அமரன்
12-09-2007, 12:05 PM
காயப்போட்ட வடகமும் உடுப்பும் எடுத்து யாரும் ஓடவில்லை. பேணிகள் தலை நிமிர்த்தவில்லை; கோணிகள் தலைகளில் கவிழ்க்கப்படவில்லை. கொல்லைப்புற விறகுகட்டு அடுக்களைக்கு இடம்பெயரவில்லை. வீட்டுச்சுவரில் ஈரஓவியங்கள் வரையப்படவில்லை. ஆனாலும் ஜேர்மன் தேசத்துடோர்முன்ட் நகர வானுயர்ந்த கட்டடத்தின் பதினெட்டாவது மாடியில் அவன் ஊரின் மண் கமகமகத்தது. அவன் தர்மேந்திரா. சுருக்கமாக தனு. சுவிஸ் பிரஜா உரிமை பெற்ற தமிழன். தற்போது ஜெர்மனில் சித்தி வீட்டில்சொந்த வேலையாக..
"சொந்தவீட்டின் தரை ஈரம் உணர முடியாதவாறு சாக்குகளும், அரிப்பெடுத்தகாலின் சரியான இடத்தில் சொறிய முடியாதவாறு சாக்ஸுகளுமாக என்ன வாழ்க்கை இது? ஆமா..இவ்வளவு உயரத்தில் இருக்கிறீங்களே...!. கரண்டு இல்லை என்றால் எப்படி தெருவுக்குப் போவீர்கள்? எப்படி வீட்டுக்குள் நுழைவீர்கள்? கால் வலித்து வருத்தம் வராதா? எப்போது இப்படிக் குளிருமா?" அடுக்கு மாடிவீடு பற்றி அடுக்கடுக்கான கேள்விகள் பெரியவரிடமிருந்து வந்தவண்ணம் இருந்தன. பெரியவர் தனுவின் வருங்கால மாமனார். ஐந்து பிள்ளைகளின் தந்தை.
பொதுவாக கிராமத்து மனிதர்களின் எவர்கிறீன் ஹீரோ புரட்சித்தலைவராகத்தன் இருக்கும். அதிலும் தனுவின் ஊர்க்காரங்க தலைவரின் வெறியர்கள். ஆயிரத்தில் ஒருவன் உட்பட்ட பல திரைச்சித்திரங்களிலும் நிஜத்திலும் அவர்கள் ஆதர்சநாயகனின் வழிபற்றி கேள்விகள் கேட்பதில் சளைக்காதவர்கள். இவங்களுடன் யாரும் பேசிட்டிருந்தால் நடிகர்களுக்கு கொடுக்கும் டாக்டர்பட்டத்தை இவர்களுக்கு கொடுக்கலாம் என கண்டிப்பாக நினைப்பார்கள். . "இங்கே கரன்ட் கட்டாவதில்லை" முன்னெச்சரிக்கையுடன் பதிலளித்துவிட்டு அடுத்தகணைக்காகக் காத்திருந்தான்.
சித்தியால் அணைத்து வைக்கப்பட்ட நகரத்து புகைக்கூண்டு தனுவுக்கு உதவ முன்வந்தது. "உங்க தாத்தா வளர்த்த ஆட்டு இறைச்சி குழம்பில் கொதிக்கும் போது வத்தலாக்கிய உங்க பாட்டியின் கைப்பக்குவம் நச்சென்று நாசியில் அடிக்குது" சப்புக்கொட்டிய பெரிசின் அடுத்த பேச்சுக்கள் என்சிந்தனைச் சிறகுகளால் மறைக்கப்ப்ட்டது.
அவன் ஊரில் ஆடு வளர்க்கும் விதம் அலாதியானது. ஆழக்குழி அமைத்து மிதமான உயரத்தில் குழியின் குறுக்காக தடிஊன்றி இலைதழைகள் தொங்கவிட்டு குழிக்குள் ஆட்டை இறக்குவார்கள். நாளாக நாளாக அதிகரிக்கும் குழியின் ஆழத்துக்கு கட்டுப்பட்டு கடா காளை ஆக காட்சி தரும். இன்னும் சில நாட்களில் ஊரின் பல வீட்டு குழம்பில் ஆடு பாகமாக கொதிக்கும். ஆட்டின் உரிமைக்குடும்பமோ அதன்சுவை அறியாது. நாம வளர்த்தகடாவை நாமே தின்னக்கூடாது என்பது அங்கே எழுதப்படாத வேதம். இப்போது வேதம் மீறப்படுகின்றதே?
"சங்கீர்த்தனாவும் நல்லாகச் சமைப்பாள்".சிந்தையின் தியானம் கலைந்தது.
சங்கீர்த்தனா மூத்த பெண். தனுவுக்கு நிச்சயிக்கப்பட்டு மூன்றுமாத விருந்தினர் அனுமதியுடன் தந்தை துணையுடன் ஜெர்மன் வந்தவள். சட்டம் ஒத்துழைத்தால் உடனடிப் பதிவுத்திருமணம். இல்லையேல் தாமதமதமான திருமணம். இவளுக்கு மூத்தவன் கீதன் ஜேர்மனில் நண்பர்களுடன் தங்கி இருப்பதால் தனுவின் சித்திவீட்டில் உள்ளாள்.சற்று முன்அலறிய கம்பியில்லா தொலைபேசியுடன் அறைக்குள் புகுந்தவள் வெளியே வந்தாள்.
"அண்ணா உங்களிடம் பேசவேண்டுமாம்"
சம்பிராதாயப் பேச்சுகள் முடிந்ததும் தனுவுடன் தனிமையில் பேச நினைத்தான்அவள் அண்ணன் கீதன். தனி அறை நாடினான்.
"தனு வந்து.... வந்து....எனக்கு வரவேண்டிய பணம் தாமதமாகும்போல இருக்கு. அதனால்...."
தனுவுக்கு ஒன்றுமே புரியவில்லை. எதற்காக இதை தன்னிடம் சொல்கின்றான்.
" உங்களுக்கு தரவேண்டிய சீதனம் கொஞ்சம் தாமதமாகும்".
தனு அதிர்ந்தான். சமுதாயத்தைப் பிடித்த சீதனச்சீக்கை அழிக்க நினைப்பவன் அவன்.
"சீதனமா!!? என்ன சொல்றீங்க கீதன். நாங்க யாரும் கேட்கவில்லையே"
பண வரவுத்தாமதமும் இதர சில சம்பவங்களும் கீதனை நிதானம் இழக்க வைத்தன போலும்.
"என்ன விளையாடுறீங்களா? உங்கள் வீட்டுக்காரர்களை விட்டுக் கேட்டுவிட்டு இப்போது இப்படி சொல்றீங்க. நல்லவனாக நடிக்ககூடாது சார். நல்லவனாக இருக்க வேண்டும்."
அவன் ஆற்றாமை கலந்த கோபம் தெரிந்தது.கீதன் கோபம் தனுவின் தன்மானத்தை உரசியது. பணப்புரட்டலுக்காக கீதன் படும்பாடு நினைவில் உதித்து அதனை மறைத்தது.மென்மையாக சொன்னான். உறுதி குழைத்துக் கொடுத்தான்.
"கீதன் தவறான கோபம் தரும் விளைவுகள் எப்போதும் பயங்கரமானது. நிதானமாக பேசுங்கள்"
தனுவின் அமைதியான குரலால் சாந்தமாகும் நிலையில் கீதன் இல்லை. அவனது கோபவீச்சு கனல்கள் அதிகமாகின.
"தம்பிக்கு பொறுப்புகள் குறைவு. ஆனாலும் அவனுக்கு கடன்கள் அதிகம். அதனால் சீதனமாக இவ்வளவு கேட்கின்றான் என்று உங்க வீட்டு பெரியவங்க சொன்னாங்க. சொல்லாமல் அவங்க கேட்பாங்களா அது மட்டுமா சீதனம் முழுவதுமாக வராது விட்டால் எல்லாவற்றையும் நிறுத்துங்கள் என்று நீங்கள்தானே அவர்களிடம் சொல்லியுள்ளீர்கள்.. நீங்க . நான் என்ன தர மாட்டேன்னா சொல்றேன். லேட்டாக தர்ரேன்னுதானே சொல்றேன்."
தனுவுக்கு இப்போது கொஞ்சம் புரிந்தது. குடும்பம் மேல் கோபம் பிறந்து மறைந்து மனதில் பின் பிறந்த கனிவு தொடர்ந்த கீதனின் வேல்களால் தொலைந்தது.
"தவறான கோபம், விளைவுகள் அது இதுன்னு பயமுறுத்துகின்றீர்களா."
எனத்தொடங்கி சென்ஸார் வார்த்தைகளை வில்லையால் குவித்தான். அதன் சூடு தாங்காது தனுவின் தன்மானம் தூக்கம் துயில் எழும்பியது.
"கீதன் அதிகம் பேசி விட்டீர்கள். கண்கள் வித்து ஓவியம் வாங்கவோ அடையளம் தொலைத்து காவியம் பாடவோ நான் விரும்பவில்லை. இத்துடன் எல்லாவற்றையும் முடித்துக்கொள்வோம்"
தாழ்ந்த குரலில் உறுதி நிரப்பினான் தனு. எல்லாவற்றையும் என்னும் பதம் கீதனை மீண்டும் மனிதனாக்கியது..தன் கோபத் தீ விளைவை கீதன் உணர்ந்தபோது தனு தொலைபேசியில்காணாமல் போயிருந்தான்.
சங்கீர்த்தனாவின் தற்காலிக அறைக்கதவை உறுதியான இறுதியான முடிவு தாங்கிவண்ணம் தட்டி, தாமதித்து உள்ளே நுழைந்தான். கட்டில் படுத்திருந்தவள் சட்டென எழுந்தாள். அவசரமாக முகத்தை துடைத்தாள். கீதன் இவளுடனும் பேசியுள்ளான் என்பதை புரிந்தான் தனு. "சங்கீ.."அவன் அழைப்பில் திரும்பிய முகத்தில் கண்ணீர் பயணித்த கோடுகள். அக்கோடுகளில் அவனுக்குத் தெரிந்தது ஒருமாதம் சத்தம்மூலமும் ஒரு நாள் விழிமூலமும் வளர்ந்த காதல் பயணித்த சுவடுகள். "உனக்கு கணவனாகவும் உன் தங்கைக்கு அண்ணனாகவும் என்றும் இருப்பேன்" தனுதான் பேசினான். இல்லை இல்லை. அவள் கண்ணீரோ அல்லது அவர்கள் காதலோ அவனை அப்படி பேசவைத்தது. மெல்ல அவளைதோளுடன் சேர்த்து தட்டிக்கொடுத்துவிட்டு கூடத்துக்கு வந்தான். மேசையில் பாத்திரத்தில் சிவப்பாக இருந்தது வளர்த்த கடா..!. சுற்றி இருந்தது குடும்பத்தின் ஓரங்கம்....!
"சொந்தவீட்டின் தரை ஈரம் உணர முடியாதவாறு சாக்குகளும், அரிப்பெடுத்தகாலின் சரியான இடத்தில் சொறிய முடியாதவாறு சாக்ஸுகளுமாக என்ன வாழ்க்கை இது? ஆமா..இவ்வளவு உயரத்தில் இருக்கிறீங்களே...!. கரண்டு இல்லை என்றால் எப்படி தெருவுக்குப் போவீர்கள்? எப்படி வீட்டுக்குள் நுழைவீர்கள்? கால் வலித்து வருத்தம் வராதா? எப்போது இப்படிக் குளிருமா?" அடுக்கு மாடிவீடு பற்றி அடுக்கடுக்கான கேள்விகள் பெரியவரிடமிருந்து வந்தவண்ணம் இருந்தன. பெரியவர் தனுவின் வருங்கால மாமனார். ஐந்து பிள்ளைகளின் தந்தை.
பொதுவாக கிராமத்து மனிதர்களின் எவர்கிறீன் ஹீரோ புரட்சித்தலைவராகத்தன் இருக்கும். அதிலும் தனுவின் ஊர்க்காரங்க தலைவரின் வெறியர்கள். ஆயிரத்தில் ஒருவன் உட்பட்ட பல திரைச்சித்திரங்களிலும் நிஜத்திலும் அவர்கள் ஆதர்சநாயகனின் வழிபற்றி கேள்விகள் கேட்பதில் சளைக்காதவர்கள். இவங்களுடன் யாரும் பேசிட்டிருந்தால் நடிகர்களுக்கு கொடுக்கும் டாக்டர்பட்டத்தை இவர்களுக்கு கொடுக்கலாம் என கண்டிப்பாக நினைப்பார்கள். . "இங்கே கரன்ட் கட்டாவதில்லை" முன்னெச்சரிக்கையுடன் பதிலளித்துவிட்டு அடுத்தகணைக்காகக் காத்திருந்தான்.
சித்தியால் அணைத்து வைக்கப்பட்ட நகரத்து புகைக்கூண்டு தனுவுக்கு உதவ முன்வந்தது. "உங்க தாத்தா வளர்த்த ஆட்டு இறைச்சி குழம்பில் கொதிக்கும் போது வத்தலாக்கிய உங்க பாட்டியின் கைப்பக்குவம் நச்சென்று நாசியில் அடிக்குது" சப்புக்கொட்டிய பெரிசின் அடுத்த பேச்சுக்கள் என்சிந்தனைச் சிறகுகளால் மறைக்கப்ப்ட்டது.
அவன் ஊரில் ஆடு வளர்க்கும் விதம் அலாதியானது. ஆழக்குழி அமைத்து மிதமான உயரத்தில் குழியின் குறுக்காக தடிஊன்றி இலைதழைகள் தொங்கவிட்டு குழிக்குள் ஆட்டை இறக்குவார்கள். நாளாக நாளாக அதிகரிக்கும் குழியின் ஆழத்துக்கு கட்டுப்பட்டு கடா காளை ஆக காட்சி தரும். இன்னும் சில நாட்களில் ஊரின் பல வீட்டு குழம்பில் ஆடு பாகமாக கொதிக்கும். ஆட்டின் உரிமைக்குடும்பமோ அதன்சுவை அறியாது. நாம வளர்த்தகடாவை நாமே தின்னக்கூடாது என்பது அங்கே எழுதப்படாத வேதம். இப்போது வேதம் மீறப்படுகின்றதே?
"சங்கீர்த்தனாவும் நல்லாகச் சமைப்பாள்".சிந்தையின் தியானம் கலைந்தது.
சங்கீர்த்தனா மூத்த பெண். தனுவுக்கு நிச்சயிக்கப்பட்டு மூன்றுமாத விருந்தினர் அனுமதியுடன் தந்தை துணையுடன் ஜெர்மன் வந்தவள். சட்டம் ஒத்துழைத்தால் உடனடிப் பதிவுத்திருமணம். இல்லையேல் தாமதமதமான திருமணம். இவளுக்கு மூத்தவன் கீதன் ஜேர்மனில் நண்பர்களுடன் தங்கி இருப்பதால் தனுவின் சித்திவீட்டில் உள்ளாள்.சற்று முன்அலறிய கம்பியில்லா தொலைபேசியுடன் அறைக்குள் புகுந்தவள் வெளியே வந்தாள்.
"அண்ணா உங்களிடம் பேசவேண்டுமாம்"
சம்பிராதாயப் பேச்சுகள் முடிந்ததும் தனுவுடன் தனிமையில் பேச நினைத்தான்அவள் அண்ணன் கீதன். தனி அறை நாடினான்.
"தனு வந்து.... வந்து....எனக்கு வரவேண்டிய பணம் தாமதமாகும்போல இருக்கு. அதனால்...."
தனுவுக்கு ஒன்றுமே புரியவில்லை. எதற்காக இதை தன்னிடம் சொல்கின்றான்.
" உங்களுக்கு தரவேண்டிய சீதனம் கொஞ்சம் தாமதமாகும்".
தனு அதிர்ந்தான். சமுதாயத்தைப் பிடித்த சீதனச்சீக்கை அழிக்க நினைப்பவன் அவன்.
"சீதனமா!!? என்ன சொல்றீங்க கீதன். நாங்க யாரும் கேட்கவில்லையே"
பண வரவுத்தாமதமும் இதர சில சம்பவங்களும் கீதனை நிதானம் இழக்க வைத்தன போலும்.
"என்ன விளையாடுறீங்களா? உங்கள் வீட்டுக்காரர்களை விட்டுக் கேட்டுவிட்டு இப்போது இப்படி சொல்றீங்க. நல்லவனாக நடிக்ககூடாது சார். நல்லவனாக இருக்க வேண்டும்."
அவன் ஆற்றாமை கலந்த கோபம் தெரிந்தது.கீதன் கோபம் தனுவின் தன்மானத்தை உரசியது. பணப்புரட்டலுக்காக கீதன் படும்பாடு நினைவில் உதித்து அதனை மறைத்தது.மென்மையாக சொன்னான். உறுதி குழைத்துக் கொடுத்தான்.
"கீதன் தவறான கோபம் தரும் விளைவுகள் எப்போதும் பயங்கரமானது. நிதானமாக பேசுங்கள்"
தனுவின் அமைதியான குரலால் சாந்தமாகும் நிலையில் கீதன் இல்லை. அவனது கோபவீச்சு கனல்கள் அதிகமாகின.
"தம்பிக்கு பொறுப்புகள் குறைவு. ஆனாலும் அவனுக்கு கடன்கள் அதிகம். அதனால் சீதனமாக இவ்வளவு கேட்கின்றான் என்று உங்க வீட்டு பெரியவங்க சொன்னாங்க. சொல்லாமல் அவங்க கேட்பாங்களா அது மட்டுமா சீதனம் முழுவதுமாக வராது விட்டால் எல்லாவற்றையும் நிறுத்துங்கள் என்று நீங்கள்தானே அவர்களிடம் சொல்லியுள்ளீர்கள்.. நீங்க . நான் என்ன தர மாட்டேன்னா சொல்றேன். லேட்டாக தர்ரேன்னுதானே சொல்றேன்."
தனுவுக்கு இப்போது கொஞ்சம் புரிந்தது. குடும்பம் மேல் கோபம் பிறந்து மறைந்து மனதில் பின் பிறந்த கனிவு தொடர்ந்த கீதனின் வேல்களால் தொலைந்தது.
"தவறான கோபம், விளைவுகள் அது இதுன்னு பயமுறுத்துகின்றீர்களா."
எனத்தொடங்கி சென்ஸார் வார்த்தைகளை வில்லையால் குவித்தான். அதன் சூடு தாங்காது தனுவின் தன்மானம் தூக்கம் துயில் எழும்பியது.
"கீதன் அதிகம் பேசி விட்டீர்கள். கண்கள் வித்து ஓவியம் வாங்கவோ அடையளம் தொலைத்து காவியம் பாடவோ நான் விரும்பவில்லை. இத்துடன் எல்லாவற்றையும் முடித்துக்கொள்வோம்"
தாழ்ந்த குரலில் உறுதி நிரப்பினான் தனு. எல்லாவற்றையும் என்னும் பதம் கீதனை மீண்டும் மனிதனாக்கியது..தன் கோபத் தீ விளைவை கீதன் உணர்ந்தபோது தனு தொலைபேசியில்காணாமல் போயிருந்தான்.
சங்கீர்த்தனாவின் தற்காலிக அறைக்கதவை உறுதியான இறுதியான முடிவு தாங்கிவண்ணம் தட்டி, தாமதித்து உள்ளே நுழைந்தான். கட்டில் படுத்திருந்தவள் சட்டென எழுந்தாள். அவசரமாக முகத்தை துடைத்தாள். கீதன் இவளுடனும் பேசியுள்ளான் என்பதை புரிந்தான் தனு. "சங்கீ.."அவன் அழைப்பில் திரும்பிய முகத்தில் கண்ணீர் பயணித்த கோடுகள். அக்கோடுகளில் அவனுக்குத் தெரிந்தது ஒருமாதம் சத்தம்மூலமும் ஒரு நாள் விழிமூலமும் வளர்ந்த காதல் பயணித்த சுவடுகள். "உனக்கு கணவனாகவும் உன் தங்கைக்கு அண்ணனாகவும் என்றும் இருப்பேன்" தனுதான் பேசினான். இல்லை இல்லை. அவள் கண்ணீரோ அல்லது அவர்கள் காதலோ அவனை அப்படி பேசவைத்தது. மெல்ல அவளைதோளுடன் சேர்த்து தட்டிக்கொடுத்துவிட்டு கூடத்துக்கு வந்தான். மேசையில் பாத்திரத்தில் சிவப்பாக இருந்தது வளர்த்த கடா..!. சுற்றி இருந்தது குடும்பத்தின் ஓரங்கம்....!