PDA

View Full Version : கல்யாணப்பரிசு!!!



aren
22-09-2007, 01:23 AM
புதைத்தேன்
என் கோபத்தை!!!

அழித்தேன்
என் அகம்பாவத்தை!!!

உதிர்த்தேன்
என் அசட்டுச் சிரிப்பை!!!

முயற்சித்தேன்
சரி என்ற வார்த்தையை!!!

நாளை
எனக்கு கல்யாணம்!!!!

ஜெயாஸ்தா
22-09-2007, 02:07 AM
ஆமாங்க இனிமேல் மனைவி என்ன சொன்னாலும் சரி சரியென்று தலையாட்ட மட்டுமே செய்ய வேண்டும்.

jpl
22-09-2007, 02:15 AM
சொந்த அனுபவங்கள் அறங்கேறுதோ ஆரென்,ஜே.எம்.

அன்புரசிகன்
22-09-2007, 02:59 AM
இவை தான் திருமணத்திற்கான pre-qualifications???

ஷீ-நிசி
22-09-2007, 06:12 AM
இவை தான் திருமணத்திற்கான pre-qualifications???

ஆமாம்... புரியுதா....அன்பு.... :icon_ush:

----------------------------------

ஆரெனாரே அனுபவங்களோ!.. உண்மைதானே.... வேற வழி இல்ல...:)

சிவா.ஜி
22-09-2007, 06:30 AM
ஆரென் அவர்கள் எவ்வளவு பெரிய்ய்ய்ய்ய்ய உண்மைவிளம்பி என்பதைமிக அழகாக வெளிப்படுத்தி,இனி திருமணம் ஆகப்போகும் பாவப்பட்டவர்களுக்கு பாடம் சொல்லிக்கொடுத்துவிட்டார்.பாராட்டுக்கள் ஆரென்.

அமரன்
22-09-2007, 06:34 AM
நல்லத்தான் இருக்கு முகமூடி...அப்படியே இருந்தால் மிகவும் நன்று. உதவிக்கு நன்றி ஆரேன் அண்ணா.

ஓவியன்
22-09-2007, 06:40 AM
மாற்றம் என்பது மாற்றமில்லாதது, நாம் நினைப்பதெல்லாம் நடக்குமென்றால் உலகத்திலே சுவராசியம் என்ற பெயரே இல்லாமல் போய்விடும்....

உலகத்திற்காக, நம்மை சூழ்ந்துள்ள அன்பு உறவுகளுக்காக நாம் நம்மை மாற்றித் தானே ஆகவேண்டும்....

நான் என்னை மாற்றிக் கொண்டிருப்பதால் ஆரேன் அண்ணாவின் கவிதை நல்லாவே புரிகிறது.... :D

நன்றிங்க அண்ணா.... :icon_rollout:

பூமகள்
22-09-2007, 08:52 AM
எனக்கும் நல்லாவே புரியுது ஆரேன் அண்ணா. :icon_wink1:
இப்படி இருந்துவிட்டால் துன்பம் ஏது வாழ்வில்..!!
ஆனால் உண்மையாய் மாறவேண்டும்.. நடிப்பதில் உடன்பாடில்லை எனக்கு.

வாழ்த்துக்கள் அண்ணா. சுருங்கச் சொல்லி விளங்க வைத்துவிட்டீர்கள். பாராட்டுக்கள்..!!:icon_rollout:
தொடர்ந்து அசத்துங்க.:icon_b:

அறிஞர்
22-09-2007, 04:31 PM
என்ன ஆரென்.. இது யார் அனுபவம்...

சிறிய வரிகள்... அருமை அருமை... தொடருங்கள்.

இலக்கியன்
22-09-2007, 04:47 PM
அது எல்லாம் தானாக வந்துவிடும் அப்போது ஆண்கள் நிலை பெட்டிக்குள் பாம்புபோல

இணைய நண்பன்
22-09-2007, 10:23 PM
சிறிய வரியில் விருப்பம் இல்லாதவளை கரம் பிடிக்க போகிறீர்கள் என்று சொல்லிவிட்டீர்கள்.ஆனால் அவளிடம் உண்மையை சொல்லி புரிந்துணர்வுடன் கைப்பிடிப்பதே மேல்.வாழ்த்துக்கள்

என்னவன் விஜய்
22-09-2007, 10:52 PM
உதிர்த்தேன்
என் அசட்டுச் சிரிப்பை!!!


இதை மட்டும் கை விட்டு விடாதீர்கள்
நன்றி

lolluvathiyar
23-09-2007, 09:12 AM
நாளைக்கு கல்யானமா சரி சரி ஒரு வருசத்துல புதைசதெல்லாம் மீண்டும் தோண்டி எடுப்பீர்கள். சுழலும் வாழ்கை