இதயம்
29-09-2007, 05:24 AM
பிரியாத வரம் வேண்டும்..! (பாகம்-1)
"நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேஏஏஏஏஏ........ன்" என்று வாய் வலிக்க கத்தவேண்டும் போல் இருந்தது செல்வத்திற்கு..! செல்வம் தன் நண்பர்கள் ரமேஷ், நவாஸ், கண்ணன் மற்றும் தங்கராஜ் ஆகியோருடன் நின்றிருந்தது சவுதி அரேபியாவின் தலைநகரான ரியாத் நகரின் வெளிநாட்டவர் அதிகம் புழங்கும் பகுதியான "பத்தா" என்னும் இடம். கட்டிடங்களாலும், கடைகளாலும் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த அந்த இடம் அன்று வியாழக்கிழமை வாரக்கடைசி நாள் என்பதால் ஜனநெருக்கடியில் எள் விழுந்தால் எண்ணையாகும் விதத்தில் அமளியில் இருந்தது. இது போதாதென்று சாலையோரக்கடைகளள போட்டு வியாபாரம் செய்து கொண்டிருந்த ஆண்கள், பெண்களாலும் அந்த இடம் இன்னும் பரப்பரப்பாக தெரிந்தது. எங்கு நோக்கினாலும் மனித தலைகள் தான் தெரிந்தன. "பத்தா"வின் மையப்பகுதியில் இருந்த அந்த பெரிய பாலத்தின் கீழேயும், அதை ஒட்டிய பகுதிகளிலும் மனிதர்கள் தேசம் வாரியாக, மாநில வாரியாக, மொழிவாரியாக நின்று பேசிக்கொண்டிருந்தார்கள்.
பலதரப்பட்ட பொருட்கள் விற்கும் கடைகளில் கூட்டம் நிரம்பி வழிந்தது. "லக்கி கஃபே", "தஞ்சை ரெஸ்டாரண்ட்" போன்ற தமிழக உணவுக்கடைகளில் தமிழர்கள் 2 ரியால் கொடுத்து ஒரு செட் தோசையோ, பூரியோ, இட்லியோ வாங்கி, அதை 3 வகை சட்னிகளுடன் வைத்து தின்று விட்டு, அன்றைய வாரத்தின் உழைப்பிற்கான பலனை அடைந்தது போன்ற திருப்தியில் நகர்ந்து கொண்டிருந்தார்கள். உடை சமாச்சாரங்கள் விற்கும் முக்கிய பகுதிகளில் அம்பாரமாய் துணிகளை கொட்டி "ஷீல் ஹம்சா ரியால்(எதை எடுத்தாலும் 5 ரியால்)" என்று கூவிக்கொண்டிருந்த சவுதி நாட்டவனின் அறிவிப்பால் கவரப்பட்டு, துணி மலையை சூழ்ந்து நல்லதொரு உடையை எடுத்துவிட பலாப்பழத்தில் ஈக்களைப்போல் மொய்த்தார்கள். ஸ்டூடியோக்களில் இந்தியர்கள் தன் பெற்றோருக்கோ, மனைவிக்கோ அனுப்ப திட்டு திட்டாய் படிந்த முகப்பவுடருடன், ஸ்டூடியோவின் மிகப்பழைய கோட், டை அணிந்து கேமராவின் முன்னால் செயற்கையாக சிரித்துக்கொண்டிருந்தார்கள். விலையுயர்ந்த துணிகள், காலணிகள், கைகடிகாரங்கள் உள்ளிட்டவற்றை விற்கும் கடைகளில் இந்தியர்களை விட ஃபிலிப்பைன்ஸ் உள்ளிட்ட மற்ற நாட்டவர்களே அதிகம் தெரிந்தார்கள்.
குழுக்களாக மனிதர்கள் நின்று கொண்டிருக்கும் அந்த பகுதியை கடக்கும் போது "மாப்ளே..உன் தங்கச்சிக்கு கல்யாணம் வச்சிருக்கியாம்ல..?" என்றோ, "ஓ க்யா கமால் கா ஆத்மி ஹே யார்..!' என்றோ, "எனிக்கு ஈ ஜோலி வையா..!" என்றோ கதம்பமாய் அவர்கள் தங்களுக்குள் பேசும் மொழிகள் காதுகளில் விழுவது சகஜம். வீட்டுக்கு வரும் விருந்தாளிகளை கூப்பிட்டு உபசரிப்பது போல, அந்த இடங்களை கடப்பவர்களை அங்கிருக்கும் கடைக்காரர்கள் அவர்களின் கையைப்பிடித்து இழுக்காத குறையாய் கூப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். இத்தனை பரப்பரப்பிற்கிடையிலும் அங்கிருந்த பெரும்பாலான இந்தியர்களின் முகங்களில் ஏதோ ஒரு கடுமையான சோகம் படிந்திருந்தது. அந்த சோகத்திற்கு வேலையின் கடுமை, வீட்டின் கடன், மனைவியின் பிரிவு, சகோதரியின் திருமணம், சகோதரனின் படிப்பு, பெற்றோரின் நோய், எதிர்காலம் குறித்த பயம் என்று ஏதோ ஒன்று தான் காரணமாக இருக்கும். தன்னலம் என்பதை மறந்து தன் குடும்ப நலனுக்காக ஒரு இயந்திரத்தை போல் தன் சுக துக்கம் மறந்து உழைக்கும் அவர்களை காணும் போது எவரும் வேதனைப்படுவார்கள்.
இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலைகளை உள்ளடக்கிய இடத்தில் தான் நம் கதையின் நாயகன் செல்வம் நின்றிருந்தான். இந்த கதையின் முதல் வரியில் குறிப்பிட்டதைப்போல் அவன் கத்த நினைத்ததற்கு முக்கிய காரணம் இருந்தது. அது....?!!
(தொடரும்..!)
"நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேஏஏஏஏஏ........ன்" என்று வாய் வலிக்க கத்தவேண்டும் போல் இருந்தது செல்வத்திற்கு..! செல்வம் தன் நண்பர்கள் ரமேஷ், நவாஸ், கண்ணன் மற்றும் தங்கராஜ் ஆகியோருடன் நின்றிருந்தது சவுதி அரேபியாவின் தலைநகரான ரியாத் நகரின் வெளிநாட்டவர் அதிகம் புழங்கும் பகுதியான "பத்தா" என்னும் இடம். கட்டிடங்களாலும், கடைகளாலும் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த அந்த இடம் அன்று வியாழக்கிழமை வாரக்கடைசி நாள் என்பதால் ஜனநெருக்கடியில் எள் விழுந்தால் எண்ணையாகும் விதத்தில் அமளியில் இருந்தது. இது போதாதென்று சாலையோரக்கடைகளள போட்டு வியாபாரம் செய்து கொண்டிருந்த ஆண்கள், பெண்களாலும் அந்த இடம் இன்னும் பரப்பரப்பாக தெரிந்தது. எங்கு நோக்கினாலும் மனித தலைகள் தான் தெரிந்தன. "பத்தா"வின் மையப்பகுதியில் இருந்த அந்த பெரிய பாலத்தின் கீழேயும், அதை ஒட்டிய பகுதிகளிலும் மனிதர்கள் தேசம் வாரியாக, மாநில வாரியாக, மொழிவாரியாக நின்று பேசிக்கொண்டிருந்தார்கள்.
பலதரப்பட்ட பொருட்கள் விற்கும் கடைகளில் கூட்டம் நிரம்பி வழிந்தது. "லக்கி கஃபே", "தஞ்சை ரெஸ்டாரண்ட்" போன்ற தமிழக உணவுக்கடைகளில் தமிழர்கள் 2 ரியால் கொடுத்து ஒரு செட் தோசையோ, பூரியோ, இட்லியோ வாங்கி, அதை 3 வகை சட்னிகளுடன் வைத்து தின்று விட்டு, அன்றைய வாரத்தின் உழைப்பிற்கான பலனை அடைந்தது போன்ற திருப்தியில் நகர்ந்து கொண்டிருந்தார்கள். உடை சமாச்சாரங்கள் விற்கும் முக்கிய பகுதிகளில் அம்பாரமாய் துணிகளை கொட்டி "ஷீல் ஹம்சா ரியால்(எதை எடுத்தாலும் 5 ரியால்)" என்று கூவிக்கொண்டிருந்த சவுதி நாட்டவனின் அறிவிப்பால் கவரப்பட்டு, துணி மலையை சூழ்ந்து நல்லதொரு உடையை எடுத்துவிட பலாப்பழத்தில் ஈக்களைப்போல் மொய்த்தார்கள். ஸ்டூடியோக்களில் இந்தியர்கள் தன் பெற்றோருக்கோ, மனைவிக்கோ அனுப்ப திட்டு திட்டாய் படிந்த முகப்பவுடருடன், ஸ்டூடியோவின் மிகப்பழைய கோட், டை அணிந்து கேமராவின் முன்னால் செயற்கையாக சிரித்துக்கொண்டிருந்தார்கள். விலையுயர்ந்த துணிகள், காலணிகள், கைகடிகாரங்கள் உள்ளிட்டவற்றை விற்கும் கடைகளில் இந்தியர்களை விட ஃபிலிப்பைன்ஸ் உள்ளிட்ட மற்ற நாட்டவர்களே அதிகம் தெரிந்தார்கள்.
குழுக்களாக மனிதர்கள் நின்று கொண்டிருக்கும் அந்த பகுதியை கடக்கும் போது "மாப்ளே..உன் தங்கச்சிக்கு கல்யாணம் வச்சிருக்கியாம்ல..?" என்றோ, "ஓ க்யா கமால் கா ஆத்மி ஹே யார்..!' என்றோ, "எனிக்கு ஈ ஜோலி வையா..!" என்றோ கதம்பமாய் அவர்கள் தங்களுக்குள் பேசும் மொழிகள் காதுகளில் விழுவது சகஜம். வீட்டுக்கு வரும் விருந்தாளிகளை கூப்பிட்டு உபசரிப்பது போல, அந்த இடங்களை கடப்பவர்களை அங்கிருக்கும் கடைக்காரர்கள் அவர்களின் கையைப்பிடித்து இழுக்காத குறையாய் கூப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். இத்தனை பரப்பரப்பிற்கிடையிலும் அங்கிருந்த பெரும்பாலான இந்தியர்களின் முகங்களில் ஏதோ ஒரு கடுமையான சோகம் படிந்திருந்தது. அந்த சோகத்திற்கு வேலையின் கடுமை, வீட்டின் கடன், மனைவியின் பிரிவு, சகோதரியின் திருமணம், சகோதரனின் படிப்பு, பெற்றோரின் நோய், எதிர்காலம் குறித்த பயம் என்று ஏதோ ஒன்று தான் காரணமாக இருக்கும். தன்னலம் என்பதை மறந்து தன் குடும்ப நலனுக்காக ஒரு இயந்திரத்தை போல் தன் சுக துக்கம் மறந்து உழைக்கும் அவர்களை காணும் போது எவரும் வேதனைப்படுவார்கள்.
இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலைகளை உள்ளடக்கிய இடத்தில் தான் நம் கதையின் நாயகன் செல்வம் நின்றிருந்தான். இந்த கதையின் முதல் வரியில் குறிப்பிட்டதைப்போல் அவன் கத்த நினைத்ததற்கு முக்கிய காரணம் இருந்தது. அது....?!!
(தொடரும்..!)