அமரன்
17-09-2007, 02:02 PM
காலையும் மதியமும் அற்ற மத்திம வேளை. அரை வெள்ளுடை களைந்து முழு வண்ண ஆடையுள் நுழைந்தேன். கையெழுத்திட்டதும் திறந்த கதவின் வெளியே வெறிச்சென்று இருந்தது வெளி. ஒரு காக்கை குருவி கூட என்னை வரவேற்க வரவில்லை. வழி அனுப்பும்போது மட்டும் தெரிந்ததும் தெரியாததுமாக எத்தனை முகங்கள். பெட்டிக்கடை ஒன்று கண்ணில் தட்டுப்பட முதன்முதலாக எனது சம்பாத்தியத்தில் சிகரெட் வாங்கினேன். புகைப்பது தப்பு வாத்தியார் அப்பா சொன்னது காதில் ஒலித்தது. அப்படியானால் தப்பு செய்துவிட்டாய் என அழைத்து அடைத்து வைத்த இடத்தில் மட்டும் எப்படி இதை அனுமதித்தார்கள்? சிந்தனைவேகத்துக்கு ஈடுகொடுத்து நடந்தேன்.
நாளின் பெரும்பகலை காலதேவன் தின்னும் வரை என் கால்கள் யார் யாரையோ தேடி எங்கெங்கோ திரிந்தன. பழக்கப்பட்ட இடங்களில் வழக்கத்துக்கு மாறாக பழக்கமில்லாத பதில்களும் பழக்கமில்லா இடங்களில் நெகிழ்த்தும் பதில்களும் பரிசாகக் கிடைத்தன. ஈற்றில் சாலை ஓரத்தில் குட்டை சுவரின் அடைக்கலம் புகுந்தேன். கை மணிக்கூடு 17:01 எனக்காட்ட காலத்தை எண்ணும் அதன் எண்களின் அசைவில் காலத்தை கடத்தினேன். ஒன்று அறுபதாகி அறுபது ஒன்றாக அடித்த பீப் பீப் 32 வயதில் யாரும் இங்கே அரட்டை அடிக்க மாட்டார்கள் என்று இடித்துரைத்தது. கால்களுக்கு விசை கொடுத்தது.
தரை வாழிகளின் எல்லை வானம் வரையாம். எனக்கு அது கடல் வரையென வரையறுக்கபட்டது. மணலில் கால் புதைய புதைய எடுத்து மீண்டும் வைத்து எடுத்து மீண்டும் வைத்து தொடர்ந்தேன். இந்த மண்ணுக்கு மனிதன் மீது எத்துணை ஆசை பாருங்கள்? பற்றினால் விடுவதில்லை;பற்றை விட விடுவதுமில்லை. கடலின் நீளம் அளக்க விழைந்தேன்.
புன்னைவனக் கருக்குயில்களின் குரல் உருக்கி பெண்களைப் படைத்தானோ பிரம்மன். அங்கமெங்கும் தட்டினாலும் வீணை மீட்டுமிசை மாறும் வீச்சத்துடன் காற்றில் கலக்கிறதே..அட்டை கிராஃப் ஒன்றுக்கு ஆட்டோகிராஃப் நியாபகம் வந்து புன்னைகை தந்தது. அப்பால் நகர்ந்தேன்.
பாவாடையை தூக்கியபடி துள்ளிக்குதிக்கும் தேவதைகளின் குழந்தைகளின் கொலுசுச் சத்தத்தில் அலை ஆடுகிறதா? அலையின் ஓசைக்கு இசைந்தாடும் பிஞ்சுப்பாதங்களுக்கு தாளம் தட்டுகிறதா கொலுசு? இதை சாமி தந்த எந்நிலையிலும் கற்பனைக் காற்றில் பறக்கும் வரமென்பதா? நக்கீரர்களை தேட வைக்கும் சாபம் என்பதா? புரியாத புதிருடன் பலருக்குப் புதிராக நடக்கிறேனா? எல்லோரும் என்னையே பார்ப்பது போன்ற மாயை. கரையில் இருந்த கம்பத்தை முள்ளந்தண்டாக்கினேன்.
அடிவானத்தில் தெரிந்த செறிந்த கனகாம்பர மலர்க்கொத்துகள் கேள்விகளை எழுப்பின? பூமியை ஈர்த்து தன்னை சுற்ற வைக்கின்றான் சூரியன். நிலவோ பூமியால் கவரப்பட்டு அதனை வலம் வருகிறது. ஒரு நேரத்தில் கடலில் தெரியும் தன் விம்பம் பார்த்து இன்னொருவன் போட்டிக்கு வந்ததாக நினைத்து கடலில் சுழி ஓடுகிறதோ சூரியன்? அல்லது தன்னவளைச் சுற்றும் வெள்ளி நிலவை சுட்டெரிக்க விரும்பி நாளின் பாதிப்பொழுதில் தேடி அலைகிறதோ? ஆதவா மறைந்தது.என்னுள் கேள்வி பிறந்தது. நான் ஆதவனா?நிலவா?பூமியா? கடலைக் கேட்டேன். கதையைச் சொல்லு பதில் சொல்கின்றேன் என்றது.
கோகிலங்களின் சரணாலயம்; கோபியரின் கோகுலம் என எப்படி வேண்டுமானலும் சொல்லுல் அளவுக்கு இசையாலானது நந்தவனம் போன்ற எனது கல்லூரி. மூன்று ஆண்டுகள் கள்ளுண்டு ரீங்காரமிட்ட போதையில் தடுக்கி விழாது வீரனாய் வலம் வந்தேன். வருடந்தோரும் வரும் சங்கீத சங்கமம் அவ்வருடமும் வந்தது. மேற்கத்தைய ஆர்மோனியத்தில் பல்ரக இசைப் பிடித்து இளந்தென்றலில் தவழ்ந்துவரும் தெம்மாங்கில் மெட்டெடுத்து சந்தங்கள் துணயுடன் மாலை ஆக்கினேன். சந்தங்களின் சாயலில் சொல் முத்துக்களை தீட்டினேன். பதிக்கமுன் என்னைப் பற்றிக்கொண்டது இனம்புரியாத இனத்தைச் சேர்ந்த ஜுரம்.
மருத்துவமனையில் தூக்கம் இன்றி தவித்த என்னைத் தாலாட்டவந்தது என் பாட்டும் பாட்டுத்தந்த வெற்றியும்..நாற்பது நாள் வனவாசம் முடித்து நந்தவனத்துக்குள் புகுந்தேன். என்னைத் தாலாட்டியது என்னிசையா,எந்தமிழா என்னிசையின் ஏழு சுரத்தை விஞ்சிய எட்டாவது சுரமான அந்தக் குரலா? என்ற வினாவை சுமந்தபடி குரலின் சொந்தக்காரியை தேடினேன். தந்தது தரிசனம்..புதிதாக வந்தவள் புதிதாகவே தெரிந்தாள். என்னுள் மையம் கொண்ட புயல் அவள் மேல் மையல் கொள்ள வைத்தது... அகமும் புறமும் ஒன்றிணைந்த காதல் லாலா பாட வைத்தது..கண்ணசைவும் காலடியோசையும் வர்ணனை விஞ்சிய காதலை வளர்ர்த்தது..
வளரும் காலத்தில் ஒரு நாள். மீள இணைந்த பால்ய சினேகிதனுடன் எம் மீள் இணைவுக்கு மேகம் வாழ்த்துப்பூக்களை அனுப்பிக்கொண்டிருக்கும் மாலை வேளையின் ரம்மியம் கலந்து காபி பருகியபடி பாரில் இருந்தேன். காபிகாலியானதும் வெளியேவந்த எனக்கு ஆனந்த அதிர்ச்சி. கருங்கூந்தல் விரித்த தோகை மயில் போல எம்மை நாடி வந்தாள் என் சங்கீதா. ஆடும் மயிலின் கண்களில் தெரியுமே மிரட்சியும் இல்லாமல் எச்சரிக்கையும் இல்லாத இடைப்பட்ட ஒரு உணர்ச்சி..அதே உணர்ச்சி அவள் கண்களிலும் தெரிந்தது..மயிலின் கழுத்தில் எண்ணமுடியா வண்ணங்கள் இருக்குமாமே..குடைக்குள் வரலாமா கேட்போமா என நினைத்துக்கொண்டு தேடினேன்..கொண்டைச் சேவலின் தொண்டைபோல் நாட்டியம் தெரிந்தது. "குடையைக் கொண்டு போங்கள்". அவள்தான் சொன்னாள். "நீ எப்படிப் போவாய்" நண்பன் கேட்டான். ஆண்களை விட பெண்களுக்கு சுதாரிப்பு அதிகம்தான்...
"கிட்டத்தில்தானே வீடு..ஓடிப்போய் விடுவேன்"சிங்காரமாக சொன்னாள். குடையை வாங்குவதற்கு நீண்ட நண்பன் கைகளை தடுத்து "ரோஜா மொட்டவிழ்த்தாலே வண்டுகள் வட்டமிடும். வெள்ளை ரோஜா மழையில் நனைந்து காந்தாமாய் அழைத்தால் விளைவு என்னவாகும்" பொருள்படச் சொன்னேன். ஏற்றுக்கொண்டான்...திரும்பி நடந்தாள். அன்னப்பறவையை நியாகப்படுத்தினாள்...ரோஜா போனது முள்ளை என்னுள் தந்துவிட்டது...அவர்கள் தொடர்பு அறியத்துடித்தேன்...அவனே சொன்னான் எனது வருங்காலம் இவள்.....அவனை விட்டுப் பிரிந்தேன்..அவளைப் பிரிய நினைத்தேன்...
செயல்படுத்தினேன்...நெருங்கினாள் விலகினேன்..நெருக்கினாள்....நட்பை நெருங்கினேன்..தட்டுத் தடுமாறி போட்டு உடைத்தேன். கழுத்தை திருகுவான் என எதிர்பார்க்க தோளில் கைபோட்டான். நட்புவென்றதா? காதல் வென்றதா? இரண்டும் சேர்ந்து என்னை வெற்றியாளனாக்கியது என்பதுதான் நிஜம்....நகரும் மணிமுட்களில் நாட்கள் ஓட கட்டறுத்த காட்டாற்று வெள்ளமானது நமது காதல்...அப்போதுதான் எனக்குத் தெரியாமல் ஒரு நீலாம்பரி ஒருதலையால் உருவானது தெரிய வந்தது...வீட்டில் கிடைத்த அதிக சுதந்திரமும் கள்ளம் கபடமில்லா அன்பும் அளவுகடந்த பணமும் எனது சங்கோசமின்றி பழகும் பழக்கத்துக்கு காரணமானது. அதுவே எனக்கு சங்கடத்தை உண்டுபண்ணியது. அகங்காரமா,பிடிவாதமா, தீவிரபிணைப்பா ஏதோ ஒன்று நீலாம்பரியை கோழை ஆக்கியது....என் நடப்புகள் சாட்சிசொல்ல சட்டமும் பெண்ணுக்காக இரங்கியது. ஏழு ஆண்டுகள் உள்ளே தள்ளியது...
கண்களைத் திறந்தேன்...கம்பத்தில் தலை சாய்த்திருந்த என் கண்களில் கம்பத்தில் தலையில் இருந்த விளக்கு ஒளிக்கற்றை வீசியது. விலக்கிய பார்வையில் சில வினாடிகள் எதுவுமே தெரியவில்லை. அதிகம் என்றாலே குருடு அங்கே குடிவந்து விடுகின்றது..கடலைக் கேட்டேன் இப்போது சொல்...நான் சூரியனா? நிலவா? பூமியா? நிலவாக நீ இருந்தால் மீள வருகையில் களித்திருப்பர்...சூரியனாக நீ இருந்தால் மீள வருகையில் விழித்திருப்பர்...எனவே நீ பூமியடா...! மறையும் மாயம் செய்வதில்லை..மறைந்த காயம் யாரும் உணர்ந்ததில்லை....!சொன்ன கடல் மௌனிக்க புதிதாகப் பயணத்தை தொடங்கினேன்....யாருமில்லாத கடல்வெளியில் யாருக்காகவோ வெளிச்சம் பாய்ச்சிக்கொண்டிருந்தது கம்ப விளக்கு.
நாளின் பெரும்பகலை காலதேவன் தின்னும் வரை என் கால்கள் யார் யாரையோ தேடி எங்கெங்கோ திரிந்தன. பழக்கப்பட்ட இடங்களில் வழக்கத்துக்கு மாறாக பழக்கமில்லாத பதில்களும் பழக்கமில்லா இடங்களில் நெகிழ்த்தும் பதில்களும் பரிசாகக் கிடைத்தன. ஈற்றில் சாலை ஓரத்தில் குட்டை சுவரின் அடைக்கலம் புகுந்தேன். கை மணிக்கூடு 17:01 எனக்காட்ட காலத்தை எண்ணும் அதன் எண்களின் அசைவில் காலத்தை கடத்தினேன். ஒன்று அறுபதாகி அறுபது ஒன்றாக அடித்த பீப் பீப் 32 வயதில் யாரும் இங்கே அரட்டை அடிக்க மாட்டார்கள் என்று இடித்துரைத்தது. கால்களுக்கு விசை கொடுத்தது.
தரை வாழிகளின் எல்லை வானம் வரையாம். எனக்கு அது கடல் வரையென வரையறுக்கபட்டது. மணலில் கால் புதைய புதைய எடுத்து மீண்டும் வைத்து எடுத்து மீண்டும் வைத்து தொடர்ந்தேன். இந்த மண்ணுக்கு மனிதன் மீது எத்துணை ஆசை பாருங்கள்? பற்றினால் விடுவதில்லை;பற்றை விட விடுவதுமில்லை. கடலின் நீளம் அளக்க விழைந்தேன்.
புன்னைவனக் கருக்குயில்களின் குரல் உருக்கி பெண்களைப் படைத்தானோ பிரம்மன். அங்கமெங்கும் தட்டினாலும் வீணை மீட்டுமிசை மாறும் வீச்சத்துடன் காற்றில் கலக்கிறதே..அட்டை கிராஃப் ஒன்றுக்கு ஆட்டோகிராஃப் நியாபகம் வந்து புன்னைகை தந்தது. அப்பால் நகர்ந்தேன்.
பாவாடையை தூக்கியபடி துள்ளிக்குதிக்கும் தேவதைகளின் குழந்தைகளின் கொலுசுச் சத்தத்தில் அலை ஆடுகிறதா? அலையின் ஓசைக்கு இசைந்தாடும் பிஞ்சுப்பாதங்களுக்கு தாளம் தட்டுகிறதா கொலுசு? இதை சாமி தந்த எந்நிலையிலும் கற்பனைக் காற்றில் பறக்கும் வரமென்பதா? நக்கீரர்களை தேட வைக்கும் சாபம் என்பதா? புரியாத புதிருடன் பலருக்குப் புதிராக நடக்கிறேனா? எல்லோரும் என்னையே பார்ப்பது போன்ற மாயை. கரையில் இருந்த கம்பத்தை முள்ளந்தண்டாக்கினேன்.
அடிவானத்தில் தெரிந்த செறிந்த கனகாம்பர மலர்க்கொத்துகள் கேள்விகளை எழுப்பின? பூமியை ஈர்த்து தன்னை சுற்ற வைக்கின்றான் சூரியன். நிலவோ பூமியால் கவரப்பட்டு அதனை வலம் வருகிறது. ஒரு நேரத்தில் கடலில் தெரியும் தன் விம்பம் பார்த்து இன்னொருவன் போட்டிக்கு வந்ததாக நினைத்து கடலில் சுழி ஓடுகிறதோ சூரியன்? அல்லது தன்னவளைச் சுற்றும் வெள்ளி நிலவை சுட்டெரிக்க விரும்பி நாளின் பாதிப்பொழுதில் தேடி அலைகிறதோ? ஆதவா மறைந்தது.என்னுள் கேள்வி பிறந்தது. நான் ஆதவனா?நிலவா?பூமியா? கடலைக் கேட்டேன். கதையைச் சொல்லு பதில் சொல்கின்றேன் என்றது.
கோகிலங்களின் சரணாலயம்; கோபியரின் கோகுலம் என எப்படி வேண்டுமானலும் சொல்லுல் அளவுக்கு இசையாலானது நந்தவனம் போன்ற எனது கல்லூரி. மூன்று ஆண்டுகள் கள்ளுண்டு ரீங்காரமிட்ட போதையில் தடுக்கி விழாது வீரனாய் வலம் வந்தேன். வருடந்தோரும் வரும் சங்கீத சங்கமம் அவ்வருடமும் வந்தது. மேற்கத்தைய ஆர்மோனியத்தில் பல்ரக இசைப் பிடித்து இளந்தென்றலில் தவழ்ந்துவரும் தெம்மாங்கில் மெட்டெடுத்து சந்தங்கள் துணயுடன் மாலை ஆக்கினேன். சந்தங்களின் சாயலில் சொல் முத்துக்களை தீட்டினேன். பதிக்கமுன் என்னைப் பற்றிக்கொண்டது இனம்புரியாத இனத்தைச் சேர்ந்த ஜுரம்.
மருத்துவமனையில் தூக்கம் இன்றி தவித்த என்னைத் தாலாட்டவந்தது என் பாட்டும் பாட்டுத்தந்த வெற்றியும்..நாற்பது நாள் வனவாசம் முடித்து நந்தவனத்துக்குள் புகுந்தேன். என்னைத் தாலாட்டியது என்னிசையா,எந்தமிழா என்னிசையின் ஏழு சுரத்தை விஞ்சிய எட்டாவது சுரமான அந்தக் குரலா? என்ற வினாவை சுமந்தபடி குரலின் சொந்தக்காரியை தேடினேன். தந்தது தரிசனம்..புதிதாக வந்தவள் புதிதாகவே தெரிந்தாள். என்னுள் மையம் கொண்ட புயல் அவள் மேல் மையல் கொள்ள வைத்தது... அகமும் புறமும் ஒன்றிணைந்த காதல் லாலா பாட வைத்தது..கண்ணசைவும் காலடியோசையும் வர்ணனை விஞ்சிய காதலை வளர்ர்த்தது..
வளரும் காலத்தில் ஒரு நாள். மீள இணைந்த பால்ய சினேகிதனுடன் எம் மீள் இணைவுக்கு மேகம் வாழ்த்துப்பூக்களை அனுப்பிக்கொண்டிருக்கும் மாலை வேளையின் ரம்மியம் கலந்து காபி பருகியபடி பாரில் இருந்தேன். காபிகாலியானதும் வெளியேவந்த எனக்கு ஆனந்த அதிர்ச்சி. கருங்கூந்தல் விரித்த தோகை மயில் போல எம்மை நாடி வந்தாள் என் சங்கீதா. ஆடும் மயிலின் கண்களில் தெரியுமே மிரட்சியும் இல்லாமல் எச்சரிக்கையும் இல்லாத இடைப்பட்ட ஒரு உணர்ச்சி..அதே உணர்ச்சி அவள் கண்களிலும் தெரிந்தது..மயிலின் கழுத்தில் எண்ணமுடியா வண்ணங்கள் இருக்குமாமே..குடைக்குள் வரலாமா கேட்போமா என நினைத்துக்கொண்டு தேடினேன்..கொண்டைச் சேவலின் தொண்டைபோல் நாட்டியம் தெரிந்தது. "குடையைக் கொண்டு போங்கள்". அவள்தான் சொன்னாள். "நீ எப்படிப் போவாய்" நண்பன் கேட்டான். ஆண்களை விட பெண்களுக்கு சுதாரிப்பு அதிகம்தான்...
"கிட்டத்தில்தானே வீடு..ஓடிப்போய் விடுவேன்"சிங்காரமாக சொன்னாள். குடையை வாங்குவதற்கு நீண்ட நண்பன் கைகளை தடுத்து "ரோஜா மொட்டவிழ்த்தாலே வண்டுகள் வட்டமிடும். வெள்ளை ரோஜா மழையில் நனைந்து காந்தாமாய் அழைத்தால் விளைவு என்னவாகும்" பொருள்படச் சொன்னேன். ஏற்றுக்கொண்டான்...திரும்பி நடந்தாள். அன்னப்பறவையை நியாகப்படுத்தினாள்...ரோஜா போனது முள்ளை என்னுள் தந்துவிட்டது...அவர்கள் தொடர்பு அறியத்துடித்தேன்...அவனே சொன்னான் எனது வருங்காலம் இவள்.....அவனை விட்டுப் பிரிந்தேன்..அவளைப் பிரிய நினைத்தேன்...
செயல்படுத்தினேன்...நெருங்கினாள் விலகினேன்..நெருக்கினாள்....நட்பை நெருங்கினேன்..தட்டுத் தடுமாறி போட்டு உடைத்தேன். கழுத்தை திருகுவான் என எதிர்பார்க்க தோளில் கைபோட்டான். நட்புவென்றதா? காதல் வென்றதா? இரண்டும் சேர்ந்து என்னை வெற்றியாளனாக்கியது என்பதுதான் நிஜம்....நகரும் மணிமுட்களில் நாட்கள் ஓட கட்டறுத்த காட்டாற்று வெள்ளமானது நமது காதல்...அப்போதுதான் எனக்குத் தெரியாமல் ஒரு நீலாம்பரி ஒருதலையால் உருவானது தெரிய வந்தது...வீட்டில் கிடைத்த அதிக சுதந்திரமும் கள்ளம் கபடமில்லா அன்பும் அளவுகடந்த பணமும் எனது சங்கோசமின்றி பழகும் பழக்கத்துக்கு காரணமானது. அதுவே எனக்கு சங்கடத்தை உண்டுபண்ணியது. அகங்காரமா,பிடிவாதமா, தீவிரபிணைப்பா ஏதோ ஒன்று நீலாம்பரியை கோழை ஆக்கியது....என் நடப்புகள் சாட்சிசொல்ல சட்டமும் பெண்ணுக்காக இரங்கியது. ஏழு ஆண்டுகள் உள்ளே தள்ளியது...
கண்களைத் திறந்தேன்...கம்பத்தில் தலை சாய்த்திருந்த என் கண்களில் கம்பத்தில் தலையில் இருந்த விளக்கு ஒளிக்கற்றை வீசியது. விலக்கிய பார்வையில் சில வினாடிகள் எதுவுமே தெரியவில்லை. அதிகம் என்றாலே குருடு அங்கே குடிவந்து விடுகின்றது..கடலைக் கேட்டேன் இப்போது சொல்...நான் சூரியனா? நிலவா? பூமியா? நிலவாக நீ இருந்தால் மீள வருகையில் களித்திருப்பர்...சூரியனாக நீ இருந்தால் மீள வருகையில் விழித்திருப்பர்...எனவே நீ பூமியடா...! மறையும் மாயம் செய்வதில்லை..மறைந்த காயம் யாரும் உணர்ந்ததில்லை....!சொன்ன கடல் மௌனிக்க புதிதாகப் பயணத்தை தொடங்கினேன்....யாருமில்லாத கடல்வெளியில் யாருக்காகவோ வெளிச்சம் பாய்ச்சிக்கொண்டிருந்தது கம்ப விளக்கு.