இளசு
13-09-2007, 05:15 AM
வாலறிவன்
அறிவியல் மைல்கற்கள் - 27
ஹாலியின் வால்நட்சத்திரம்
எட்மண்ட் ஹாலி 1656 -1742
---------------------------------------------
அ.மை: 26 - பூவிலும் பாலுண்டு இங்கே -
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=11844
---------------------------------------------------
அறிவியல் இமயமான நியூட்டனில் இருந்து புறப்பட்ட
அறிவு நதிகள் பல.. அதில் ஒருவர் - நம் 27ம் நாயகர் எட்மண்ட் ஹாலி!
1687ல் வெளியான 'பிரின்ஸிபியா மேதமேட்டிக்கா'' என்னும் உலகைப்புரட்டிய
தம் நூலில் நியூட்டன் வால்நட்சத்திரங்களின்(சுருக்கமாய் வாலிகள்) சுற்றுப்பாதையை அளக்கும் முறை
பற்றிச் சுட்டிக்காட்டியிருந்தார்.
வாலிகளின் வான இருப்பிடங்களை இரண்டு மாத இடைவெளிகளில் மூன்றுமுறை அளந்தால் போதும்..
அவற்றின் முழு சுற்றுப்பாதையும் சொல்லிவிட முடியும்..
1608-ல் ஒரு மகாவாலியை (Great Comet)அவதானித்து இந்த
உண்மையை நிறுவினார் நியூட்டன்.
நியூட்டன் அனுமானித்தது : வாலிகள் எங்கோ நீண்ட ஒரு தொலைவிலிருந்து வருகின்றன..
அந்த நீண்ட பயணத்தில் சூரியனைக் கடக்கும்போது நமக்குத் தெரிகின்றன..
பின் கண்காணா நீண்ட இடத்துக்கு தொடர்ந்து போய்க்கொண்டிருக்கின்றன..
எனவே ஒரு வாலி ஒரு முறைதான் நமக்குத் தெரியும்..
அவற்றின் பாதை மிக மிக நீளமான ( பாரபோலிக்) பாதை!
இப்படி ஒருமுறை தெரிவது ஒரு புதிய வாலி என எண்ணிய நியூட்டன் மகாவாலியைத் தொடர்ந்து
இன்னும் 23 வாலிகளைப் பற்றித் தொகுத்து குறிப்புகள் எழுதிவைத்தார்.
பின்னர் வேறு பணிகளின் அழைப்பினாலோ, அல்லது வாலிகளின் மேல் வந்த அலுப்பினாலோ
அந்தக் குறிப்புகளைத் தொடர்ந்து ஆழமாய் அலசாமல் ஓரமாய்ப் போட்டுவிட்டார்.
ஆனாலும் அந்தக் குறிப்புகள் அப்படியே செல்லரித்துப்போகாமல், ஒரு நல்ல காரியம் செய்தார்.
இலண்டனில் இருந்த தம் நண்பரிடம் அவற்றை ஒப்படைத்தார்.
அந்த நண்பரின் பெயர் - எட்மண்ட் ஹாலி (Edmond Halley).
அவரே இந்த 27ம் மைல்கல்லின் நாயகர்.
நியூட்டனின் குறிப்புகளை வைத்து மேலும் ஆராய்ந்த ஹாலி,
1607, 1618, 1686 ஆண்டுகளில் தென்பட்ட வாலிகளின் பாதைகளைக் கணக்கிட்டுச் சொன்னார்.
அந்தக் கணக்கு சொன்ன உண்மை : 1607 , 1682ல் வந்த வாலிகள் சென்ற பாதை ஒன்றே!
அப்படியானால்.... அப்படியானால்..
அந்த இரண்டு சமயங்களில் தெரிந்தவை ஒரே வாலியாக இருக்கலாம் அல்லவா?
இதை அவர் அறிவுலகுக்குச் சொன்னது 1696ல்.
அடுத்த பத்தாண்டுகளில் ஹாலி ஆக்ஸ்போர்டு பல்கலையில் புவியியல் பேராசிரியர்.
அப்போது தொடர்ந்த ஆராய்ச்சிகளால், விடா முயற்சிகளால் -
1531-ல் வந்த வாலியும் , முந்தைய 1607,1682 ஆண்டுகளில் வந்த வாலி(கள்) போல்
அதே பாதையில் சென்றதைக் கண்டறிந்தார்.
ஆஹா... பொறி தட்டியது ஹாலிக்கு!
புலப்படாத தூரத்தில் இருந்து புறப்பட்டு மீண்டும் எங்கோ புலப்படாத இடத்துக்குப்
போவன இல்லை இந்த வாலிகள்..
ஒரு மிக நீள்வட்டப் பாதையில் மீண்டும் மீண்டும் சுற்றிச் சுற்றி வருவன இவை!
அப்படியானால்...?
பூமிக்கு தொலைவில் இருக்கும் இவற்றையும் ஈர்ப்பு சக்தி இழுக்க வல்லது!!!!
எத்தனை அரிய உண்மை.. !
இதை அறிய எத்தனை அரிய - தொடர் உழைப்பு!
அத்தோடு நின்றாரா நம் நாயகர் ஹாலி..
அந்தக் குறிப்பிட்ட வாலி ஒரு நீள்வட்டச் சுற்று சுற்றி நமக்குத் தெரியும்படி
பூமிக்கு அருகில் வர 76 ஆண்டுகள் ஆகிறதைக் கணக்கிட்டு,
1705 -ல் இப்படி எழுதினார்:
''ஆகவே, அந்த வாலி மீண்டும் 1758-ல் வரும் என முன்னறிவிக்கிறேன்''.
வந்ததா வாலி! வந்தது! 1758 கிறிஸ்துமஸ் அன்று வான்வெளியில் நின்றது!
ஹாலியின் அறிவியல் கணிப்பு வென்றது!
அதன்பிறகு ஒவ்வொரு 76 ஆண்டுகளுக்கும் அதன் வருகை தொடர்கிறது.
அதன் பெயரே ; ஹாலியின் வால்நட்சத்திரம். (ஹாலியின் வாலி..)
அலுக்கவைக்கும் பல பெரும் கணக்குக்குறிப்புகளைச் சலிக்காமல் தொடர்ந்து
ஆராய்ந்து, புவியீர்ப்பின் வீச்சை விஸ்தரித்து, ''தூமகேது'' தாம் சொன்னபடி
வானில் வரும் எனக் கணித்த ஹாலி..
நம் நாயகர் வரிசையில் இடம்பெறத் தகுதி உள்ளவர்தாம்..
இல்லையா நண்பர்களே?
அறிவியல் மைல்கற்கள் - 27
ஹாலியின் வால்நட்சத்திரம்
எட்மண்ட் ஹாலி 1656 -1742
---------------------------------------------
அ.மை: 26 - பூவிலும் பாலுண்டு இங்கே -
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=11844
---------------------------------------------------
அறிவியல் இமயமான நியூட்டனில் இருந்து புறப்பட்ட
அறிவு நதிகள் பல.. அதில் ஒருவர் - நம் 27ம் நாயகர் எட்மண்ட் ஹாலி!
1687ல் வெளியான 'பிரின்ஸிபியா மேதமேட்டிக்கா'' என்னும் உலகைப்புரட்டிய
தம் நூலில் நியூட்டன் வால்நட்சத்திரங்களின்(சுருக்கமாய் வாலிகள்) சுற்றுப்பாதையை அளக்கும் முறை
பற்றிச் சுட்டிக்காட்டியிருந்தார்.
வாலிகளின் வான இருப்பிடங்களை இரண்டு மாத இடைவெளிகளில் மூன்றுமுறை அளந்தால் போதும்..
அவற்றின் முழு சுற்றுப்பாதையும் சொல்லிவிட முடியும்..
1608-ல் ஒரு மகாவாலியை (Great Comet)அவதானித்து இந்த
உண்மையை நிறுவினார் நியூட்டன்.
நியூட்டன் அனுமானித்தது : வாலிகள் எங்கோ நீண்ட ஒரு தொலைவிலிருந்து வருகின்றன..
அந்த நீண்ட பயணத்தில் சூரியனைக் கடக்கும்போது நமக்குத் தெரிகின்றன..
பின் கண்காணா நீண்ட இடத்துக்கு தொடர்ந்து போய்க்கொண்டிருக்கின்றன..
எனவே ஒரு வாலி ஒரு முறைதான் நமக்குத் தெரியும்..
அவற்றின் பாதை மிக மிக நீளமான ( பாரபோலிக்) பாதை!
இப்படி ஒருமுறை தெரிவது ஒரு புதிய வாலி என எண்ணிய நியூட்டன் மகாவாலியைத் தொடர்ந்து
இன்னும் 23 வாலிகளைப் பற்றித் தொகுத்து குறிப்புகள் எழுதிவைத்தார்.
பின்னர் வேறு பணிகளின் அழைப்பினாலோ, அல்லது வாலிகளின் மேல் வந்த அலுப்பினாலோ
அந்தக் குறிப்புகளைத் தொடர்ந்து ஆழமாய் அலசாமல் ஓரமாய்ப் போட்டுவிட்டார்.
ஆனாலும் அந்தக் குறிப்புகள் அப்படியே செல்லரித்துப்போகாமல், ஒரு நல்ல காரியம் செய்தார்.
இலண்டனில் இருந்த தம் நண்பரிடம் அவற்றை ஒப்படைத்தார்.
அந்த நண்பரின் பெயர் - எட்மண்ட் ஹாலி (Edmond Halley).
அவரே இந்த 27ம் மைல்கல்லின் நாயகர்.
நியூட்டனின் குறிப்புகளை வைத்து மேலும் ஆராய்ந்த ஹாலி,
1607, 1618, 1686 ஆண்டுகளில் தென்பட்ட வாலிகளின் பாதைகளைக் கணக்கிட்டுச் சொன்னார்.
அந்தக் கணக்கு சொன்ன உண்மை : 1607 , 1682ல் வந்த வாலிகள் சென்ற பாதை ஒன்றே!
அப்படியானால்.... அப்படியானால்..
அந்த இரண்டு சமயங்களில் தெரிந்தவை ஒரே வாலியாக இருக்கலாம் அல்லவா?
இதை அவர் அறிவுலகுக்குச் சொன்னது 1696ல்.
அடுத்த பத்தாண்டுகளில் ஹாலி ஆக்ஸ்போர்டு பல்கலையில் புவியியல் பேராசிரியர்.
அப்போது தொடர்ந்த ஆராய்ச்சிகளால், விடா முயற்சிகளால் -
1531-ல் வந்த வாலியும் , முந்தைய 1607,1682 ஆண்டுகளில் வந்த வாலி(கள்) போல்
அதே பாதையில் சென்றதைக் கண்டறிந்தார்.
ஆஹா... பொறி தட்டியது ஹாலிக்கு!
புலப்படாத தூரத்தில் இருந்து புறப்பட்டு மீண்டும் எங்கோ புலப்படாத இடத்துக்குப்
போவன இல்லை இந்த வாலிகள்..
ஒரு மிக நீள்வட்டப் பாதையில் மீண்டும் மீண்டும் சுற்றிச் சுற்றி வருவன இவை!
அப்படியானால்...?
பூமிக்கு தொலைவில் இருக்கும் இவற்றையும் ஈர்ப்பு சக்தி இழுக்க வல்லது!!!!
எத்தனை அரிய உண்மை.. !
இதை அறிய எத்தனை அரிய - தொடர் உழைப்பு!
அத்தோடு நின்றாரா நம் நாயகர் ஹாலி..
அந்தக் குறிப்பிட்ட வாலி ஒரு நீள்வட்டச் சுற்று சுற்றி நமக்குத் தெரியும்படி
பூமிக்கு அருகில் வர 76 ஆண்டுகள் ஆகிறதைக் கணக்கிட்டு,
1705 -ல் இப்படி எழுதினார்:
''ஆகவே, அந்த வாலி மீண்டும் 1758-ல் வரும் என முன்னறிவிக்கிறேன்''.
வந்ததா வாலி! வந்தது! 1758 கிறிஸ்துமஸ் அன்று வான்வெளியில் நின்றது!
ஹாலியின் அறிவியல் கணிப்பு வென்றது!
அதன்பிறகு ஒவ்வொரு 76 ஆண்டுகளுக்கும் அதன் வருகை தொடர்கிறது.
அதன் பெயரே ; ஹாலியின் வால்நட்சத்திரம். (ஹாலியின் வாலி..)
அலுக்கவைக்கும் பல பெரும் கணக்குக்குறிப்புகளைச் சலிக்காமல் தொடர்ந்து
ஆராய்ந்து, புவியீர்ப்பின் வீச்சை விஸ்தரித்து, ''தூமகேது'' தாம் சொன்னபடி
வானில் வரும் எனக் கணித்த ஹாலி..
நம் நாயகர் வரிசையில் இடம்பெறத் தகுதி உள்ளவர்தாம்..
இல்லையா நண்பர்களே?