அறிஞர்
01-10-2007, 02:57 PM
கலெக்டர் ஆகிறான் சாவின் விளிம்பில் உள்ள சிறுவனின் கடைசி ஆசைக்கு ஆந்திரா அனுமதி
ஐதராபாத், அக். 1: இன்னும் 2 மாதத்தில் சாவை எதிர்நோக்கி இருக்கும் 6 வயது சிறுவனின் கடைசி ஆசையான, கலெக்டர் ஆகவேண்டும் என்பதை நிறைவேற்றி வைக்க ஆந்திர அரசு அனுமதி அளித்துள்ளது.
ஐதராபாத்தை சேர்ந்த சிறுவன் ஆகாஷ் (6). துள்ளி விளையாடும் இந்த வயதில், ஆகாஷின் உடலை புற்றுநோய் கட்டிகள் தின்று கொண்டிருக்கின்றன. தங்களது குழந்தை மகிழ்ச்சியுடன் விளையாடிக் கொண்டிருப்பதை பார்க்கும்போது, எல்லா பெற்றோருக்கும் சந்தோஷம் கிடைக்கும். ஆனால், தங்கள் மகன் ஆகாஷ் விளையாடுவதை பார்க்கும்போது, இன்னும் எத்தனை நாள் இந்த சந்தோஷம் என துக்கம் பொங்க மனதில் அழுது கொண்டிருக்கின்றனர்.
ஆகாஷின் பெற்றோருக்கு அவன் ஒரே மகன். அதுவும் திருமணமாகி 7 ஆண்டுகள் தவமிருந்து பெற்ற குழந்தை. அவனுக்கு பிறக்கும்போதே, இதய அறுவை சிகிச்சை நடந்துள்ளது. எப்படியோ உயிர் பிழைத்துவிட்டான் என்ற மகிழ்ச்சியில் கடவுளுக்கு நன்றி சொல்லிக் கொண்டிருந்த ஆகாஷின் பெற்றோர்களுக்கு சமீபத்திய மருத்துவ அறிக்கை பேரிடியாக அமைந்தது.
அது, ஆகாஷின் முதுகெலும்பில் புற்றுநோய் தாக்கி உள்ளதாகவும், இன்னும் 2 மாதங்கள் மட்டுமே அதிகபட்சம் அவன் உயிர் வாழ்வான் என்று டாக்டர்கள் கூறினர்.
ஒரே மகனுக்கு வந்த கொடூர நோயை நினைத்து தினம், தினம் அவனது பெற்றோர்கள் மனதுக்குள்ளே அழுகின்றனர். காரணம், வெளியே அழுதால் தங்கள் மகனின் மகிழ்ச்சி காணாமல் போய்விடுமோ என்ற பயம்தான்.
ஆகாஷ் உயிர் வாழக்கூடிய இந்த 2 மாதத்தில் அவனுடைய கடைசி ஆசைகள் அனைத்தையும் பூர்த்தி செய்துவிட வேண்டும் என்று அவனது பெற்றோர்கள் விரும்புகின்றனர். தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி ஆகாஷக்கு பிடித்த நடிகர். இதனால், சிரஞ்சீவியிடம் சிறப்பு அனுமதி பெற்று ஆகாஷை அவருடன் சந்திக்க வைத்தனர். சிரஞ்சீவியுடன் மகிழ்ச்சி பொங்க பேசினான் ஆகாஷ்.
அவனது இன்னொரு பெரிய ஆசை, வளர்ந்தவுடன் மாவட்ட கலெக்டர் ஆகவேண்டும் என்பதுதான். இதுகுறித்து, ஆகாஷின் தாய் மஞ்சு, மாநில அரசுக்கு கடிதம் எழுதினார்.
உடனடியாக அவனது ஆசையை நிறைவேற்ற ஆந்திர அரசு அனுமதி அளித்துள்ளது. ஓரிரு நாளில் ஆகாஷ், மாவட்டத் தலைவர் பதவியில் ஒரு நாள் மட்டும் அமர உள்ளான். சம்பிரதாயமான நிகழ்ச்சிதான் என்றாலும், உண்மையிலேயே மாவட்டத் தலைவரை போலவே ஆகாஷை நடத்த அதிகாரிகளும் தயாராக உள்ளனர்.
குழந்தை என்றால் தெய்வமும் இறங்கும் என்பார்கள். ஆகாஷ் விஷயத்தில் மனிதர்கள் மட்டும்தான் இறங்குகின்றனர்.
ஐதராபாத், அக். 1: இன்னும் 2 மாதத்தில் சாவை எதிர்நோக்கி இருக்கும் 6 வயது சிறுவனின் கடைசி ஆசையான, கலெக்டர் ஆகவேண்டும் என்பதை நிறைவேற்றி வைக்க ஆந்திர அரசு அனுமதி அளித்துள்ளது.
ஐதராபாத்தை சேர்ந்த சிறுவன் ஆகாஷ் (6). துள்ளி விளையாடும் இந்த வயதில், ஆகாஷின் உடலை புற்றுநோய் கட்டிகள் தின்று கொண்டிருக்கின்றன. தங்களது குழந்தை மகிழ்ச்சியுடன் விளையாடிக் கொண்டிருப்பதை பார்க்கும்போது, எல்லா பெற்றோருக்கும் சந்தோஷம் கிடைக்கும். ஆனால், தங்கள் மகன் ஆகாஷ் விளையாடுவதை பார்க்கும்போது, இன்னும் எத்தனை நாள் இந்த சந்தோஷம் என துக்கம் பொங்க மனதில் அழுது கொண்டிருக்கின்றனர்.
ஆகாஷின் பெற்றோருக்கு அவன் ஒரே மகன். அதுவும் திருமணமாகி 7 ஆண்டுகள் தவமிருந்து பெற்ற குழந்தை. அவனுக்கு பிறக்கும்போதே, இதய அறுவை சிகிச்சை நடந்துள்ளது. எப்படியோ உயிர் பிழைத்துவிட்டான் என்ற மகிழ்ச்சியில் கடவுளுக்கு நன்றி சொல்லிக் கொண்டிருந்த ஆகாஷின் பெற்றோர்களுக்கு சமீபத்திய மருத்துவ அறிக்கை பேரிடியாக அமைந்தது.
அது, ஆகாஷின் முதுகெலும்பில் புற்றுநோய் தாக்கி உள்ளதாகவும், இன்னும் 2 மாதங்கள் மட்டுமே அதிகபட்சம் அவன் உயிர் வாழ்வான் என்று டாக்டர்கள் கூறினர்.
ஒரே மகனுக்கு வந்த கொடூர நோயை நினைத்து தினம், தினம் அவனது பெற்றோர்கள் மனதுக்குள்ளே அழுகின்றனர். காரணம், வெளியே அழுதால் தங்கள் மகனின் மகிழ்ச்சி காணாமல் போய்விடுமோ என்ற பயம்தான்.
ஆகாஷ் உயிர் வாழக்கூடிய இந்த 2 மாதத்தில் அவனுடைய கடைசி ஆசைகள் அனைத்தையும் பூர்த்தி செய்துவிட வேண்டும் என்று அவனது பெற்றோர்கள் விரும்புகின்றனர். தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி ஆகாஷக்கு பிடித்த நடிகர். இதனால், சிரஞ்சீவியிடம் சிறப்பு அனுமதி பெற்று ஆகாஷை அவருடன் சந்திக்க வைத்தனர். சிரஞ்சீவியுடன் மகிழ்ச்சி பொங்க பேசினான் ஆகாஷ்.
அவனது இன்னொரு பெரிய ஆசை, வளர்ந்தவுடன் மாவட்ட கலெக்டர் ஆகவேண்டும் என்பதுதான். இதுகுறித்து, ஆகாஷின் தாய் மஞ்சு, மாநில அரசுக்கு கடிதம் எழுதினார்.
உடனடியாக அவனது ஆசையை நிறைவேற்ற ஆந்திர அரசு அனுமதி அளித்துள்ளது. ஓரிரு நாளில் ஆகாஷ், மாவட்டத் தலைவர் பதவியில் ஒரு நாள் மட்டும் அமர உள்ளான். சம்பிரதாயமான நிகழ்ச்சிதான் என்றாலும், உண்மையிலேயே மாவட்டத் தலைவரை போலவே ஆகாஷை நடத்த அதிகாரிகளும் தயாராக உள்ளனர்.
குழந்தை என்றால் தெய்வமும் இறங்கும் என்பார்கள். ஆகாஷ் விஷயத்தில் மனிதர்கள் மட்டும்தான் இறங்குகின்றனர்.