View Full Version : சொர்கத்தைக் காணலாம்!!!
சுகமாய் மாற்றிடுவேன்
நீ என்னுடையவளானால்!!!
சுவையாக ஆக்கிடுவேன்
நீ எனக்கு வாழ்க்கைப்பட்டால்!!!
இனிமையாக வைத்திருப்பேன்
நீ என் மனைவியானால்
ஆகிவிடேன்!!!
உன் முகம்
நீ யோசிப்பதைக்
காட்டிக்கொடுக்கிறது!!!
சந்தோஷமாக இருக்குமா
என்ற யோசனையா
அல்லது இது
என்னடா பேஜாராய்ப் போயிட்டுதே
என்ற வருத்தமா!!!
வருத்தப்படாதே
எனக்கு வாழ்க்கைப்படு!!!
சொர்கத்தை காண
மேலோகம் போகவேண்டாம்
சொர்கம் நீ காணலாம்
இந்த மண்ணிலேயே
என்னுடைய மனைவியாக
வாழும்பொழுது!!!
சம்மதமா
சரியென்று சொல்
என் பச்சைக்கிளியே!!!
அக்னி
26-09-2007, 03:48 PM
சம்மதம் தந்தால்,
என்னுடன் வாழ்வில் சொர்க்கம்...
சம்மதம் தராவிட்டால்,
எனது சாவில் நரகம்...
உனக்கும் எனக்கும்...
இதைத்தான் மறைமுகமாக வெருட்டுதல் என்பதோ...
பாராட்டுக்கள் ஆரென் அண்ணா...
அறிஞர்
26-09-2007, 03:49 PM
உமக்கு சொர்க்கம்..
அவருக்கு.....
கொஞ்சம் யோசிக்க வேண்டிய விசயம்..
அருமை ஆரென்
ஜெயாஸ்தா
26-09-2007, 03:54 PM
சொர்கத்தை காண
மேலோகம் போகவேண்டாம்
சொர்கம் நீ காணலாம்
இந்த மண்ணிலேயே
என்னுடைய மனைவியாக
வாழும்பொழுது!!!
உங்களின் இந்த வரிகளைப் படிக்கும் போது எனக்கு இப்படி உதித்தது.
சொர்க்கம் பாதி
நரகம் மீதி
இரண்டும் ஓரேயிடத்தில்
மனைவியாய்....!
என்ன ஆரெண் கவிதையில் கலக்குறீங்களே...!
மீனாகுமார்
26-09-2007, 03:56 PM
அற்புதமாக உணர்வுகளை வெளிப்படுத்தும் இன்னொரு கவிதை.. நியாயமான கோரிக்கையை அப்படியே சொல்லுகிறது...
சபாஷ் ஆரென்...
சூரியன்
26-09-2007, 03:58 PM
அரென் அண்ணா கவிதை அருமை..
தங்களின் கவி திறன் பெருகிக்கொண்டே வருகிறது.
வாழ்த்துக்கள் அண்ணா...தொடருங்கள் உங்கள் படைப்புகளை...
சிவா.ஜி
27-09-2007, 04:23 AM
ஆரென் உங்கள் விண்ணப்பிக்கும் முயற்சியிலிருந்து சற்றும் மனம்தளர வேண்டாம்....ஆனால்..அறிஞர் சொன்னதுபோல சொர்க்கம் அவருக்கா...உங்களுக்கா...?
பிரகாஷ்ராஜ் கவிதை எழுதுன மாதிரி ஒரு செல்ல(மே)மிரட்டல்..அருமை ஆரென் வாழ்த்துக்கள்.
இலக்கியன்
27-09-2007, 04:25 PM
சொர்க்கம் தேடி அவள் வந்திடுவாள் சோர்ந்திடாதே நண்பா
அமரன்
28-09-2007, 08:20 AM
கிளியை கூண்டில் அடைச்சு
பாலும் பழமும் கொடுத்து
"பேச்சுக்" கேட்க ஆசையா?
பாராட்டுகள் அண்ணா.
மன்மதன்
28-09-2007, 01:11 PM
கி கி....
பச்சைக்கிளி சரியென்றுதான் சொல்லியிருக்கும்.. ஆரெனாச்சே..!!
ஓவியன்
29-09-2007, 11:47 AM
உண்மை அன்பை மட்டும் அடிப்படையாக வைத்துக் கட்டியெழுப்பப்படும் எல்லா இல்லறமும் சொர்க்கமே....
பாராட்டுகள் அரென் அண்ணா!.