவுகளை
நினைவு படுத்தும்

எனக்கு
முதலில் வருவது
உன்
அழகு முகம்தான்
....................
நான் நேசிக்கும் பலர்
என்னை மறக்க நினத்தாலும்
என்னை நேசிக்கும் சிலரை
இறக்கும் வரை மறக்கமாட்டேன்.
..............
நீ நெருப்பாக
சுட்டு இருந்தாலும்
என் உள்ளம் உனக்காக
உருகும் மெழுகாக,
..................

மனோஜ்
02-10-2007, 07:44 PM
என் ஜீவன் பிரிந்தாலும்
கவலை இல்லை
உன் அன்பிருந்தால்
மரணத்தையும் வென்றுவிடுவேன்.
அன்பு எதையும் வெல்லும் என்பது சரிதான்
...................


சில நினைவுகள்
பல உறவுகளை
நினைவு படுத்தும்

எனக்கு
முதலில் வருவது
உன்
அழகு முகம்தான்
உள்ளம் கொல்லை கொன்டால் இது தான் நடக்கும்
....................


நான் நேசிக்கும் பலர்
என்னை மறக்க நினத்தாலும்
என்னை நேசிக்கும் சிலரை
இறக்கும் வரை மறக்கமாட்டேன்.
இது முற்றுலும் சிறந்த கருத்து
..............


நீ நெருப்பாக
சுட்டு இருந்தாலும்
என் உள்ளம் உனக்காக
உருகும் மெழுகாக,
பாத்து இல்லாமல் போய் விடபொகிறது


கவிதை மிக மிக அருமை:icon_b:

ஜெயாஸ்தா
04-10-2007, 04:29 AM
நீ நெருப்பாக
சுட்டு இருந்தாலும்
என் உள்ளம் உனக்காக
உருகும் மெழுகாக,
.
நாலு வரின்னாலும் 'நச்'சுன்னு இருக்கு...பாராட்டுக்கள்...!

வசீகரன்
04-10-2007, 05:37 AM
அவள் உங்கள் மனதில் எவ்வளவு நீக்கமற
நிறைந்திருக்கிறாள்... என்று வார்த்தைகளில்
வரைந்திருக்கிறீர்கள் அன்பரே....

சில நினைவுகள்
பல உறவுகளை
நினைவு படுத்தும்

எனக்கு
முதலில் வருவது
உன்
அழகு முகம்தான்

அழகான கவியாக்கம்... சூரியரே....

ஓவியன்
05-10-2007, 09:21 AM
உன் அன்பினால் காலனையும்
வெல்லலாம் தான், ஆனால்
உன் வெறுப்பினால் காலனை
எனக்கு பரிசளிக்கிறாயே.........!!
_________________________________________________________
மறக்கத்தான் நினைக்கிறேன்
உன் நினைவுகளையும்
நம் உறவின் வடுக்களையும்
மறக்க நினைத்தவுடனேயே
நினைக்க வைக்கிறதே
உன் அழகு முகம்.......!!
_________________________________________________________
நீ என்னை மறக்கலாம்
ஆனால்
நான் உனை மறக்கமாட்டேன்
ஏனென்றால்
நான் உனை நேசிக்கிறேனே....
__________________________________________________________
நீ என்னை நெருப்பாக
எத்தனை தரம் சுட்டாலும்
நான் கருகிப் போக
ஒன்றும் கடதாசியல்லவே
சுட, சுட
வெண்மை தரும் சங்கு.......
___________________________________________________________

சூரியன் சின்ன சின்ன கவிதைகளில் உங்கள் அழகு எண்ணங்களை கவி வரிகளிலேற்றி இருக்கின்றீர்கள்....

அந்த எண்ணங்கள் கவி வரிகளில் பளிச்சிடுகின்றன....
பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் நண்பரே...!