PDA

View Full Version : நீ வருவாயா!!!



aren
16-09-2007, 03:48 PM
நினைக்க
ஒரு நொடி போதும்
ஆனால் முடிவெடுக்க
பல நாட்கள் ஆகும்!!!

முடிவெடு
இன்றே முடிவெடு
என்னுடன் வந்துவிடு!!!

உன் வாழ்க்கையை
நான் செம்மைபடுத்துகிறேன்!!!

என் கண்ணின் இமைபோல்
என் இதயத்தின் சுவாசம்போல்
உன்னை காத்திடுவேன்
நீ என் மனைவியானால்!!!

வருவாயா
என்னுடன் வருவாயா
நீ முடிவெடு
அதை இன்றே செய்திடு!!!

உனக்காக நான்
உன்னுடையவன் நான்
என்றென்றும்
என் சுவாசம் உள்ளளவும்!!!

இலக்கியன்
16-09-2007, 03:50 PM
வராமல் காத்திருக்கும் அவளுக்கு வரச்சொல்லி காதல் கவி தூது விட்டனவோ வாழ்த்துக்கள்

சாராகுமார்
16-09-2007, 03:51 PM
என் கண்ணின் இமைபோல்
என் இதயத்தின் சுவாசம்போல்
உன்னை காத்திடுவேன்
நீ என் மனைவியானால்!!!

என்றென்றும்
என் சுவாசம் உள்ளளவும்!!!

அருமையான, அன்பான காதல் கவிதை.
வாழ்த்துக்கள்.

aren
16-09-2007, 03:58 PM
வராமல் காத்திருக்கும் அவளுக்கு வரச்சொல்லி காதல் கவி தூது விட்டனவோ வாழ்த்துக்கள்

நன்றி இலக்கியன்.

aren
16-09-2007, 03:59 PM
அருமையான, அன்பான காதல் கவிதை.
வாழ்த்துக்கள்.

நன்றி சாராகுமார். ஏதோ எனக்குத் தெரிந்ததை எழுதினேன், நன்றாக வந்திருந்தால் சந்தோஷமே.

lolluvathiyar
17-09-2007, 09:04 AM
அருமையான கவிதை இதை கேட்ட பின் உங்கள் ஆள்

அழைகாதே அழைகாதே என்று பாடினாலும் பாடுவார்

சுகந்தப்ரீதன்
17-09-2007, 09:11 AM
நினைக்க
ஒரு நொடி போதும்
ஆனால் முடிவெடுக்க
பல நாட்கள் ஆகும்!!!

முடிவெடு
இன்றே முடிவெடு
என்னுடன் வந்துவிடு!!!

!!!

நினைக்க ஒரு நொடி போதும் ஆனால் முடிவெடுக்க பல நாட்கள் ஆகும்னு சொல்லிட்டு இப்போதே வான்னா எப்படி வ*ருவாங்க... கொஞ்சம் பொறுங்க..கண்டிப்பா வருவாங்க...வாழ்த்துக்கள் அரேன்!!!

அமரன்
17-09-2007, 09:59 AM
மனதுக்குள் வா.
மனைவியாக வா.
வாடகை தரவேண்டாம்.
வாழ்க்கை தரவா

மணமகளை மனமகளாக் அழைத்தால் வாழ்வில் கிட்டும் செழிப்பு..கவிதையில் அது கொஞ்சம் குறைவு..



நினைக்க
ஒரு நொடி போதும்
ஆனால் முடிவெடுக்க
பல நாட்கள் ஆகும்!!!


முடியெடுக்க நினைக்க-ஒரு
நொடி போதும்...!
முடிவெடுத்து நனைக்க-ஒரு
யுகம் ஆகும்....!
(ச்சும்மா.....ச்சும்மா........)

ஓவியன்
21-09-2007, 08:52 AM
அன்பின் ஆரென் அண்ணா!

ஏற்கனவே உங்கள் மனதுக்குள் வந்துவிட்டவளை வாவென்று கேட்கிறீர்களே இது நியாயமா.......?

ஓ உள்ளத்தில் இருப்பவளை இல்லத்துக்குள்ளும் அழைக்கின்றீர்களா அருமை.....:)

மீனாகுமார்
21-09-2007, 10:29 AM
மீண்டும் ஒரு அருமையான கவிதை...

இன்று இருக்கும் இதே வேகம் வாழ்வின் கடைசி வரை இருக்க வேண்டும்.... வாழ்த்துக்கள்..

இனியவள்
21-09-2007, 07:10 PM
அருமையான் கவி ஆரென் அண்ணா வாழ்த்துக்கள்

எடுத்த முடிவை மாற்றாமல் இன்றே
வந்து விடு என்று அழைத்தீர்களே அண்ணா
வந்திட்டாங்களா :lachen001: