சிவா.ஜி
12-09-2007, 05:28 AM
அரசாங்க அலுவல்கள்அனுபவம்-1
தரணி போற்றும் தமிழ்நாட்டில் லஞ்சப் பரணிபாடும் அரசு அலுவலகங்கள் சிலவற்றில் எனக்கேற்பட்ட அனுபவங்கள்.
மும்பை வாசத்தை முடித்துக்கொண்டு சொந்த ஊருக்கு வந்த பிறகு..குடும்பத்துக்கு ஒரு அட்டை வேண்டுமென்பதால்,ஏற்கனவே மும்பையில் உபயோகித்த குடும்ப அட்டையை திரும்பக் கொடுத்துவிட்டு,அதற்கான சான்றிதழோடு..புதிய அட்டைக்கான விண்ணப்பத்தையும் கையில் எடுத்துக்கொண்டு எங்கள் வட்டாச்சியர் அலுவலகம் போனேன். முதன் முறையாய் தமிழ்நாட்டின் ஒரு அரசு அலுவலகம் போனதால் எவை எவை எங்கிருக்கும் என்று தெரியாமல் என் முழியை முழித்தேன்.(என்னுடையதும் ஏறக்குறைய பாண்டியராஜன் முழி போலத்தான் இருக்கும்)கையில் சில கோப்புகளோடு (இன்னமும் அந்த காலிகோ துணி அட்டையை கயிறால் கட்டித்தான் கோப்புகளைக் கையாளுகிறார்கள்)ஒருவர் என்னைக் கடந்தார்.குப்பென்று அவர் மீது அடித்த பண வாசத்தை வைத்து அவர்தான் இந்த அலுவலகத்தின் ப்யூன் என்பதை தெரிந்துகொண்டேன்.குடும்ப அட்டை வழங்கும் பகுதி எங்கே என்று அவரிடம் கேட்டதற்கு பதில் சொல்லாமல் போகிறபோக்கில் மௌண்ட் ரோடு அண்ணா சிலை மாதிரி ஒரு விரலை நீட்டி குத்து மதிப்பாக அவர் காண்பித்த திசையில் போனதும்..நீண்ட ஒரு வராண்டாவில் நான்கைந்து டல்ஹௌசிபிரபு காலத்து மேசைகள் இடப்பட்டு அதில் மூன்று இருக்கைகளில் மட்டும் கடமைத் தவறா "கர்ம" வீரர்கள் போல இரண்டு ஆண்களும் ஒரு பெண்மனியும் இருந்தார்கள்.முதலில் அமர்ந்திருந்தவரிடம் ரேஷன் கார்டு....என்று சொல்லி முடிப்பதற்குள்...பலகாரத்தின் மீது மொய்க்கும் ஈயை விரட்டுபவர் போல அடுத்த மேசையைக்காண்பித்தார்.அவர் காண்பித்தது அந்த பெண்மனியை.அவரிடம் சென்று "மேடம்..."என்று தொடங்கி நான் வந்த விஷயத்தை சொன்னேன்.
விண்ணப்பத்தை வாங்கிப்பார்த்த அவர்,"விண்ணப்பத்துல ஸ்டாம்பு யாரு ஒட்டுவாங்க...அதுக்கு தனியா ஒரு ஆளை இங்கேருந்து நான் அனுப்பனுமா?போய் ஸ்டாம்ப் ஒட்டி எடுத்துட்டு வாங்க"என்று அத்தனை தாள்களையும் என்னிடம் திருப்பிக் கொடுத்துவிட்டார்.எனக்கு ஒன்றும் புரியவில்லை.நான் அஞ்சலில் ஒன்றும் அனுப்பவில்லையே எதற்கு ஸ்டாம்ப் ஒட்ட வேண்டுமென்று விளங்காமல் முழிப்பதைப் பார்த்துக்கொண்டிருந்த இன்னொரு சக குடிமகன்.."சார் வெளியில ஃபாரம் விக்கிறவங்க கிட்ட போய் ரேஷன் கார்டுக்குன்னு கேட்டீங்கனா தருவாங்க" என்றதும் நன்றி சொல்லிவிட்டு..வெளியே போய் ஸ்டாம்ப் வாங்கி ஒட்டி(இரண்டு ரூபாய் மதிப்புள்ள அந்த ஸ்டாம்ப் அங்கே மூன்று ரூபாய்),திரும்ப அவரிடம் கொண்டு வந்தேன்.
நிமிர்ந்து என்னைப் பார்த்தாலும் நான் என்னவோ Hollow Man-போல அவர் கண்களுக்கு புலப்படவில்லை என்பதைப்போல எந்த ரியாக்ஷனும் இல்லாமல் திரும்ப அவருடைய வேலையை தொடர்ந்தார்.நானும் எழுதி முடிக்கட்டுமென்று காத்திருந்தேன்.எழுதி முடித்துவிட்டு பக்கத்து மேசை வீரரிடம் மதிய சாப்பாட்டைப் பற்றி பேச ஆரம்பித்ததும்,நான் மெதுவாக "மேடம்..." என்று இழுக்க...சட்டென்று கோபமாகி..படக்கென்று என் கையிலிருந்த விண்ணப்பத்தை வாங்கி அதே கோபத்தை maintain செய்து கொண்டே....பழைய குடும்ப அட்டையை திருப்பிக் கொடுத்ததற்கான சான்றிதழைப்பார்த்துவிட்டு "என்னா இது..." என்று மிக மரியாதையாகக் கேட்டதும்.நானும் பவ்யமாக "சர்டிஃபிகேட் மேடம்" என்று சொன்னேன். எரித்துவிடுவதைப் போலப் பார்த்த அவர்..."என்னா பாஷையில இருக்கு இது" என்றார்.அப்போதுதான் எனக்கும் உரைத்தது...அந்த சான்றிதழ் மராட்டிய மொழியில் இருந்தது என்பது."ஹி..ஹி..பாம்பேயில குடுத்தது மேடம் அதான்...."என்று இழுக்கவும்.அவர் "போய் ட்ரான்ஷலேஷன் பண்ணி எடுத்துட்டு வாங்க"என்றார் எங்கே, என்ன என்று கேட்பதற்குள் வேறொருவர் என் பின்னால் வந்து நிற்க,உடனே முகமெல்லாம் மலர்ந்து " வாங்க சார்,உக்காருங்க" என்று மேசையின் அந்தப் பக்கத்திலிருந்தே முக்கால்வாசி படுத்த வாக்கில் எனக்குப் பக்கத்திலிருந்த நாற்காலியை வந்தவரின் பக்கமாக நகர்த்தினார்.அந்த நாற்காலி நகர்த்தலோட க்றீச் சத்தம் நீ போகலாம் என்று எனக்கு சொன்னதால்..வேறு வழியில்லாமல் திரும்பி வந்து..மொழிமாற்றம் செய்ய அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் எங்கே இருக்கிறது என்று தேடிப்பிடித்து...அதையும் செய்து கொண்டு மீண்டும் அதே அம்மையாரிடம் போனேன்.
கொடுத்த ஆவனங்களை சரி பார்த்து விட்டு...அவர் என்னைப் பார்த்த பார்வை இருக்கிறதே...ஆஹா...அதை வைத்தே ஆயிரம் கவிதை எழுதலாம்.ஆனால் அப்போதைக்கு பரிதாபமாக முகத்தை வைத்துக்கொண்டு வெறும் பார்வைதான் பார்க்க முடிந்தது. இருந்தும் அவரிடம் எந்த பச்சாதாபமும் தோன்றவில்லை.இவனிடம் ஆடினாலும்,பாடினாலும் எதையும் கறக்க முடியாது என்று மிகத் தெளிவாகத் தெரிந்து கொண்ட அந்த கடமை வீராங்கனை.." குடுத்தாச்சில்ல...கார்டு வரும்போது தகவல் வரும் அப்ப வந்து வாங்கிக்கலாம்" என்று சொல்லிவிட்டு இப்ப போகலாம் என்று வாசலைக் காண்பித்தார்.
அப்பாடா எப்படியும் அட்டை கிடைத்துவிடுமென்று சந்தோஷமாக வீட்டுக்கு வந்துவிட்டேன். அட்டையும் வந்தது ஆனால் இரண்டு வருடம் கழித்து. அதுவும் எனக்கு எந்த பயன்பாட்டுக்காக தேவைப்பட்டதோ அதற்கு பயனில்லாமல் பிழையோடு வந்தது. அந்த கதையை என் அடுத்த பதிவில் சொல்கிறேன்.
தரணி போற்றும் தமிழ்நாட்டில் லஞ்சப் பரணிபாடும் அரசு அலுவலகங்கள் சிலவற்றில் எனக்கேற்பட்ட அனுபவங்கள்.
மும்பை வாசத்தை முடித்துக்கொண்டு சொந்த ஊருக்கு வந்த பிறகு..குடும்பத்துக்கு ஒரு அட்டை வேண்டுமென்பதால்,ஏற்கனவே மும்பையில் உபயோகித்த குடும்ப அட்டையை திரும்பக் கொடுத்துவிட்டு,அதற்கான சான்றிதழோடு..புதிய அட்டைக்கான விண்ணப்பத்தையும் கையில் எடுத்துக்கொண்டு எங்கள் வட்டாச்சியர் அலுவலகம் போனேன். முதன் முறையாய் தமிழ்நாட்டின் ஒரு அரசு அலுவலகம் போனதால் எவை எவை எங்கிருக்கும் என்று தெரியாமல் என் முழியை முழித்தேன்.(என்னுடையதும் ஏறக்குறைய பாண்டியராஜன் முழி போலத்தான் இருக்கும்)கையில் சில கோப்புகளோடு (இன்னமும் அந்த காலிகோ துணி அட்டையை கயிறால் கட்டித்தான் கோப்புகளைக் கையாளுகிறார்கள்)ஒருவர் என்னைக் கடந்தார்.குப்பென்று அவர் மீது அடித்த பண வாசத்தை வைத்து அவர்தான் இந்த அலுவலகத்தின் ப்யூன் என்பதை தெரிந்துகொண்டேன்.குடும்ப அட்டை வழங்கும் பகுதி எங்கே என்று அவரிடம் கேட்டதற்கு பதில் சொல்லாமல் போகிறபோக்கில் மௌண்ட் ரோடு அண்ணா சிலை மாதிரி ஒரு விரலை நீட்டி குத்து மதிப்பாக அவர் காண்பித்த திசையில் போனதும்..நீண்ட ஒரு வராண்டாவில் நான்கைந்து டல்ஹௌசிபிரபு காலத்து மேசைகள் இடப்பட்டு அதில் மூன்று இருக்கைகளில் மட்டும் கடமைத் தவறா "கர்ம" வீரர்கள் போல இரண்டு ஆண்களும் ஒரு பெண்மனியும் இருந்தார்கள்.முதலில் அமர்ந்திருந்தவரிடம் ரேஷன் கார்டு....என்று சொல்லி முடிப்பதற்குள்...பலகாரத்தின் மீது மொய்க்கும் ஈயை விரட்டுபவர் போல அடுத்த மேசையைக்காண்பித்தார்.அவர் காண்பித்தது அந்த பெண்மனியை.அவரிடம் சென்று "மேடம்..."என்று தொடங்கி நான் வந்த விஷயத்தை சொன்னேன்.
விண்ணப்பத்தை வாங்கிப்பார்த்த அவர்,"விண்ணப்பத்துல ஸ்டாம்பு யாரு ஒட்டுவாங்க...அதுக்கு தனியா ஒரு ஆளை இங்கேருந்து நான் அனுப்பனுமா?போய் ஸ்டாம்ப் ஒட்டி எடுத்துட்டு வாங்க"என்று அத்தனை தாள்களையும் என்னிடம் திருப்பிக் கொடுத்துவிட்டார்.எனக்கு ஒன்றும் புரியவில்லை.நான் அஞ்சலில் ஒன்றும் அனுப்பவில்லையே எதற்கு ஸ்டாம்ப் ஒட்ட வேண்டுமென்று விளங்காமல் முழிப்பதைப் பார்த்துக்கொண்டிருந்த இன்னொரு சக குடிமகன்.."சார் வெளியில ஃபாரம் விக்கிறவங்க கிட்ட போய் ரேஷன் கார்டுக்குன்னு கேட்டீங்கனா தருவாங்க" என்றதும் நன்றி சொல்லிவிட்டு..வெளியே போய் ஸ்டாம்ப் வாங்கி ஒட்டி(இரண்டு ரூபாய் மதிப்புள்ள அந்த ஸ்டாம்ப் அங்கே மூன்று ரூபாய்),திரும்ப அவரிடம் கொண்டு வந்தேன்.
நிமிர்ந்து என்னைப் பார்த்தாலும் நான் என்னவோ Hollow Man-போல அவர் கண்களுக்கு புலப்படவில்லை என்பதைப்போல எந்த ரியாக்ஷனும் இல்லாமல் திரும்ப அவருடைய வேலையை தொடர்ந்தார்.நானும் எழுதி முடிக்கட்டுமென்று காத்திருந்தேன்.எழுதி முடித்துவிட்டு பக்கத்து மேசை வீரரிடம் மதிய சாப்பாட்டைப் பற்றி பேச ஆரம்பித்ததும்,நான் மெதுவாக "மேடம்..." என்று இழுக்க...சட்டென்று கோபமாகி..படக்கென்று என் கையிலிருந்த விண்ணப்பத்தை வாங்கி அதே கோபத்தை maintain செய்து கொண்டே....பழைய குடும்ப அட்டையை திருப்பிக் கொடுத்ததற்கான சான்றிதழைப்பார்த்துவிட்டு "என்னா இது..." என்று மிக மரியாதையாகக் கேட்டதும்.நானும் பவ்யமாக "சர்டிஃபிகேட் மேடம்" என்று சொன்னேன். எரித்துவிடுவதைப் போலப் பார்த்த அவர்..."என்னா பாஷையில இருக்கு இது" என்றார்.அப்போதுதான் எனக்கும் உரைத்தது...அந்த சான்றிதழ் மராட்டிய மொழியில் இருந்தது என்பது."ஹி..ஹி..பாம்பேயில குடுத்தது மேடம் அதான்...."என்று இழுக்கவும்.அவர் "போய் ட்ரான்ஷலேஷன் பண்ணி எடுத்துட்டு வாங்க"என்றார் எங்கே, என்ன என்று கேட்பதற்குள் வேறொருவர் என் பின்னால் வந்து நிற்க,உடனே முகமெல்லாம் மலர்ந்து " வாங்க சார்,உக்காருங்க" என்று மேசையின் அந்தப் பக்கத்திலிருந்தே முக்கால்வாசி படுத்த வாக்கில் எனக்குப் பக்கத்திலிருந்த நாற்காலியை வந்தவரின் பக்கமாக நகர்த்தினார்.அந்த நாற்காலி நகர்த்தலோட க்றீச் சத்தம் நீ போகலாம் என்று எனக்கு சொன்னதால்..வேறு வழியில்லாமல் திரும்பி வந்து..மொழிமாற்றம் செய்ய அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் எங்கே இருக்கிறது என்று தேடிப்பிடித்து...அதையும் செய்து கொண்டு மீண்டும் அதே அம்மையாரிடம் போனேன்.
கொடுத்த ஆவனங்களை சரி பார்த்து விட்டு...அவர் என்னைப் பார்த்த பார்வை இருக்கிறதே...ஆஹா...அதை வைத்தே ஆயிரம் கவிதை எழுதலாம்.ஆனால் அப்போதைக்கு பரிதாபமாக முகத்தை வைத்துக்கொண்டு வெறும் பார்வைதான் பார்க்க முடிந்தது. இருந்தும் அவரிடம் எந்த பச்சாதாபமும் தோன்றவில்லை.இவனிடம் ஆடினாலும்,பாடினாலும் எதையும் கறக்க முடியாது என்று மிகத் தெளிவாகத் தெரிந்து கொண்ட அந்த கடமை வீராங்கனை.." குடுத்தாச்சில்ல...கார்டு வரும்போது தகவல் வரும் அப்ப வந்து வாங்கிக்கலாம்" என்று சொல்லிவிட்டு இப்ப போகலாம் என்று வாசலைக் காண்பித்தார்.
அப்பாடா எப்படியும் அட்டை கிடைத்துவிடுமென்று சந்தோஷமாக வீட்டுக்கு வந்துவிட்டேன். அட்டையும் வந்தது ஆனால் இரண்டு வருடம் கழித்து. அதுவும் எனக்கு எந்த பயன்பாட்டுக்காக தேவைப்பட்டதோ அதற்கு பயனில்லாமல் பிழையோடு வந்தது. அந்த கதையை என் அடுத்த பதிவில் சொல்கிறேன்.