இனியவள்
01-10-2007, 02:54 PM
சில்லென்ற குளிர்காற்று மேனியை சிலிர்க்கச் செய்ய கைக்கடிகாரத்தில் நேரத்தைப் பார்த்தவாறு அமர்ந்திருந்தாள் மேகலா யாருடைய வரவையோ எதிர்பார்த்து. நேரங்கள் ஓடின இவள் மனதோட்டத்தோடு சேர்ந்து.நேரங்கள் கரைய கரைய இவளின் மனதில் இருந்த உற்சாகமும் கரைந்தோடியது.அருகில் இருந்த செடியில் மலர்ந்திருந்த பூவில் ஓன்றிரண்டாய் படர்ந்திருந்த பனித்துளிகளை எறும்புகள் நாடிச் செல்வதை விநோதமாய் பார்த்துக்கொண்டிருந்தாள். ஹலோ மேகலா என்ற குரலைக் கேட்டு பார்வையை குரல் வந்த திசையை நோக்கி நகர்த்தினாள்.அங்கே இவளின் நண்பி திவ்யா அன்று மலர்ந்த மலர் போல் இதழோரத்தில் புன்னகை ததும்ப நின்று கொண்டிருந்தாள்..
தன் தோழியின் முகத்தில் கண்ட புன்னகை இவள் இதழ்களையும் தத்தெடுத்துக் கொண்டது. நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்த இரு தோழிகளும் தங்கள் அன்புகளைப் பரிமாறிக் கொண்டார்காள்.என்னடி மேகலா நாங்கள் சந்தித்து இன்றோடு ஒரு வருடம் இருக்கும் எப்படி இருக்கிறாய் உன்னை கடைசியாய் நான் சந்தித்த அந்த நாள் இன்றும் என் கண்முன் நிழாலடிய படியே இருக்கிறது. உன் கண்களின் ஓரத்தில் அன்று வடிந்த கண்ணீர்த்துளிகள் எதோ ஒன்றை என்னிடம் சொல்ல வந்து செல்லாமல் சென்ற உன் கண்கள் இன்றும் என் மனதில் படிந்து விட்டது.
சொல்லுடி எப்படி இருக்கிறாய்.ஹீம் என்று பெரு மூச்சு விட்டாள் மேகலா.
எனக்கு என்னடி நான் நல்லா இருக்கிறன். புது இடம் புது வாழ்க்கை வேலை என்று என் நாட்களை அழகாய் அமைத்து வாழ்கின்றேன் உன் வாழ்க்கை எப்படி இருக்கு உன் திருமணத்திற்கு கூட என்னால் வரமுடியவில்லை மன்னிச்சுக்கோடி அந்த நேரம் என்னால் லீவு கூட எடுக்க முடியேலை வேலைக்கு சேர்ந்த புதிதில் தரமுடியாது என்று சொல்லிட்டினம்.
அடிப்போடி அதைப் பற்றி என் கூடை நீ கதைக்க வேண்டாம் கலா எனக்கு என்று இருந்த ஒரு தோழி நீ தான் நீயே வரேலை என்றால் எனக்கு எப்படி இருக்கும் உன்மேல் பயங்கர கோவத்தோட வந்தன் ஆனால் உன் முகம் பார்த்ததும் கோபம் எல்லாம் போன இடம் கூடத் தெரியேலை..இப்படியே இருவரும் பழைய நினைவுகளோடு சஞ்சரித்துக்கொண்டிருந்ட்தனர் நேரம் போனதே தெரியாமல். மேகத்தை காற்றுக் கலைப்பது போல் இவர்களின் உரையாடலை அலறிய அலைபேசி கலைத்திட கைத்தொலைபேசியை எடுத்து ஹலோ என்றால் திவ்யா அவளின் முகத்தில் கண்ட மலர்ச்சியைக் கண்டு என்னடி என்று மேகலா கேட்க என் வீட்டுக்காரர் வாறராம் என்னைக் கூட்டிட்டுப் போக நீ அவரைப் பார்த்தது இல்லை கொஞ்ச நேரத்திலை அவர் வந்திடுவார் பார்க்கலாம் என்று முகமலர்ச்சியோடு கூறிக்கொண்டிருந்தால் திவ்யா. அதைக் கேட்டதும் மேகலாவின் முகம் இருண்டது.
அய்யோ மறந்திட்டன் திவ்யா எனக்கு அவசரமாய் ஒரு வேலை இருக்கு நான் சீக்கிரம் போக வேணும் பார் உன்னோடை கதைச்சுட்டு இருந்ததால் நேரம் போனதே தெரியேலை.இன்னும் 2 நாள் இங்கை தான இருப்பன் அந்த நேரம் உன் அவரை நான் சந்திக்கிறன் இப்ப போய் வரட்டுமா என்று கூறி விடை பெற்ற தயார் ஆனால் மேகலா. ஹீம் சரி நீ போயிற்று வா என்று மனமற்று வழியனுப்பி வைத்தால் திவ்யா..
மேகலா வேகவேகமாய் நடந்து சென்று ஒரு வாடகை கார் பிடித்து அமர்ந்து கொண்டாள். வேகவேகமாய் பெருமூச்சு விட்டபடி கண்களை மூடிக்கொண்டாள்.கார் காற்றைக் கிழித்துக் கொண்டு செல்ல இவள் மனம் பழைய நினைவுகளில் மூழ்கியது.
மேகலா சிறு வயதுமுதல் அன்னை அன்பின்றி பணத்தில் பாதுகாப்பில் தோழியினதும் அவளது குடும்பத்தினரினதும் அரவணைப்பில் வாழ்ந்து வந்தாள். இவளின் தனிமையைப் போக்க ஓரு தனியார் அலுவலகத்தில் வேலை பார்த்து வந்தாள்.இவளின் அமைதி,வேலையில் செலுத்தும் கவனம்,மற்றவர்களோடு பழகும் விதம் இவைகள் அனைத்தும் அவளை தங்களில் ஒருவராக நினைக்க வைத்தது அங்கு வேலை செய்பவர்கள் மத்தியில்.இவளுக்கு தெரியாமல் இவளை ஒரு நிழல் தொடர்ந்தது. மண்ணுக்குள் இருக்கும் விதை என்றாவது செடியாய் வெளிப்படுவது போல் அந்த நிழல் நிஜம் கொண்டு இவள் முன் வந்து தன் காதலை வெளிப்படுத்த அவனின் அன்பில் தன் அன்பையும் பிணைத்து இருவரும் கண்ணியத்தோடு காதலித்து வந்தார்கள்.
இப்படி இவர்கள் இருவரினதும் காதல் வளர்ந்து வர திவ்யாவிடம் இருந்து வந்த அழைப்பையேற்று மேகலா திவ்யாவின் இல்லம் சென்றாள். ஹேய் கலா வா வா உன்னைத் தான் பார்த்துக் கொண்டிருந்தன் என்று முகத்தில் மகிழ்ச்சி பொங்க வரவேற்றாள் தனது ஆருயிர் நண்பியை. கலா எனக்கு திருமணம் நிச்சயம் ஆகிட்டு உனக்கு சொல்ல நான் எத்தனை தரம் டீ கோல் பண்றது வேலையிலை மூழிகிட்டியா நீ என்று சொல்லமாய் தோழியை கடிந்த படி தனது வருங்கால கணவனின் புகைப்படத்தை எடுத்து தோழியிடம் காட்டினாள். திவ்யா வெட்கத்தில் அறையை விட்டு ஓடிட அந்த புகைப்படத்தை கண்ட மேகலா கண்களில் கண்ணீர் அருவியாய் வடிந்தோடியது.யாரை உயிருக்கு உயிராய் நினைத்தாளோ யாரோடு தன் வாழ்க்கையென நினைத்தாளோ அவனே தனதுயிர் தோழியின் வருங்கால கணவர் என்பதையறிந்து உயிரோட்டமான அவளிதயம் துடிதுடித்தது வலியில்..
அம்மா நீங்கள் சொன்ன இடம் வந்திட்டு டிரைவர் பலமுறை உரைத்துக் கூறிய பின் சுய நினைவுக்கு வந்தாள் மேகலா...
முற்றும்...
(இந்தக் கதைக்கு பொருத்தமான தலையங்கம் இடத் தெரியவில்லை நண்பர்களே உதவுங்கள் )
தன் தோழியின் முகத்தில் கண்ட புன்னகை இவள் இதழ்களையும் தத்தெடுத்துக் கொண்டது. நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்த இரு தோழிகளும் தங்கள் அன்புகளைப் பரிமாறிக் கொண்டார்காள்.என்னடி மேகலா நாங்கள் சந்தித்து இன்றோடு ஒரு வருடம் இருக்கும் எப்படி இருக்கிறாய் உன்னை கடைசியாய் நான் சந்தித்த அந்த நாள் இன்றும் என் கண்முன் நிழாலடிய படியே இருக்கிறது. உன் கண்களின் ஓரத்தில் அன்று வடிந்த கண்ணீர்த்துளிகள் எதோ ஒன்றை என்னிடம் சொல்ல வந்து செல்லாமல் சென்ற உன் கண்கள் இன்றும் என் மனதில் படிந்து விட்டது.
சொல்லுடி எப்படி இருக்கிறாய்.ஹீம் என்று பெரு மூச்சு விட்டாள் மேகலா.
எனக்கு என்னடி நான் நல்லா இருக்கிறன். புது இடம் புது வாழ்க்கை வேலை என்று என் நாட்களை அழகாய் அமைத்து வாழ்கின்றேன் உன் வாழ்க்கை எப்படி இருக்கு உன் திருமணத்திற்கு கூட என்னால் வரமுடியவில்லை மன்னிச்சுக்கோடி அந்த நேரம் என்னால் லீவு கூட எடுக்க முடியேலை வேலைக்கு சேர்ந்த புதிதில் தரமுடியாது என்று சொல்லிட்டினம்.
அடிப்போடி அதைப் பற்றி என் கூடை நீ கதைக்க வேண்டாம் கலா எனக்கு என்று இருந்த ஒரு தோழி நீ தான் நீயே வரேலை என்றால் எனக்கு எப்படி இருக்கும் உன்மேல் பயங்கர கோவத்தோட வந்தன் ஆனால் உன் முகம் பார்த்ததும் கோபம் எல்லாம் போன இடம் கூடத் தெரியேலை..இப்படியே இருவரும் பழைய நினைவுகளோடு சஞ்சரித்துக்கொண்டிருந்ட்தனர் நேரம் போனதே தெரியாமல். மேகத்தை காற்றுக் கலைப்பது போல் இவர்களின் உரையாடலை அலறிய அலைபேசி கலைத்திட கைத்தொலைபேசியை எடுத்து ஹலோ என்றால் திவ்யா அவளின் முகத்தில் கண்ட மலர்ச்சியைக் கண்டு என்னடி என்று மேகலா கேட்க என் வீட்டுக்காரர் வாறராம் என்னைக் கூட்டிட்டுப் போக நீ அவரைப் பார்த்தது இல்லை கொஞ்ச நேரத்திலை அவர் வந்திடுவார் பார்க்கலாம் என்று முகமலர்ச்சியோடு கூறிக்கொண்டிருந்தால் திவ்யா. அதைக் கேட்டதும் மேகலாவின் முகம் இருண்டது.
அய்யோ மறந்திட்டன் திவ்யா எனக்கு அவசரமாய் ஒரு வேலை இருக்கு நான் சீக்கிரம் போக வேணும் பார் உன்னோடை கதைச்சுட்டு இருந்ததால் நேரம் போனதே தெரியேலை.இன்னும் 2 நாள் இங்கை தான இருப்பன் அந்த நேரம் உன் அவரை நான் சந்திக்கிறன் இப்ப போய் வரட்டுமா என்று கூறி விடை பெற்ற தயார் ஆனால் மேகலா. ஹீம் சரி நீ போயிற்று வா என்று மனமற்று வழியனுப்பி வைத்தால் திவ்யா..
மேகலா வேகவேகமாய் நடந்து சென்று ஒரு வாடகை கார் பிடித்து அமர்ந்து கொண்டாள். வேகவேகமாய் பெருமூச்சு விட்டபடி கண்களை மூடிக்கொண்டாள்.கார் காற்றைக் கிழித்துக் கொண்டு செல்ல இவள் மனம் பழைய நினைவுகளில் மூழ்கியது.
மேகலா சிறு வயதுமுதல் அன்னை அன்பின்றி பணத்தில் பாதுகாப்பில் தோழியினதும் அவளது குடும்பத்தினரினதும் அரவணைப்பில் வாழ்ந்து வந்தாள். இவளின் தனிமையைப் போக்க ஓரு தனியார் அலுவலகத்தில் வேலை பார்த்து வந்தாள்.இவளின் அமைதி,வேலையில் செலுத்தும் கவனம்,மற்றவர்களோடு பழகும் விதம் இவைகள் அனைத்தும் அவளை தங்களில் ஒருவராக நினைக்க வைத்தது அங்கு வேலை செய்பவர்கள் மத்தியில்.இவளுக்கு தெரியாமல் இவளை ஒரு நிழல் தொடர்ந்தது. மண்ணுக்குள் இருக்கும் விதை என்றாவது செடியாய் வெளிப்படுவது போல் அந்த நிழல் நிஜம் கொண்டு இவள் முன் வந்து தன் காதலை வெளிப்படுத்த அவனின் அன்பில் தன் அன்பையும் பிணைத்து இருவரும் கண்ணியத்தோடு காதலித்து வந்தார்கள்.
இப்படி இவர்கள் இருவரினதும் காதல் வளர்ந்து வர திவ்யாவிடம் இருந்து வந்த அழைப்பையேற்று மேகலா திவ்யாவின் இல்லம் சென்றாள். ஹேய் கலா வா வா உன்னைத் தான் பார்த்துக் கொண்டிருந்தன் என்று முகத்தில் மகிழ்ச்சி பொங்க வரவேற்றாள் தனது ஆருயிர் நண்பியை. கலா எனக்கு திருமணம் நிச்சயம் ஆகிட்டு உனக்கு சொல்ல நான் எத்தனை தரம் டீ கோல் பண்றது வேலையிலை மூழிகிட்டியா நீ என்று சொல்லமாய் தோழியை கடிந்த படி தனது வருங்கால கணவனின் புகைப்படத்தை எடுத்து தோழியிடம் காட்டினாள். திவ்யா வெட்கத்தில் அறையை விட்டு ஓடிட அந்த புகைப்படத்தை கண்ட மேகலா கண்களில் கண்ணீர் அருவியாய் வடிந்தோடியது.யாரை உயிருக்கு உயிராய் நினைத்தாளோ யாரோடு தன் வாழ்க்கையென நினைத்தாளோ அவனே தனதுயிர் தோழியின் வருங்கால கணவர் என்பதையறிந்து உயிரோட்டமான அவளிதயம் துடிதுடித்தது வலியில்..
அம்மா நீங்கள் சொன்ன இடம் வந்திட்டு டிரைவர் பலமுறை உரைத்துக் கூறிய பின் சுய நினைவுக்கு வந்தாள் மேகலா...
முற்றும்...
(இந்தக் கதைக்கு பொருத்தமான தலையங்கம் இடத் தெரியவில்லை நண்பர்களே உதவுங்கள் )