PDA

View Full Version : என் மனைவி!!!



aren
01-10-2007, 03:05 PM
எனக்குள்ளே
தூங்கிக்கொண்டிருந்த
திறமைகளை
உன்னுடைய
திறமையான பேச்சால்
வெளியே கொண்டுவந்தாய்!!!

நான் மேற்கொண்ட
ஒவ்வொரு நடவடிக்கையையும்
கவனமாக சரிபார்த்து
என் நல்வழியில்
வழிநடத்தி
நான் வெற்றி பெற்றிட
நாளெல்லாம் உழைத்தாய்!!!


நீ என்னவள்
எங்கிருந்தோ வந்தவள்
எனக்காகவே பிறந்தவள்
என்றும்
என் வாழ்வோடு இணைந்தவள்!!!

உன்னை அரவணைத்து
உனக்காகவே வாழ்ந்து
நீ விரும்பியதை
சாதித்து
உன்னை கண்போல் காத்திடுவேன்!!!

இனியவள்
01-10-2007, 03:15 PM
இருமனங்கள் திருமணத்தில்
இணைந்த பின்பு பாகுபாடின்றி
உள்ளத்தை அள்ளிக்கொடுத்து
இன்ப துன்பங்களை இடமாற்றி
தோளோடு தோழ் சேர்ந்து
தட்டிக் கொடுத்தால் இல்லறம்
என்று சிறக்கும்

வாழ்த்துக்கள் ஆரென் அண்ணா

சாராகுமார்
01-10-2007, 03:16 PM
பாசம் மிகுதி உங்களுக்கு
நேசம் மிகுதி உங்களுக்கு
அருமையான உயிர் உங்களுக்கு
வளம் கொழிக்கும் உங்களுக்கு.

அருமையான அன்பு கவிதை.வாழ்த்துக்கள்.

aren
01-10-2007, 03:17 PM
நன்றி இனியவள். உங்கள் வார்த்தை பலிக்கட்டும்.

நன்றி வணக்கம்
ஆரென்

மீனாகுமார்
01-10-2007, 03:18 PM
ம்.. நானும் இதே தலைப்பில் தான் அடுத்து ஒரு கவிதை எழுதலாமென்று நினைத்துக் கொண்டிருக்கும்போதே இந்த கவிதையைப் பார்ப்பது ஆனந்தமாக இருக்கிறது...

இது ஒரு மனைவியின் சாதனைகளில் ஒரு சிலவே.... தொடரட்டும்...

aren
01-10-2007, 03:19 PM
பாசம் மிகுதி உங்களுக்கு
நேசம் மிகுதி உங்களுக்கு
அருமையான உயிர் உங்களுக்கு
வளம் கொழிக்கும் உங்களுக்கு.

அருமையான அன்பு கவிதை.வாழ்த்துக்கள்.

நன்றி சாரா. வளம் கொழுக்கட்டும், உங்கள் வாக்கு பலிக்கட்டும்.

நன்றி வணக்கம்
ஆரென்

aren
01-10-2007, 03:21 PM
ம்.. நானும் இதே தலைப்பில் தான் அடுத்து ஒரு கவிதை எழுதலாமென்று நினைத்துக் கொண்டிருக்கும்போதே இந்த கவிதையைப் பார்ப்பது ஆனந்தமாக இருக்கிறது...

இது ஒரு மனைவியின் சாதனைகளில் ஒரு சிலவே.... தொடரட்டும்...


நன்றி மீனாகுமார். என்னை மன்னித்துவிடுங்கள், உங்கள் கவிதையின் தலைப்பை நான் தெரியாமல் எடுத்துக் கொண்டதற்கு.

நான் எழுதியது உங்களுக்கு பிடித்திருப்பது கண்டு சந்தோஷம்.

நன்றி வணக்கம்
ஆரென்

சூரியன்
01-10-2007, 03:27 PM
ஒவ்வொரு வரியும் நன்றாக இருக்கிறது.
பாராட்டுக்கள் ஆரென் அண்ணா..

மீனாகுமார்
01-10-2007, 03:31 PM
நன்றி மீனாகுமார். என்னை மன்னித்துவிடுங்கள், உங்கள் கவிதையின் தலைப்பை நான் தெரியாமல் எடுத்துக் கொண்டதற்கு.

நான் எழுதியது உங்களுக்கு பிடித்திருப்பது கண்டு சந்தோஷம்.

நன்றி வணக்கம்
ஆரென்

என்ன ஆரென் ஏதோ தப்பு செய்துவிட்டு மன்னிப்பு கேட்பது போல் பெரிய வார்த்தையெல்லாம் சொல்லுறீங்க... உங்களுடைய எல்லா கவிதைகளுமே சூப்பர்... நேரம் கிடைக்கும் போது படித்து வருகிறேன்... இந்த கவி மன்றத்துல மிகவும் அருமையான கவிதைகள் பல வருகின்றன...

பெரிய நந்தவனத்துக்குள்ள புகுந்த தேனீ ஒன்று ஒரு சில தேனை மட்டுமே பருகிவிட்டு போதை தலைக்கேற மயங்கி விழுந்தது போன்றுதான் இருக்கிறது.. அடேங்கப்பா.. இன்னும் எல்லாத் தேனையும் பருகனும்னா பெரிய வயிறு வேணுமே...

நானும் இதே போன்ற தலைப்புல ஒரு கவிதை முயற்சிக்கிறேன்....

சிவா.ஜி
02-10-2007, 04:49 AM
மனைவி ஒரு உறவுமட்டுமல்ல...இன்னொரு உயிர்.வந்த வினாடியிலிருந்து சொந்தமாகி,நம்மையும் சொந்தமாக்கிக்கொள்ளும் பாசப்பந்தம்.
அந்த உறவுக்கு ஒரு கவிதை அருமை ஆரென்.வாழ்த்துக்கள்.

ஓவியன்
14-02-2008, 01:25 AM
ஆரென் அண்ணாவின் வெற்றிகளின் மைய அச்சாணியாயிருக்கும் அண்ணியைக் கண்டு அவர் கையால் உணவும் உண்டிருக்கின்றேன்....

வாழ்த்துக்கள் ஆரென் அண்ணா...
உங்கள் குடும்ப வாழ்க்கையில் எல்லா வகைச் செல்வங்களும் நிறைந்து பெருகட்டும்....!!