அறிஞர்
01-10-2007, 02:36 AM
உலக செஸ் போட்டி சாம்பியன் ஆனார் ஆனந்த்
மெக்சிகோ, செப். 30-
மெக்சிகோவில் நடந்த உலக செஸ் போட்டியில் இந்திய வீரர் விஸ்வநாதன் ஆனந்த்(36) சாம்பியன் பட்டம் வென்றார்.
உலகின் முன்னணி வீரர்கள் பங்கேற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி மெக்சிகோவில் கடந்த 2 வாரமாக நடைபெற்று வந்தது. மொத்தம் 14 சுற்றுகளைக் கொண்ட இந்த போட்டி தொடரில் உலகின் டாப் 8 வீரர்கள் பட்டம் வெல்ல களம் இறங்கினர். ஒவ்வொரு வீரரும் மற்ற வீரருடன் தலா 2 முறை மோத வேண்டும்.
போட்டியில் 8 பேர் பங்கேற்ற போதிலும் நடப்பு சாம்பியன் கிராம்னிக் (ரஷ்யா), உலக சாம்பியன் ஆனந்த் இருவரிடையே தான் பட்டம் வெல்ல கடும் போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த தொடர் தொடக்கத்திலிருந்தே ஆனந்தின் ஆட்டம் அபாரமாக இருந்தது. அதோடு, முதல் சுற்றிலிருந்தே ஆனந்த், முதல் இடத்தில் இருந்துவந்தார். இந்தநிலையில், இத்தொடரின் 14வது மற்றும் இறுதிச் சுற்று போட்டி நேற்று நடந்தது. இந்த போட்டியில் ஆனந்த், ஹங்கேரியின் பீட்டர் லீகோவுடன் மோதினார். இந்த போட்டியை டிரா செய்தாலே ஆனந்த பட்டம் வென்றுவிடுவார் என்று இருந்தது. மாறாக, தோல்வியுற்றால் பட்ட வாய்ப்பு பறிபோகும் என்ற நிலை இருந்தது.
பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட இந்த போட்டியில் வெள்ளை காயுடன் களம் இறங்கிய ஆனந்த், தற்காப்பாக ஆடினார். 20வது நகர்த்தலின் முடிவில் 2 வீரர்களும் டிரா செய்ய ஒத்துக்கொண்டனர். இதையடுத்து, 9 புள்ளிகள் பெற்ற ஆனந்த் உலக சாம்பியன் ஆனார். இந்த தொடரில் ஆனந்த், 4 வெற்றியும், 10 போட்டிகளை டிரா செய்தார். ரஷ்ய வீரர் கிராம்னிக் 2வது இடத்தையும், இஸ்ரேல் வீரர் ஜெல்பாண்ட் 3வது இடத்தையும், பிடித்தனர்.
கடந்த சில ஆண்டுகளாகவே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்தியாவுக்கு பெருமை தேடித் தரும் ஆனந்த், 2வது முறையாக உலக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். தெஹ்ரானில் 2000ம் ண்டில் நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில் ஆனந்த் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.
தமிழக வீரர் ஆனந்துக்கு வாழ்த்து செய்தி குவிந்த வண்ணம் உள்ளது. குடியரசுத் தலைவர் பிரதீபா பட்டீல். பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் ஆனந்திற்க்கு வாழ்த்து செய்தி அனுப்பி உள்ளனர். இன்னும் 2 வாரத்தில் ஆனந்த் சென்னை திரும்ம உள்ளதாக ஆனந்தின் மணைவி அருணா கூறியுள்ளார்.
கடந்த 10 நாட்களில் இந்தியா, 20 ஓவர் உலகக் கோப்பை (டோனி அண்ட் கோ), உலக பில்லியர்ட்ஸ் போட்டி (பங்கஜ் அத்வானி), உலக செஸ் சாம்பியன்ஷிப் (விஸ்வநாதன் ஆனந்த்) 3 உலக சாம்பியன்பட்டத்தை வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
ந*ன்றி − தின*க*ர*ன்
மெக்சிகோ, செப். 30-
மெக்சிகோவில் நடந்த உலக செஸ் போட்டியில் இந்திய வீரர் விஸ்வநாதன் ஆனந்த்(36) சாம்பியன் பட்டம் வென்றார்.
உலகின் முன்னணி வீரர்கள் பங்கேற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி மெக்சிகோவில் கடந்த 2 வாரமாக நடைபெற்று வந்தது. மொத்தம் 14 சுற்றுகளைக் கொண்ட இந்த போட்டி தொடரில் உலகின் டாப் 8 வீரர்கள் பட்டம் வெல்ல களம் இறங்கினர். ஒவ்வொரு வீரரும் மற்ற வீரருடன் தலா 2 முறை மோத வேண்டும்.
போட்டியில் 8 பேர் பங்கேற்ற போதிலும் நடப்பு சாம்பியன் கிராம்னிக் (ரஷ்யா), உலக சாம்பியன் ஆனந்த் இருவரிடையே தான் பட்டம் வெல்ல கடும் போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த தொடர் தொடக்கத்திலிருந்தே ஆனந்தின் ஆட்டம் அபாரமாக இருந்தது. அதோடு, முதல் சுற்றிலிருந்தே ஆனந்த், முதல் இடத்தில் இருந்துவந்தார். இந்தநிலையில், இத்தொடரின் 14வது மற்றும் இறுதிச் சுற்று போட்டி நேற்று நடந்தது. இந்த போட்டியில் ஆனந்த், ஹங்கேரியின் பீட்டர் லீகோவுடன் மோதினார். இந்த போட்டியை டிரா செய்தாலே ஆனந்த பட்டம் வென்றுவிடுவார் என்று இருந்தது. மாறாக, தோல்வியுற்றால் பட்ட வாய்ப்பு பறிபோகும் என்ற நிலை இருந்தது.
பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட இந்த போட்டியில் வெள்ளை காயுடன் களம் இறங்கிய ஆனந்த், தற்காப்பாக ஆடினார். 20வது நகர்த்தலின் முடிவில் 2 வீரர்களும் டிரா செய்ய ஒத்துக்கொண்டனர். இதையடுத்து, 9 புள்ளிகள் பெற்ற ஆனந்த் உலக சாம்பியன் ஆனார். இந்த தொடரில் ஆனந்த், 4 வெற்றியும், 10 போட்டிகளை டிரா செய்தார். ரஷ்ய வீரர் கிராம்னிக் 2வது இடத்தையும், இஸ்ரேல் வீரர் ஜெல்பாண்ட் 3வது இடத்தையும், பிடித்தனர்.
கடந்த சில ஆண்டுகளாகவே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்தியாவுக்கு பெருமை தேடித் தரும் ஆனந்த், 2வது முறையாக உலக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். தெஹ்ரானில் 2000ம் ண்டில் நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில் ஆனந்த் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.
தமிழக வீரர் ஆனந்துக்கு வாழ்த்து செய்தி குவிந்த வண்ணம் உள்ளது. குடியரசுத் தலைவர் பிரதீபா பட்டீல். பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் ஆனந்திற்க்கு வாழ்த்து செய்தி அனுப்பி உள்ளனர். இன்னும் 2 வாரத்தில் ஆனந்த் சென்னை திரும்ம உள்ளதாக ஆனந்தின் மணைவி அருணா கூறியுள்ளார்.
கடந்த 10 நாட்களில் இந்தியா, 20 ஓவர் உலகக் கோப்பை (டோனி அண்ட் கோ), உலக பில்லியர்ட்ஸ் போட்டி (பங்கஜ் அத்வானி), உலக செஸ் சாம்பியன்ஷிப் (விஸ்வநாதன் ஆனந்த்) 3 உலக சாம்பியன்பட்டத்தை வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
ந*ன்றி − தின*க*ர*ன்