சிவா.ஜி
23-09-2007, 06:05 AM
என் சிறுவயதில் அதாவது நான் 5ஆம் வகுப்பு படிக்கும் வரை நான் இரு தாய்களிடம் வளர்ந்தவன்.ஒரு தாயை அம்மா என்றும்,இன்னொரு தாயை அக்கா என்றும் அழைத்தேன்.அந்த அக்கா பெயர் இன்றுவரை தெரியாது.அக்காவின் கணவர் பெயர் அப்துல் மஜீத்.என்னுடைய அப்பாவின் மிக நெருங்கிய நன்பர்.எங்கோ சிறு கிராமத்தில் சிறிய பெட்டிக்கடை வைத்திருந்தவரை,கட்டாயப்படுத்தி நகரத்துக்கு வரவைத்தார் அப்பா.கையிலிருந்த பணத்தையெல்லாம் போட்டு நகரத்தின் மையப்பகுதியில் கடை ஒன்றை வாடகைக்கு எடுத்து கொஞ்சம் பெரிய அளவில் மளிகைக் கடை வைத்தார்கள்.கடும் உழைப்பு,மற்றும் வாடிக்கையாளர்களிடம் நல்லுறவு அந்த கடைக்கு அபரிதமான வளர்ச்சியைக் கொடுத்தது.வாடகைக் கடை சொந்தமானது.அந்த நாட்களிலேயே ஒன்றரை லட்சம் ரூபாயில் மிகப் பெரிய வீடு கட்டினார்கள்.நாங்கள் அப்போதும் வாடகை வீட்டில்தான்.
மஜீத்பாய் லேட்டாகத்தான் திருமணம் செய்து கொண்டார்.அதுதான் அக்கா. ஏழு குழந்தைகள் பெற்றும்,தாய்மையின் தவிப்பு தீராமல் என்னையும் தன் மகனாக பாசத்தில் நனைய வைத்தார்.மூத்தவன் சனாவுல்லா அதிகமாக யாருடனும் பழக மாட்டான்.அடுத்தது நாஸின்.என் சம வயது.என்னுடடைய வகுப்புத் தோழியும் கூட.அடுத்தவன் ரிஸ்வான்,என்னைவிட ஒரு வயது சிறியவன்,ஆனால் என்னுடைய மிக நெருக்கமான நன்பன்.நான்காம் வகுப்பு படிக்கும்போதே வீட்டுக்குத் தெரியாமல்,குப்பைத்தொட்டிக்குப் பின்னால் ஒளிந்து கொண்டு பீடி பிடித்தோம்.அதிகாலையில் எழுந்து கடைகள் திறக்குமுன் அவற்றின் முன்னால் வீசப்பட்டிருக்கும் காலியான தீப்பெட்டிகளையும்,சிகெரெட் அட்டைகளையும் சேகரிப்போம்.பாஷன்ஷோவும்,சார்மினாரும் சொத்துக்களாக எங்கள் ரகசிய பெட்டிகளில் பணக்கட்டுகளாய் ஆக்ரமித்து இருக்கும்.
அதிகமான பணம் மூத்தவனை கெடுத்துவிட்டது.சேர்வார் சரியில்லாமல் பணத்தைக் கண்டபடி செலவு செய்தான்.வரவு அதிகமாக இருந்ததால்,செலவு கணக்கில் கொள்ளப்படவில்லை.அக்காவுக்கு என் மேல் இருந்த பிரியத்தால் நான் குழந்தையாய் இருக்கும்போதிலிருந்தே என்னை என் வீட்டிலிருந்து தூக்கிக் கொண்டு வந்து விடுவார்.அவர்களோடு ஒருவனாய் நானும் வளர்ந்தேன்.அவர்கள் உருது பேசும் முஸ்லீம்கள்.அதனால் கொஞ்சம் உருதும் கற்றுக்கொண்டேன்.
அது நோன்பு சமயம்.பள்ளி விடுமுறை.நான் நான்காம் வகுப்பில் இருந்தேன்.அவர்கள் வீட்டில் விளையாடிக்கொண்டிருந்தேன்.அக்கா அழைத்தார்.வீட்டில் என்னை மணி என்றுதான் அழைப்பார்கள்."மணி இங்கே வா" சமயலறையிலிருந்து அக்காவின் குரல்.நோன்பு மாதத்தில் அவர்கள் பகலில் சாப்பிட மாட்டார்கள் என்று தெரியும்.இப்போது எதற்கு சமையலறையிலிருக்கிறார்...யோசனையோடு சென்றேன்."இதுல உப்பு சரியா இருக்கா பார்"சின்ன கரண்டியில் குழம்பை எடுத்து என் உள்ளங்கையில் ஊற்றினார்.நக்கிப்பார்த்துவிட்டு"சரியா இருக்குக்கா"என்றேன்."நான் சாப்பிடக்கூடாதில்லையா அதான் டேஸ்ட் பாக்க உன்னைக் கூப்பிட்டேன்."என்றவரிடம்.."நீங்க சாயந்திரம்தானே சமைப்பீர்கள் இப்போது எதற்கு" என்று அந்த மதியவேளை உணவு தயாரிப்பின் காரணம் கேட்டேன்."உனக்குத்தாண்டா...விளையாடி களைச்சுப்போயிருப்ப கொஞ்சம் இரு இப்ப ரெடியாயிடும்"என்றார்."அக்கா நான் வீட்டுக்குப் போய் சாப்பிட்டுக்கறேன் நீங்க ரெஸ்ட் எடுக்க வேண்டியதுதானே"என்றதும்"பெரிய மனுஷன் பேச்செல்லாம் பேசாத..பேசாம வந்து சாப்பிடு..போ போய் கை கழுவிட்டு வா...கையெல்லாம் பாரு...பாதாம் மரத்துல ஏறீனீங்களா" என்றதும் "ஆமாக்கா"என்று சொல்லிவிட்டு ஓடிப்போய் கை கழுவிக்கொண்டு வந்தமர்ந்தேன்.சுடச்சுட சாதமும்,குழம்பும் பரிமாறிவிட்டு பக்கத்திலிருந்து நான் சாப்பிடுவதையே பார்த்துக்கொண்டிருந்தார்."அக்கா நீங்க யாருமே சாப்பிடாம நான் மட்டும் சாப்டறது என்னமோ போல இருக்குக்கா" என்றதற்கு"பேசாம சாப்பிடுடா..மனசார நோன்பு இருக்கறவங்களுக்கு யாரு சாப்பிடறதைப் பாத்தும் ஆசை வரக்கூடாது.அதுவுமில்லாம,இந்த நோன்பு இருக்கறதே அடுத்தவங்க பசி என்னன்னு தெரிஞ்சிக்கறதுக்குத்தான்.பசியோட இருக்கறவங்களுக்கு சாப்பாடுபோட்டு அவங்க வயிறு நிறைய சாப்பிடறதப் பாக்கறதே ஒரு பெரிய புண்ணியண்டா..உனக்கெல்லாம் இது புரியாது."எனக்கு அந்த வயதில் அவ்வளவாக அவர் சொன்னது புரியவில்லைதான்,ஆனால் புரிந்ததெல்லாம் அந்த பாசம்தான்.
அப்படி பாசம் கொட்டி வளர்த்த அந்த அக்கா பின்னாளில் நாங்கள் கும்பகோணத்துக்கு குடிபெயர்ந்த பிறகு அந்த அக்காவின் சொந்த அண்ணனாலேயே வஞ்சிக்கப்பட்டு எல்லா சொத்து சுகங்களையும் இழந்து திருப்பத்தூரில் ஒரு சிறிய வாடகை வீட்டில் ஒருவேளை உணவுக்காக பீடி சுற்றி சம்பாதிக்கும் கொடுமையும் நிகழ்ந்தது.ஒரு ராஜகுமாரி போலிருந்த நாஸின் தொடர்ந்து படிக்க முடியாமல் ஏதோ ஒரு கறிக்கடைகாரனுக்கு வாழ்க்கைப்பட்டு இன்று கஷ்ட ஜீவனம் நடத்திக்கொண்டிருக்கிறாள்.எத்தனையோமுறை அவர்களையெல்லாம் பார்க்கவேண்டுமென்று தோன்றினாலும்,அவர்களை இந்த நிலைமையில் பார்க்க என் மனது ஒத்துக்கொள்ளவில்லை.என்னுடைய அண்ணன் ஒருமுறை அவர்களைச் சென்று பார்த்துவிட்டு வந்து மஜீத்பாய் இறந்துவிட்டதாகவும்,சனாவுல்லா கடைசிவரை திருந்தாமல் கெட்ட சகவாசத்தால் ஏதோதோ வியாதி வந்து சின்ன வயதிலேயே இறந்துவிட்டதாகவும்,ரிஸ்வான் கூலிவேலைக்காக பெங்களூரில் இருப்பதாகவும் சொன்னார்.நாஸினைப்பற்றிக் கேட்டபோது"உன்னை ரொம்ப விசாரிச்சா ஆனா நீ வந்து அவளை பாக்கக்கூடாதுன்னு சொல்லிட்டாடா...உன்னைப்பத்தி பேசும்போதே அழறா..இருந்தாலும் ஒருவாட்டி நீ போய் அவளைப் பார்த்துவிட்டு வா" என்றார்.10 வயதில் நான் பழகிய அந்த இளவரசியை இந்த சூழ்நிலையில் எப்படி என்னால் பார்க்கமுடியும்.என் மனைவிகூட சொல்கிறார் "போய் பாத்துட்டு ஏதாவது உதவி தேவைன்னா செஞ்சிட்டு வாங்க" என்று.என்ன உதவி செய்ய முடியும்?பணம் கொடுக்கலாம்,ஆறுதலாய் சில வார்த்தைகள் சொல்லலாம்...ஆனால் அந்த இழந்த வசந்தத்தை எப்படி மீட்டுக்கொடுக்க முடியும்.மனது முழுவதும் பாரத்துடன் தள்ளிப்போட்டுக்கொண்டே வருகிறேன்.
மஜீத்பாய் லேட்டாகத்தான் திருமணம் செய்து கொண்டார்.அதுதான் அக்கா. ஏழு குழந்தைகள் பெற்றும்,தாய்மையின் தவிப்பு தீராமல் என்னையும் தன் மகனாக பாசத்தில் நனைய வைத்தார்.மூத்தவன் சனாவுல்லா அதிகமாக யாருடனும் பழக மாட்டான்.அடுத்தது நாஸின்.என் சம வயது.என்னுடடைய வகுப்புத் தோழியும் கூட.அடுத்தவன் ரிஸ்வான்,என்னைவிட ஒரு வயது சிறியவன்,ஆனால் என்னுடைய மிக நெருக்கமான நன்பன்.நான்காம் வகுப்பு படிக்கும்போதே வீட்டுக்குத் தெரியாமல்,குப்பைத்தொட்டிக்குப் பின்னால் ஒளிந்து கொண்டு பீடி பிடித்தோம்.அதிகாலையில் எழுந்து கடைகள் திறக்குமுன் அவற்றின் முன்னால் வீசப்பட்டிருக்கும் காலியான தீப்பெட்டிகளையும்,சிகெரெட் அட்டைகளையும் சேகரிப்போம்.பாஷன்ஷோவும்,சார்மினாரும் சொத்துக்களாக எங்கள் ரகசிய பெட்டிகளில் பணக்கட்டுகளாய் ஆக்ரமித்து இருக்கும்.
அதிகமான பணம் மூத்தவனை கெடுத்துவிட்டது.சேர்வார் சரியில்லாமல் பணத்தைக் கண்டபடி செலவு செய்தான்.வரவு அதிகமாக இருந்ததால்,செலவு கணக்கில் கொள்ளப்படவில்லை.அக்காவுக்கு என் மேல் இருந்த பிரியத்தால் நான் குழந்தையாய் இருக்கும்போதிலிருந்தே என்னை என் வீட்டிலிருந்து தூக்கிக் கொண்டு வந்து விடுவார்.அவர்களோடு ஒருவனாய் நானும் வளர்ந்தேன்.அவர்கள் உருது பேசும் முஸ்லீம்கள்.அதனால் கொஞ்சம் உருதும் கற்றுக்கொண்டேன்.
அது நோன்பு சமயம்.பள்ளி விடுமுறை.நான் நான்காம் வகுப்பில் இருந்தேன்.அவர்கள் வீட்டில் விளையாடிக்கொண்டிருந்தேன்.அக்கா அழைத்தார்.வீட்டில் என்னை மணி என்றுதான் அழைப்பார்கள்."மணி இங்கே வா" சமயலறையிலிருந்து அக்காவின் குரல்.நோன்பு மாதத்தில் அவர்கள் பகலில் சாப்பிட மாட்டார்கள் என்று தெரியும்.இப்போது எதற்கு சமையலறையிலிருக்கிறார்...யோசனையோடு சென்றேன்."இதுல உப்பு சரியா இருக்கா பார்"சின்ன கரண்டியில் குழம்பை எடுத்து என் உள்ளங்கையில் ஊற்றினார்.நக்கிப்பார்த்துவிட்டு"சரியா இருக்குக்கா"என்றேன்."நான் சாப்பிடக்கூடாதில்லையா அதான் டேஸ்ட் பாக்க உன்னைக் கூப்பிட்டேன்."என்றவரிடம்.."நீங்க சாயந்திரம்தானே சமைப்பீர்கள் இப்போது எதற்கு" என்று அந்த மதியவேளை உணவு தயாரிப்பின் காரணம் கேட்டேன்."உனக்குத்தாண்டா...விளையாடி களைச்சுப்போயிருப்ப கொஞ்சம் இரு இப்ப ரெடியாயிடும்"என்றார்."அக்கா நான் வீட்டுக்குப் போய் சாப்பிட்டுக்கறேன் நீங்க ரெஸ்ட் எடுக்க வேண்டியதுதானே"என்றதும்"பெரிய மனுஷன் பேச்செல்லாம் பேசாத..பேசாம வந்து சாப்பிடு..போ போய் கை கழுவிட்டு வா...கையெல்லாம் பாரு...பாதாம் மரத்துல ஏறீனீங்களா" என்றதும் "ஆமாக்கா"என்று சொல்லிவிட்டு ஓடிப்போய் கை கழுவிக்கொண்டு வந்தமர்ந்தேன்.சுடச்சுட சாதமும்,குழம்பும் பரிமாறிவிட்டு பக்கத்திலிருந்து நான் சாப்பிடுவதையே பார்த்துக்கொண்டிருந்தார்."அக்கா நீங்க யாருமே சாப்பிடாம நான் மட்டும் சாப்டறது என்னமோ போல இருக்குக்கா" என்றதற்கு"பேசாம சாப்பிடுடா..மனசார நோன்பு இருக்கறவங்களுக்கு யாரு சாப்பிடறதைப் பாத்தும் ஆசை வரக்கூடாது.அதுவுமில்லாம,இந்த நோன்பு இருக்கறதே அடுத்தவங்க பசி என்னன்னு தெரிஞ்சிக்கறதுக்குத்தான்.பசியோட இருக்கறவங்களுக்கு சாப்பாடுபோட்டு அவங்க வயிறு நிறைய சாப்பிடறதப் பாக்கறதே ஒரு பெரிய புண்ணியண்டா..உனக்கெல்லாம் இது புரியாது."எனக்கு அந்த வயதில் அவ்வளவாக அவர் சொன்னது புரியவில்லைதான்,ஆனால் புரிந்ததெல்லாம் அந்த பாசம்தான்.
அப்படி பாசம் கொட்டி வளர்த்த அந்த அக்கா பின்னாளில் நாங்கள் கும்பகோணத்துக்கு குடிபெயர்ந்த பிறகு அந்த அக்காவின் சொந்த அண்ணனாலேயே வஞ்சிக்கப்பட்டு எல்லா சொத்து சுகங்களையும் இழந்து திருப்பத்தூரில் ஒரு சிறிய வாடகை வீட்டில் ஒருவேளை உணவுக்காக பீடி சுற்றி சம்பாதிக்கும் கொடுமையும் நிகழ்ந்தது.ஒரு ராஜகுமாரி போலிருந்த நாஸின் தொடர்ந்து படிக்க முடியாமல் ஏதோ ஒரு கறிக்கடைகாரனுக்கு வாழ்க்கைப்பட்டு இன்று கஷ்ட ஜீவனம் நடத்திக்கொண்டிருக்கிறாள்.எத்தனையோமுறை அவர்களையெல்லாம் பார்க்கவேண்டுமென்று தோன்றினாலும்,அவர்களை இந்த நிலைமையில் பார்க்க என் மனது ஒத்துக்கொள்ளவில்லை.என்னுடைய அண்ணன் ஒருமுறை அவர்களைச் சென்று பார்த்துவிட்டு வந்து மஜீத்பாய் இறந்துவிட்டதாகவும்,சனாவுல்லா கடைசிவரை திருந்தாமல் கெட்ட சகவாசத்தால் ஏதோதோ வியாதி வந்து சின்ன வயதிலேயே இறந்துவிட்டதாகவும்,ரிஸ்வான் கூலிவேலைக்காக பெங்களூரில் இருப்பதாகவும் சொன்னார்.நாஸினைப்பற்றிக் கேட்டபோது"உன்னை ரொம்ப விசாரிச்சா ஆனா நீ வந்து அவளை பாக்கக்கூடாதுன்னு சொல்லிட்டாடா...உன்னைப்பத்தி பேசும்போதே அழறா..இருந்தாலும் ஒருவாட்டி நீ போய் அவளைப் பார்த்துவிட்டு வா" என்றார்.10 வயதில் நான் பழகிய அந்த இளவரசியை இந்த சூழ்நிலையில் எப்படி என்னால் பார்க்கமுடியும்.என் மனைவிகூட சொல்கிறார் "போய் பாத்துட்டு ஏதாவது உதவி தேவைன்னா செஞ்சிட்டு வாங்க" என்று.என்ன உதவி செய்ய முடியும்?பணம் கொடுக்கலாம்,ஆறுதலாய் சில வார்த்தைகள் சொல்லலாம்...ஆனால் அந்த இழந்த வசந்தத்தை எப்படி மீட்டுக்கொடுக்க முடியும்.மனது முழுவதும் பாரத்துடன் தள்ளிப்போட்டுக்கொண்டே வருகிறேன்.