இனியவள்
24-09-2007, 05:42 PM
உன் பூவிதழ் புன்னகை பார்த்து
கருமேகம் கண்டு தோகை
விரிக்கும் மயிலாய் - என்
இதயம் விறிக்கிறது இறக்கை
வாடிய மலர்கள் கூட
துளிர்க்கின்றன - உன்
உதட்டோரத்தில் துளிர்
விட்ட புன்னகையை கண்டு...
உன் புன்னகை கண்டு
பொறாமை கொண்ட
சந்திரன் மறைந்து கொள்கின்றான்
முகில்களின் இடைநடுவில்..
என் கண்கள் கண்ட அழகிய
காட்சி உன் புன்சிரிப்பு
என் உயிர் தொட்ட உயிர்
உன் புன்னகை - என்றும்
இருக்கட்டும் உன்னோடு
மலரும் மலர்கள் அனைத்தும்
உன் புன்னகை கண்டு மலரட்டும்
மேகங்கள் மழையாய் மாறி
விரைகின்றன உன் புன்னகையை
தரிசித்து விட...
உன் புன்னகையை மறக்கு
கூந்தலை விலக்கிவிட
படையெடுக்கின்றன தென்றல்
அழகிய இயற்கைக் காட்சியாய் - உன்
புன்னகை கண்டு பறந்தோடுகின்றது
சோகங்கள் அனைத்தும்...
(மிக மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு என் தோழியின் முகத்தில் அரும்பிய புன்னகையைக் கண்ட அடுத்த நொடி எனக்குள் உருப்பெற்ற கவி தவறுகள் இருந்தால் மன்னிக்க தோழர்களே )
கருமேகம் கண்டு தோகை
விரிக்கும் மயிலாய் - என்
இதயம் விறிக்கிறது இறக்கை
வாடிய மலர்கள் கூட
துளிர்க்கின்றன - உன்
உதட்டோரத்தில் துளிர்
விட்ட புன்னகையை கண்டு...
உன் புன்னகை கண்டு
பொறாமை கொண்ட
சந்திரன் மறைந்து கொள்கின்றான்
முகில்களின் இடைநடுவில்..
என் கண்கள் கண்ட அழகிய
காட்சி உன் புன்சிரிப்பு
என் உயிர் தொட்ட உயிர்
உன் புன்னகை - என்றும்
இருக்கட்டும் உன்னோடு
மலரும் மலர்கள் அனைத்தும்
உன் புன்னகை கண்டு மலரட்டும்
மேகங்கள் மழையாய் மாறி
விரைகின்றன உன் புன்னகையை
தரிசித்து விட...
உன் புன்னகையை மறக்கு
கூந்தலை விலக்கிவிட
படையெடுக்கின்றன தென்றல்
அழகிய இயற்கைக் காட்சியாய் - உன்
புன்னகை கண்டு பறந்தோடுகின்றது
சோகங்கள் அனைத்தும்...
(மிக மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு என் தோழியின் முகத்தில் அரும்பிய புன்னகையைக் கண்ட அடுத்த நொடி எனக்குள் உருப்பெற்ற கவி தவறுகள் இருந்தால் மன்னிக்க தோழர்களே )