PDA

View Full Version : கண்டேன் காதல் கொண்டேன்..!



வசீகரன்
12-09-2007, 07:43 AM
தோகையது விரித்திடும் மயிலழகை
மையிட்ட உன் கண்களில் பார்த்திட்டேன்...!

பூக்கள் பூரிக்கும் அழகை
உன் புன்னகையில் பார்த்திட்டேன்...!

புதுமலர் புணர்ந்திடும் அமைதியை
உன் வெட்கத்தில் கண்டேன்...!

நடந்துவரும் நளினத்தில் ஒடிந்து வரும்
நதியழகை கண்டேன்...!

நகை பூண்டு களித்திடுகையில்
குமரிப்பெண்ணில் குழந்தை முகம் கண்டேன்...!

முறைத்து எனை ஏறிட்டு பார்க்கையில்
முரட்டுத்தனமா தெரிகிறது...! என் முற்றம்
வந்த முழு நிலவை தானடி பார்க்கிறேன்....!

உன்னுடன் அமர்ந்து காதலில் கலக்கும் நேரங்களில்
காற்றாக உணர்கிறேன்...
என் மார்பில் சாய்ந்து துயிலுறு காதலியே...
உன் மூச்சில் காற்றாகி கலக்கிறேன்...!

சிவா.ஜி
12-09-2007, 07:48 AM
அழகு தமிழில் ஒரு அழகுதேவதைக்கு கவி படைத்து காதலித்திருக்கிறார் வசீகரன்.வார்த்தைகள் ஒவ்வொன்றும் அருமை.உவமைகள் அழகான பொருத்தம்.வசீகரனின் கவிதை வசீகரிக்கிறது.வாழ்த்துக்கள்.

Narathar
12-09-2007, 07:52 AM
வசீகரா..........
உன் வார்த்தைக்கு நானே வசீகரமாகி விட்டேன்
அப்போ அவள் கதி?????

தளபதி
12-09-2007, 01:08 PM
காதலில் எல்லாம் சகஜம்!! நண்பரே!! கல்யாணம் பண்ணிப் பாரும்!! அப்புறம் வரும் பாரும், கவிதைகள். அடடா!! அது !!??

Narathar
12-09-2007, 01:12 PM
காதலில் எல்லாம் சகஜம்!! நண்பரே!! கல்யாணம் பண்ணிப் பாரும்!! அப்புறம் வரும் பாரும், கவிதைகள். அடடா!! அது !!??


அடடா!!! அனுபவம் பேசுகிறதோ?????

நானும் தான் பன்னிப்பார்த்தேன்...........
இன்னும் கவிதைகள் ஆறாய்த்தான் ஊற்றெடுக்கிறது
இங்கு எழுதத்தான் கொஞம் கூச்சமாக இருக்கிறது...


நாராயணா!!!!!

வசீகரன்
12-09-2007, 01:20 PM
அழகு தமிழில் ஒரு அழகுதேவதைக்கு கவி படைத்து காதலித்திருக்கிறார் வசீகரன்.வார்த்தைகள் ஒவ்வொன்றும் அருமை.உவமைகள் அழகான பொருத்தம்.வசீகரனின் கவிதை வசீகரிக்கிறது.வாழ்த்துக்கள்.
நன்றி நண்பர் சிவா..... தங்கள் பாராட்டுக்கு.....!
தங்கள் கவிகளை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்...!

வசீகரன்

வசீகரன்
12-09-2007, 01:27 PM
நாரதரே.... தங்கள் பின்னூட்டம்
கண்டு மகிழ்ந்தேன்.....!
தாங்கள் கவிகளை போன்று
அவளும் சுவையானவள்

உண்மையில் நான்தான் அவளிடம் வசியமாகிவிட்டேன்...!

வசீகரன்
12-09-2007, 01:33 PM
காதலில் எல்லாம் சகஜம்!! நண்பரே!! கல்யாணம் பண்ணிப் பாரும்!! அப்புறம் வரும் பாரும், கவிதைகள். அடடா!! அது !!??
அன்பு தளபதியாரே.... சொந்த அனுபவமோ...!

பார்க்கலாம் அவளும் அப்படித்தானா என்று...!
தங்கள் கவிதைகள் அனைத்தும் அருமை நண்பரே...!

வசீகரன்

Narathar
12-09-2007, 01:37 PM
உண்மையில் நான்தான் அவளிடம் வசியமாகிவிட்டேன்...!

நாராயணா!!!!
எதற்கும் கொஞ்சம் கவனமாகவே இருங்கள்

கலைவேந்தன்
12-09-2007, 03:40 PM
கவிதை மிகவும் வசீகரமாய் இருக்கிறது!
பாராட்டுக்கள்!

aren
12-09-2007, 03:42 PM
வசீகரன் அவர்களின் கவிதை வரிகள் ஒரு உண்மையான காதலைனை அடையாளம் காட்டுகிறது. உங்கள் காதலி அதிர்ஷ்டசாலி என்றே இதிலிருந்து தெரிகிறது. வாழ்த்துக்கள்.

நன்றி வணக்கம்
ஆரென்

வசீகரன்
13-09-2007, 04:34 AM
கவிதை மிகவும் வசீகரமாய் இருக்கிறது!
பாராட்டுக்கள்!
மிக்க நன்றிகள் கலைவேந்தரரே....!

வசீகரன்

வசீகரன்
13-09-2007, 04:39 AM
வசீகரன் அவர்களின் கவிதை வரிகள் ஒரு உண்மையான காதலைனை அடையாளம் காட்டுகிறது. உங்கள் காதலி அதிர்ஷ்டசாலி என்றே இதிலிருந்து தெரிகிறது. வாழ்த்துக்கள்.

நன்றி வணக்கம்
ஆரென்
அகமகிழ்ந்தேன் ஆரென் அவர்களே...!

மிக்க நன்றிகள்....

நட்புடன் என்றும் நான்...
வசீகரன்

இலக்கியன்
13-09-2007, 03:05 PM
அழகு தமிழிக் காதலிக்கு ஒரு கவிதை மிகவும் சிறப்பாக உள்ளது பாராட்டுக்கள்

அமரன்
28-09-2007, 09:56 AM
காதலால் தாக்கப்பட்டவன்
காண்பதெல்லாம் காதலாகும்.
காதலியில் காண்பதெல்லாம்
காசினி அழகின் சாறாகும்.

தொடருங்கள் வசீகரன்...