View Full Version : தமிழ்மன்றம் 3000 பதிப்பு
மனோஜ்
11-09-2007, 06:05 PM
தமிழ்மன்றம்
எழுத்தை மனமாக்கி
அன்பை உறவாக்கி
பண்பை பாலமாக்கி
விரலை வடிவமாக்கி
அன்பாய் பண்பாய்
மகிழ்ச்சியாய் இன்பமாய்
சிறப்பாய் சிறந்தவனாய்
சிற்பத்தை செதுக்கும் உளியாய்
பானையை வடிக்கும் குயவனாய்
பயிரை காக்கும் நீராய்
தகவல் அறியும் பெட்டகமாய்
அன்பை பகிரும் கடிதமாய்
விளையாடும் விளையாட்டு திடலாய்
மனதினில் கலந்து
இதயத்தில் புகுந்து
மூளையில் கரைந்து
கருவாய் பதிவில் வளர்ந்து
செடியாய் மன்றத்தில் தவழ்ந்து
மரமாய் செழித்து வளர்ந்து
கனியாய் இன்று பதிவுகள்
காரணம் மன்ற உறவுகள்
மகிழ்கிறேன் பகிர்கிறேன் பதிக்கிறேன்
என்றும் நாம் இனிய நண்பர்களாய்
இன்றும் நாம் ஒரு தாய் மக்களாய்
அண்ணாவாய் தம்பியாய்
அக்காவாய் தங்கையாய்
மனதை கவர்ந்தவர்களாய்
என்றும் மகிழ்திருப்போம் :icon_b:
அன்புரசிகன்
11-09-2007, 06:08 PM
வாழ்த்துக்கள் மனோஜ்....உங்களின் ஆரம்ப எழுத்தாலான வாழ்த்துக்களை பார்த்து வியந்திருக்கிறேன்...
mgandhi
11-09-2007, 06:11 PM
வாழ்த்துக்கள் மனோஜ்....
சாராகுமார்
11-09-2007, 06:14 PM
மன்ற கவிதை அருமை.வாழ்த்துக்கள்.
நட்புக்கு தமிழ் மன்றம்
அதில் இருப்பவர்கள்
எல்லாம் சொக்கதங்கம்.
ஓவியன்
11-09-2007, 06:16 PM
எங்கெங்கோ இருந்த வந்த நம் எல்லோரையும் தமிழால் அன்பால் இணைத்து பாலமிட்டு அதில் எம்மை இன்ப உலாக் காண வைக்கும் மன்றத்துக்கு மனோஜ் வடித்த கவிதை அருமை....
பாராட்டுக்கள் மனோஜ், தொடர்ந்து அசத்துங்க.....!!! :)
அக்னி
11-09-2007, 06:18 PM
ஒவ்வொரு உறவுக்கும் கோலமாய் வாழ்த்தி அலங்கரிக்கும்,
மனோஜ் அவர்கள்...
பாலமாய் இணைத்த தமிழ்மன்றுக்கு வாழ்த்திய பா...
சிறப்பு...
மென்மேலும் சிறப்புப் பெற வாழ்த்துகின்றேன்...
அமரன்
11-09-2007, 06:18 PM
பார்வைகள் பலவிதம்
ஒவ்வொன்றும் ஒரு விதம்
மன்றத்தில் அது ஒரே ரகம்
மானோஜின் இக்கவி இனியராகம்.
இராகங்களுக்கு ஏது அழிவு
வாழ்த்துக்கள் மனோஜ்.
அறிஞர்
11-09-2007, 07:12 PM
அருமை மனோஜ்...
இங்கு அன்பாய், பண்பாய் பழகி...
குடும்பமாய் இணைந்திருக்கிறோம்.
உம் வரிகளில் செயற்கை தெரியவில்லை....
எல்லாம் மனதிலிருந்து எழுந்த வரிகள்.....
அனைவரும் இணைந்து மன்றத்தை இன்னும் உயர்த்துவோம்.
பாரதி
11-09-2007, 08:29 PM
வரிகள் மிக அழகு மனோஜ்!
மன்றத்தின் மேல் உங்களுக்கு இருக்கும் ஈடுபாடும்
உறவுகள் மேல் உங்களுக்கு இருக்கும் உணர்வும்
கவிதையின் வரிகளில் கலந்திருக்கின்றன.
உங்கள் மூவாயிரமாவது பதிவிற்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள். எந்நாளும் ஒன்றாய் இணைந்திருப்போம். வாழ்க.... வளர்க....
அன்பு மனோஜ்
நம்மை இணைத்த மன்றத்துக்கு
நல்லதொரு பாமாலை!
நண்பர்கள் சொன்னதுபோல் மனதின் அடியில் எழுந்த
எண்ணங்களால் தொடுத்த்தால் உண்மை மணக்கும் மாலை..
பாராட்டுகள்.. வாழ்த்துகள்!
பாரதி சொன்னதுபோல் சேர்ந்து வளர்ந்து மகிழ்வோம்!
வாழ்த்துக்கள் மனோஜ். அருமையான கவிதை. நீங்கள் இன்னும் பல்லாயிரம் பதிவுகள் செய்ய வாழ்த்துக்கள்.
அழகான கவிதை வரிகளில் உங்கள் மனம் இங்கே வெளிப்படுகிறது. உங்களுடன் நாங்களும் இந்த மன்றத்தில் இருப்ப்பதில் மகிழ்ச்சி.
நன்றி வணக்கம்
ஆரென்
mania
12-09-2007, 04:11 AM
பாராட்டுகளும் வாழ்த்துகளும் மனோஜ். நான் மனதில் நினைத்தை அழகான வார்த்தைகளால் இணைத்திருக்கிறாய்...:aktion033::aktion033::aktion033::aktion033:
அன்புடன்
மணியா.;)
சிவா.ஜி
12-09-2007, 04:26 AM
மன்ற உறவுகளுக்கு மகத்தான பாமாலை.வண்ண வரிகளில் எண்ணமெழுதிய மனோஜின் 3000-மாவது படைப்பு பரவசம் தருகிறது.என்றும் இணந்திருப்போம்,நாளும் மகிழ்ந்திருப்போம்.வாழ்த்துக்கள் மனோஜ்.
பென்ஸ்
12-09-2007, 06:51 AM
அன்பின் மனோஜ்....
முகமறியாமல், ஒரு தாய் வயிற்றில் பிறக்காமல்
தமிழ் என்று உணர்வில் ஒரே குடும்பமாய் வாழ்ந்து வருகிறொம்...
இந்த அன்பு குடும்பத்தில் 3000 பதிவுகள் கானும் இந்த நிமிடம் , அன்பை பகிரும் நேரம்...
பாசமாய் , நம்மை நேசித்தவர்களுக்கு நன்றி சொல்லியும்
நேசிப்பவர்களை பாசம் சொல்லியும் இருப்பது அருமை...
வாழ்த்துகள்...
வாழ்த்துகள் தம்பி..!
தங்களது 3000 ஆவது பதிவை அழகிய கவிமாலையாக ஆக்கி மன்றத்தாய்க்கு சூட்டி அழகு பார்த்திருக்கிறீர்கள்.. அழகாக இருக்கிறது.
lolluvathiyar
12-09-2007, 07:10 AM
3000 பதிவாக கவிதை தந்து கலக்கீட்டீங்க மனோஜ்
மனதை கவரும் மனோஜ்
நோட்டாபில் குணம் மனோஜ்
வஜ்ரம் போன்ற கவிதை வரிகள் தரும் மனோஜ்
கலர்கலராய் தந்து கலக்கீட்டீங்க. மனோஜ் தலைப்பு குழப்புது கடைசியில் தலைப்பில் உங்கள் பெயர் சேர்த்து விடுங்கள்
ஷீ-நிசி
12-09-2007, 07:31 AM
வாழ்த்து கவிதை அருமை மனோஜ்...
வாழ்த்துக்கள்!
leomohan
12-09-2007, 08:17 AM
வாழ்த்துக்கள் மனோஜ் தொடர்ந்து இணைந்திருங்கள். வாழ்க வளமுடன்.
அன்பு மனோஜ்...
ஒவ்வொரு கூற்றும் சரியே....
வாழ்வில் பல பாடங்கள் கற்றிருப்போம்..கற்றுக் கொண்டிருப்போம்.. அதில் மன்றத்தின் பங்கு மகத்தானது..
3000ம் பதிவு தொட்ட நீங்கள்..இன்னும் பல பதிவுகள் தந்து மன்றத்தோடு என்றும் இணைந்திருக்க வேண்டும்..
பாராட்டுக்களும்..வாழ்த்துக்களும்....
வாழ்த்துக்கள் மனோஜ். அருமையான கவிதை....
என்றும் நாம் இனிய நண்பர்களாய்
இன்றும் நாம் ஒரு தாய் மக்களாய்
அண்ணாவாய் தம்பியாய்
அக்காவாய் தங்கையாய்
நாம் எல்லோரையும் கூட ஒன்று சேர்த்த மன்றத்துக்கு நன்றி...
பாராட்டுக்கள் மனோஜ், தொடர்ந்து கலக்குங்கள்
இணைய நண்பன்
12-09-2007, 10:02 AM
3000 ஆம் பதிவை அழகான கவிதையில் மன்றத்தின் உறவை சொல்லி இருக்குறீங்க.ஆம்.யாரலும் தகர்க்க முடியாத பலமான் உறவைத்தந்தது இந்த மன்றம் தான்.உங்கள் சேவை மேலும் தொடர வாழ்த்துகிறேன்
சக்திவேல்
12-09-2007, 10:52 AM
மூவாயிரம் கண்ட மனோஜ் அவர்களுக்கு மனம்நிறைந்த வாழ்த்துக்கள். தங்களின் தமிழ்கணப்புலி திரியானது மிக அருமை. தங்களின் 5000 கான ஆவலாய் உள்ளேன்.
இலக்கியன்
12-09-2007, 11:31 AM
வாழ்த்துக்கள் மனோஜ் தொடரட்டும் உங்கள் பணி
Narathar
12-09-2007, 12:19 PM
மன்றத்தின் உண்மையான தூண் என்றால்
அது நம்ம மனோஜ் தான்.......
3000 என்ன
300,000 பதிவுகள் கொடுப்பார்
கூடிய சீக்கிரம்.
அன்புச்சொந்தமே
வாழ்த்துகிறேன் உன்னை மன நிறைவோடு
praveen
12-09-2007, 12:26 PM
வாழ்த்துக்கள் மனோஜ், நான் பதிக்கும் வேகத்தை பார்த்தால் 1000 பதிப்புகளுக்கே இன்னும் 2 வருடம் ஆகும் போல் தெரிகிறது, நீங்கள் 3000 என்றால் என்னே வேகம். தொடரட்டும் உங்கள் 5000 பதிவில் விரைவில் சந்திக்கிறேன்.
alaguraj
12-09-2007, 04:56 PM
அருமை...
பாராட்டுகள் ........வாழ்த்துக்கள் மனோஜ்....
தொடரட்டும் கவிதை உங்கள் பணி
மன்மதன்
14-09-2007, 08:19 PM
பாராட்டுகள் மனோஜ்,,
கடைசி வரிகள் முற்றிலும் உண்மை... அழகான கவிதை வடிவில் அசத்தலாய் இருக்கிறது நமது நட்பின் கவிதை.....
சுகந்தப்ரீதன்
15-09-2007, 09:37 AM
மன்றத்தின் மகிமையை வண்ணம்தீட்டிய ஓவியமாய் மனோஜ் அண்ணாவின் எண்ணங்கள் எடுத்துகாட்டுகின்றன....மன்னிக்கவும் அண்ணா...தம்பி கொஞ்சம் அசந்து தூங்கிட்டேன்...நல்லவேளை எழுப்பிவிட்டீர்கள்...இதற்க்குதான் அண்ணன் வேண்டும்கிறது...வாழ்த்துக்கள் மென்மேலும் படைத்தளிக்க...!
பிச்சி
15-09-2007, 11:13 AM
நம் மன்றத்தில் என்று இருக்க வாழ்த்துக்கள்.