PDA

View Full Version : கவிதை எப்பொழுதும் வருவதல்ல



slwaran
08-09-2007, 01:48 PM
எப்பொழுதும் வருவதல்ல கவிதை
எப்போதாவது வருவது கவிதை
நினைத்தவுடன் வருவதல்ல கவிதை
நெஞ்சம் கனத்தால் வருவது கவிதை!

அக்னி
08-09-2007, 02:48 PM
இது படைப்பாளர்களின் அறிமுகத் திரி...
ஆதலால், இக்கவிதை, குறுங்கவிதை பகுதிக்கு மாற்றப்படுகின்றது...

நன்றி!

பொறுப்பாளர்
~அக்னி

அக்னி
08-09-2007, 02:52 PM
வரையறுக்கப்படாத வேளைகள்...
வகுக்கப்படாத உணர்நிலைகள்...
கவிதையின் சிறப்பல்லவா..?

பாராட்டுக்கள் வரன்...
சொல்லோவியமான கவிதை, கவர்கின்றது...

ஓவியன்
08-09-2007, 02:57 PM
கவிதைக்கே ஒரு கவிதையா........?

பாராட்டுக்கள் வரன்!

lolluvathiyar
09-09-2007, 12:17 PM
மிக சரியாக சொன்னீர்கள் நன்பரே
வரும்போது தான் பேனாவை எடுக்க* வேண்டும்
பேனாவை எடுத்துவிட்டு யோசித்தால் கன்டது தான் வரும்

மனோஜ்
10-09-2007, 04:21 PM
உணர்ச்சி பெருக்கத்தில்
உதிரத்தின் வெளிபாடு கவிதை
மனதின் மாற்றத்தில்
இதயத்தின் வெளிப்பாடு கவிதை

இன்னும் சொல்லி கொண்டே போகலாம் நண்பரே வாழத்துக்கள் தொடர்ந்து கவிதை எழுத

அமரன்
10-09-2007, 04:36 PM
கவிதை எப்போதும் வருவதில்லை.
அவை எழுதப்படுவதுமில்லை.
பிரசவிக்கப்படுவதும் இல்லை
சுயம்பாக பிரசவமாகின்றன.
பாராட்டுக்கள் இலங்கேஸ்வரன்.
(இதே கவிதை பிறிதொரு இடத்தில் பதியப்பட்டதால் அது அகற்றப்பட்டு அங்கே இருந்த பின்னூட்டங்கள் இத்திரியுடன் இணைக்கப்பட்டுள்ளது)