alaguraj
23-09-2007, 11:19 AM
வந்துட்டேன்யா... வந்துட்டேன்யா! வணக்கமுங்க!
ஊர்ல கல்யாணம்... மார்ல சந்தனம் பாங்க. அப்படி ஒரு ஆளுதானப்பு நானு!
பட்டிக் காட்டுப் பய. நாலு காசு பொழங்டகுற வீடு இல்ல. சொத்து சொகம்னு எதுவுமே கிடையாது. பட்டணத்து நாகரிகமும் பழக்கமில்ல. தஸ்ஸ புஸ்ஸனு இங்கிலீஷ் பேசத் தெரியாது. அதுனால என்ன... அனுபவம் இருக்கே... அதுவுமில்லாம நானெல்லாம் மதுரக்காரன்ல!
இன்னிக்டீ மெட்ராஸ்ல காமெடி நடிகனா வண்*டியோடுது. ஆனா, இப்பவும் நமக்கு அட்ரஸ் மதுரதாண்ணே. இப்போ நம்ம பொழப்பு தலப்பு பத்தி பேசுவோம். சந்தன கூத்தா நடந்திருக்கு நம்ம வாழ்க்கையில!
மாரியம்மன் கோயில்ல மஞ்சத் தண்ணி ஊத்தினதும், ஆடு ஒரு சிலுப்பு சிலுப்பும் பாருங்க, தீபாவளின்னா அப்படி மனசு சிலுத்துக்கும்.
நமக்க்கு எல்லாமே நம்ம கூட்டாளிகதான்! அவிங்களோட வெள்ளந்தியா சுத்திக்கிட்டுத் திரியற துல ஒரு சுகம். ஆகா... அது ஒரு வாழ்க்கை!
தீபாவளின்னா ஒரு மாசத்துக்கு முன்னாலயே மனுஷனுக்கு அருளேற ஆரம்பிச்சிரும். புதுத் துணி, வேட்டு, வெளாட்டு, கறிச்சோறு, சினிமானு ராத்திரி எல்லாம் கனவு வர ஆரம்பிச்சிரும்ல.
நடராஜப் பிள்ளை.... எங்கப்பா. எங்களுக்காகவே வாழ்ந்த மனுஷன். சுத்துப்பட்டு ஏரியாவுல, கண்ணாடி வெட்டுறதுல கில்லாடியாம் அந்த ஆளு.
அவரு வேலை திறமையைப் பார்த்துப்புட்டு, கொடைக்கானல்ல வெள்ளைக்காரன் பங்களாவுக்கே வேலைக்டீக் கூப்பிட்டான்னா பாத்துக்கங்க.
பிரீமியர் சக்ரவர்த்தி வேட்டி ஒண்ணு அப்போ பாப்புலர். அது வேணும்னு மூஞ்சியைத் தூக்கி வெச்சிக்கிட்டுத் திரிவேன்.
கொள்ளத்துட்டு சொல்வானேடான்னு மறுகிப்புட்டு, மகனுக்கு பிடிச்சதுன்னு ராத்திரி எங்கேயோ புடிச்சுக் கொண்டாந்து, ஓரத்துல மஞ்சத்தடவி வெச்ச மனுஷன மறக்க முடியுமா?
தீபாவளிக்கு மொதநாளு ராத்திரி டவுனு பக்கம் கௌம்புவோம். கையில மஞ்சப்பை இருக்குமே தவிர, பையில சல்லிக்காசு இருக்காது. ரோட்டுல பனியன், ஜட்டி,
செருப்புனு ஆரம்பிச்சு அம்புட்டு அயிட்டமும் மானாவாரியா குமிச்சுப்போட்டு விப்பாங்க. திருவிழாக் கூட்டம் திரியும்.
நாம ஒரு நேக்கா, அப்பயே போற போக்டீல ரெண்டு செருப்பு, நாலு கர்ச்சீப்னு கையில சிக்குனதையெல்லாம் லவட்டிருவோம்ல.
வேட்டை முடிஞ்சதும், வைகையாத்துப் பக்கம் ஓரமா ஒக்காந்து வசூல கரெக்டாப் பங்குபோட்டுப் பிரிப்போம்.
வீரப்பனைப் பிடிக்க அதிரடிபடை ஆபீஸருக கூடிபேசின மாதிரி, மக்காநாளு என்ன பண்ணப்போறோம்னு அம்புட்டையும் பேசி முடிவு பண்ணிப்புட்டுத்தேன் கலைவோம்.
வீட்ல உரல்ல மறுநாளு இட்லிக்கு மாவரைக்க ஆரம்பிச்சுட்டா, அப்பயே குளுந்துபோகும் மனசு. பொழுது விடியுதோ இல்லையோ... சட்டி
எண்ணெயைத் தலையில கவுத்து, கைப்புடி சீயக்காயை அள்ளிக் கொறகொறனு தேஞ்ச்சிக் குளிச்சிப்புட்டு, புதுத்துணியை எடுத்து ஒதறிப் போட்டா திருநாளு தொடங்கிரும். வெள்ளாட்டுக் கறியை ஆத்தா பஞ்சு மாதிரி வறுத்து வெச்சு, பதினஞ்சு இட்லியைக் கொட்டி, நடுவுல குழிவெட்டிக் கோழிக் குழம்பை ஊத்தி சாப்டா. அட.... அட... அடடா!....
உக்காந்து ஒரு வெட்டு வெட்டுனோம்னா, காங்கிரீட் செட் போட்ட மாதிரி கரெக்டா இருக்கும்.
முடிச்சு மொழங்கை வரைக்கும் நக்கிக்கித்டுத்தான் எந்திரிப்போம். ஆத்தா அப்பன் கையில கால்ல விழுந்து முப்பது நாப்பது ரூபாயைப் புடுங்கிக்கிட்டு பொறப்பட்ருவோம்ல.
கூட்டாளிக வந்திருவானுங்க. ஒரே அலப்பறைதேன். ஆளுக்கொரு சைக்கிளை எடுத்தோம்னா, மதுர கிழியும். தங்கம், சென்ட்ரலு, ரீகலு, சிந்தாமணி, நியூ சினிமானு ஊர்வலம் கௌம்பிருவோம். எம்.ஜி.ஆர். படம் பாக்கலேன்னா அது என்னா தீபாவளி? அன்னிக்கு டிக்கட் வாங்கறது கஷ்டம்னு சொல்வாங்க.
முத நாளு ராத்திரியே அவனவன் க்யூவுல நிப்பான். நாமதான் தரையில நடக்கறதில்லியே.. அவிங்க தலை மேல நடந்து டிக்கெட் வாங்கற சாதியாச்சே. எங்க கூட்டத்துல ஒரு டஜன் பேரு இருப்பாஞ்ங்க. முருகேசன்தான் தலைவன். காசடிசிட்டு வர்றதுல அவன் ஒரு கபர்சிங்கு. தீபாவளின்னா நிச்சயமா ரெண்டு படம் பாத்தாகணும். இதுக்கிடையில வெடி வெக்கறதே தனித் திருவிழாதேன். வின்னர் பட கைப்புள்ள கணக்கா நெசத்துலயும் நாம சவடால் பார்ட்டிதென்!
அதுவும் ஏதாவது பொட்டப்புள்ளைக கண்ணுல பட்டுட்டா, நாம மிலிட்டரி ரேஞ்சுக்கு பிக்கப் ஆயிருவோம்.
நொட்டாங் கையிலயே வெடிப்போம்லேன்னு உதாரா வேட்டு விடுவோம். அது சனியன், கொளுத்தித் தூக்கிப் போடற நேரம் பாத்து, எக்குத்தப்பா வெடிச்சுத் தொலைக்கும். வலிக்குந்தேன்... எரியுந்தேன்... அழுகையே வருந்தேன். ஆனாலும் அடுத்த தெரு போற வரைக்கும் ஒரு நேக்குல சமாளிச்சு நடக்கணும். இல்லேன்னா மானம் போயிரும்ல. உள்ளங்கை யில ஊதா மை ஊத்தாம ஒரு தீபாவளியும் முடிஞ்ச தில்லை. வீரதீர சாகசங்கள்ல ஈடுபடறப்போ விழுப்புண்ணு சகஜம்தானப்பு!
கழுதை வால்ல சரம் கட்டறது, கெழவன் வர்றப்போ வெ போட்டு தெறிக்க விடறதுனு அங்கங்க நாலு பேரைப் பயந்து அலறி ஓடவிட்டு, அவன் திட்டிக்
கிட்டே போவான்ல... மனுஷப்பயலுக்கு அதுல ஒரு சந்தோஷம்.
தீபாவளிக்கு நாடகமும் போடுவோம். வேட்டியை விரிச்சுக் கட்டி, அரிக்கேன் விளக்கைப் பின்னால வெச்சு, டிராமா நடக்கும். அடே வவேலு, ஆனாலும் ரொம்ப ஆட்டம்டா! ன்னு கெழவி கத்தும். ஆத்தா ஒண்ணும் சொல்லாது. அப்பாவோ அன்னிக்கும் கடையில் உக்காந்து கண்ணாடி வெட்டுவார்!
ஒரு தீபாவளியை மறக்க மாட்டேன். வேலைக்குப் போன அப்பா, நெஞ்சு வலிக்துன்னு வீட்ல வந்து படுத்தார். ஆஸ்பத்திரிக்கு அள்ளிட்டு ஓடுனோம். டாக்டர்கள் பாத்துட்டு, காப்பாத்திரலாம்பா. ஒரு லட்ச ரூபா ரெடிபண்ணிருன்னு சொன்னாங்க. லட்சத்துக்கு எத்தனை சைபர்னுகூடத் தெரியாதே!
கண்ணு முன்னால அப்பா செத்துப்போனாருங்க. குடும்பமே கொலைஞ்சு போச்சு. அதோட முடிஞ்சுது அத்தனை ஆட்ட மும். கூட்டாளி களோடு சேர்ந்து திரிய முடியலை. தம்பி, தங்கச்சிங்க என் பூஞ்சியைப் பாத்து நிக்குது. நாலு பக்கமும் தவிச்சு நின்னு பாத்தேன். அதுக்கப்புறம் ரெண்டு மூணு தீபாவளிக்கு வீட்டுல உரல் சத்தம்கூட இல்லை. அப்புறந்தேன் மெட்ராசுக்கு நான் வண்டி
யேறின தெல்லாம்.
இப்ப காசு கையில இருக்கு. அப்பா இல்லை!
அதுக்கப்புறம் குடும்பத்தை எந்தக் குறையுமில்லாமப் பாத்துக்கறேன். தீபாவளின்னா பொட்டி
யைத் தூக்கிட்டு, மதுரைக்குக் கௌம்பிருவேன். தம்பி, தங்கச்சி, ஆத்தானு அத்தனை பேரும் கூடிக் கும்மிடியச்சா தானப்பு தீபாவளி தீபாவளி மாதிரியிருக்கும்.
அப்பு வர்ட்டா? ....
நன்றி: பழய ஆவி
ஊர்ல கல்யாணம்... மார்ல சந்தனம் பாங்க. அப்படி ஒரு ஆளுதானப்பு நானு!
பட்டிக் காட்டுப் பய. நாலு காசு பொழங்டகுற வீடு இல்ல. சொத்து சொகம்னு எதுவுமே கிடையாது. பட்டணத்து நாகரிகமும் பழக்கமில்ல. தஸ்ஸ புஸ்ஸனு இங்கிலீஷ் பேசத் தெரியாது. அதுனால என்ன... அனுபவம் இருக்கே... அதுவுமில்லாம நானெல்லாம் மதுரக்காரன்ல!
இன்னிக்டீ மெட்ராஸ்ல காமெடி நடிகனா வண்*டியோடுது. ஆனா, இப்பவும் நமக்கு அட்ரஸ் மதுரதாண்ணே. இப்போ நம்ம பொழப்பு தலப்பு பத்தி பேசுவோம். சந்தன கூத்தா நடந்திருக்கு நம்ம வாழ்க்கையில!
மாரியம்மன் கோயில்ல மஞ்சத் தண்ணி ஊத்தினதும், ஆடு ஒரு சிலுப்பு சிலுப்பும் பாருங்க, தீபாவளின்னா அப்படி மனசு சிலுத்துக்கும்.
நமக்க்கு எல்லாமே நம்ம கூட்டாளிகதான்! அவிங்களோட வெள்ளந்தியா சுத்திக்கிட்டுத் திரியற துல ஒரு சுகம். ஆகா... அது ஒரு வாழ்க்கை!
தீபாவளின்னா ஒரு மாசத்துக்கு முன்னாலயே மனுஷனுக்கு அருளேற ஆரம்பிச்சிரும். புதுத் துணி, வேட்டு, வெளாட்டு, கறிச்சோறு, சினிமானு ராத்திரி எல்லாம் கனவு வர ஆரம்பிச்சிரும்ல.
நடராஜப் பிள்ளை.... எங்கப்பா. எங்களுக்காகவே வாழ்ந்த மனுஷன். சுத்துப்பட்டு ஏரியாவுல, கண்ணாடி வெட்டுறதுல கில்லாடியாம் அந்த ஆளு.
அவரு வேலை திறமையைப் பார்த்துப்புட்டு, கொடைக்கானல்ல வெள்ளைக்காரன் பங்களாவுக்கே வேலைக்டீக் கூப்பிட்டான்னா பாத்துக்கங்க.
பிரீமியர் சக்ரவர்த்தி வேட்டி ஒண்ணு அப்போ பாப்புலர். அது வேணும்னு மூஞ்சியைத் தூக்கி வெச்சிக்கிட்டுத் திரிவேன்.
கொள்ளத்துட்டு சொல்வானேடான்னு மறுகிப்புட்டு, மகனுக்கு பிடிச்சதுன்னு ராத்திரி எங்கேயோ புடிச்சுக் கொண்டாந்து, ஓரத்துல மஞ்சத்தடவி வெச்ச மனுஷன மறக்க முடியுமா?
தீபாவளிக்கு மொதநாளு ராத்திரி டவுனு பக்கம் கௌம்புவோம். கையில மஞ்சப்பை இருக்குமே தவிர, பையில சல்லிக்காசு இருக்காது. ரோட்டுல பனியன், ஜட்டி,
செருப்புனு ஆரம்பிச்சு அம்புட்டு அயிட்டமும் மானாவாரியா குமிச்சுப்போட்டு விப்பாங்க. திருவிழாக் கூட்டம் திரியும்.
நாம ஒரு நேக்கா, அப்பயே போற போக்டீல ரெண்டு செருப்பு, நாலு கர்ச்சீப்னு கையில சிக்குனதையெல்லாம் லவட்டிருவோம்ல.
வேட்டை முடிஞ்சதும், வைகையாத்துப் பக்கம் ஓரமா ஒக்காந்து வசூல கரெக்டாப் பங்குபோட்டுப் பிரிப்போம்.
வீரப்பனைப் பிடிக்க அதிரடிபடை ஆபீஸருக கூடிபேசின மாதிரி, மக்காநாளு என்ன பண்ணப்போறோம்னு அம்புட்டையும் பேசி முடிவு பண்ணிப்புட்டுத்தேன் கலைவோம்.
வீட்ல உரல்ல மறுநாளு இட்லிக்கு மாவரைக்க ஆரம்பிச்சுட்டா, அப்பயே குளுந்துபோகும் மனசு. பொழுது விடியுதோ இல்லையோ... சட்டி
எண்ணெயைத் தலையில கவுத்து, கைப்புடி சீயக்காயை அள்ளிக் கொறகொறனு தேஞ்ச்சிக் குளிச்சிப்புட்டு, புதுத்துணியை எடுத்து ஒதறிப் போட்டா திருநாளு தொடங்கிரும். வெள்ளாட்டுக் கறியை ஆத்தா பஞ்சு மாதிரி வறுத்து வெச்சு, பதினஞ்சு இட்லியைக் கொட்டி, நடுவுல குழிவெட்டிக் கோழிக் குழம்பை ஊத்தி சாப்டா. அட.... அட... அடடா!....
உக்காந்து ஒரு வெட்டு வெட்டுனோம்னா, காங்கிரீட் செட் போட்ட மாதிரி கரெக்டா இருக்கும்.
முடிச்சு மொழங்கை வரைக்கும் நக்கிக்கித்டுத்தான் எந்திரிப்போம். ஆத்தா அப்பன் கையில கால்ல விழுந்து முப்பது நாப்பது ரூபாயைப் புடுங்கிக்கிட்டு பொறப்பட்ருவோம்ல.
கூட்டாளிக வந்திருவானுங்க. ஒரே அலப்பறைதேன். ஆளுக்கொரு சைக்கிளை எடுத்தோம்னா, மதுர கிழியும். தங்கம், சென்ட்ரலு, ரீகலு, சிந்தாமணி, நியூ சினிமானு ஊர்வலம் கௌம்பிருவோம். எம்.ஜி.ஆர். படம் பாக்கலேன்னா அது என்னா தீபாவளி? அன்னிக்கு டிக்கட் வாங்கறது கஷ்டம்னு சொல்வாங்க.
முத நாளு ராத்திரியே அவனவன் க்யூவுல நிப்பான். நாமதான் தரையில நடக்கறதில்லியே.. அவிங்க தலை மேல நடந்து டிக்கெட் வாங்கற சாதியாச்சே. எங்க கூட்டத்துல ஒரு டஜன் பேரு இருப்பாஞ்ங்க. முருகேசன்தான் தலைவன். காசடிசிட்டு வர்றதுல அவன் ஒரு கபர்சிங்கு. தீபாவளின்னா நிச்சயமா ரெண்டு படம் பாத்தாகணும். இதுக்கிடையில வெடி வெக்கறதே தனித் திருவிழாதேன். வின்னர் பட கைப்புள்ள கணக்கா நெசத்துலயும் நாம சவடால் பார்ட்டிதென்!
அதுவும் ஏதாவது பொட்டப்புள்ளைக கண்ணுல பட்டுட்டா, நாம மிலிட்டரி ரேஞ்சுக்கு பிக்கப் ஆயிருவோம்.
நொட்டாங் கையிலயே வெடிப்போம்லேன்னு உதாரா வேட்டு விடுவோம். அது சனியன், கொளுத்தித் தூக்கிப் போடற நேரம் பாத்து, எக்குத்தப்பா வெடிச்சுத் தொலைக்கும். வலிக்குந்தேன்... எரியுந்தேன்... அழுகையே வருந்தேன். ஆனாலும் அடுத்த தெரு போற வரைக்கும் ஒரு நேக்குல சமாளிச்சு நடக்கணும். இல்லேன்னா மானம் போயிரும்ல. உள்ளங்கை யில ஊதா மை ஊத்தாம ஒரு தீபாவளியும் முடிஞ்ச தில்லை. வீரதீர சாகசங்கள்ல ஈடுபடறப்போ விழுப்புண்ணு சகஜம்தானப்பு!
கழுதை வால்ல சரம் கட்டறது, கெழவன் வர்றப்போ வெ போட்டு தெறிக்க விடறதுனு அங்கங்க நாலு பேரைப் பயந்து அலறி ஓடவிட்டு, அவன் திட்டிக்
கிட்டே போவான்ல... மனுஷப்பயலுக்கு அதுல ஒரு சந்தோஷம்.
தீபாவளிக்கு நாடகமும் போடுவோம். வேட்டியை விரிச்சுக் கட்டி, அரிக்கேன் விளக்கைப் பின்னால வெச்சு, டிராமா நடக்கும். அடே வவேலு, ஆனாலும் ரொம்ப ஆட்டம்டா! ன்னு கெழவி கத்தும். ஆத்தா ஒண்ணும் சொல்லாது. அப்பாவோ அன்னிக்கும் கடையில் உக்காந்து கண்ணாடி வெட்டுவார்!
ஒரு தீபாவளியை மறக்க மாட்டேன். வேலைக்குப் போன அப்பா, நெஞ்சு வலிக்துன்னு வீட்ல வந்து படுத்தார். ஆஸ்பத்திரிக்கு அள்ளிட்டு ஓடுனோம். டாக்டர்கள் பாத்துட்டு, காப்பாத்திரலாம்பா. ஒரு லட்ச ரூபா ரெடிபண்ணிருன்னு சொன்னாங்க. லட்சத்துக்கு எத்தனை சைபர்னுகூடத் தெரியாதே!
கண்ணு முன்னால அப்பா செத்துப்போனாருங்க. குடும்பமே கொலைஞ்சு போச்சு. அதோட முடிஞ்சுது அத்தனை ஆட்ட மும். கூட்டாளி களோடு சேர்ந்து திரிய முடியலை. தம்பி, தங்கச்சிங்க என் பூஞ்சியைப் பாத்து நிக்குது. நாலு பக்கமும் தவிச்சு நின்னு பாத்தேன். அதுக்கப்புறம் ரெண்டு மூணு தீபாவளிக்கு வீட்டுல உரல் சத்தம்கூட இல்லை. அப்புறந்தேன் மெட்ராசுக்கு நான் வண்டி
யேறின தெல்லாம்.
இப்ப காசு கையில இருக்கு. அப்பா இல்லை!
அதுக்கப்புறம் குடும்பத்தை எந்தக் குறையுமில்லாமப் பாத்துக்கறேன். தீபாவளின்னா பொட்டி
யைத் தூக்கிட்டு, மதுரைக்குக் கௌம்பிருவேன். தம்பி, தங்கச்சி, ஆத்தானு அத்தனை பேரும் கூடிக் கும்மிடியச்சா தானப்பு தீபாவளி தீபாவளி மாதிரியிருக்கும்.
அப்பு வர்ட்டா? ....
நன்றி: பழய ஆவி