shivasevagan
17-09-2007, 10:18 AM
உ
திருச்சிற்றம்பலம்
ஸ்ரீ மெய்கண்ட தேசிகன் திருவடி வாழ்க
மேரூர் முருகன் பதிற்றுப்பத் தந்தாதி
சித்தாந்த பண்டித பூஷணம் ஆ.ஈசுரமூர்த்திப் பிள்ளை
திருநெல்வேலி பேட்டை
--------------------------------------------------------------------------------
முன்னுரை:
1948
காஞ்சிக்கணித்தாய உத்தரமேரூரில் திருக்கோயில் கொண்டெழுந்தருளியுள்ள ஸ்ரீகஜவல்லீ சமேத ஸ்ரீசுப்பிரமணியப் பெருமானாரின் திருவடிக்கமலங்களுக்கு 'மேரூர் முருகன் பதிற்றுப்பத் தந்தாதி' யென்னும் இந்நூலை நான் ஆக்கி அலங்கலாகச் சமர்ப்பித்தேன். உத்தரமேரூர் வாசியும், செங்குந்த குல சிரேட்டரும், மாசற்ற மனத்தினரும், குகபக்தி மிக்காரும், சைவசமயாபிமானஞ் சிறந்தாரும், எனக் காப்தரும் ஆகிய தேவார திருப்புகழ் இசைமணி திருவாளர் U.D.இராஜரத்தின முதலியாரவர்கள் தம் பொருளுதவியால் இதனை யச்சிட்டு உலகிற்கு இலவசமாக வழங்கினார்கள். அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி உரியதாகுக. அவர்கள் செய்துவருஞ் சிவபணிகளும் அவற்றிற் கனுகூலமான பிறமுயற்சிகளும் வெற்றிபெறுமாறு திருவருள்புரிய ஸ்ரீ பார்வதீ சமேத ஸ்ரீபரமசிவனாரின் திருவடிகளை நான் வணங்கி வேண்டிக் கொள்ளுகிறேன்.
--------------------------------------------------------------------------------
பதிப்புரை:
'மேரூர் முருகன் பதிற்றுப் பத்தந்தாதி' யென்னும் இந்நூலின் ஆசிரியவர்கள் வேறும் பல நூல்களை யாக்கியுள்ளார்கள். அவையனைத்தும் சைவ சித்தாந்த சாத்திர வரம்பைச் சிறிதும் மீறா. அந்த ஒரு காரணத்தாற்றான் அவர்கள் இயற்றும் நூல்களை அச்சிட்டு வெளியிட வேண்டுமென்ற ஆசையெனக்கு எழுவதாயிற்று. முன்னும் அவர்கள் நூலொன்றை நான் வெளியிட்டேன் இப்போது இந்நூலை வெளியிடுகின்றேன். இனியும் அவர்கள் ஆக்கும் நூல்களை வெளியிடல் எனக்கு மிகவும் விருப்பந்தான். சிவகிருபையுந் துணை நிற்கும்.
அவர்கள் பல ஆண்டுகள் இவ்வூரில் வாழ்ந்து விட்டு இப்போது தம் ஜன்ம தேசமாகிய திருநெல்வேலி ஜில்லாவுக்கு செல்லுகிறார்கள். ஆயினும் அவர்களுக்கும் எனக்கும் உள்ள தொடர்பு தளராது. அவர்களுக்கு எல்லா நலன்களையும் அளித்தருளுமாறு ஸ்ரீகஜவல்லீ சமேத ஸ்ரீ சுப்பிரமணியப் பெருமானாரின் திருவடிகளை நான் பிரார்த்திக்கிறேன்.
உத்தரமேரூர் தேவார திருப்புகழ் இசைமணி
30-5-1948 U.D.இராஜரத்தின முதலியார்
--------------------------------------------------------------------------------
திருச்சிற்றம்பலம்
ஸ்ரீ மெய்கண்ட தேசிகன் திருவடி வாழ்க
மேரூர் முருகன் பதிற்றுப்பத் தந்தாதி
சித்தாந்த பண்டித பூஷணம் ஆ.ஈசுரமூர்த்திப் பிள்ளை
திருநெல்வேலி பேட்டை
--------------------------------------------------------------------------------
முன்னுரை:
1948
காஞ்சிக்கணித்தாய உத்தரமேரூரில் திருக்கோயில் கொண்டெழுந்தருளியுள்ள ஸ்ரீகஜவல்லீ சமேத ஸ்ரீசுப்பிரமணியப் பெருமானாரின் திருவடிக்கமலங்களுக்கு 'மேரூர் முருகன் பதிற்றுப்பத் தந்தாதி' யென்னும் இந்நூலை நான் ஆக்கி அலங்கலாகச் சமர்ப்பித்தேன். உத்தரமேரூர் வாசியும், செங்குந்த குல சிரேட்டரும், மாசற்ற மனத்தினரும், குகபக்தி மிக்காரும், சைவசமயாபிமானஞ் சிறந்தாரும், எனக் காப்தரும் ஆகிய தேவார திருப்புகழ் இசைமணி திருவாளர் U.D.இராஜரத்தின முதலியாரவர்கள் தம் பொருளுதவியால் இதனை யச்சிட்டு உலகிற்கு இலவசமாக வழங்கினார்கள். அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி உரியதாகுக. அவர்கள் செய்துவருஞ் சிவபணிகளும் அவற்றிற் கனுகூலமான பிறமுயற்சிகளும் வெற்றிபெறுமாறு திருவருள்புரிய ஸ்ரீ பார்வதீ சமேத ஸ்ரீபரமசிவனாரின் திருவடிகளை நான் வணங்கி வேண்டிக் கொள்ளுகிறேன்.
--------------------------------------------------------------------------------
பதிப்புரை:
'மேரூர் முருகன் பதிற்றுப் பத்தந்தாதி' யென்னும் இந்நூலின் ஆசிரியவர்கள் வேறும் பல நூல்களை யாக்கியுள்ளார்கள். அவையனைத்தும் சைவ சித்தாந்த சாத்திர வரம்பைச் சிறிதும் மீறா. அந்த ஒரு காரணத்தாற்றான் அவர்கள் இயற்றும் நூல்களை அச்சிட்டு வெளியிட வேண்டுமென்ற ஆசையெனக்கு எழுவதாயிற்று. முன்னும் அவர்கள் நூலொன்றை நான் வெளியிட்டேன் இப்போது இந்நூலை வெளியிடுகின்றேன். இனியும் அவர்கள் ஆக்கும் நூல்களை வெளியிடல் எனக்கு மிகவும் விருப்பந்தான். சிவகிருபையுந் துணை நிற்கும்.
அவர்கள் பல ஆண்டுகள் இவ்வூரில் வாழ்ந்து விட்டு இப்போது தம் ஜன்ம தேசமாகிய திருநெல்வேலி ஜில்லாவுக்கு செல்லுகிறார்கள். ஆயினும் அவர்களுக்கும் எனக்கும் உள்ள தொடர்பு தளராது. அவர்களுக்கு எல்லா நலன்களையும் அளித்தருளுமாறு ஸ்ரீகஜவல்லீ சமேத ஸ்ரீ சுப்பிரமணியப் பெருமானாரின் திருவடிகளை நான் பிரார்த்திக்கிறேன்.
உத்தரமேரூர் தேவார திருப்புகழ் இசைமணி
30-5-1948 U.D.இராஜரத்தின முதலியார்
--------------------------------------------------------------------------------